பாட்டி”அப்புறம் என்ன பிரபா, அழைச்சுட்டு கிளம்ப வேண்டியது தானே.?”என்றார்.
“போகலாம் அத்த!”என பிருந்தாவை கிளம்ப சொன்னார்.
“எங்க போகப் போறோம்..?”எனக் கேட்டாள்.
“வேற எங்க நம்ம வீட்டுக்கு தான்டி”
“நான் சர்வா அண்ணா அபார்ட்மென்ட் வீட்டுக்கு தான் போகப்போறேன்” என்றாள் அவள்.
பாட்டி”அதுக்கு என்ன, இப்ப முறைக்காக நம்ம பழைய வீட்டுக்குப் போயிட்டு அப்பிடியே எங்க கூட வா”என்றார்.
“அது எல்லாம் இல்ல அத்த, என் கூட வச்சு தான் பாத்துக்கனும். ஏய்! பிருந்தா அம்மா வீட்டில் இல்லாம அங்க போனா, எனக்கு ஆசை இருக்காதா உன்ன பாக்க?”என கேட்டார்.
“அம்மா! அங்க நீயும், அப்பா மட்டும் தான் , அன்பு எப்ப வருவானே தெரியாது, இங்கயும், அங்கயும் மாறி மாறி இருப்பான். நான் மட்டும் தனியா என்ன செய்றது..? அண்ணா வீட்டுக்குனா யோகா அக்கா, அம்லு அண்ணி, பெரியம்மா, பாட்டினு நிறையப் பேர் இருக்காங்க, பசங்கனு ஜாலியா இருக்குமா”என்றாள் ஆசையாக..
“அதுக்கென்ன வா பிருந்தா”என்றான் சர்வா.
“ஆமா பிருந்தா வாங்க, அத்த நீங்க வந்து பாத்துட்டு போங்க அடிக்கடி”என்றாள் அம்லு.
“ஆமா! ஒருத்தன் ஏற்கனவே அங்க தான் கெடக்குறான், இவளாச்சும் என் கூட இருப்பானு பாத்தா, எல்லாம் அந்த வீட்டுக்கே தான் போக துடிக்குதுங்க” என முகத்தை சுளித்தார் பிரபா.
சந்திரா, லேகா தன் தாயை நோண்டினர்.
“நம்ம எப்பிடிம்மா போய் பாப்பது, அந்த வீட்டுக்கு போனா.?”என்று..
“டேய்! உன் பொண்டாட்டி அங்க போனா நாங்க போய் எங்க பாக்குறது, நாங்க போயிட்டு வர, உன் அத்தை வீடு தான் சரி, அங்கயே தங்க சொல்லு”என்றார் ரசியா பரத்திடம்.
“ஏன் அவங்க இந்த வீட்டுக்கு வரலையா புடிக்கலைனாலும், அப்பிடி உனக்கு தேவைனா போய் பாரும்மா, பிருந்தா மாமா வீட்டில் இருந்தால் தான் எனக்கும் வசதி, நானும் அடிக்கடி போய் பாக்க முடியும், நீ மாமா வீட்டுக்கே போ பிருந்தா” என்றான் பரத்.
அஸ்வின்”ஆமா! ஆமா! இன்னைக்கே வந்துடு, அப்ப தான் உன் அண்ணன், அண்ணி கூட இந்த வாரம் இருக்கலாம், அடுத்த வாரம் அவங்க பிஸியாகிடுவாங்க” என்றான் நக்கலாக.
“ஏன் மாமா..? என்ன பிஸியாகப் போறாங்க..? ஆமாவ அண்ணா..?”என இருவரிடமும் கேட்டாள் பிருந்தா.
அம்லு புரியாமல் பார்க்க, சர்வா மனதில் ‘இந்த இடத்தில் சொன்னா அம்லு எதுவும் சொல்ல முடியாது’என எண்ணி, “ஆமா பிருந்தா! நெக்ஸ்ட் வீக் நானும், அம்லுவும் ஹனிமூன் பிளான் பண்ணி இருக்கேன், யு எஸ் தான்”என்றான்.
அம்லு அதை கேட்டு அதிர்ச்சியாய் அவனை பார்த்து முறைத்தாள்.
அதை கேட்டு ஆனந்தப்பட்டவர்கள் ஒரு பக்கம், பொறாமைப் பட்டவர்கள் ஒரு பக்கம்.
“எப்ப சர்வா கிளம்புற, போயிட்டு வா சந்தோஷமாக”என்றார் திலகா.
“நெக்ஸ்ட் வீக் தான் பெரியம்மா” என்றான் அம்லுவை பார்த்தவாறு.
அவளோ என் கிட்ட சொல்லாம நீங்களா பிளானா என்ற கேள்வியோடு முறைத்தாள்.
“நீங்க எல்லாம் எப்ப போறீங்க..?”என கேட்டார் மீனாட்சி திலகாவிடம்.
“நாங்க போகலை மீனாட்சி, மாப்பிள்ளையும் இங்க அவருக்கு வேலை பாத்து வச்சுட்டு யோகாவோடு போயிட்டு வருவார் அப்புறமா அங்க இருக்குறதை சரிப்பண்ண, இனி இங்க தான், போதும் அங்க, எங்களுக்கு வயசாகிடுச்சு, இங்கயே ஓட்டிட வேண்டியது தான்” என்றார் திலகா.
“அதுவும் சரி தான், நம்ம மனுசங்களோடு இருங்க அதுவே மனசுக்கு நிம்மதி கிடைக்கும்”
“ஏன் சர்வா! இவ்வளவு நேரமா என்னமோ அம்லு யுவியை பெக்காத அம்மானு பேசின, அவனை தனியா விட்டுட்டு நீங்க ஊர் சுத்தப் போறீங்களா..?” என்றார் பிரபா..
சர்வா நக்கலாக சிரித்து, “சித்தி! அதுக்கு பேரு ஹனிமூன், ஆமா ஊர்சுத்தி பாக்குறதும் அதுல ஒரு பகுதி தான், அம்லுக்கு தான் இந்த ஹனிமூன் பத்தி தெரியாது, ஆனா எங்க பையனுக்கு நல்லாவே தெரியும். அவன் பர்மிசன் கொடுத்து தான் டிக்கெட்டே போட்டு இருக்கேன். என்ன யுவி..?”என்றான் சர்வா.
“ஆமா பாட்டி! நான் ஓகே சொல்லிட்டேன். அப்பாவும், அம்மாவும் வெக்கேசன் போகப் போறாங்க, எனக்கு பிரச்சனையில்லை நான் ஏன் தனியா இருக்கப் போறேன், இவ்ளோ பேரு இருக்காங்களே, யுக்தா, யுகி, அப்புறம் வரப்போற பிருந்தா அத்த குட்டிப் பேபி”என்றான் கூலாக.
அம்லுவோ அவனின் அம்லும்மா அம்மாவாக ப்ரோமோட் ஆனதை கேட்டு திக்கி திணறி நின்றாள்.
“யுவிப்பா! நான் யுவியை விட்டுட்டு எல்லாம் எங்கயும் வரல”என்றாள்.
“அம்லு! அவனே ஓகே சொல்லிட்டான் நீ வர என் கூட, அவ்ளோ தான்”என்றான் அழுத்தமாக.
பரத”அம்லு! மாமா ஒரு முடிவோடு இருக்கார் மறுப்பு சொல்லாத, யுவிக்கு நாங்க எல்லாம் இருக்கோம்”என்றான்.
சந்திராக்கு பொறாமையாக இருந்தது இப்போது தான், தான் விட்டுப் போன வாழ்க்கை, அவளுக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கு என்று.
ரசியா அதை சொல்லியும் காட்டினார்.
“ம்ம்ம்! பாருடி, அவளுக்கு வந்த வாழ்வை, நீயே உன் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிட்டு வந்த, இவ வாழ்க்கையும் போய் இப்ப ரெண்டுப்பேரும் அந்த போக்கத்தவன் கிட்ட குப்பை கொட்டுறீங்க”என சுளித்தார் முகத்தை.
பிரபா”நீ போயிட்டா காலேஜை யாரு பாப்பா சர்வா..?”என்றார், அன்புவை உள்ளே நுழைத்துவிடும் ஆசையில்.
“அதுக்கு தான் பெரியப்பா இருக்காரே..?”
“ம்ம்ம்! ஏன் அன்பும் இருக்கானே”என இழுத்தார்.
உடனே அன்பு”அம்மா! உன் ஆசைக்கு எல்லாம் நான் விருந்தாக முடியாது, நான் நல்ல வேலையில் இருக்கேன், அதுல அனுபவம் ஆகிட்டு தனியா கம்பேனி ஆரம்பிக்கப் போறேன், என் போக்கில் விட்டுவிடு சொல்லிட்டேன்”என்றான் உடனே.
சர்வா”அன்பு! உன் முடிவில் தெளிவா இரு போதும். அப்ப நான் சப்போர்ட் பண்றேன் கம்பேனி ரன் பண்ண” என்றான்.