“முடியாது அம்லு! நீ இப்ப போக வேணாம், கொஞ்ச நாளு இங்கயே இரு, நாலு மாசம் ஆகட்டும் போகலாம்”என கூறினார் மீனாட்சி.
“அம்மா! என்ன பேசிட்டு இருக்க, நாலு மாசமா…? அதுவரைக்கும் நான் இங்கயே இருக்குறது எல்லாம் நடக்காத காரியம், யுவி இருக்கான், நான் காலேஜ் போகனும்”என அம்லு முகத்தை தூக்கி வைத்தாள்.
சர்வா அறையினுள் கிளம்பிக் கொண்டிருக்க, சமையல் அறையில் தாயும், மகளும் விவாதத்தில் இருந்தனர்.
மீனாட்சி சொன்ன கணக்கை கேட்டு அம்லுக்கு மேல் சர்வா தான் அதிர்ச்சியானான்.
‘இவ்ளோ நாட்கள் அம்லு இல்லாமலா வாய்ப்பே இல்லை’என யோசித்தவாறு சென்னை போக ரெடியாகினான்.
“என்னது காலேஜ் போகப் போறீயா..? இந்த நிலமையில் அது எல்லாம் முடியாது அம்லு, இனிமே நீ கவனமா இருக்கனும், இப்ப உடனே படிச்சு என்ன செய்யப் போற..? நானே அந்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி சொல்லிட்டு இருக்கேன், மாப்பிள்ளை மனசு மாறி நீ உண்டாகிட்டனு, காலேஜ் போறாளாமே, என்னதுக்குங்குறேன் இப்ப..? பேசாம இங்க இருடி நான் நேரா நேரத்துக்கு ஆக்கிப் போட்டு, நல்ல படியா பிள்ளையை பெத்து தூக்கிட்டுப் போகலாம், யுவியை வேணா நம்ம கூடவே வச்சுக்கலாம் அம்லு”என்றார் அவரின் யோசனையாக.
“அய்யோ அம்மா! நீ பேசாம இரு, நான் கிளம்புற நேரத்தில் படுத்தாம, நீ வேணா அங்க வந்து இரு, நான் இங்க தங்க மாட்டேன்”என்றாள் ஜிமிக்கியை வேகமாக ஆட்டம் போட வைத்தவாறு.
“என்னங்கத்த! புருசன் கூட இருக்கனுமுனு ஆசைப்படுறா போல, விடுங்க ஒரேதா வளைகாப்பை போட்டு இழுத்துட்டு வந்துடுவோம்”என சிரித்துக் கொண்டே வந்தாள் சாந்தி.
அம்லு”ம்ம்ம்! அது எல்லாம் வாய்ப்பே இல்ல அண்ணி, நீங்களும், அம்மாவும் தான் வரனும் அங்க எம் பிள்ளையை பாக்க”என சிரித்தாள் அம்லு.
“ஆமா! நான் இங்க வந்துட்டா, என் யுவிப்பாவையும், யுவியையும் யாரு பாத்துப்பா..? நானே எல்லாரையும் பாத்துக்குறேன், அம்மா பிரசவம் மட்டும் பாக்க வந்தா போதும்”என வாய் அடித்தாள் அம்லு.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சர்வா மனம் நொந்து அப்பிடியே கட்டிலில் அமர்ந்தான்.
“நீ சொன்னா கேக்க மாட்ட, நான் போய் மாப்பிள்ளை கிட்ட பேசுறேன்”என மீனாட்சி சொல்வது கேட்டது அவனுக்கு.
அவன் மனமோ’என்னடா சொல்ல போற..? உன் மாமியார் வந்து கேட்பதற்கு..?’என்றது.
‘என்ன சொல்றது, கண்டிப்பா அம்லுவை விட்டுப் போக முடியாது’
‘அப்ப காலேஜ் அனுப்ப வேணாமுனு சொன்னா..?’
‘எனக்குமே புரியல, அவங்களை இப்ப கோச்சுக்க முடியாது, நான் என்னோட முடிவை சொன்னப்ப தடையே இல்லாம ஏத்துக்கிட்டாங்க, இப்ப போய் இது என் சுயநினைவு இல்லாம உருவான குழந்தைனு சொன்னா என்னைய பத்தி என்ன நினைப்பாங்க..?’
‘சரி! அப்ப என்ன தான் சொல்ல போற..?’
‘தெரியலையே!’என யோசித்தவனை பாட்டியின் குரல் அழைத்தது.
“இதோ கிளம்பிட்டேன் பாட்டி”என வெளியில் சென்றான்.
“சர்வா! நாங்க ரெடி, மீனாட்சி உன் கிட்ட பேசனுமாம், காலையில் இருந்து அம்மாக்கும், பொண்ணுக்கும் ஒரே போராட்டாம இருக்கு, என்னனு கேளு..”
“சொல்லுங்க அத்தை!”
“மாப்பிள்ளை! அம்லு கொஞ்ச நாளைக்கு இங்கயே இருக்கட்டும், அவ என்னனா என் பேச்சை கேக்க மாட்டேனுங்குறா..”
சர்வா அமைதியா இருக்க, யுவி”பாட்டி! அம்லும்மா கூட தான் நான் இருப்பேன்.” என்றான்.
“டேய்! நீ ஸ்கூல் போக வேண்டாம..?” என்றாள் பிருந்தா.
“அதுக்கு என்ன பிருந்தா இங்கயும் இங்கிலிஷ் மீடியம் இருக்கு, அம்லுவோடு இருந்தா இருக்கட்டும் நான் பாத்துக்குறேன்”என்றார் மீனாட்சி.
அம்லு முகமே மாறியது, ‘எங்க சர்வா இப்ப இருக்க நிலையில் ஓகே சொல்லிடப் போறானோ’என பயம் உருவாகியது மனதில்.
ஆனால் சர்வாக்கு அப்பிடி ஒரு எண்ணமே வரவில்லை.
“இல்ல அத்தை! அது சரிவராது, அம்லு எங்க கூட வரட்டும், நான் பாத்துக்குறேன், பரத் லக்கேஜ் எடுத்து வை, யுவி போய் உன்னோட டாய்ஸை எல்லாம் எடுத்து வை மிஸ் பண்ணாம” என அதற்கு மேல் மீனாட்சி பேச இடம் அளிக்காமல் சர்வா பேச்சை மாற்றினான்.
மீனாட்சி அடுத்து பேச வர, சாந்தி அவரின் கையை தட்டி மெதுவாக, “ஏ அத்த! உனக்கு இன்னுமா புரியல, அவங்க ரெண்டுப் பேரும் தனித்தனியா இருக்க விருப்பப்படலனு. போகட்டும் விடு”என்றாள்.
அருகில் இருந்த பாட்டி சிரித்து, “ஏம்மா என் பேத்தி சாந்தி! உன் அத்தைக்கு இப்ப பெத்தப் பொண்ணை விட அவ வயித்துல வளர புள்ள தான் கண்ணுக்கு தெரியுது, அதான் ஒன்னும் புரியல”
“அதுக்கில்லம்மா! காலேஜ் போறேனு வேற சொல்றா அது எதுக்குனு..”
“மீனாட்சி! யாரு காலேஜ் அது சர்வா தானே அங்க இருக்கான், பாத்துக்கலாம் விடு, கழுதை லீவ் போட்டு பரீட்சை மட்டும் போய் எழுதிட்டாப் போது.”என அவர் மனதை தேற்றினார்.
அம்லுக்கு பயங்கர சந்தோஷம், அறையினுள் சென்று தன் லக்கேஜ்களை அவசரமாக அடுக்கினாள், அதுவரை அம்மாவோடு மல்லுக்கட்டிட்டு எதுவுமே எடுத்து வைக்காமல்.
ஃபோன் சார்ஜரை எடுக்க சர்வா உள்ளே வந்தான், அம்லு இருப்பது தெரியாமல்.
“ஓ! அம்லு, உன்னைய விட்டு என்னால இருக்க முடியுமுனு தோணல எனக்கு, அப்புறம் எப்பிடி விட்டுட்டு போவேன், போய் கிளம்பு சீக்கிரம்”என்றான்..
அம்லு அவனை விடாமல் மார்பில் சாய்ந்தவாறு, முதுகோடு கை கோர்த்திருந்தாள்.
“என்ன..?”
“ஒன்னுமில்ல!”
ஃபோனையும், சார்ஜரையும் தூக்கி கட்டிலில் போட்டவன், அவளை தன்னோடு இறுக்கி அணைத்தான்.
அவளின் தோளில் முகம் வைத்து, “விட்டுட்டு எல்லாம் போக நான் யோசிக்க கூட இல்ல, என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு..?”
“இருக்கு, ஆனா இப்ப நீங்க முன்ன மாதிரி இல்லையே யுவிப்பா”
“ம்ம்ம்! சரியாடுவேன், நீ எதையும் யோசிக்காத”என அவளை மேலும் தன்னோடு அணைத்தவன், நெற்றியில் முத்தம் வைத்தான்.
“போய் கிளம்பு”என அவளை விடுவித்தான்.
மீனாட்சி மகளுக்கு அறிவுரையாக கூறி, பல மூட்டைகளை கட்டி காரில் போட்டார், தேங்காய், மாங்காய், வீட்டு காய்கறிகள், புளி, பல பொடி வகைகள் என அனைத்தும் அடங்கியது.
பிருந்தாவும் பிரித்து எடுத்துக் கொள்ள மறக்காமல் அறிவுறுத்தினார்.
***
வழக்கமான வாழ்க்கை முறை ஆரம்பித்தது.
யுவிக்கு ஸ்கூல், அம்லு, சர்வாக்கு காலேஜ் என கிளம்பினர்.
அம்லுக்கு காலை உபாதை இல்லை, ஆனால் அடிக்கடி கிடைக்கும் இடத்தில் அமர்ந்துக் கொண்டாள், சிறிது அசதி வந்தாள்.
பாட்டி”அம்லு! கொஞ்ச மாசம் கஷ்டமா இருக்கும், அப்புறம் சரியாகிடும், நான் படிக்க போகாதனு சொல்ல மாட்டேன் ஏனா எங்க காலத்துல அதுக்கு வாய்ப்பில்ல, ஆனாலுமே நான் எல்லாம் ஆரம்பக்கல்வி வரை படிச்சுட்டேன். யோகா தோழி ஒருத்தி மாசமா இருந்து காலேஜ் போனா, புள்ளை பொறந்து பரீட்சையே எழுதினா இது ஒரு விஷயமே இல்ல இப்ப, உனக்கு ரொம்ப முடியலனா லீவ் போட்டுக்கோ”என்றார் அறிவுரையாக.
சர்வாவும் அந்த இடத்தில் இருந்தான்.
“சரி பாட்டி! இப்ப ஓகே தான் முடியலனா லீவ் போட்டுக்குறேன்”
யுவி ஏதோ அம்லு கிட்ட கேட்க, அவ எழப் போனாள், சர்வா”நீ உட்காரு”என யுவியை தூக்கிட்டுப் போய் அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்து விட்டு, அவனிடம்”யுவி! நீ அடிக்கடி அம்லும்மாவை தொல்லை பண்ணாத, பாட்டி, இல்ல அப்பா கிட்ட கேளு” என்றான்.
“சரிப்பா!”என அவனும் ஸ்கூல் பேக்கை எடுத்து மாட்டிட்டு ரெடியாகினான்.
அம்லுவும் கிளம்ப, யுவியோடு இருவரும் லிப்டை நோக்கி நடந்தனர்.
சர்வா அறைக்குள் சென்று தானும் கிளம்பினான்.
பாட்டி”சர்வா! இங்க ஒரு டாக்டரை பாத்து முடிவுப் பண்ணிக்கோ, அவங்க கிட்ட அம்லுவை செக் அப் அழைச்சுட்டுப் போகலாம்”என்றார்.
“ம்ம்ம்!”என்று மட்டுமே சொல்லியவன், வெளியில் கிளம்பினான்.
சர்வா பதில் சொல்லவே இல்லை, காலேஜ் வாசல் வர, “இங்கயே இறங்கிக்கோ”என்றான்.
“ம்ம்ம்!”என பின்னால் திரும்பி காலேஜ் பேக்கை எடுக்கப் போனாள்.
“இரு!”என அவனே எக்கி எடுத்துக் கொடுத்தான்.
அதை வாங்கிட்டு இறங்கப் போனவளிடம்”பயப்புடாத, நல்ல ரிசல்ட் தான் வரும், நான் செக் பண்றேன், மே பி டென் ஒர் கிளாக் போட்டுருவாங்க, மெசேஜ் பண்ணி விடுறேன், சரியா..?”
“ம்ம்ம்!”என சிரித்து ஜிமிக்கி டான்ஸ் வேகமாக போட்டாள்.
அவளுக்கு சர்வா ஆறுதல் சொல்லியதில் அவ்ளோ சந்தோஷம்.
சர்வா அவளையே பார்த்தவன், அவளின் முகமே சந்தோஷத்தில் பொலிவாகியது, கூடுதலாக பிள்ளை உண்டான முகம் வேறு, கையைப் பிடித்து லேசாக “இப்பிடியே ஹேப்பியா இரு”என லேசாக பற்கள் தெரியாமல் சிரித்து மறுநொடியே அதை மறைத்தவன், “இறங்கு, ஈவ்னிங் வெயிட்டிங் ஹாலில் இரு, நான் வரும் போது போகலாம் வீட்டிற்கு”என்றான்.
“ம்ம்ம்!”என அம்லு இறங்கி சந்தோஷமாக உள்ளே சென்றாள்.
***
பரீட்சை ரிசல்ட் வருகிறது என்றால் ஒரு பரப்பரப்பு இருக்க தானே செய்யும்.
அந்த ஆர்வம், எதிர்ப்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது.
ரிசல்ட் வெளியாகியது, ஒவ்வொவரும் அவரவர் ஃபோனிலே நம்பர் போட்டு காத்திருக்க, அம்லுவும் காத்திருந்தாள்.
ஆனால் அம்லுக்கு மெசேஜ் வந்தது சர்வாவிடம் இருந்து.
ப்ராஸெஸ் ஸ்டாப் ஆக, மெசேஜை திறந்தவளுக்கு ஒரே சந்தோஷம்.
“ஐ! எல்லாத்துலையும் பாஸ் ஆகிட்டேன்” என சத்தமாக கூறியவளின் போனை பார்த்தனர் நண்பர்கள் வட்டம்.
ஓரளவு அனைத்திலுமே ஏழுபது மேல் வாங்கி இருந்த அம்லுக்கு, சர்வா பெர்சென்ட்டேஜ் வரை அனுப்பியிருந்தான்.
எய்ட்டி டூ என இருந்தது. அம்லுக்கு நம்பவே முடியவில்லை. அவள் நல்லாப் படிக்கும் ஒருத்தி தான். ஆனால் ஆங்கிலத் தடையால் மட்டுமே தடுமாறினாள் வந்த புதிதில்.
அதுவும் சர்வாவின் துணையோடு தான் முன்னேறினாள்.
அவளின் பெர்சென்ட்டேஜ்க்கு ஒரு பெரிய ஹார்ட்டைபோட்டு அனுப்பினான் சர்வா.
“தேங்க்ஸ் யுவிப்பா!”என பதிலுக்கு அனுப்பினாள்.
மற்றவர்களும் பாஸ் ஆக, ஒரே கொண்டாட்டமாக இருந்தது அஞ்சல குரூப்பே.
“அம்லு! நீ சூப்பர் தெரியுமா..? சார் பிராக்டிஸ் தானே, நீ இந்தளவு பெர்சென்ட்டேஜ் வந்தது.”
“ஆமா! சந்தி, தலையில் குட்டி குட்டி சொல்லி தருவாறு”என சிரித்தாள்.
“யு ஆர் வெரி லக்கி அம்லு சார் மாதிரி லைஃப் லாங்க் ஒருத்தர் கிடைச்சதுக்கு வீ ஆர் ப்ரவுடு ஆஃப் யு”என்றான் ஸ்ரீ.
“ம்ம்ம்!”என்றாள் மகிழ்ச்சியாக.
மதியம் கேண்டினில் அதை கொண்டாடினர் அஞ்சல குரூப், கேக் வாங்கி கட் பண்ணி.
ஒருவர் மீது ஒருவர் கேக் பூச அதிலிருந்து தப்பித்து ஓடி, கேண்டின் லார்னில் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
அம்லுவும் தன் நிலை மறந்து சந்தி பூச வந்த கேக்கை தவிர்த்து”அடியேய்! வேஸ்ட் பண்ணாம என் வாயில் வச்சா நான் தின்னுடுவேன், ஆனா முகத்தில் பூசி ஏன்டி வீணாக்குற..?”என குறுக்க நெடுக்க ஓடினாள்.
லார்ன் கட்டையில் தடுக்கி விழப் போனவளை சரியான நேரத்தில் கேண்டின் வந்த சர்வா பிடித்து நிறுத்தினான்.
“நிரஞ்சி!”என்ற அதட்டலோடு..
மற்றவர்களும் அமைதியாக நிற்க, அம்லு நிதானமாகி நேராக நின்றாள் அவனிடம் இருந்து விலகி.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க…?”
“சார்! சும்மா கேக் கட் பண்ணி..”என ஸ்ரீ இழுத்தான்.
“ஸி! இன்னும் ஆறு செமஸ்டர்ஸ் இருக்கு இப்பவே மொத்த சந்தோஷத்தையும் கொட்டிடாதீங்க”என பொதுவாக திட்டினான் அம்லு மேல் உள்ள கோபத்தில்.
அம்லுவை முறைத்தவன்”பீ கேர்புல் நிரஞ்சி”என்றவன், அவளிடம் மெதுவாக “யூ ஆர் நாட் எ சிங்கிள்”எனக் கூறி சென்றான்.
அம்லு அமைதியாக நிற்க, “ஹேய்! சாருக்கு ஏன்டி இப்பிடி கோபம் வருது. நீ பாவம் அம்லு. வீட்டிலும் இப்பிடி தான் திட்டு வாங்குவீயா.?”என்றாள் ஹேமா.
“ஆமா அம்லு, இப்ப என்ன நடந்துட்டுனு திட்டிட்டுப் போறார்.. ச்சே! நீ பாவம்” என்றாள் சந்தி.
“ஏய்! சார் நல்லவரு தான், நம்ம தான் கொஞ்சம் ஓவரா போயிட்டோம்.” என்றனர் ஹாசன், ஸ்ரீ.
“டேய்! எப்பிடிடா இதோட இவ காலேஜ் வர முடியும்”என்றாள் சந்தி.
“ஏன் முடியாது, அது அவங்க பெர்செனல் உனக்கு என்ன..? உன் அம்மா டாக்டர் தானே போய் கேளு இப்பிடி இருந்தா படிக்கக் கூடாத அப்பிடினு..”
“ஹாசன்! அதுக்கில்ல.”என இழுத்த சந்தியை..
“சந்தி! நீ அம்லுவையும், சாரையும் தப்பா நினைக்குறீயா..?”
“இல்ல! ஆனா..? படிக்கும் போது..”என ஹேமா சந்தேகமாக கேட்டாள்.
ஸ்ரீ”ஹேய்! என்ன நீங்க ரொம்ப பேசுறீங்க, நம்ம காலேஜில் இந்த மாதிரி எத்தனை பேர் சுத்துறாங்க, அதை மறைக்க என்ன எல்லாம் பண்றாங்கனு தெரியும் தானே, ஆனா அம்லு காலேஜ் வரா, இதுவே நல்ல விஷயம் சார் சப்போர்ட் அவளுக்கு இருக்கு, அது போதும். நீ நல்லா மட்டும் படி அம்லு, உன்னையும், பேபியையும் சார் பாத்துப்பார்”என்றான் நம்பிக்கையாக.
ஸ்ரீ வைத்த நம்பிக்கையை சர்வா மீது தான் வைத்திருக்கமானு அம்லுக்கு சந்தேகம் வந்தது.
அவன் எவ்ளோ நம்பிக்கையா சொல்றான, ஆனா நான் ஏன் பயப்புடுறேன் யுவிப்பாவை நினைத்து என அம்லுக்கு ஒரு எண்ணம் வந்தது.
ஆனாலும் அதையும் மீறி யுவிப்பா முன்னாடி மாதிரி இல்லையே என்ற எண்ணமும் வந்தது.
தன் வயிற்றில் கை வைத்தவளுக்கு முதன் முறை ஒரு உணர்வு தோன்றியது அது தாய்மை உணர்வுனு லேசாக உணர தொடங்கினாள்.
முதலில் யோசித்த ப்ரண்ட்ஸ் பிறகு அம்லுவை தாங்கினர், வேற யாருக்கும் தெரியாதவாறு.
ஆனால் அம்லுக்கு சர்வா கிட்ட பேச வேண்டும், தெளிவாக பேச வேண்டும் என தோன்றியது முதன் முறை.
அந்த நிமிடம் முதல் தாய்மையை உணர தொடங்கினாள்.
***
சர்வா மகப்பேறு மருத்துவர் சுதாராமை சந்தித்தான்.
சந்தியோட அம்மா தான்.
அம்லுவின் நிலையை பத்தி விளக்கினான். மேற்கொண்டு என்ன செய்யலாமுனு ஆலோசித்தான்.
“அதுக்கென்ன சர்வா, படிக்கும் போது பிரகென்ஸி மேனெஜ் பண்றது கஷ்டம் தான். நீங்க கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும், எனிவே நிரஞ்சி வேற நல்ல பெர்சென்டேஜ்னு சொல்றீங்க, படிப்பையும் நிறுத்துறது கஷ்டம். இட்ஸ் ஓகே, கூட்டிட்டு வாங்க, இப்ப எத்தனை நாட்கள் ஆகுது”என்றார் ஒரு சராசரி மருத்துவராக.
“அல்மோஸ்ட் டு மன்த்ஸ்”
“ம்ம்ம்! நோ ப்ராப்ளம், இந்த வீக் என்ட் கூட்டிட்டு வாங்க”என்றார் அவர்.