ஜெகன் மற்றும் லியோஸை கன்னத்தில் அடித்த சர்வாவை போலிஸ் சமாதானம் செய்தனர்..
“மிஸ்டர் சர்வா! டோன்ட் டு திஸ் இன்பர்ன்ட் ஆப் அஸ்.. ஸ்டாப் திஸ்.. மிஸஸ் நிரஞ்சி, யு ஹேவ் டு ஓபன் யுவர் வாய்ஸ்.. வாட் ஹேப்பெண்டு..? ஆப்டர் தட் ஒன்லி வி வில் டிசைடு தட் வாட் வில் டு..”என்றார்..
அது நிரஞ்சிக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது..
சர்வா அவளின் கையை அழுத்திப் பிடித்தான்,”நிரஞ்சி! நீ இன்னும் அமைதியா நின்னா அவன் சொன்ன மாதிரி உன்னைய பைத்தியமுனு பட்டம் கட்டிடுவாங்க… வாயை திறந்து என்ன நடந்ததுனு சொல்லு..”என்றான் சற்று அழுத்தமாக..
அவனின் கை ஆறுதலாக இருந்தது அத்தனை புதிய மனிதர்கள், புடிக்காதவன் மத்தியில்..
ஆனால் சர்வா சொன்ன பைத்தியம் என்ற வார்த்தை அவளை சுட, “யாரு பைத்தியம்..? அவன் தான் பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்கான்.. அய்யோ நினைக்கவே முடியல.. இது என்னனு எனக்கு புரியலை சார்.. நினைச்சாலே கொமட்டுது…”என்றாள் முகத்தில் அத்தனை அருவருப்பாக…
ஓரினசேர்க்கையாளர் பற்றிய எந்த வித தவறான சித்தரிப்பும் இல்லை இங்கு.. அது ஒரு மனிதனின் தனிப்பட்ட உணர்வு.. அதை யாருக்கும் விமர்சனம் செய்ய அனுமதி இல்லை..
ஆனால் இங்கு நிரஞ்சி அவளின் மனதில் உள்ளதை உள்ளபடி சொல்கிறாள். கே வாழ்க்கைப் பற்றி அறியாதவள் அறியும் போது இந்த ரியாக்ஷன் தான் வரும்.. உலகத்தில் இன்னும் பலர் இந்த மாதிரி உணர்வுகள் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என அறியாமல் தான் வாழ்கிறார்கள்.. அது அவர்களின் தவறில்லை. வாழும் சூழலில் அந்த மாதிரி மனிதர்களை சந்திக்கவில்லை..
அப்பிடிப்பட்ட நிரஞ்சிக்கு வாழ்க்கைத் துணையே அப்பிடியொரு உணர்வு கொண்டவன் அமைந்திருக்கான் என்றால் அவளால் அவனின் மனதை புரிந்துக் கொள்ள இயலாது.. உன்னோட உணர்வு அதை நான் மதிக்குறேனு எப்பிடி சொல்ல முடியும்..
அந்த நிலை தான் நிரஞ்சிக்கு.. ஒரு வேளை அவளுக்கு புரிதல் வந்தால் அவளின் முடிவு அவளோட கையில் தான்..
“நிரஞ்சி!”என அழைத்து அவளை நிதானப்படுத்தினான் சர்வா…
***
ஜெகன் வீட்டின் வைபை பாஸ்வோர்டை மாற்றியதால் நிரஞ்சியால் யாருக்கும் அழைக்க முடியவில்லை…
இரவு ஜெகன் வீட்டிற்கு நேரம் கழித்தே வருவான், அதற்குள் நிரஞ்சி தூங்கிவிடுவாள்..
காலையில் அந்த ஆபிஸ் கிளம்பும் நேரம் தான் அவர்கள் சந்திப்பது..
“அத்தான்! அம்மா, மாமா, அத்தை, திரவி அண்ணா கிட்ட பேச நெட் இல்லை.. வைபை பாஸ்வோர்டு என்ன..?”என்று கேட்டாள்..
“நான் இருக்கும் போது பேசு போதும்..” என அவனின் போனை கொடுத்தான்.. நிரஞ்சி போனை வாங்கி அவன் அறைக்குள் போட்டான்..
அவளும் அவனின் போனிலே இரண்டு தினங்கள் பேசினாள்..
பகலில் பொழுதேப் போகவில்லை.. அன்று காலை நிரஞ்சி சீக்கிரம் எழ கதவைத் திறக்க முடியவில்லை… அது வெளியில் தாழ் போட்டு இருந்தது..
அந்த நேரம் வாசலில் ஏதோ சத்தம் கேக்க, எட்டிப் பார்த்தாள்..
ஜெகன் லியோஸை வழி அனுப்பியது தெரிந்தது.. அவளுக்கு அப்போது அது தவறாக தெரியவில்லை..
ஏன்னென்றால் லியோஸ் ஜெகனோடு வருவான், அன்னைக்கு போலிஸ் வந்தப்பக் கூட அவன் தான் கூட வந்தது ஜெகனுடன்.
ஆனால் வீட்டின் ஹாலில் அமர்ந்து லியோஸ் சிகரெட் புகைத்தது நிரஞ்சிக்கு பிடிக்கவில்லை…
அதை ஜெகனிடம் கூறினாள், அவனோ உனக்கு பிடிக்கலைனா உன்னோட ரூமில் போய் இருந்துக்கோ.. என்றான் கடுப்பாக..
லியோஸை வழியனுப்பியவன் நிரஞ்சி ரூம் கதவை வெளியில் லாக்கை எடுத்து விடும் சத்தம் கேட்டது அவளுக்கு..
யோசனையோடு இருந்தவள் சற்று தாமதமாக வெளியில் சென்றாள்…
ஜெகன் ஆபிஸ் கிளம்பி சென்ற பின்.. ரொம்ப போர் அடிக்க… ஜெகனின் அறை எட்டிப் பார்த்தாள் அது திறந்து இருந்தது..
அது பூட்டி இருக்குமா..? இல்ல சும்மா சாத்தி இருக்குமானு அவள் ஆராய்ந்தது இல்லை வந்தது முதல்..
ஜெகனை பொருத்தவரை நிரஞ்சி ஒரு முட்டாள் அறைக்குள் எல்லாம் போக மாட்டானு நம்பிக்கையா சும்மாவே சாத்தி விட்டு போயிருந்தான்..
ஆனால் நிரஞ்சிக்கு அந்த முட்டாள்தன மூளை உள்ள போய் பாருனு தூண்டியது..
மெதுவாக உள்ளே சென்றாள்.. ஒன்னும் வித்தியாசம் தெரியவில்லை.. ஆண் தங்கும் அறை பெட்சீட்கள் கலைந்து, பிளாங்கட்கள் கீழையும் மேலையுமாக பரப்பி இருந்தது..
ஜெகனின் உள்ளாடைகள், ஆடைகள் அனைத்தும் அங்கங்கே கிடந்தது.
எடுத்து ஒதுங்க வைக்கலாம என தோன்ற, அவளின் முட்டாள் மூளை’நீ இதை எல்லாம் சுத்தம் பண்ணா உள்ள வந்தது தெரியும் அப்புறம் அத்தான் திட்டுவார்’என்றது.
மனமோ’ஒன்னுமே இல்லை அப்புறம் ஏன் உள்ள வர வேண்டாமுனு சொன்னாரு…?’என்றது..
‘தெரியலையே.. சரி போவோம்’என திரும்பியவள் பார்வையில் ஜெகன், லியோஸ் கட்டிப்பிடித்திருந்த போட்டோ பட்டது..
‘ரெண்டுப் பேரும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ் போல நம்ம குரூப் மாதிரி அதான் அத்தான் அவர் சிகரெட் குடிப்பதைப் பத்தி சொன்னப்ப கோச்சுகிட்டாரோ…’என நினைத்து வெளியில் சென்று விட்டாள்..
அப்போது தான் அவள் நினைவில் உள்ளுக்குள் லேப் டாப் இருந்தது வந்தது..
மெதுவாக அவளின் மனதில் அந்த தாத்தா சொன்ன விஷயம் ஏறியது..
அப்பிடியே இருந்தாலும் பொண்ணு யாருமே இங்க இல்லையே.. அத்தான் ப்ரண்ட் தானே வந்துட்டுப் போறார் என குழம்பினாள்..
அன்று ஜெகன் சென்றதும் நிரஞ்சி அவன் அறைக்குள் சென்றாள் நேற்று பார்த்த அதே நிலை தான்..
‘இப்பிடி போட்டு வைக்குறதுக்கு என் கிட்ட சொன்னா சுத்தம் பண்ணி வைக்கப் போறேன்.. இந்த அத்தான் ஏன் இப்பிடி பண்றார்..?’என எண்ணிக் கொண்டே.. லேப் டாப் அருகில் சென்றாள்..
அதை ஒபன் செய்தவள் கண்ணில் பட்டது ஜெகன், லியோஸ் அரைகுறை ஆடையோடு எடுத்துக் கொண்ட போட்டோ தான்..
அப்போதும் அம்லுக்கு ஒன்னுமே தோன்வில்லை..
ப்ரண்ட்ஸ் என்ற எண்ணமே வந்தது..
சும்மா ப்ரஸ் செய்தவள் முன் ஒரு வீடியோ ஓடியது, அது ஏற்கனவே ஓபன் ஆகி பார்த்திருக்க அப்பிடியே ஆனில் இருந்தது..
அந்த வீடியோவில் ஜெகனும், லியோஸ்ம் உடலுறவில் இருந்த காட்சி அது.. அவர்களின் வழக்கம் அது தாங்கள் இருப்பதை வீடியோ பதிவு செய்து பிறகு பார்த்து ரசிப்பார்கள்..
நிரஞ்சிக்கு அதை கண்டதும் சுற்றிலும் எதுமே காதில் விழாமல் அவள் மட்டும் தனியா பறப்பது போல் இருந்தது, யாருமே அவளை காப்பாற்ற இல்லை கத்துகிறாள் ஆனால் அது அவளுக்கே கேக்கவில்லை.. வாயில் வார்த்தை வருது ஆனால் அவளின் காதே அதை உணரவில்லை..
சுத்தமாக மெய் மறந்து நின்றாள்..
சிறிது நேர போராட்டத்திற்கு பின் தன்னிலைக்கு வந்தவள், அதை ஆராய்ந்தாள், அடுத்தடுத்து பார்த்தது எல்லாம் அவளுக்கு குமட்டியது…
இது என்ன மாதிரியான உறவு என்று… அப்பிடியே வெளியில் சென்றவள், மனம் வெறுக்க கத்தி அழுதாள்..
எத்தனை நேரம் அழுதாலோ தெரியவில்லை.. அங்கயே தூங்கினாள்..
ஷோபாவில் ஒடுங்கி படுத்திருந்தவளை, லேட்டாக லியோஸோடு ஃபுல் போதையில் வந்த ஜெகன் கவனிக்கவில்லை..
வழக்கம் போல் அவள் அறைக்குள் இருப்பதாக எண்ணி அவளின் அறையை லாக் பண்ணிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தார்கள்..
சத்தம் கேட்டு முழித்துப் பார்த்தவள் அவனின் செயலை நோக்கிட்டு இருந்தாள்..
அவர்கள் சென்றதும் சிறிது நேரம் கழித்து அவனின் அறையை எட்டிப் பார்த்தவள் கண்ணில் பட்டதை அவளால் ஏற்க முடியவில்லை..
ஓடிப்போய் தன் அறைக்குள் படுத்துக் கொண்டாள்..
இரவு முழுவதும் அழுது அழுது கண்கள் கெஞ்சியது…
காலையில் ஜெகன் நிரஞ்சியின் கதவு லாக் இல்லாமல் இருக்க, சற்று அதிர்ந்தான்..
ஏன்னென்றால் லியோஸ்டு வெளியில் வந்தவன் முன் ஹாலில் அமர்ந்திருந்தாள்..
“அம்லு! எப்ப எழுந்திரிச்ச…?”
“நான் தூங்கவே இல்லை”என்றாள் வெறுப்பாக..
ஜெகன் அவளை ஒரு மாதிரிப் பார்க்க.
“இவர் யாரு…?”
“என் ப்ரண்ட்”
“ப்ரண்டுனா..? ஒரே கட்டிலில் ட்ரஸ் இல்லாம படுப்பதா…?”என்றாள் அருவருப்பாக முகத்தை வைத்து..
“அம்லு! புரிஞ்சுகோ, எனக்கு அவனை தான் புடிச்சு இருக்கு.. நாங்க காதலிக்குறோம். ஒன்னா வாழ்ந்துட்டு இருக்கோம்.. உன் அண்ணன் நேசனுக்கு கூட தெரியாது.. உன்னை பத்தி அவன் பேசுவான், அப்ப தான் உன் குணம் தெரிஞ்சது, எங்க வீட்டில் கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணாங்க.. நானும் உன்னைய கை காமிச்சுட்டேன். நீ வெகுளியா இருந்தது எனக்கு வசதியா இருந்தது.. நேசன் வேற இடத்திற்கு போக லியோஸும் நானும் இங்க குடி வந்துட்டோம்..”
“இப்ப நான் என்ன பண்ணனும்..?” என்றாள் வெறுப்பாக…
“நீ பாட்டுக்கும் நிம்மதியா இரு அம்லு, நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன்.. என்னோட விந்தணுவை எடுத்து உனக்கு வச்சுடுவாங்க.. உனக்கு குழந்தை பிறந்துடும் என் அம்மா, அப்பா கூட இரு . நான் உனக்கு எல்லாம் செய்றேன் புருசனா..”
“உங்க அப்பா, அம்மாக்கு மருமகளாக.”
“ம்ம்ம்! என்னைய பத்தி தெரிஞ்சா யாருமே ஏத்துக்க மாட்டாங்க அம்லு.. அதுக்காக நான் என்னோட உணர்வை மாத்திக்க முடியாது.. நான் இங்க தானே இருக்கேன்.. நீ அப்பப்ப இங்க வந்துட்டு போ… உன்னைய நான் ராணி மாதிரி பாத்துக்குறேன்.. நீ கேக்குறது எல்லாம் செய்றேன். உனக்கும் பிள்ளைக்கும் எந்த குறை இல்லாம வச்சுக்குறேன்.. ஆனா நானும், லியோஸும் இப்பிடி தான் இருப்போம்.. ஏனா நாங்க உயிருக்கு உயிரா லவ் பண்றோம்..”என்றான் கெஞ்சலோடு..
“அப்ப எனக்கு மனசு இல்லையா…? இந்த வாழ்க்கை வாழுறதுக்கு எதுக்கு எனக்கு பிள்ளை…?”
“இல்ல! இல்ல! நான் சொன்னா சர்வா சார், திரவி அண்ணா நம்புவாங்க, அவங்க கிட்ட உங்களை பத்தி சொன்னா, என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணினதுக்கு சும்மா விட மாட்டாங்க.. அப்புறம் ரேவதி அண்ணி, மாமா எல்லாம் எனக்காக தான் யோசிப்பாங்க.. நீங்க இப்பிடி பண்றது தெரிஞ்சா அத்த கூட உங்களை மகனா நினைக்க மாட்டாங்க” என்றாள் வேகமாக..
“அம்லு!”
“என்ன அம்லு! ஒரு வேளை என்னைய கல்யாணம் பண்ணி நேரா கூப்புட்டு வந்திருந்தா இன்னேரம் நீங்க சொன்னதுக்கு எல்லாம் மண்டையை ஆட்டி இருப்பேன் ஆனா நீங்க செஞ்ச நல்ல காரியம் படிக்க வச்சது.. நைட் புல்லா யோசிச்சேன்.. இது தப்பு.. என்னால முடியாது நான் ஊருக்குப் போறேன் என் அம்மா கூட இருந்துப்பேன் விடுங்க தயவு செய்து.. உங்க போனை கொடுங்க.. நான் சர்வா சார் கிட்ட பேசிட்டு அவர் போகும் போது போறேன்..”என்றாள் அழுதப்படி…
“ஓ! அவன் இருக்குற தைரியம் தான் உனக்கு இப்ப.. அவனும் உன் கூட பேச துடிக்குறான் எனக்கே ரெண்டுத் தடவை போன் பண்ணினான்.. ஏன் ஒரே வீட்டில் இருந்தப்ப ரெண்டுப் பேரும் அன்டர்சேண்டிங் ஆகிட்டீங்களா…? எனக்கு பிரச்சனையில்லை.. ஆனா என்னோட குழந்தையை பெத்துக் கொடு என் பொண்டாட்டியா.. அவன் கூட படுத்துக்கோ என்ன வேணா பண்ணிக்கோ, நான் கேக்கலை. நீயும் என் விஷயத்தில் தலையிடாத.. எனக்கு அப்பா, அம்மா ஊருக்குள்ள நீ பொண்டாட்டி, ஒரு பிள்ளை இருக்குனு தெரியனும். நான் இங்க எப்பிடி இருக்கேனு தெரியக் கூடாது.. அவ்ளோ தான்.. ஏற்கனவே ஒருத்தன் மூலமா அந்த கிழவனுக்கு தெரிஞ்சுட்டு, அத எப்பிடியோ சமாளிச்சுட்டேன்.. அந்த ஆளுக்கு முழுசா தெரியாது லியோஸ் ஒரு பையனு… நீயும் நான் சொல்ற படி கேளு.. சர்வா கூட நானே போக விடுறேன்.. பாவம் நீயும் என்ன செய்வ. உனக்கும் ஃபிலிங்க்ஸ் இருக்குமுல..” என்றான் தாராளமாக..
அம்லுக்கு பைத்தியமே பிடித்தது..
“அய்யோ! சாரை பத்தி தப்பா பேசாதீங்க.. உங்க புத்தி அவருக்கு இல்லை.. தயவு செஞ்சு என்னை விடுங்க…. நான் என் அம்மா கூடப் போய் இருந்துக்குறேன். நீங்க எப்பிடியோ போங்க…”என்று அழுதுப் புலம்பினாள்..
“இங்க பாரு நான் சொல்ற படி தான் நீ கேக்கனும்.. நீ முறையா நான் கல்யாணம் பண்ண பொண்டாட்டி.. அப்பிடி எல்லாம் போக முடியாது.. அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன் குழந்தை பெத்துக்க உனக்கு டெஸ்டிங்கு.. இல்லைனா உனக்கும் சர்வாக்கும் தொடர்பு இருக்குனு நான் உன் அம்மா, என் அம்மா, அக்கா எல்லாரு கிட்டையும் சொல்லிடுவேன்.. நீ என்னைய பத்தி சொன்னாலும் ஆதாரம் இல்லாம நம்ப மாட்டாங்க.. நீ சர்வா கூட போக தான் இப்பிடி தான் பண்ணுறேனு சொல்லிடுவேன்.. அப்புறம் உன்னைய இங்கிருந்து அனுப்பினா தானே நீ அங்க போய் சொல்லுவ.. குழந்தை பெத்துட்டு அனுப்பினா என்ன பண்ணுவ.. இப்ப சர்வா மானம் போகக் கூடாதுனா கம்முனு இரு… அவன் தான் உன்னைய மனசை மாத்திட்டான் சொல்வேன்.. அப்புறம் உன் இஷ்டம்.. “என்று ஆபிஸ் சென்று விட்டான்..
ஜெகனுக்கு தோன்றியது இது தான் இப்ப சர்வா பெயரை சொல்லி இவளை மடக்கிடலாம். அப்புறம் குழந்தை பிறந்ததும் குழந்தைக்காகனு சொன்னா போதும்.. நம்ம கட்டுப்பாட்டில் இருப்பானு முடிவு செய்தான்.
இவளும் எப்ப பாரு சர்வா, யுவி பத்தி பேசுறது, அவனும் இரு முறை போன் செய்து அம்லுவை பார்க்க நினைத்ததை தப்பாக பிணைத்துக் கொண்டான்..
இவளை படிக்க அனுப்பியது ரொம்ப தப்பு.. அதுவும் அந்த சர்வா இவளை வேற மாதிரி மாத்தி வச்சு இருக்கான்.. என்ன சொன்னாலும் கேக்குறவ இப்ப என்ன..? ஏதுனு..? கேள்விக் கேக்குறா..? இது எல்லாமே இப்ப கொஞ்ச நாட்களில் கத்துக்கிட்டது தான்.. என சர்வாவை எதிரியாக பார்த்தான் ஜெகன்..
அவன் சென்றதும் ஷோபாவில் அமர்ந்தவள் எழவே இல்லை, இது என்ன மாதிரி வாழ்க்கை என்று புரியாமல் தவித்தாள்..
‘சர்வா சார் பாவம் சம்பந்தமே இல்லாம எங்களுக்கு இடையில் ஏன் மாட்டனும்..? யுவியும், அவரும் இப்ப தான் நல்ல வாழ்க்கை வாழ ஆரம்பிச்சு இருக்காங்க.. அதை நான் போய் கெடுத்துடக் கூடாது.. இப்ப நான் போய் என்ன சொன்னாலும் அது என் அம்மா, சர்வா சார், யுவி வரை பாதிக்கும்.. வேண்டாம் என் ஒரு ஆளோட முடியட்டும்..’என தன்னையே பலியாடாக மாற்றிக் கொண்டாள்..
அன்றில் இருந்து சாப்பாடு என்பது ஏதோ நினைவு வரும் தண்ணீர் குடிப்பது போல் கஞ்சி மட்டுமே.. அவனோ அவளை சீண்ட கூட இல்லை…
நைட் லியோஸோடு வருவதும் காலையில் செல்வதுமாக தொடர்ந்தது அவள் எதிரிலே…
அன்று ஹாஸ்பெட்டல் சென்றது, அவளுக்கு சோதனை செய்வதற்கு..
அங்கு அவளுக்கு தெரிந்த உண்மை அதற்கு மேல் அதிர்ச்சி…
அது ஜென்ஸி மூலமாக தான் நிரஞ்சிக்கு தெரிய வந்தது.. அதும் நிரஞ்சிக்கு புரியவில்லை என ஜென்ஸி விளக்கமாக சொன்னாள், ஸ்கேனிங் செய்யும் போது.. அதை கேட்டது முதல் நிரஞ்சிக்கு தான் ஏன் பிறந்தோம், ஏன் இருக்கொம் என தோன்றியது..
அந்த நேரத்தில் தான் சர்வாவைப் பார்த்தது.. எதுமே அவனிடம் சொல்ல முடியவில்லை…
அவளின் முகம் வெளிறியது கண்ட ஜென்ஸி அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் சென்று விட்டாள், ஆனால் யோகா அறையில் நிரஞ்சியை கண்டதும் ஜென்ஸிக்கு சந்தேகம் வந்து சர்வாவிடம் அப்பிடி கேட்டது..
ஜென்ஸி ஹாஸ்பெட்டல் விஷயங்களை வெளியில் சொல்லக் கூடாது என அமைதியானாள்..
வீட்டிற்கு வந்ததும் நிரஞ்சிக்கு அந்த விஷயத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை..
ஜெகனிடம் அவள் நேரடியாக கேட்க.. அவனோ கேஷ்வலாக”ஓ! டாக்டர் சொன்னது உனக்கு புரிஞ்சுட்டா…? பரவாயில்லை அம்லு, நீ நல்லா தான் கத்துக்கிட்ட போல.. எல்லாம் சர்வா ட்ரைனிங்கா..?”என்று சிரித்தான்..
“சாரை பத்தி பேசாதீங்க.. அந்த தகுதி உங்களுக்கு இல்லை.. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க ஜெகன்”என்றாள் படுகோபமாக..
“டாக்டர் சொன்னார் இரு விந்தணுக்கள் எடுத்து கருமுட்டைகளோடு சேர்க்கலாம், டிவின்ஸ் பாசிப்பிலிட்டி இருந்தால் சக்ஸஸ் ஆகுமுனு, நானும் லியோஸ் கேனு அவருக்கு தெரியும்.. ஏனா அவரு லியோஸ் ரிலேட்டிவ் தான் இங்க ஒரு பிரச்சனையே இல்லை அவன் கேனு தெரிஞ்சாலும் ஆனா நம்ம ஊருல கஷ்டம்.. அவர் சொன்னதால டிவின்ஸ் ட்ரை பண்ண சொன்னேன்.. லியோஸ் ஆசைப்பட்டான் அதனால என்னோட விந்தணு, அவனோட விந்தணு எடுத்து உன்னோட கர்ப்பபையில் வச்சா நாங்க ரெண்டுப் பேரும பயலாஜிக்கல் ஃபாதர் ஆகலாம்.”என்று அவன் முடிப்பதற்குள் அம்லு அவனின் கன்னத்தில் ஒரு அறைக் கொடுத்திருந்தாள் அவளையும் மீறிய கோபத்தில்…
“டேய்! என்னை என்ன நினைச்ச, ஏதோ நீ கட்டிய தாலிக்காக உன்னோட குழந்தையை சுமக்க மனசே இல்லாமல் ஒத்துக்கிட்டேன்.. இதுல அவனின் குழந்தையை.. அய்யோ! இதை எல்லாம் கேக்க நான் இருக்குறேன்”என தன் தலையில் அடித்து அழுதாள்..
அம்லு அடித்த கோபத்தில் அவளை தர தரவென்று இழுத்துட்டுப் போய் சுவரில் மோதினான் ஜெகன்..
“ஏய்! இப்ப என்ன அவன் கூடப் படுத்தா பிள்ளையை பெக்க சொன்னேன்.. செயற்கை முறையில் வைக்கவே ஏதோ பத்தினி மாதிரி ட்ராம போடுற..? ஏன் அங்க நீ சர்வா கூட சுத்திட்டு தானே இருந்த… நான் எதையாவது கேட்டனா.. எந்த புருசன் இன்னொருத்தவன் வீட்டில் தங்க விடுவான்.. நான் ஏதோ கண்டுக்காம இருந்தேன்.. நீ என்னமோ ஆம்பளைங்களே தொடாதவ மாதிரி பேசுற…? கூடப் படிக்குற பசங்க கிட்ட எல்லாம் பேசுற தானே..பேசுறதால கற்பு அப்பிடியே பறந்துடுமா…? இல்லல.. சர்வா கூட நீ இருந்தீயே..”என அவன் தொடங்க..
“அசிங்கமா பேசாத. நானும் சர்வா சாரும் அப்பிடி பாத்ததுக் கூட இல்ல…”
“நம்புறேன்.. அப்பிடி நினைச்சிக்கோ.. லியோஸ் உனக்கு யாரோ.. அவனோட விந்தணு மட்டும்தான் உனக்குவைக்கப் போறாங்க.. ஏனா நாங்க என்ன தான் லவ் பண்ணாலும் குழந்தை எல்லாம் வாய்ப்பில்லை.. அவனுக்கும் ஆசை இருக்கு..சோ நீ எப்பிடியும் எனக்குபெத்துக் கொடுக்கப் போற அப்பிடியே அவனுக்கும் பெத்துக் கொடுத்தா, எங்க வாரிசா இரண்டு குழந்தைகள் நாங்களும் ஹேப்பியா எங்க வாழ்க்கையை வாழுவோம்.. ” என்றான் சிரித்துக் கொண்டே சத்தமாக..
“அப்ப நான்…?”
“உனக்கு இந்த வாழ்க்கை கிடைக்குமா..? நிறைய பணம்.. வெளிநாட்டு வாழ்க்கை.. இந்தியா வாழ்க்கை.. ரெண்டுப் பிள்ளைங்க.. கவலைப்படாத நாங்க உன்னைய எங்க கைக்கூட படாம பத்திரமா பாத்துக்குறோம்.. நீ மட்டும் யார் கிட்டையும் எதையும் சொல்லாத..” என்றான்..
“கிட்ட தட்ட அப்பிடி தான்.. ஆனா நான் கட்டின தாலியோட லைசென்ஸ்..” என்று கூறிவிட்டு கிளம்பிட்டான்..
நிரஞ்சிக்கு அதை கற்பனைக் கூட செய்துப் பார்க்க முடியவில்லை..
மதிக் கூறியது அவளுக்கு நினைவு வந்தது, உனக்கு எதுவானாலும் சர்வா இருப்பார் அம்லு, அதை மனசில் வச்சுக்கோனு..
இதுக்கு மேல இங்க இருக்க கூடாது, எப்பிடியாவது போயிடனும்.. இந்த வாழ்க்கை அசிங்கம் என முடிவெடுத்தாள்.. சர்வா சாருக்கு தெரிஞ்சா போதும், என்னைய காப்பாத்திடுவார் என்ற நம்பிக்கை வந்தது…
ஜன்னல் அருகே நின்று கை ஆட்டி யாரையாவது துணைக்கு அழைத்தாள், ஹெல்ப் என்று…
ஆனால் அவளின் குரலை கேக்க தான் யாரும் இல்லை.. கேட்டவர்களும் அவளின் பழைய நாள் போக்கில் கிரேஸி கேர்ளுனு கடந்தார்கள்..
இரு தினங்கள் யாருமே கண்டுக்கவில்லை..
மூன்றாவது தினம் போலிஸ் ரோந்துப் போக, நிரஞ்சிக்கு விதி வழி அமைத்து தந்தது..
போலிஸ் உதவ கதவைத் திறந்து வர, சாப்பிடாமல் தலையில் அன்றுபட்ட காயத்தோடு காப்பாற்றப் படவேண்டியவளாக நின்றாள்..
உடனே போலிஸ் முதலுதவிக்கு அழைத்துச் சென்று, கணவன் நம்பர் கேக்க அவளோ சர்வா நம்பரை கொடுத்தது.. இப்போது போலிஸ் ஸ்டேசனில் அனைவரும்..
அஸ்வின் அதை போலிஸிடம் புரியும் படி எடுத்துரைத்தான்..
சர்வா ஜெகனின் மீது கொலைவெறி வர, போலிஸ் ஸ்டேசன் என்று பாராமல் போட்டு புரட்டி எடுத்தான்.. ஒவ்வொரு அடியிலும் அம்லுவின் பழைய சிரித்த முகம் மாறி இப்போது இருக்கும் அழுது பொலிவை இழந்த முகமே நினைவில் நிற்க நினைத்து நினைத்து அடித்தான்..
லியோஸ் அவனை தடுக்க அவனுக்கும் விழுந்தது..
போலிஸ் இந்த முறை தடுக்கவில்லை..
“ஏன்டா! உனக்கு உன்னோட உணர்வு அதை நீ உன் குடும்பத்திடம் சொல்லி புரியவை இல்ல, எப்பிடியோ போ.. ஆனா இந்த அப்பாவி பொண்ணை கூட்டிட்டு வந்து எவ்வளவு பிளான் போட்டு இருக்க.. அவளுக்கு கேக்க யாருமே இல்லனு தைரியமா..? அவ அம்மா பேச மாட்டாங்கனு கணக்குப் போட்டு எல்லாம் பண்ணி இருக்க… ராஸ்கல்.. நீ மட்டும் சுகமா இருப்ப இவ உன் குழந்தை, குடும்பமுனு கஷ்டப்படனும்..”என அடித்து நொறுக்கினான்..