“டேய்! உனக்கு ஏதோ அடிப்பட்டிச்சுனு தானே ஓடி வந்தா, மூன்றாவது மனிதர் மாதிரி விலக்கி அனுப்பி விடுற..?”என திரவி சர்வாவை அதட்டியவாறு, நெற்றியில் முதலுதவி செய்தான்.
“இது காலேஜ்டா, நான் அவளுக்கு ப்ரோப்ஸர் அந்த இடைவெளி இருக்கனும், அதான் நல்லது. இல்லனா மத்தவங்க மத்தியில் நாங்க பேசும் பொருளா ஆகிடுவோம், அது என்னைய விட அவளை தான் பாதிக்கும், ஏனா நான் இருக்க பொஸிஸனுக்கு என் காதுக்கு உடனே வராது, ஆனா அவ ஸ்டூடென்ட் நேரா பேசுவாங்க, அதான் திரவி, எனக்கும் ஒன்னும் உயிர் போற அடியில்லையேடா..?”என்றான் சாதரணமாக.
“ம்ம்ம்! புரியுது சர்வா, ஆனா அம்லு கொஞ்சம் எமோஷனல் டைப் தானே, உடனே ரியாக்ட் பண்ணிடுவா, அதான் பிரச்சனையே இப்ப, நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுடா”
“ஹலோ மிஸ்டர் திரவியம், உங்களுக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு கிளம்புங்க” என்றான் சிரித்தவாறு.
“தெரியும் சார், பை டேக் கேர்”என அவனும் வெளியில் சிரித்தப்படி சென்றான்.
***
மாலை கல்லூரி முடிந்தது.
அம்லுக்கு ஒரே யோசனையாக இருந்தது சர்வாக்கு எப்பிடி இருக்கு என்று.
காலேஜ் பஸ்க்கு நட்புகளோடு சென்றவளுக்கு அது தோன்றியது.
“ஹேய் சந்தி! நீங்க போங்க நான் அப்புறம் வரேன்.”
“அம்லு! எப்பிடி வருவ..?தனியா வேற அது எல்லாம் முடியாது, எங்க கூட வா” என்றாள் ஹேமா.
“இல்லடி! நான் அவர் கூட வரேன் நீங்க போங்க”
“எவர் கூட..?”என்றான் ஸ்ரீ.
அம்லு அவனை முறைக்க, சந்தி உடனே “புரியுது! ஆனா சார் எப்ப கிளம்புவாருனு தெரியல, அதோட நீ இப்பிடி உள்ள சாருக்காக வெயிட் பண்ணா திட்டினாலும் திட்டுவாரு அம்லு, வேணா வந்துடு”
“இல்லல்ல! நான் காலேஜ்க்குள்ள வெயிட் பண்ண போறதில்ல, கேட்டுக்கு வெளியில் தான் வெயிட் பண்ண போறேன். நீங்க போங்க இங்கன தானே, அங்க செக்யூரிட்டி இருப்பாங்க, நான் பாத்துக்குறேன்”
“ஆமா! அம்லு, சார் வேற மாதிரி ரியாக்ட் பண்ணிட்டா நீ பாவம். காலையிலே பாத்தில..?”என்றான் ஹாசன்.
“காலேஜ்க்குள்ள தானே இத எல்லாம், எனக்கு அவரை பாக்கனும், வீடு வரை எல்லாம் போய் காத்திட்டு இருக்க முடியாது நீங்க போங்க”என காலேஜ் பையை தூக்கிட்டு கேட் வெளிப்பக்கமாக சென்று நின்றாள்.
காலேஜ் பஸ் சென்றது, நண்பர்களும் பை சொன்னார்கள்.
கிட்ட தட்ட இரண்டு மணி நேரமாய் நின்றாள் அங்கு.
செக்யூரிட்டி கூட பல தடவை கூறி விட்டார், “ஏம்மா! யாருக்காக வெயிட் பண்ற, உள்ள வந்து நில்லு”என.
“பரவயில்ல தாத்தா!”என்றாள் அவள்.
அவர் சற்றே வயதானவர், இன்னும் காலேஜில் பலருக்கு தெரியாது, சர்வா – அம்லு கணவன், மனைவி என்று.
மணி ஆறாகியது, சர்வா அட்மிசன்ஸ் லிஸ்ட் செக் பண்ணிட்டு இன்னும் எத்தனை சீட்ஸ் இருக்கனு கணக்கு எடுத்துட்டு, அதற்கான பணியை முடித்து விட்டு கிளம்பினான்.
காரை எடுத்துட்டு காலேஜ் முன்பக்கம் இருந்த வாட்டர் ஃபால்ஸை சுற்றிக் கொண்டு வெளியில் வர, செக்யூரிட்டி சல்யூட் அடித்தார்.
காரை வலப்பக்கம் திருப்ப, அங்கு நின்ற அம்லுவைக் கண்டு அதிர்ச்சியானான்.
‘இவ என்ன பண்றா இங்க..?’என அவளின் ஓரமாக காரை நிறுத்தி, கார் மிரரை இறக்கியவன்”ஏய் அம்லு! இங்க என்ன பண்ற..? வீட்டுக்குப் போகலையா..?”என கேட்டான் புரியாமல்.
கார் கதவை திறக்க அது லாக்கில் இருந்தது”கதவை திறங்க யுவிப்பா!” என்றாள்.
“அய்யோ! யுவிப்பா எனக்கு ஒன்னுமில்ல, உங்களுக்கு எப்பிடி இருக்கு..?”என அவன் நெற்றியில் கை வைத்து ஆராய்ந்தாள்.
சர்வா அவளின் செயல் புரியாமல், “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை அம்லு, ஏன் காலேஜ் பஸ்ஸில் போகலை..?”
“அதுவா, உங்களுக்கு காலையில் மரக்கிளை விழுந்ததில் இருந்து மனசே சரியில்லை, வீட்டுக்குப் போய் வெயிட் பண்றதை விட இங்கயே நின்னா நீங்க வெளியில் வரும் போது பாத்துடலாமேனு நின்னேன்”
“ஏய் லூசாடி நீ! இதுக்காக எவ்வளவு மணி நேரமா நின்ன, வீட்டுக்கு தானே வரப்போறேன், அதோட அப்பிடி ஒன்னும் உயிரே போற அடியில்லை அது, உன் கண்முன்னாடி நல்லா நடந்து தானே போனேன். அப்புறம் என்ன உனக்கு…?” என திட்டினான்.
“அச்சசோ! ஏன் இப்பிடி பேசுறீங்க யுவிப்பா, உங்க நெத்தில ரத்தம் வந்துச்சே பாத்தேன் தான், அதான் மனசுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு, ஃபோன் பண்ணா திட்டுவீங்க, காலேஜ் உள்ளயும் வெயிட் பண்ணாலும் திட்டுவீங்க, அதான் காலேஜ் விட்டு வெளியில் வந்து வெயிட் பண்ணனேன், வெளியில் நான் உங்க மயிலாஞ்சி தானே, நீங்க என் யுவிப்பா தானே” என்றாள் பாவமாக முகத்தை வைத்தவாறு.
தலையை லேசாக ஆட்டி, மூச்சை இழுத்து விட்டவன், எதுவும் சொல்லாமல் காரை ஸ்டார்ட் செய்தான்.
“யுவிப்பா! பேச மாட்டீங்களா…?”
அவளை திரும்பி பார்த்தவன், லேசாக சிரித்தவாறு”உன் கிட்ட பேசாம இருந்தா விட்டுருவீயா என்ன…?”
“போங்க யுவிப்பா!”
“ஏன்டி இப்பிடி பண்ற.?”என அவளின் கையைப்பிடித்தான் ஸ்டியரிங் பிடிக்காத மற்றொரு கையால்.
“நான் என்ன பண்ணனேன்…?”
“ம்ம்ம்! உனக்கே தெரியாத..? காலேஜ் வாசலில் எவ்வளவு நேராம நின்னுட்டே இருந்திருக்க, பைத்தியமா நீ..? ஒரு ஃபோன் பண்ணியாச்சும் சொல்லி இருந்தா நான் வந்து இருப்பேன்ல சீக்கிரம்”
“ஃபோன் பண்ணா திட்டுவீங்கள.?”
“வெளியில் இருந்து என் மயிலாஞ்சியா தான் கூப்புடுப் போற..?”என கூறி நக்கலாக சிரித்தான்.
“ஆமால! மறந்துட்டேன் பாருங்க”என அவனின் நெற்றியில் கை வைத்து, “மருந்துப் போட்டீங்களா.?”
“திரவி ஃபர்ஸ்ட் எய்டு பண்ணான். ஓகே தான். லைட்டா ஸ்வெலிங் இருக்கு”
“ம்ம்ம்! தெரியுது வீட்டுக்கு வாங்க ஐஸ் வைக்குறேன்”
“சரி! இனிமே எல்லாம் இப்பிடி வெளியில் வந்து நிக்காத, எனக்கு மெசேஜ் பண்ணு, அதுவும் பிரேக், லன்ஞ்ச் டைம்ல ஓகேவா..?”
“ஐ! ஓகே, ஓகே”என அவன் பக்கம் திரும்பி சந்தோஷமாக கூறினாள்.
“அதுக்காக சும்மா சும்மா மெசேஜ் செய்ய கூடாது, ஏதாவது முக்கியமானதா இருந்தா தான் மெசெஜ் பண்ணனும் அம்லு”
“ம்ம்ம்! சாப்பிட்டிங்களானு கேப்பேன்..”
“ஆமா! ஆமா! உனக்கு அதை விட முக்கியமா என்ன வந்துடப் போகுது” என வாயினுள் சிரித்து முடியாமல் வெளியில் சிரித்தான்.
“யுவிப்பா! கிண்டல் பண்றீங்களா..?”என அவனை தோளில் அடித்தாள்.
“ஹேய்! ஓகே, ஓகே, சரி சொல்லு, என்ன வேணும் சாப்பிட உனக்கு..? ரொம்ப நேரமா நின்னுட்டே இருந்துருக்க வேற, வீட்டுக்குப் போய் இருந்தா டீ குடிச்சு இருக்கலாம்”
“ம்ம்ம்! ஆமா பசிக்குது தான், என்ன வேணும்..?”என யோசித்தவள், “ஆ! வையிட் ஃபாரஸ்ட் கேக், பாதாம் மில்க் ஹாட்டா, அப்புறம்..?”என அடுக்கியவளிடம்.
“இன்னக்கிக்கு மட்டும் சாப்புடு அம்லு” என சீண்டினான்.
“இன்னக்கி மட்டும் தான் யுவிப்பா, நாளைக்கு வேற சொல்றேன்”என ஜிமிக்கி டான்ஸ் போட்டாள்.
“அம்லு! டெய்லி இப்பிடிபோனா, நான் எப்பிடி உன்னைய தூக்க முடியும் ஒரு அவசரத்துக்கு ஆசையா, மீ பாவமுல மயிலாஞ்சி”என தலையை ஆட்டி புருவத்தை உயர்த்தினான்.
“ம்ம்ம்! வேணாம்.”
“ஹப்பா! இன்னைக்கு மட்டும் எது வேணாலும் வாங்கிக்கோ”