காதல் 9
ஊட்டி குளிரில் அழகாக விடிந்தது அந்த காலை பொழுது. மலைகளை சுற்றிலும் பனி முட்டம். எங்கும் வீசும் குளிர் காற்று. சூரியனின் மெல்லிய வெது வெதுப்பில் மலரிலும் இலையிலும் கண்ணாடியை மின்னிய நீர் துளிகள் . அதை எல்லாம் விட சக்தியின் கவனத்தை ஈர்த்தது சிவாவின் நிலை.
நைட் பாண்ட் டீ ஷர்ட் போடு கொண்டு வியர்வை வழிய அந்த தோட்டத்தை சுற்றி ஓடி கொண்டு இருந்தாள். சூரிய ஒளி அவளது முகத்தில் பட்டு ஜொலிக்க காற்றின் வேகத்தில் அவளது தலை முடி அவளிடம் சண்டித்தனம் செய்ய அதை ஒதுக்கிய அவளின் கைகள் தூரத்தில் இருந்து காண பணியில் நினைத்த ரோஜா பூவை போலவே இருந்தாள்.
பல முறை கூப்பிடும் திருப்பாத தனது நண்பனின் முதுகில் ஒரு அடியை வைத்தாய் வாசு. திருப்பிய சக்தி, “ஏன் டா அடிச்ச ?” என வாசு அவனை தீயாய் முறைதான். ‘நம்ப என்ன தப்பா கேட்டோம், எதுக்கு அடிச்சான் அதானே கேட்டேன்’ என மனதில் நினைத்து “என்ன மச்சான்”
“டேய் மனுசனா நீ எவ்வளோ நேரமா உன்னை கூப்பிட கத்துறேன் சைத்தான். வா டா உள்ள போகலாம்” என அவனை இழுக்க அவனோ மனமே இல்லாமல் உள்ளே சென்றான். அன்று முழுவதும் ஊர் சுற்றிவிட்டு இரவு அனைவரும் கேம்ப் பையர் அமைத்து ரௌண்டாகா அமர்ந்து பாட்டு பாடினார். இன்ச்சார்ஜ் ஆகா வந்த சீனு சார் நாளை காலை கிளம்புவதால் அனைவரையும் தூங்க சொன்னார்.
நடு இரவு சக்தி சிவாவிற்கு போன் செய்து வெளியே வர சொன்னான். மனதில் அவனை திட்டி கொண்டே வெளியே வந்த சிவா அதிர்ந்தாள்.
சுற்றிலும் வண்ணமயமான விளக்குகள் அலங்கரித்து இருளில் நிலவுக்கு துணையாக அந்த இடத்தை பளிச்சிட செய்ய, மெலிய இசை அந்த இடத்தை நிரப்பி இருக்க, இந்த இடத்தை மேலும் குளுமை படுத்த பனியின் விளைவாக சிறு தூறல் பொழிய எதிரே இருக்கும் மங்கையை கவர்ந்து இழுக்கும் சிரிப்போடு நின்று கொண்டு இருந்தான் சிவாவின் சக்தி.
கால்கள் தன்னிச்சையாக அவனை நோக்கி செல்ல, சக்தி அவளின் முன் ஒரு காலை மடக்கி மண்டியிட்டு அவளின் கண்களை பார்த்து, “ஸ்ரீ இதனை வருஷத்தில் இல்லாமல் இப்ப நீ எனக்கு புதுசா தெரியற. உன்னை நல்ல தோழியை பார்த்த என் கண்கள் இப்ப உன்னை என்னோட நல்ல லைப் பார்ட்னர் ஆஹ் பார்க்க சொல்லுது. எல்லார் கிட்டவும் அதிரடி காட்டும் உன் கண்கள் என்னை பார்த்த ப்ரிஸ் ஆகி நிக்கிற ஒவ்வொரு நிமிஷனும் உன் கண்ணில் சறுக்கி விழறேன் டி. எனக்கு தெரியும் இது ரைட் ஏஜ் இல்லனு பட் எனக்கு நீ வேண்டும் என் தோழியா என் காதலியா என் ஆசை பொண்டாட்டியா என் வாழ்க்கை முழுக்க வேண்டும்” என கையில் இருந்த மோதிரத்தை அவள் முன் காட்ட எதோ மந்திரத்துக்கு கட்டு பட்டது போல கையை அவனிடம் கொடுத்தால். “லவ் யூ ஸ்ரீ ” என ரிங்யை போட உன்னோட பதில் என அவளை பார்க்க
“எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேண்டும்” என்று வேகமாக உள்ளே ஓடினாள். அவள் ஓடுவதை பார்த்த சக்தி சிரித்து கொண்டான்.
தற்போது அதை நினைத்து சிரித்த சிவா மனதில் ‘எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சக்தி. பட் நம்ப சின்ன பசங்க. எனக்கு எப்ப லவ் பண்றது கரெக்ட் ஏஜ் அப்படினு தோணுதோ கண்டிப்பா உன் கிட்ட என்னோட லவ்வை சொல்றேன்’ என நினைத்து கொண்டு தூங்க சென்றாள்.
சக்தியும் இதையே நினைத்து கொண்டு இருக்க அவனது போன் அலறியது. சிவா அப்பா இந்த நேரத்தில் எதுக்கு கால் பண்றங்க என யோசித்து கொண்டே அட்டென்ட் பண்ணினான். “ஹலோ சக்தி” என்றார்.
“சொல்லுங்க அங்கிள். இந்த நேரத்தில் போன் பண்ணிருக்கீங்க. எனி இம்போர்ட்டண்ட்”
“இல்ல பா அது வந்து சிவா போன் பண்ணா பா” என, சக்தி யோசனையாக இருக்க அவரே “அவளை இங்க வர வேண்டாம் என்று என்னால சொல்ல முடியல பா. அவளை இங்க வரமால் நீ தான் பார்த்துக்கணும்” என
“அங்கிள் விளையாடுறிங்களா ஐந்து வருஷம் கழிச்சு சென்னை போறதை நினைச்சு சந்தோஷமா இருக்கா. ஏன் அங்கிள் இப்படி சொல்லறீங்க. சீரியஸ் ஆஹ் அங்கிள் இப்பவே அவ உங்களை எல்லாம் விட்டு ரொம்ப தூரம் போனா மாதிரி இருக்கா. நீங்க இன்னும் அவளை தூரம் அனுப்புறா மாதிரியே பண்றிங்களே” என அவளுக்காக அவளின் அப்பாவிடம் தன் ஆதங்கத்தை சொன்னான்.
“நீ சொல்றது எல்லாமே கரெக்ட் தான். எனக்கே தெரியும் அவ எங்களை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டா என்று ஆனால் அதை விட எனக்கு அவ உயிர் ரொம்ப முக்கியம் தம்பி” என “என்ன சொல்றிங்க அங்கிள்” அதிர்ச்சியாக கேட்டான்.
அவர் சொன்னதை கேட்டு மேலும் அதிர்ந்தான். பின் “இதை அவ கிட்ட சொல்லலாம்ல அங்கிள்”
“சொல்லலாம் தான் பா. அதன் பின் என்ன நடக்கும். சிவாவோட கோவம் உனக்கு நல்ல தெரியும் தானே. எனக்கு இதுவும் தெரியும் அவ நான் சொல்றதை விட நீ சொன்னா கண்டிப்பா கேட்பா” என சிரித்து கொண்டே சொல்ல
அங்கிள்! என அதிர்ச்சியாக சொன்னான்.
“அவ என் பொண்ணு பா. கூட இல்லைனாலும் அவ மனசில் இருக்கறது கூட தெரியாத அப்பா இல்ல பா. எனக்கு உன் மேல நிறைய நம்பிக்கை இருக்கு. என்னை விட என் பொண்ணை நீ நல்லா பார்த்ததுப்ப” அவர் குரலில் இருந்த நம்பிக்கை அவனையே அசைத்து.பின் முடிவு எடுத்தவனாக “அங்கிள் ஸ்ரீக்கு ஆக்ஸ்போர்டில் படிக்கணும் ஆசை. சோ நாங்க ரெண்டு பெரும் சீக்கிரமா லண்டன் கிளம்பறோம். பட் இதை ஸ்ரீ கிட்ட சொல்லணும் அங்கிள். இவ்வளவு பெரிய விஷயத்தை மறைக்க கூடாது. நீங்க வேற அவ கிட்ட சொல்ல கூடாதுனு ப்ரோமிஸ் வாங்கிட்டீங்க” என
“எல்லாம் நல்லதுக்கு தான் சக்தி பட் சிவாவை பார்த்துக்கோ. கொஞ்சம் இல்ல இல்ல நிறையவே கோபம் வரும். கோவத்தில் எதாவது பண்ணா கூட பொறுத்துக்கோ எனக்காக” என
“இதை நீங்க சொல்லணும் என்று எல்லாம் இல்ல அங்கிள். நான் பார்த்துக்கிறேன்” என போனினை வைத்தவன் அடுத்து செய்ய வேண்டியதை பட்டியிலிட்டான்.
பிளஸ் டூ ரிசல்ட் வந்தது. சிவாவும் சக்தியும் பள்ளியின் முதல் ரெண்டு இடத்தில் வர இருவருக்கும் சந்தோசம். பல கொண்டாட்டங்களுக்கு பிறகு சக்தி நேராக சிவாவிடம் வந்து, “பேபி நான் சொல்றதை ஏன், எதுக்கு என்றல்லாம் கேட்காம பண்றியா” என அவனின் மனதை அறியாமல் “செய் சொன்னா செய்ய போறேன். அதை விட்டு இப்படி எல்லாம் பேசாதே” என
“நாளைக்கு நம்ப ரெண்டு பேரும் லண்டன் போறோம். கெட் ரெடி” என அவள் விழி விரித்து பார்த்தாள். “எதுக்கு என்ன” கேட்க ,
“ஹையர் ஸ்டடி அங்க தான் பண்ண போறோம். உனக்கும் எனக்கும் விசா கூட ரெடி. என் மேல் நம்பிக்கை இருந்தா என் கூட வர” அதற்கு மேல் அங்கு இருந்தால் உண்மையை தாமே சொல்லிவிடுவோம் என புரிந்ததால் வேகமாக சென்றான். செல்லும் அவனையே புரியாமல் பார்த்தாள். ஆனாலும் அவனுடன் லண்டன் செல்ல ஆயுதமானாள்.
அனைவரும் வாசலில் வந்த சத்தத்தை கேட்டு வெளியே வந்தனர். சக்தி தான் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினான். கையிலும் தலையிலும் கட்டுகளுடன் வந்தவனை பார்த்து வருந்தினார். சிவா அவனது நிலையை பார்த்து கண் கலக்கினாலும் அதை மறைத்து கொண்டு அவனை முறைத்தாள்.
சந்தோஷ், “ஏன்டா இப்படி மாடு மாதிரி இருக்கியே அவங்க கடத்துற வரைக்கும் என்ன பண்ண” என அவனை திட்ட
அவனோ சிரித்து கொண்டே “ப்ரோ அவங்க எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல அவங்க ஹெட் பார்க்கணும் போல இருந்துச்சா அதான் அவங்க கூட போயிட்டு வந்தேன்” என விளையாட்டாக அந்த சூழலை மாற்ற நினைத்தான். அனைவர்க்கும் வியப்பு என்ன என்றால் சிவா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
காமாட்சி, “ஏன் டி தம்பி கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமல் முறைச்சிட்டு இருக்க” என்று கேட்ட தன் தாயையும் சக்தியையும் தீயாய் முறைத்தாள். ஆனால் சக்தி மட்டும் அவளை பார்த்து சிரித்தான்.
“மேட……டம் ஹலோ சிவா மேடம் என்னும் கோபம் போகலையா” என அவளை பார்த்து கேட்க அவள் பதில் சொல்லாமல் உள்ளே சென்றாள்.
“என்னடா பண்ண இப்படி முறைச்சிட்டு போறாங்க… வெயிட்…. நீ வந்ததில் இருந்து உன் கிட்ட அவங்க பேசவே இல்லை. முறைச்சிட்டு தான் இருக்காங்க. என்னடா பண்ண” என சந்தோஷ் கேட்க அதே கேள்வியுடன் அனைவரும் அவனை பார்க்க,
“அதுவா அவளுக்கு தெரியாமல் ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன். அதான் ஒரு மூன்று வருசமா பேசாமல் இருக்கா. மத்தபடி வேற ஒன்னும் இல்ல” என பெருமையாக சொல்ல
“டேய் பரதேசி… மூன்று வருஷம் கோவமா இருக்கிற அளவுக்கு என்னடா பண்ண” இது வரை தன்னை திட்டதா தன் தாயா இது ஷாக்கா பார்க்க, “தம்பி ஷாக்கா… நீ அப்புறமா ரியாக்ட் பண்ணலாம் இப்ப என்ன பண்ணி தொலைச்சா அதை சொல்லு” ரித்து அவனை வார
“அதுவா அவளுக்கு தெரியாம ஒரே ஒரு முறை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என அசராமல் குண்டை தூக்கி போட்டான்.
என்ன! என்று அனைவரும் அவனை அதிர்ச்சியில் விழி விரித்து பார்த்தனர்.
தொடரும்
நிலா ❤❤