மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம்…” என்ற பாடல் அந்த வீதியில் இருந்த அம்மன் கோயிலில் சத்தமாக ஒலித்து கொண்டு இருந்தது..
அது நம் கதையின் நாயகி இளந்தமிழின் சேவியில் அந்த சத்தம் சிறிது அளவுக்கு கூட குறையாது விழுந்த வண்ணம் இருந்தது.. காரணம் கோயில் முட்டு சந்தில் இருந்தது என்றால் இவள் வீடு முட்டு சந்து ஒட்டினது போல் இருக்கும் வீடு..
அந்த பாட்டு சத்தம் அது கேட்காத வண்ணம் தன் உடலை போர்த்தி கொண்டு இருந்த போர்வையை கொண்டே தன் சேவியையும் அடைக்க பாடாத பாடு பட்டு கொண்டு இருந்தாள் இளந்தமிழ்..
அவளின் அந்த முயற்ச்சி அனைத்தையும் முறியடித்து அந்த பாடலின் வரிகள் அட்சுரம் பிறழாது அவளின் சேவிகளில் ஒங்கி ஒலித்து கொண்டே இருந்தது..
அதில் வெறுத்து போய் .. “ கடவுளே..” என்று சொல்லிக் கொண்டு இத்தனை நேரம் ஏசியின் குளிர்ச்சிக்கு கத கதப்பை கொடுத்து கொண்டு இருந்த அந்த போர்வையை எடுத்து எரிந்தவளின் கண் முன் பிரசனம் ஆனார் அவளின் அன்னை தாமரை செல்வி..
தன் முன் நிற்கும் அவளின் அம்மா என்ன சொல்வாள் என்று தெரிந்தே மிக சாவகாசமாக படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து தன் எதிரில் மாட்டி இருந்த நேரம் காட்டியில் நேரத்தை, தன் அன்னை லைட் போட்டதால் திடிர் என்ற வெளிச்சத்தை வாங்கிய அவள் கண்கள் கூச்சத்தில் ஒற்றை கண் மூடி ஒற்றை கண் கொண்டு மட்டும் கூர்ந்து பார்த்தாள்..
இளா நேரக்காட்டியில் உத்து பார்க்கும் போதே இளாவின் அன்னை தாமரை செல்வி …
“ டைம் எட்டு..” என்று கடுப்புடன் கூற..
“ எட்டு தான் ஆகுதா..? என்று ஒரு கொட்டாவி விட்ட வாறு கேட்ட இளா..
“ இதை சொல்லவாம்மா எல்லாம் வேலையும் விட்டு விட்டு வந்திங்க.. இன்னைக்கு தமிழ் வருடப்பிறப்பு எவ்வளவு வேலை இருக்கும்..” என்று கூறியவளின் தலையிலேயே டொங்க் என்று ஒரு கொட்டு வைத்தாள் தாமரை செல்வி …
கொட்டு விழுந்ததை தடவி விட்ட வாறே.. “ நல்ல நாள் அதுவுமா அடிக்கிறிங்க..” என்று சொன்னவளிடம் தாமரை..
“ அது தான்டி நானும் சொல்றேன் நானும்.. நல்ல நாள் அதுவுமாவது நேரத்திற்க்கு எழுந்துக்க கூடாதா…?” என்று கடிந்து கொண்டவரின் வார்த்தை எல்லாம் புரம் தள்ளி விட்டு எப்போதும் போல..
அவளின் வேலைகளை மெல்ல ஆரம்பித்தாள்.. எழுந்ததும் உடலை அப்படி இப்படி என்று திருப்பி முதலில் உடலில் இருந்த பிடிப்பை எல்லாம் போக்கி கொண்டவளையே பார்த்து இருந்தால் நம் வேலை தான் கெடும் என்று இத்தனை வருட அனுபவத்தில் அறிந்து இருந்த தாமரை தன் வேலையை கவனிக்க சமையல் அறைப்பக்கம் சென்று விட்டாள்..
நம் இளா நல்ல நாளாவது..? கெட்ட நாளாவது..?” நானா வேலை செய்ய போகிறேன் என்ற ரீதியில் எப்போதும் போல அவள் வேலைகளை அன்று தொடங்கினாள்..
அவளின் காலை முதலில் தொடங்கும் வேலை தன் தாய் மாமா வளர்க்கும் புறாவுக்கு இறை போடுவதில் தொடங்கும்..
இவர்கள் வசிப்பது முதல் தளம்.. இவர்கள் என்றால், இவளும் இவள் அன்னையும் மட்டுமே.. அவள் அப்பாவை கேட்டால் இல்லை.
இல்லை என்றால் உயிரோடு இல்லையா..? என்று கேட்டால், அதுவும் இல்லை.. அப்போ அவர் எங்கே…? என்பது தானே உங்களின் கேள்வி. சொல்கிறேன்.. கண்டிப்பாக அவரை பற்றி சொல்லாது இந்த கதை நகராது..
காரணம் நம் நாயகியின் போக்கு மாற்றத்தில் முக்கிய பங்கு அவர் எனும் போது கண்டிப்பாக சொல்லி தான் ஆக வேண்டும். ஆனால் இப்போது கிடையாது…
பல்லை கூட விலக்காது மொட்டை மாடிக்கு சென்றவள் பெரிய டப்பாவில் இருந்த கம்பை ஒரு சின்ன கிண்ணத்தில் கொட்டியவள்..
புறா அடைப்ப்ஸ்ட்டு இருந்த கூண்டுகளை திறந்து விட்டு.. கம்பை தரையில் சிறிது சிறிதாக இறைத்து விட்டு.. ஒரு சில புறாக்கள் சாப்பிடாது ஆட்டம் காட்டி கொண்டு இருந்த புறாவும் கம்பை சாப்பிட வேண்டி..
“ போ.. போ..” என்று அழைத்து அவற்றையும் உண்ண வைத்த பின் அவளின் கவனம் முட்டையை அடை காத்து கொண்டு இருந்த புறாக்களின் கூண்டை திறந்து அதன் முன் கம்பை வைத்து விட்டு பக்கத்தில் ஒரு சிறிய குவளையில் நீரையும் வைத்து வீடு மூடியவளின் பார்வை இப்போது தான் அக்கம் பக்கம் சென்றது..
சென்றவளின் பார்வையில் விழுந்தான்.. இவள் வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி இருந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்த வீரவேலோன்…
எப்போதும் போல் அவன் கண்ணில் பட்டதும்.. அந்த பக்கம் தன் பார்வையை செலுத்தாது இந்த பக்கம் மட்டுமே பார்த்து கொண்டு புறாவையும் ஒரு பார்வை பார்த்த வாறு.. அங்கு இருந்த ஒரு சிறிய அறையில் இருந்த தன் பேஸ்ட் பிரஷை கொண்டு பல் விலக்கி கொண்ட பின்…
புறாக்களை அதன் அதன் கூண்டில் அடைத்து விட்ட பின்.. அந்த பக்கமே பார்க்காது கீழே தங்கள் போர்ஷனிக்குள் அடங்கியவளின் காதில் எப்போதும் போல் தன் அன்னையின் திட்டு விழுந்தது.. என்ன ஒன்று இப்போது பின் பாட்டு பாட அவரோடு அவர் அண்ணி.. சந்திரமதியும், சேர்ந்து கொண்டு..
“ எல்லாம் உங்க அண்ணன் செல்லம் தான்.. நம்மளை ஒன்னு சொல்ல விடுறாரா உங்க அண்ணன்.. இப்போ அவர் மகனும் சேர்ந்து கொண்டு அவளை ஒன்னும் சொல்ல விடுறது கிடையாது. ” என்று சொல்லி கொண்டு இருந்தவர்களின் பேச்சை எல்லாம் எப்போதும் போல் காதில் வாங்காது குளித்து முடித்து விட்டு… அவர்கள் முன் வந்து நின்றாள்..
அவள் மாமி இவ்வளவு நேரமும் திட்டிக் கொண்டு இருந்தவள் நம் இளாவை பார்த்ததும் .. அதுவும் தன்னை பார்த்ததும் சிரித்தவளின் அந்த முகத்தை பார்த்தது எப்போதும் போல திட்ட மனது இல்லாது.. அவளின் ஈர கூந்தலை ஒரு துண்டை கொண்டு துடைத்து விட்ட வாறு..
“ தலையாவது ஒழுங்கா துடைக்கிறியா..? உனக்கு தான் சைனஸ் இருக்குலே.. இப்படி ஈரத்தோடு இருந்தா தலை வலிக்காது..” என்று கடிந்து கொண்டே தலையை துவட்டி விட்டவருக்கு தோதாக தன் தலையை அவரிடம் காட்டிய வாறு அந்த சுகத்தை அனுபவித்து கொண்டு இருந்தாள்..
சந்திரா.. அவள் வரும் முன் திட்டியது பின்.. இப்போது பேசுவது எல்லாம் நடிப்பு கிடையாது.. சந்திரமதிக்கு தன் நாத்தனார் மகளை எப்போதும் பிடிக்கும்..
ஆனால் நாளைய இவள் தன் மருமகள் எனும் போது இவளின் இந்த விட்டேத்தியான குணத்தில் நாளை தன் மகன் கஷ்டப்பட கூடாதே என்ற எண்ணத்தில் தான் தாமரை தன் மகளை குறை சொல்லும் போது இப்படி பேசுவது..
அப்போது கூட தாமரை பற்றி எல்லாம் குறை சொல்ல மாட்டார்.. தன் கணவனை தான் சொல்லுவார்.. அது ஒரு வகையில் அது சரி தான்..
தாமரையின் அண்ணன் கார்முகில் தங்கை என்றால் உயிர் என்று கூட சொல்லலாம்.. அவள் தன் வாழ்க்கையை துளைத்து விட்டு பன்னிரெண்டு வயது பெண்ணை கையில் பிடித்து கொண்டு தாய் வீடு வந்த போது…
அதுவும் அவள் கண்ணில் ஜீவன்யில்லாது வந்து தன் முன் நின்றவளை பார்த்ததும் கார்முகிலுக்கு தங்கை கணவனை வெட்டி போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது..
“ வேண்டாம் அண்ணா விடுங்க.. இது அவருக்காக சொல்லலே.. உங்களுக்காக தான் சொல்றேன்.. எங்க இரண்டு பேருக்கும் உங்களை விட்டா இனி யார் இருக்கா.?” என்று கேட்டவளை அன்றில் இருந்து அரவணைத்து கொண்டார் கார்முகிலன்..
அதுவும் அவர் மருமகள் இளந்தமிழ் என்றால் அவ்வளவு தான்.. அவளை ஒருவர் ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்.. அது இன்று வரை தொடர்கிறது..
இளாவுக்குமே மாமா என்றால் உயிர்.. மாமா வடிவில் தான் அவள் அனைத்தையும் பார்க்கிறாள்.. சாமி பக்தி எல்லாம் கிடையாது.. ஆனால் தன் தாய் மாமன் மீது பக்தி உண்டு அவளுக்கு..
சந்திராவின் அக்கறையில் சிறிது நேரம் குளிர் காய்ந்தவள் அடுத்து தாய் மாமன் மடி சாய அவர்கள் இருக்கும் தரை தளத்திற்க்கு சென்றாள்..
அங்கு எப்போதும் போல் அவர் சாப்பிடாது மருமகளுக்காக காத்து இருக்க.. இருவரும் அமர்ந்து சாப்பிட்ட பின்.. மாமனோடு அந்த வீதியில் இருக்கும் கோயிலுக்கு சென்றாள்..
சாமீ பக்தி இல்லை என்றாலுமே, தன் மாமன் அழைத்தால் சென்று விடுவாள்.. இதோ அதன் படி கோயிலுக்கு படி ஏறியவள் முன் பிரசனம் ஆனான் காலையில் மொட்டை மாடியில் பார்த்த வீரவேலோன்.. நம் கதையின் நாயகன் அவன் குடும்பத்தோடு கோயில்லு வந்து இருந்தான்..
எப்போதும் போல் அவன் பக்கம் பார்வையை செலுத்தாது, தன் உயிர் தோழி.. வீரவேலோனின் தங்கை நயனிகாவிடம் பேச ஆரம்பித்தாள்..
உயிர் தோழி என்றால் சிறு வயது முதலே நட்பு எல்லாம் கிடையாது.. வீரவேலோன் இங்கு இந்த வீட்டை வாங்கியதே மூன்று வருடத்திற்க்கு முன் தான்..
நயனிகா வேறு ஒரு கால்லூரியில் படித்து கொண்டு இருந்தாள்.. அது இங்கு இருந்து தூரம் என்பதால், அருகில் இருந்த இவள் பயிலும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியாக..
இவள் முதலாம் ஆண்டு B.E EC கற்கும் ,கல்லூரியில் வந்து அதே பிரிவிலும் மூன்றாம் ஆண்டு மாணவியாக வந்து இணைந்தவள்..
ஒரே கல்லூரி.. ஒரே கல்லூரி பேருந்து… ஒரே வீதி.. என்று முதலில் பேச ஆரம்பித்த இவர்களின் பழக்கம்… இப்போது உற்ற தோழி என்ற எல்லையில் வந்து நிற்கிறது..
அனைத்தும் சரி தான்.. ஆனால் அவளின் அண்ணன்.. அது தான் பிரச்சனை.. பிரச்சனை என்று முழுவதும் அவன் மீதே பழியை தூக்கி போட இவள் தயாராக இல்லை..
காரணம் முதலில் இவளும் தான் அந்த வயதுக்கே உரிய ஆர்வத்துடன் மூன்று வருடத்திற்க்கு முன்பு வீரா அவன் வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்ச்சி செய்து கொண்டு இருந்த போது, புறாவுக்கு உணவு போட வந்த இளா வீராவை பார்த்தது..
அதுவும் அவனின் அந்த ஹாம்ஸ்.. இன்றும் முதன் முதலில் அந்த சூர்ய வெளிச்சத்தில் வியர்வை வடிய அவள் பார்த்த அந்த தேகம் கண் முன் வந்து போகும்..
ஆனால் அப்போது அவள் ஆர்வத்துடன் வீராவை பார்க்கும் போது தன் வீட்டவர்களுக்கு தன்னை மாமன் மகன் சுகதீபனுக்கு கட்டி கொடுக்க நினைக்கிறார்கள்..
அதுவும் தன் மாமனுக்கு மிக பிடித்தம் என்று அதுவும் வீராவை ஆர்வத்தோடு பார்த்து விட்டு தன் வீட்டுக்கு வந்த போது..
அவள் அம்மா அவள் கையில் ஏதோ ஒரு பாத்திரத்தை கொடுத்து.. “ இதை மாமீ கிட்ட கொடு இளா..” என்று சொன்னதுமே அடுத்த நிமிடம் படிக்கட்டில் அவள் பாதம் சென்றது என்பதை விட ஒடியது என்று சொன்னால் சரியாக இருக்கும்..
இவள் ஒடுவதை பார்த்து தாமரை.. “ மாமீயோட அண்ணன் குடும்பம் வந்து இருக்காங்க.. கொஞ்சம் வாயை திறக்காது இதை கொடுத்து விட்டு ஒழுங்கா வா..” என்று சொல்லியே அவளை அனுப்பியது…
அதற்க்கும் இளா.. “ அவங்க பேசுவதை வைத்து தான்.. நான் வாயை மூடுவதிலும், திறப்பதிலும், இருக்கு..” என்று சொல்லி விட்டு தான் தன் மாமன் வீடான கீழ் தளத்திற்க்கு வந்தது..