விடியற்காலைப் பொழுதில் விடிந்ததே தெரியாமல் உறக்கத்தில் இருந்தனர், மிஸ்டர் அன்ட் மிஸஸ் மயிலாஞ்சி.
ஒருவர் கண் விழித்து அசைந்தால் மற்றொருவரும் முழிக்க வேண்டும், இல்லை என்றால் அட்லீஸ்ட் முண்டி நிதர்சன உணர்வுக்கு வரனும், ஏனென்றால் அவர்களின் பிணைப்பு அந்தளவு இருந்தது.
ஈருயிர் ஓருடல் பாலிசியில் சிறிதும் விலக்கு பெறாமல் மிஸ்டர் அன்ட் மிஸஸ் நித்திரையில் இருக்க, முதலில் உணர்வு தட்டியது மிஸ்டருக்கே.
என்ன தான் காஸ்ட்லியான சரக்கு அடிச்சாலும் அந்த மார்னிங் இஸ் மார்னிங் தான் போல, ரிசர்ச்சில் அறிந்தது😃😀 ஆல்கஹால் இஸ் ஆல்கஹால் தானே. அதனால சர்வாக்கு லேசாக தலையில் அழுத்தமிருந்தது.
நெற்றியில் கைவைத்தே கண்களை திறந்தான்.
கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் இருப்பக்கத்தையும் அழுத்தி விட்டவனுக்கு சிறிது தெளிவுப் பிறந்தது, அவனின் அசைவால் மிஸஸ் மயிலாஞ்சியும் அசைய அப்போது தான் சர்வா திரும்பி பார்த்தான் அம்லுவை.
அருகில் தன்னோடு ஒன்றி மார்பில் கிடந்தவளை கண்டு சிரித்தவன், அவளின் நெற்றியில் முத்தம் வைத்து அப்பிடியே இடையோடு அணைக்க சென்ற போது தான் வெற்றுடல் மேனி உணர்வில் ஏறியது.
அதுவரை இருந்த தெளிந்த மனநிலையில் ஏதோ கல் வீசியது போல் தோன்ற தலையின் அழுத்தத்தால் எழுந்தமர்ந்து பின்னால் சாய்ந்து சுற்றிப் பார்த்தான்.
சர்வாவின் ஆடைகள் ஒரு பக்கம் என போர்வைக்குள் இருவரும் ஆடையின்றி இன்னுமே பிணைந்திருக்க, கண்களை சுருக்கி இரவிற்கு சென்றான்.
திரவி சென்றது, அம்லு வந்தது, அம்லுவை தூக்கியது, அவள் மேல் படர்ந்து மேலங்கியை நீக்கியது என காட்சிகள் கிளிப்ஸாக ஓட, சர்வாக்கு அதிர்ச்சியானது.
“ஓ! காட்”என்றான் வாய் திறந்து கூறி அதிர்ந்தவாறு.
அவன் சத்தத்தில் முழித்த அம்லு “யுவிப்பா!”என கண்களை சுருக்கி நிமிர்ந்து அவனை நோக்கினாள் புரியாமல் தூக்கத்தில்.
“அம்லு! நைட்….?”என நிறுத்தி அழுத்தமாக கேட்ட சர்வாவின் கேள்வியில், நிதானத்திற்கு வந்த அம்லு, நன்கு முழித்து எழப்போக ஆடையில்லாததால் போர்வையை குறுக்கே வைத்தவாறு அவன் அருகே அமர்ந்து முழித்துப் பார்த்தாள்.
அவன் கட்டிய தாலி மட்டும் மார்பில் தொங்கியது அவன் கண் முன்னே.
அம்லுக்கு ஏனோ உடலே நடுங்க, அந்த பயம் முகத்தில் பரவியது, தாக்கம் உடனே விழிகளை தகர்க்க கண்ணீர் குளமாக நிறைந்தது.
தான் போதையில் என்ன செஞ்சோமுனு குழப்பத்தில் இருந்த சர்வா, அம்லுவின் முகத்தைப் பார்த்ததும் பதறி,
“ஹேய்! என்ன ஆச்சு..? ஏன்டி இப்பிடி கண் கலங்குற..? வெயிட், ரிலாக்ஸ்”என அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
“யுவிப்பா!”என அம்லு அழுதே விட்டாள்.
“ஓகே! ஓகே! ரிலாக்ஸ் அம்லு, ப்ளீஸ் என்னைய யோசிக்க விடு, எனக்கு புரியல”என மூச்சை இழுத்து ஆழ்ந்து வெளியிட்டவனுக்கு ஓரளவு விளங்கியது.
“அம்லு!”
“ம்ம்ம்!”என்றாள் அவன் அணைப்பில் இருந்து எழாமல்.
“நான் போதையில் அவசரப்பட்டு உன்னைய தொட்டு இருந்தாலும் எனக்கு புடிக்காதவ இல்லடி நீ, எதுக்கு பயப்புடுற..?”
அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்.
“உன்னைய தொடக்கூடாதுனு எண்ணம் எல்லாம் இல்ல, நீ என் பொண்டாட்டி மயிலாஞ்சி”என அவன் நெஞ்சுக்குள் அவளை புதைத்தவன்,
“ஆனா…?”என நிறுத்தினான்.
“என்ன யுவிப்பா..?”என்றாள் அந்த நிலையிலே.
“இப்ப எனக்கு பயமுனா நம்ம எந்த ப்ரிகாஸ்னும் இல்லாம ரிலேசன் ஆரம்பிச்சுட்டோமேனு தான்”
நிமிர்ந்தவள்”புரியல யுவிப்பா.?”
“இல்ல அம்லு, பேபி ஃபார்ம் ஆகாம இருக்க சேஃப்டி ப்ரீகாஸன் எடுக்கலையேனு சொல்றேன்.. ம்ம்ம்! ஏன் அம்லு ஒரு தடவை ரிலேசனில் இருந்தாலும் பிரெகென்சி ஆகிடுமா…?” என்று கேட்டான், அவ ஏதோ அதில் டாக்ரேட் மாதிரி.
“தெரியலையே!”
“உன் கிட்ட போய் கேட்டேன் பாரு”என யோசித்தவன், சட்டென்று நினைவு வர பக்கத்து ட்ரஸிங் டேபிளில் இருந்த தன் ஃபோனை எடுத்தான்.
அதில் குரோமில் சென்று சிங்கிள் டைம் இன்டர்ஹோஸ்ட் இஸ் பாசிப்பிள் ஃபார் பேபி என கேள்வியாக டைப் செய்ய, “என்ன யுவிப்பா பண்றீங்க..?”என்றாள் அம்லு.
“இரு அம்லு, நெட்டில் போட்டு பாக்குறேன், பாசிப்பில்ட்டி இருக்கானு” என வந்த ரிசல்டை படித்தான், அம்லு அவனோடு சாய்ந்தவாறு போனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“அம்லு! உனக்கு லாஸ்ட் பீரியட்ஸ் எப்ப வந்துச்சு..?”
“ம்ம்ம்!”என யோசித்தவள், “அது இருபது நாளுக்கு மேல இருக்கும், அடுத்த வாரம் வந்துடும். ஏன் கேக்குறீங்க…?”
“ஓ! ஒரு சைக்கிளுக்கு இடையில் மிட் பீரியட்ல ரிலேசன் ஒன்ஸ் இருந்தா பாசிட்டிவ் ஆகுமாம், அதுவும் மே பி. லாஸ்ட் டென் டேஸ் கம்மி தானு போட்டு. சோ நமக்கு வாய்ப்பில்லை, ஹப்பா! இப்ப தான் ப்ரீயா இருக்கு, நான் கூட பயந்துட்டேன்”என போனை வச்சுட்டு அவளை இறுக்கி அணைத்தான்.
“ஏன் பயந்தீங்க…?”
“நீ ஏன் அழுத…?”
“நீங்க திட்டப் போறீங்கனு”
“நான் ஏன் திட்டப் போறேன்..?”
“ம்ம்ம்! நைட் நடந்ததுக்கு தான்”
“அதுக்கு தான் நானும் பயந்தேன் இப்ப”
“அப்ப நைட் நடந்தது தப்பா யுவிப்பா..? உங்களுக்கு புடிக்காம நடந்துட்டு தானே”
“ச்சே! ச்சே! அப்பிடியில்ல என் மயிலாஞ்சி, என்னோட பயம் நீ பிரகென்ஸி பொசிஸன் போயிடக்கூடாது அவ்ளோ தான், மத்தப்படி நம்ம கணவன், மனைவி ரிலேசன் அதுல எல்லாம் எனக்கு நோ ப்ராப்ளம். சொல்லப் போனா நேத்து நடந்த ஃபர்ஸ்ட் அவர் ரிலேசனை, நீ காலேஜ் முடிச்சு நான் செலப்ரேட் பண்ண நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அன்எக்ஸ்பெட்டா ஹேப்பேண்டு. பரவாயில்ல விடு, அது சுயநினைவு இல்லாம நடந்தது, அடுத்து நான் நானா இருக்கேன், ம்ம்ம்!”என்றான் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து.
“ம்ம்ம்! எனக்கு இன்னும் தூக்கம் வருது யுவிப்பா”என அவனை இறுக்கிட்டு கண்களை மூடினாள்.
அம்லுவுக்கு தனியா முடிவு இதுவரை தோன்றவில்லை, சர்வா சொல்வது தான் அவனோடு முடிவு குழந்தை வேண்டாம், அதுவே அவளுக்கும் சரி, இந்த நிமிடம் அம்லுக்கு கேட்க தோன்றவில்லை, அப்பிடியே பாசிட்டிவ் ஆனா தான் என்ன யுவிப்பா..? என்று. அந்தளவு சர்வா மட்டுமே அம்லுக்கு சர்வமயமாக இருந்தான்.
“அல்ரெடி டைம் ஆச்சு போல அம்லு”
“பரவாயில்ல, எனக்கு டயர்டா இருக்கு” என்றாள் விழிகளை திறக்காமல்.
சிரித்து அவளின் தலையை வருடியவன், “அம்லு! நீ இப்ப எப்பிடி இருக்கனு தெரியுதா..?”என்றான் மெதுவாக அவளின் காதோரமாக.
“ம்ம்ம்!”என்று முனகியவளுக்கு அப்போது தான் உடல் உணர்வு தோன்ற, “அச்சோ!”என போர்வையை மேலும் சுற்றினாள்.
“என்ன அச்சோ..?”
“போங்க யுவிப்பா, ப்ளீஸ் என் ட்ரஸை எடுத்துக் கொடுங்களே”
“உனக்கு தூக்கம் வருதுனு சொன்ன..?”
“ம்ம்ம்! இப்ப வரல, எடுத்து கொடுங்க”
“முடியாது!”
“நீங்க எழுந்திரிச்சு போங்க, நானே எடுத்துக்குறேன்”
“முடியாது!”
“என்ன யுவிப்பா! சரி வேணாம் விடுங்க, நான் தூங்குறேன்”என அவனை ஒன்றி கண்களை மூடினாள்.
சர்வா அவளின் இடையில் கையை நகர்த்த அம்லு அசையாமல் இருந்தாள்.
“ஹேய் என்ன ஹிப் டான்ஸ் போடல..?”
“அது இந்த பக்கம் இல்ல”என்றாள் கண்களை மூடியப்படியே.
“எழுந்திரி அம்லு!”
“முடியாது!”
“பாட்டி, யுவி, அன்பு வந்துடப் போறாங்க, நீ இப்பிடியே படுத்து இருக்கப் போறீயா..?”
“ஆமா!”
“சரி! எனக்கென்ன”என்று அவனும் கீழே இறங்கி படுத்து கண்களை மூடினான்.
கண் முழித்து நிமிர்ந்துப் பார்த்தவள், அவனின் மூடிய விழிகளில் முத்தம் வைத்தாள்.
“என்னங்க மயிலாஞ்சி மேடம்.?”
“உஷ்ஷ்ஷ்! கண்ணை திறக்கவே கூடாது, இது அம்லுவின் ஆர்டர், ஓகேவா..?”
“திறந்தா..?”
“அம்லு கிட்ட இனிமே PA கிடைக்காது பதிலா அடி தான் கிடைக்கும்”
“ஓ! அந்தளவு தைரியம் வந்துட்டா.?”
“ஆமா! திஸ் இஸ் ஆர்டர் ப்ரம் யுவர் மயிலாஞ்சி”என வாயில் கை வைத்து சிரித்தாள்.
“பாருடா! என் மயிலாஞ்சி இங்கிலிஷ்ல வேற ஆர்டர் போடுறா”
“யுவிப்பா! டீல் ஓகேவா..?”
“ஓகே! ஓகே! கண்ணை திறக்கல எழுந்திரி”
அம்லு மெதுவாக எழுந்தாள், என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரிய கூச்சம், வெட்கம் அவளுக்கு வர கணவனே இருந்தாலும் பார்த்திடப்போறானோ என பயந்தப்படி மெல்ல நடந்தாள்..
பாத் ரூம் வரை போனவள் வந்துட்டோமுனு நிம்மதி ஆக, சட்டென்று போர்வையோடு வந்து அணைத்தான் சர்வா.
“யுவிப்பா!”என்று கத்தினாள் பயத்தில்.
“ஹேய்! நான் தான்”
“நான் என்ன சொன்னேன், எதுக்கு கண்ணை திறந்தீங்க..?”என அவனை அடித்தாள்.
“இங்க பாரு நீ சொன்ன மாதிரி நான் கண்ணை திறக்கவே இல்ல, ஸ்டில் க்ளோஸிங்”
“ம்ம்ம்! இந்த ரூம் என்ன எனக்கு புதுசா அம்லு, எந்த பக்கம் நீ போவனு தெரியாத..? இல்ல உன் கொலுசு தான் காட்டிக் கொடுக்காத”என கண்களை திறக்காமல் அவளின் தோளில் முகத்தைப் புதைத்தான்.
“ஓ! கொலுசா..? சரி விடுங்க, நான் போய் குளிச்சுட்டு வரேன்.
“நான் கண்களை திறக்கலாமுனு சொல்லிட்டுப் போ”
“விடுங்க சர்வா சார், அப்புறம் அடி தான் விழும், அம்லு எப்பிடி அடிப்பானு தெரியுமுல, அப்பிடியே கடிச்சி வச்சுடுவேன்..”
“ஏய்! சரி, சரி போ, மறுபடியும் மாட்டுவ ஒரு நாள்”என அவளை விட்ட வேகத்தில் ஓடி பாத் ரூமுக்குள் மறைந்தவள், “சரி! ஓபன் யுவர் ஐஸ் சர்வா சார்”என்று சொல்லிட்டு சிரித்தவாறு வேகமாக கதவை சாத்தினாள்.
கண்களை திறந்தவன், சிரித்துவிட்டு படுக்கையில் விழுந்தான் அம்லு வரும் வரை தூங்கலாம் என்று…
சர்வா கெட்டவன் இல்லை ஆனால் அழுத்தகாரன், குழந்தை விஷயத்தில் ஏனோ ரொம்ப அழுத்தமாக இருந்தான், அம்லு விஷயத்தில் ரொம்ப பலவீனமானவன் என்பது போக போக தெரியும் அவனுக்கு, தாம்பத்யம் அல்லாமல் அம்லு அவன் அழுத்தமான மனதிற்கு சவாலாக மாறப் போகிறாள்.
எப்பிடி சர்வா அம்லுக்கு சர்வமயமோ, அதே போல் சர்வாவும் அம்லுக்கு அடங்ககூடியவன் அவன் அழுத்தமான முடிவை தவிர்த்து. அது தான் இருமனதையும் ஆட்சி செய்யப் போகிறது.
ஹேமா உடனே அமைதியாக, “ஏய்! அவன் சும்மா கிண்டல் பண்றான், அதான் யுவிப்பா உன் கிட்ட பேசினாருல விடுடி”என சமாதானம் செய்தாள் அம்லு.
“அம்லு பேபி! நீ முதலில் உன் யுவிப்பாவை விடு, காலேஜில் போய் கத கந்தல் ஆகிடும்”என நக்கடித்தாள் சந்தி.
“அது எல்லாம் நான் பாத்துக்குறேன் போடி”
இத்தனை நாள் கதை, பார்த்த திரைப்படம், போன இடங்கள் என அனைத்தையும் பரிமாறினர்.
*** காலேஜ் முதல் நாள்.
அஞ்சல குரூப் இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்தது.
சீனியர் ஆகினர்…
முதல் வருடம் ப்ரஷ்ஷர்ஸ் டே நடைப்பெற்றது.
அம்லு அட்டென்ட் பண்ணிய மீட்டிங்கில் இப்போது புது புது முகங்கள், ஸ்டேஜில் அமர்ந்திருந்த சர்வாக்கு நாட்கள் பின்னோக்கி சென்று முகத்தில் சிரிப்பை வரவைத்தது, அம்லுவை பார்த்த தினத்தை எண்ணி.
அங்கு சூப்பர் சீனியர்ஸ்ம் அமர்ந்திருந்தனர், அதில் நம்ம அம்லுவும் ஒருத்தி.
சர்வா அந்த கூட்டத்தில் தன் மயிலாஞ்சியை தேடினான்.
அவளோ கைக்கும், வாயிக்கும் ஓய்வு இல்லாமல் ஜிமிக்கி டான்ஸ் போட கைகளை ஆட்டி பேசிக் கொண்டே இருந்தாள் நண்பர்களோடு.
சர்வா அவ்வபோது பார்க்க, மனதில் ‘இவ மாறவே மாட்டா போல, அப்பிடி என்ன தான் பேசுறானு தெரியல’என புருவத்தை சுளித்து மனதிலே சிரித்தான்.
சர்வா முறை வர பேச ஆரம்பித்தான்.
அம்லு அப்போது தான் திரும்பி”ஐ! யுவிப்பா”என மேடையைப் பார்த்தாள்.
சர்வா கடந்த வருடம் போல் ஆங்கிலத்தில் ஆரம்பித்து தமிழிலில் பேசி ஆங்கிகிலத்தில் பேச வேண்டும் என அறிவுறுத்தி பல அறிவுரைகள் தெளிவாக சொல்லி அமர்ந்தான்.
அம்லு கணவன் பேசுவதையே ரசித்துப் பார்க்க, சந்தி”சார் பேசி முடிச்சு பத்து நிமிஷம் ஆச்சுங்க மேடம்”
“தெரியும்! அடங்கு நீ”
அனைவரும் எழுந்து வெளியில் போக, அஞ்சல குரூப் அரட்டை அடித்துக் கொண்டே நடந்தது.
மீட்டிங் முடிஞ்சு சர்வா, திரவி, இன்னும் சிலர் வெளியில் நடந்து வந்தனர்.
சர்வா பேசியவாறு வேகமாக நடக்க, சற்று தூரமாக நின்ற அஞ்சல குரூப் சர்வா வருவதை பார்த்து அமைதியானது.
அங்கு இருந்த மரத்தின் வழியாக சர்வா கிராஸ் பண்ண, பட்ட மரக்கிளை ஒன்று அவன் மேல் விழுந்தது.
அம்லு ப்ரடண்ட்ஸ் குரூப்போடு பேசிக்கொண்டு இருந்தாலும் சர்வா போவதையே பார்த்துக் கொண்டு இருந்தவள், சர்வா மேல் மரக்கிளை விழ அவசரமாக அவனருகே ஓடினாள், “யுவிப்பா! என்ன ஆச்சு..?”என, சர்வா நெற்றி முன்னே உரசியவாறு பட்டு தள்ளி விழுந்ததால், அடி பலமாக இல்லை என்றாலும் ரத்தம் வழிந்தது.
சர்வா அம்லுவின் குரல் கேட்க, சட்டென்று”இட்ஸ் ஓகே நிரஞ்சி! நோ ப்ராப்ளம், யூ கோ “என்றான், அருகில் வந்த அம்லுவிடம்.
திரவிக்கு புரிந்தது, “அம்லு! நீ போ” என்றான் மெதுவாக, அம்லுவும் சுற்றி பாத்துட்டு ப்ரண்ட்ஸோடு சென்று நின்றாள்.
சர்வா நெற்றியை தடவி விட்டு வேகமாக நடந்தான் தன் அறை நோக்கி திரவியோடு.
சந்தி”அம்லு! சார் ரொம்ப ஸ்ட்ரிட் இல்ல சில நேரங்களில்”
“ம்ம்ம்!”
“நீ கவனமா இரு அம்லு, வாங்க கிளாஸ்க்கு போகலாம்”என ஹேமா சொல்ல, அனைவரும் கிளாஸ்க்கு நடந்தனர்.
அம்லு, சர்வா சென்ற வழியையே திரும்பி பார்த்து நடந்தாள்.