காதல் 10
“அவளுக்கு தெரியாமல் ஒரே ஒரு முறை அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என
என்ன! என்ற அனைவரும் அதிர்ச்சியில் விழி விரித்து பார்க்க அவனோ சாவகாசமாக பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.
அவன் அடுத்து சொல்வதுற்குள் சிவா அங்கு வந்ததால், பேச்சு தடை பட்டது. “கிளம்பு வெளிய போகணும்” என சக்தியிடம் சொல்லிவிட்டு அவள் காரை நோக்கி சென்றால். காமாட்சி, “தம்பி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் டி” என்று கத்தியது காற்றோடு போனது.
சக்தி எதுவும் பேசாமல் அவள் பின்னால் சென்றான். அதை பார்த்த ரித்து “பாருங்க அக்கா கூப்பிட்டதும் எதுமே கேட்காமல் பின்னாடியே போறாங்க. ஆனா நீங்க.. நான் வெளிய போகணும் சொன்னாலே ஓடி போறீங்க” என சந்தோஷை வாரினாள்.
“குட்டிமா உன் அக்கா கண்டிப்பா எதோ வேலையாக தான் கூப்பிட்டு இருப்பாங்க. அது அவனுக்கும் தெரியும் அதான் சார் அமைதியா போறாரு. ஆனா நீ கூப்பிட்டா அது கண்டிப்பா ஷாப்பிங்கா தான் இருக்கும். உன் கூட ஷாப்பிங் போகறதும் எமலோகம் போறதும் ஒன்னு டி” என அனுபவம் பேச ரித்து அவனை அடிக்க பக்கத்தில் இருந்த பூந்தொட்டியை தூக்கி துரத்தினாள். அவளிடம் மாட்டாமல் போக்கு காட்ட, இருவரையும் பார்த்து காமாட்சியும் சரவணனும் சிரித்தனர்.
காரில் அமைதியே உருவமாக இருந்தால் சிவா. அவள் கார் ஓட்டும் அழகை ரசித்து கொண்டே வந்தான். எங்க போறோம் என்று அவளும் சொல்லவில்லை அவனும் கேட்கவில்லை. முதலில் சிவா தான் “அவங்க கிட்ட எதுக்கு வேண்டுமே மாட்டுன. அவனை எப்படி பிடிக்கணும் எனக்கு தெரியாதா… நான் சொல்றதை கேட்க கூடாது என்று முடிவே பண்ணிட்டியே” என்று பொரிய
“நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் பேபி அது உனக்கே தெரியும். நீ சொன்ன ஒரே வார்த்தைக்கு தான் நான் மூன்று வருஷமா இங்க வரல ஏன்.. உன் கூட பேசாமல் தானே இருந்தேன். லவ் யூ பேபி. பட் இப்ப இது என்னோட வேலை டி. என்னோட வழி தனி உன்னோடது தனி. ஆனா இரண்டு பேரோட மோட்டிவ் ஒன்னு தானே. பார்த்துக்கலாம் விடு” என கூல்லா சொல்ல
“நீ இன்னும் சார்ஜ் எடுக்கல. அது வரைக்கு பொறுமையா இருக்க தெரியாத. எவளோ ப்ராசஸ் இருக்கு அதை எல்லாம் முடிச்சா தான் உன்னால சார்ஜ் எடுக்க முடியும். அதுவரைக்கும் ஸ்டே குய்ட்” என சொல்லி கொண்டே காரை அவள் எப்பொழுதும் வரும் ரகசிய வீட்டுக்கு அருகே நிறுத்தினாள். இருவரும் இறங்கி உள்ளே சென்றனர்.
சக்தி மனதில் ‘நீயும் நானும் கணவன் மனைவியா வந்த முதல் இடம் இந்த வீடு. இங்க இருந்த இரண்டு நாள் தான் ஆனா இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டி ‘ என நினைத்து கொண்டே சிவாவை பார்க்க அவளோ எதிரே இருந்த ரூமிற்க்கு சென்றாள். இந்த வீடு சிவாவும் சக்தியும் லண்டனில் படிக்கும் போதே பார்ட் டைம்மில் வேலை செய்த காசில் நம்பிக்கையான நண்பன் மூலம் கட்டிய வீடு.
சிவாவை தொடர்ந்து உள்ளே போனான் சக்தி. ஒரு படுக்கையை தவிர வேறு எதுவும் இல்லை. சிவா சுவற்றின் அருகே சென்று ஒரு படத்தில் ஒரு குறிப்பு வரைய ரகசிய அறைக்கதவு திறந்தது. இருவரும் அதன் உள்ளே சென்றனர். பல காயங்களுடன் சக்தியை கடத்திய எக்ஸ் மினிஸ்டர் சேரில் கட்டப்பட்டு இருந்தார்.
*********
சிவாவுடன் கோபமாக பேசிவிட்டு போனினை அனைத்தவன் கொலைவெறியுடன் சக்தியை தாக்க சென்றான். ஆனால் சக்தி அமைதியாக அவனது செல்லில் கேம் விளையாட அவனை பார்த்துக்க சொன்ன அடியால் இருவரும் மயங்கிய நிலையில் கீழே விழுந்து இருந்தனர்.
அதை பார்த்து கோபமான அவர் “டேய் என்னடா உன்னை கடத்திட்டேன் உன் பொண்டாட்டி கிட்ட சொன்ன என்னையே நக்கல் பண்ற நீ என்னடானா கொஞ்சம் கூட பயப்படாமல் கேம் விளையாடுற. உன்னை பத்தி தகவல் கிடைச்ச உடனே போட்டுருக்கணும். ஆனா நீ எல்லாம் ஒரு ஆளு ச்சை…..”
“ஹலோ சார் என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும். தெரிஞ்சதை நீங்க சொல்லுங்க உங்களுக்கு தெரியாததை நான் சொல்றேன்” என அவனை மேலும் கடுப்பேத்தினான்.
“உன்னை பத்தி மட்டும் இல்லடா உன் பேமிலி பத்தி கூட தெரியும். உனக்கும் சிவாக்கும் மூன்று வருஷம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. ஆனா அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் ஒண்ணா இல்ல. இந்த விஷயம் உங்க ரெண்டு பேர் வீட்டுக்கு கூட தெரியாது. உன் அண்ணாக்கும் சிவா தங்கச்சிக்கு கொஞ்சம் மாசம் முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு. நீ இவ்வளோ நாளா லண்டனில் ஒரு கம்பனியில் ஒர்க் பண்ணிட்டு இருந்த” எனக்கு உன்னை பத்தி தெரியும் என்று திமிராக பார்க்க, சக்தி விழுந்து விழுந்து சிரித்தான்.
“உன்னை போய் பெரிய புத்திசாலி நினைச்சேன் பாரு என்னை சொல்லணும். எங்க கல்யாணம் விஷயம் தெரிஞ்சிக்கிட்ட உனக்கு என்னோட வேலையை பத்தி தெரியல. நான் என்ன வேலை பார்க்கிறேன் என்று சிவாவை தவிர யாருக்குமே தெரியாது. நான் யாரு தெரியுமா லண்டன் கிரைம் ப்ராஞ்சில் டாப் 5 ஆஃபீஸ்ரில் நானும் ஒருத்தர். என்னோட ஸ்ரீ காக அங்க இருந்து இந்தியா வந்தேன். இன்னும் ஒரே வாரம் தான் அப்புறம் இங்க சார்ஜ் எடுத்துப்பேன். அப்புறம் இருக்கு உனக்கு” என பயத்துடன் பார்த்தவனை அடித்து இங்கு அழைத்து வந்தான்.
***********
தன் முன் இருக்கும் சிவாவை மிரண்ட விழிகளுடன் கண்டார். சிவா சக்தியிடம், “சார் யார் தெரியுமா சக்தி.. கல்வி துறை அமைச்சர் . நிறைய ஊழல் கேஸ் சார் மேல இருந்தும் அழகா தப்பிச்சிகிட்டான். போன வருஷம் பதவியில் இருக்கும் போதே அவனை அரெஸ்ட் பண்ண வெச்சேன். எதோ காசுக்காக சின்ன சின்ன தப்பு பண்றனு பார்த்த.. சார் நம்ப நினைக்காத வேலை எல்லாம் பார்க்கிறார்” என அவனை முறைக்க அதில் மேலும் மிரண்டான் .
சக்தி அவனிடம் “எதுக்கு டா உனக்கு இந்த கேவலமா புத்தி. காசுக்காக எதை வேண்டும் நாளும் செய்யலாமா. பச்ச குழந்தை டா அவங்க எல்லாம். ஒழுங்கா உண்மையா சொன்ன உயிரோடவாது இருப்ப” என பொறுமையாக கேட்க அவனோ அமைதியை தத்து எடுத்து இருந்தான்.
சிவா “ஹலோ சதாசிவம் சார் உங்க பையன் குரு, சின்ன பையன் எதோ தொழில் வளரனும் என்ற ஆசையில் என் கிட்ட மோதினான் என்ற ஒரே காரணத்திற்காக தான் உயிரோட விட்டேன். நீ வெறும் அம்பு தான் உன்னை யாரு ஒப்பரேட் பண்றது, இப்ப நீ உண்மை சொல்லலைநா ஹாஸ்பிடல் இருக்கிறவன் உயிரோட வீட்டுக்கு போக மாட்டான். என்னை பத்தி தெரியும் நினைக்கிறன்” என மகன் பாசம் சரியாக வேலை செய்ய,
“நான் சொல்றேன் சிவா மேடம். சென்ட்ரல் மினிஸ்டர் சுரேந்தர்” என, அதிர்ச்சியுடன் சிவா “யார் ஹெல்த் மினிஸ்டர் சுரேந்தர் ஹா?” கேட்க ஆமாம் என தலையை ஆடினான், அவன் மேலும் சொன்ன தகவல் இருவரையும் கோபம் கொள்ள வைத்தது.
“இப்ப என்ன பண்றது ஸ்ரீ ?” சக்தி கேட்க, சிறிது யோசனைக்கு பிறகு “நீ முதலில் சார்ஜ் எடுக்கணும் சக்தி. இன்னும் ஒரே வாரம் உனக்கு ஆர்டர் வந்தால் போதும்” சதாசிவனிடம் திரும்பி,
“இன்னும் ஒரே வாரம் நீ என்ன ஆகுற மட்டும் பாரு” என அவனை எச்சரித்து விட்டு சக்தியுடன் கிளப்பினாள்.
காரில் “இப்ப என்ன பண்றது. இது பெரிய நெட்ஒர்க் மாதிரி இருக்கு. அரசியல்வாதிங்க மட்டும் இருக்கிற மாதிரி தெரியல” என தன் சந்தேகத்தை சக்தி சொல்ல,
“கண்டிப்பா நிறைய பெரிய ஆளுங்க இதுல இன்வால் ஆகி இருக்கிற மாதிரி தான் தோணுது. அவன் சொன்னதை வெச்சு பார்த்த பெங்களூர் தான் அவங்க பண்ற தப்புக்கு முக்கியமான இடம் போல. இரு” என யாருக்கோ போன் செய்தாள்.
‘ஹலோ’ என ஒரு ஆணின் குரல் கம்பிரமாக மறுபுறம் ஒலிக்க, “ஹலோ கோகுல் நான் சிவா..” என ஆரம்பித்தவள் பல விஷயங்களை அவனை செய்ய சொல்லிய பின் தான் நிம்மதியானாள்.
சக்தி, “என்ன கோகுல் கூட எல்லாம் பேசுற” எண்றதுக்கு “கோகுல் இப்ப யாரு தெரியுமா பெங்களூர் சிட்டி உடைய MLA. ஒரு நாள் கால் பண்ணி சாரி சொன்னான். ரொம்ப நேர்மையா இருக்கான். அவனுக்கு கல்யாணம் ஆகி இப்ப ஒரு பாப்பா கூட இருக்கு” என அவனை பார்த்து நக்கலாக சொல்ல
“நான் சும்மா தான் கேட்டேன். எனக்கு பொறாமை எல்லாம் இல்ல” என அவன் சொன்ன தோரணையில் சிவா சிரித்துவிட்டாள். இது தான் சமயம் என ” சாரி ஸ்ரீ. உன் கிட்ட சொல்ல கூடாது என்று அங்கிள் தான் ப்ரோமிஸ் வாங்கிட்டாங்க. நான் பண்ணது தப்பு தான். இதுக்கு இன்னும் எவளோ நாள் தான் டி பேசாமல் இருப்ப” முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்க,
அவள் சிரித்து கொண்டே, “நான் உன் மேல கோபமா இருக்கேனு யார் சொன்னது” என “என்னடி சொல்ற!” என்று அதிர்ச்சியாக கேட்க,
“முதலில் கோபமா தான் இருந்தேன். உன் மேல இருந்த கோபத்தை விட அப்பா மேல தான் அதிகமா இருந்துச்சு. என் கிட்ட சொல்லி இருந்த நான் கண்டிப்பா சொலுஷன் சொல்லி இருப்பேன். என்னை கொன்னுடுவாங்க என்று பயந்து இப்படி சொல்லமால் இருந்தது தான் என் கோபம். இங்க வந்த பிறகு நிறைய பிரச்சனை அதை சால்வ் பண்ணவே டைம் சரியாய் இருந்தது. அப்புறம் சும்மா தான் உன் கிட்ட பேசாமல் இருந்தேன்” என
“அடிப்பாவி! நீயா பேசுவனு நானும் எவளோ நாள் வெயிட் பண்ணேன் தெரியுமா. கடைசியா உன்னை நம்பி இருந்தா நான் கிழவன் ஆனா பிறகு தான் வந்து இருப்பேன். நல்ல வேலை ப்ரோ மேரேஜ் தான் இருக்கிற ஒரே சான்ஸ் என்றும் அங்க இருந்த வேலையை எல்லாம் முடிச்சிட்டு வந்துட்டேன்” என அவளை முறைத்து கொண்டே சொல்ல, சிவா காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவனிடம் “எனக்கு தெரியும் சக்தி நீ எனக்காக எவளோ வருஷம் வேண்டுமானாலும் வெயிட் பண்ணுவ என்று. ரித்து கல்யாணம் முடிஞ்ச பிறகு உன்னை இங்க கூப்பிடலாம் தான் நினைச்சேன் பட் லுக்கிலி நீயே வந்துட்ட”
“சரி உனக்காக இவளோ வருஷம் வெயிட் பண்றேன். அதனால எனக்கு ஒரு கிஸ் கொடு நான் உன்னை மன்னிச்சு விடுறேன்” என பெருந்தன்மையாக சொல்ல, “பாவம் பார்த்து பேசனா உனக்கு கிஸ் கேட்குதா அதுவும் காரில்” என அவனை அடிக்க கிட்ட வந்தவளை அவன் கைக்குள் கொண்டு வந்து “உன் கிட்ட யாருடி கேட்ட, எனக்கு வேண்டியதை நானே எடுத்துப்பேன்” என அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். நீண்ட நேரம் சென்ற இதழ் முத்தம் சாலையில் சென்ற லாரியின் ஹார்ன் சவுண்டில் தான் இருவரும் தன்னிலை அடைத்தனர்.
ஒரு வாரம் கடந்த நிலையில், தலைப்பு செய்தியாக “நாட்டையே உலுக்கிய சம்பவம். குழந்தை கடத்தல் வழக்கில் சென்ட்ரல் மினிஸ்டர் சுரேந்தர் கைது” விரிவான செய்திகள் “சென்ட்ரல் மினிஸ்டர் சுரேந்தர் தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி நாட்டில் உள்ள ஆதரவற்றோர குழந்தைகள் மற்றும் படிப்பறிவு இல்லாத பெற்றோரின் குழந்தைகளை கடத்தி பல சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதை அடுத்து அவரது பதவி பறிக்க பட்டு விசாரணைக்காக சிபிஐ காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தகவல் விசாரணைக்கு பின் தெரிவிக்க பட்டும் என சிபிஐ ஆஃபீஸ்ர் சக்தி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இவர் ஒரு சில நாள் முன்னாள் தான் பணியில் சேர்ந்தது குறிப்பிட்ட தக்கது.”
ஒரு வாரம் முன்,
சக்தி சிவாவிடம், “பேபி நீயே எல்லார் கிட்டவும் சொல்லிடு” என சிவா அவனை முறைத்து “உன்னோட விஷயத்தை நீ தான் சொல்லணும். போ சொல்லு” என இருவரும் ரகசியம் பேச
சந்தோஷ் ரித்துவிடம், “ரெண்டு பேரோட முழியே சரி இல்லையே. எதோ பெருசா சொல்ல போறாங்க போல” என ரித்துவும் சிரித்து கொண்டே ஆமாம் என்றாள்.
பிரகாஷ், “உங்க எல்லார் கிட்டவும் நான் ஒரு உண்மையா சொல்ல போறேன்” என அதற்கு ரித்து “தம்பி நீங்க வந்ததுல இருந்து உண்மையா சொல்றிங்களோ இல்லையோ ஆனா நிறைய ஷாக் தரிங்க. இப்ப என்ன ஷாக்” என சிவா சிரித்து கொண்டே “அவன் நீங்க நினைச்சா மாதிரி பிசினஸ் மேனேஜ்மென்ட் படிகளை அங்கிள். அவனோட ஆசைக்காக கிரிமினாலஜி படிச்சான்” என
“ஆமாம் டாடு எனக்கு கிரிம் பிரென்ச் ல ஒர்க் பண்ணனும் ரொம்ப ஆசை நீங்க தான் mba படிக்க சொன்னிங்க. நானும் அதை தான் படிக்கலாம் என்று இருந்தேன் பட் இவள் தான் உனக்கு பிடிச்சதே படிக்க சொன்ன” என சிவாவை காட்ட, அவளோ “ஓ.. சார் என் கிட்ட சஜசன் கேட்டீங்க?” என அதற்கு ஈஈஈ என இளித்தான்.
*******
பல வருடங்கள் முன்னால்,
மலர் “என்ன சிவா எதோ யோசனையா இருக்க போல”, என்றதுக்கு “ஆமாம் டி இந்த சக்திக்கு என்ன ஆச்சுனே தெரியல ரெண்டு பெரும் லண்டன் போறத சொல்றான். அப்பா கிட்ட போன் பண்ணி கேட்ட போயிடு வாமா என்று சொல்லறாரு. எனக்கு எதோ தப்பா படுத்து டி” என
“சக்தி ஏன் இப்படி பண்றான். உன் கூடவே இருக்க பிளான் பண்றான் போல” என அவளை கிண்டல் செய்ய
“அவன் என் கூட இருக்குறது எனக்கு ஹாப்பி தான் டி எதோ இடிக்குது. பட் ஐ டிரஸ்ட் ஹிம். அதான் போக ரெடி பண்றேன்” என மலர் சிரித்து கொண்டே “டபுள்லா போறிங்களே ட்ரிபிள்லா வர மாட்டீங்க தானே” என
“அடிங்க… நான் தமிழ் பொண்ணு டி…. அதை விட அவன் இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்” என்று சிரிக்க மலரும் சிரித்தாள்.
சிவாவும் சக்தியும் மறுநாள் லண்டன் சென்றனர். சிவா ஆக்ஸ்போர்டு யூனிவெர்சிடியிலும் சக்தி கேம்பிரிட்ஜ் யூனிவெர்சிடியிலும் சேர்ந்து தங்கள் விருப்பமா துறையை தேர்ந்து எடுத்து படித்தனர்.
மூன்று வருடம் வேகமாக சென்றது. ஒரு நாள் இரவு சக்திக்கு சிவா தந்தை போன் செய்து நீண்ட நேரம் பேசிய பின் வைத்தார். சரியாக ஒரு மாதம் கழித்து சக்தி சிவாவிடம் “ஸ்ரீ நாளைக்கு இந்தியா போறோம். டூ டேஸ் அங்க தான் இருக்க போறோம். பட் யாருக்கும் சொல்லாத” என புரியாமல் அவனை பார்த்தால், இருந்தாலும் அவன் மேல் இருந்த நம்பிக்கையில் அமைதியாக இந்தியா வர ஒத்து கொண்டாள்.
எட்டு வருடங்கள் பின் சென்னை வந்தாள். பல நாடுகள் சென்றாலும் பிறந்த ஊருக்கு வந்தால் தான் மனம் நிம்மதியாக தன் இடத்தில் இருப்பதை போன்ற உணர்வு தோன்றும் என நினைத்து கொண்டே சக்தியுடன் ஏர் போர்டில் இருந்து வெளியே வந்தாள்.
தன் தந்தை வெளியே இருப்பதை பார்த்து “அப்பா…” என கட்டிக்கொள்ள , “எப்படி இருக்கமா” என்றார்.
ம்ம்ம்.. என தலையை மட்டும் ஆட்டினாள். பின் மூவரும் சென்று நின்ற இடம் ரிஜிஸ்டர் ஆபீஸ். என்ன என்று தன் தந்தையை பார்த்தால், “ஒன்னும் இல்லமா. எப்ப கொஞ்சம் ப்ரொபேர்ட்டி சேல் பண்ணனும். அதுக்கு உன்னோட சைன் வேண்டும்” என
அவளும் இருவரின் மேல் இருந்த நம்பிக்கையில் அவர்கள் காட்டிய இடத்தில் சைன் செய்தாள். பின் சக்தியும் சிவாவும் அவர்கள் கட்டிய வீட்டுக்கு சென்றனர். சிவாவின் அப்பாவும் அவளை வீட்டுக்கு கூப்பிடாததால், கவலையுடனே சக்தியுடன் வந்தாள்.
“வாவ்.. ஸ்ரீ உன் பிரின்ட் உண்மையாலுமே கிரேட் தான். வீடு சூப்பரா இருக்கு” என அவளும் தலையை மட்டும் ஆட்டினாள். ஆனால் அவன் வேறு மனநிலையில் இருந்தான்.
இரவும் வந்தது சக்தி சிவாவிடம், “ஏய் பேபி இன்னும் எவளோ நாள் தான் எனக்கு ஓகே சொல்லாமல் இழுத்து அடிக்க போற. நானும் உனக்காக பொறுமையாக வெயிட் பண்றேன் போடி. நான் கோபமா போறேன்” என
“ஹலோ மிஸ்டர். என்ன ரொம்ப சீரியசா பேசுற முதல உனக்கு அது செட் ஆகலை. எனக்கு உன்னை மாதிரி ப்ரொபோஸ் பண்ண எல்லாம் தெரியாது. நான் யார் கிட்டவும் பேசினது இல்ல. எனக்கு நீ மலர் வாசுவை தாண்டி யாரும் கிளோஸ் கிடையாது. அம்மா தங்கச்சி அப்பா கூட எல்லாம் நான் இருந்ததே இல்ல. எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும். கூடவே இருக்கணும் ஆசை தான் பட் அப்பா என்னை ஹாஸ்டல படிக்க சொன்னார். ஜஸ்ட் அவருக்காக தான். சரி நா டொபிக் மாறி பேசுறேன். ஐ லவ் யூ” என சாதானமாக சொன்னவளை முறைதான்.
“என்ன முறைப்பு” என்று சிவா கேட்க, “ஏய் சீரியஸ்லி…. உன் முகத்தில் ஒரு ரியாக்ஷனும் இல்ல டி. குட் மார்னிங் சொல்லுற மாதிரி சொல்லுற. ஒரு பீலிங்ஸ் இல்ல பொண்ணா சின்ன வெக்கம் இல்ல போடி” என சலித்து சொல்ல
“ஹலோ எனக்கு இவளோ தான் வரும். ஒன்னு வெக்க படுற பொன்னாக பார்த்து லவ் பண்ணனும் இல்ல வெக்க பட வைக்க தெரியணும். நீ எல்லாம்” என மேலே பேச விடாமல் தன் இதழ் கொண்டு அவளை தன்வசமாக்கி கொண்டான்.
முதலில் திகைத்து பின், அவனிடம் ஒன்றினாள். மூச்சு காற்றுக்காக இருவரும் மனசே இல்லாமல் விலக, சக்தி “சாரி ஸ்ரீ எதோ வேகத்தில் நீ அப்படி சொல்லவும் கிஸ் பண்ணிட்டேன்” என தலை குனித்து சொல்ல
“டேய் எனக்கு தெரியும் டா நீ எதுக்குமே சரி பட்டு வரமாட்ட” என சிவா கிண்டலாக சொல்ல அவனோ மலங்க மலங்க விழித்தான்.
பின் தன்னை சுதாரித்தவன், “இப்ப என்ன ஸ்ரீ சொன்ன” என ஆவலாக கேட்க, இதுக்கு மேலை முடியாது என சிவா சக்தியின் காலரை பிடித்து இழுத்து சென்றாள்.
“ஏய்… எங்க டி இழுத்துட்டு போற” என்றதுக்கு “ம்ம்ம்….. உன்னை ரேப் பண்ண போறேன்” என அசால்டாக சொல்ல , அவனோ “ஐய்யோ… யாரவது என்னை காப்பாத்துங்க. என் கற்பு என் பொண்டாட்டிக்கு மட்டும் தான்” என அவன் கத்த, அதை எதையும் காதில் வாங்காமல் அவனை பெட் ரூம்க்கு அழைத்து வந்தாள்.
“எனக்கா வெக்கம் இல்லனு கிண்டல் பண்ண. உன்னை என்ன பண்றேன் பாரு” என அவனை வெட்கப்பட வைக்க நினைத்தவள், அவனின் தீண்டலில் செவ்வனமாக சிவந்து இருந்தாள். இருவரும் புதிய உலகத்தை உருவாக்கினார். ரெண்டு நாள் இருவருக்கு மட்டுமே என அழகாக இருந்தது. பின் லண்டன் திரும்பினார், அங்கும் அவர்கள் வாழ்க்கை வசந்தமாக செல்ல, ஒரே ஒரு போன் கால் அவர்கள் வாழ்க்கையை மாற்றியது.
இருவரின் வாழ்க்கையை மாற்றிய விஷயம் என்ன?
தொடரும்
நிலா❤❤