அத்தியாயம் 11
லண்டன் நகரின் அதிகாலை நேரம், சாலையில் செல்லும் வாகனத்தின் சத்தத்தில் கண்ணை கசக்கினாள் சிவா மனதில் ‘இங்க இருக்கிற மனிதர்கள் தூங்கவே மாட்டாங்களா, இவளோ சீக்கிரம் எங்க தான் போறாங்களோ’ என நினைத்து கொண்டே எழும்ப நினைக்க, அவளால் நகர கூட முடியவில்லை. சக்தி தூக்கத்திலும் அவளை இறுக்கமாக பிடித்தது இருந்தான்.
அவன் பக்கம் திரும்பி ‘டேய் ஸ்வீட் பாய் உன் கிட்ட இதே தொல்லையா போச்சு. உன்னை விட்டு போற மாதிரி பிடிச்சு இருக்க. இதுக்காகவே உன்னை விட்டு போறேன் டா’ என இன்று தான் அவனுடன் இருப்பது கடைசி என அறியாமல் கொஞ்சிக்கொண்டு இருந்தாள். பின் தன் வேலையை கவனிக்க சென்றால்.
சிறிது நேரத்தில் என்றும் அழைக்காத தன் தாய் போனில் அழைக்க ஆர்வமாக பேச எடுத்தால், “அம்மா!” என்று சந்தோஷமாக ஆரம்பித்தவள் சந்தோசம் அந்த பக்கம் சொன்ன செய்தியில் காணாமல் போனது.
…………………..
“நான் சீக்கிரமா அங்க வரேன் மா” என்று போனினை வைத்து விட்டு தூங்கும் சக்தியிடம் விஷயத்தை சொல்ல அவன் சிலையாகி நின்றான்.
“டேய் உடனே சென்னை போகணும் டா” என கண் கலங்கி குரலில் எப்போதும் இருக்கும் ஆளுமை ஆட்டம் காண கேட்டவலை கவலையாக பார்த்தான்.
கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் பல வழிகளில் தேடி பார்த்து ஒரே டிக்கெட் கிடைக்க சிவாவை மட்டும் சென்னைக்கு போக சொல்லிவிட்டு அடுத்த விமானத்தில் தான் வருவதாக சொன்னான்.
‘சென்னைக்கு இது மாதிரி ஒரு சூழலில் வருவேன் என நான் கனவில் கூட நினைக்கல’ என தன் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டு ஏர்போர்ட்யில் இருந்து தன் வீட்டுக்கு சென்றாள்.
வீட்டுக்குள் நுழைந்தவள் சில மாதங்கள் முன் பார்த்த தன் தந்தையை எப்படி ஒரு நிலையில் காண முடியவில்லை. உலகமே இடிந்து போனது போல பாதி உயிரோட இருக்கும் தாய் பல நாள் பார்க்க நினைத்த அவளின் குட்டி தங்கை இப்போது கண்ணீரில் பார்க்க முடியாமல் அவளை அனைத்து கொண்டாள்.
தந்தையின் உயிரற்ற உடல் அருகில் அமர்ந்தவளின் கண்ணில் ஒரு துளி கண்ணீர் இல்லை. பல கோடிகளுக்கு சொந்தக்காரர் தமிழ் நாட்டின் முக்கிய புள்ளி என்பதால் தொழிலதிபரில் இருந்து அரசியல்வாதி வரை அனைவரும் வந்து துக்கம் விசாரித்தனர். கடைசியாக தந்தையின் இறுதி காரியத்தை மகனாக இருந்து செய்ய வேண்டிய அணைத்து கடமையும் மகளாக சிவா செய்து முடித்து வீடு திரும்பினாள்.
காமாட்சி, “அம்மாடி சிவா இனி இங்க கூடவே இருப்பியா மா… ரித்து சின்ன பொண்ணு அவளுக்கு தொழில் பத்தி எதுமே தெரியாது எனக்கு குடும்பம் குழந்தை தவிர வேற எதுமே தெரியாது. எனக்கு என்ன பண்றதுனே தெரியல பயமா இருக்கு டி. நீ வரதுக்கு முன்னாடி ரெண்டு பேர் வந்து உங்க கணவன் வாங்கிய கடனுக்கு உங்க எல்லா சொத்தையும் கொடுத்த கூட முடியாது என்று சொல்ராங்க மா” என
உலகம் அறியாமல் பேசும் தாயை நினைத்து கவலை கொள்வதா இல்லை கோவம் கொள்வதா என அவளுக்கு புரியாமல் “நான் இனி பார்த்துகிறேன்” என தாயிடம் சொல்லி விட்டு தந்தையின் பிஏ வான கோவிந்தன் அங்கிளை பார்க்க சென்றால்.
கோவிந்தன் அங்கிள் சிவாவிற்கு சில கடன் பத்திரங்களை கட்ட அதை பார்த்தவள் “அங்கிள் அப்பா கடன் வாங்கி இருக்கிறார் தான் ஆனா எங்க சொத்து அளவுக்கு இல்ல அப்புறம் ஏன் அவங்க அம்மா கிட்ட அப்படி சொன்னாங்க”
“சிவா பாப்பா அவங்களுக்கு நம்ப சொத்து மேல எப்பவுமே கண்ணு தான். உங்க அம்மாக்கு உலக அறிவு இல்லனு ஏமாத்த பார்க்கிறாங்க மா” கவலையாக சொல்ல,
“இனி நான் பிசினஸை பார்த்துகிறேன் அங்கிள். நம்ப லாயர் அங்கிள் கிட்ட சொல்லி நம்ப ஊரில் இருக்கிற லேண்ட் விற்க போர்மாலிட்டி எல்லாம் பாருங்க. டூ ஹௌர்ஸ் தான் டைம் அதுக்குள்ள முடிங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.
போன் வர எடுத்தால் சிவா, “ஹலோ ஸ்ரீ நான் ஏர்போர்ட்டில் இருக்கேன் வந்து பிக் பண்ணிக்கிறிய” என
“ம்ம் .. அங்கே இரு டுவெண்ட்டி மிண்டுஸ் நான் அங்க இருப்பேன்” என மற்ற வேலையை பின்னுக்கு தள்ளி விட்டு சக்தியை காண சென்றாள்.
ரெண்டு மணி நேரம் பிறகு, கோவிந்தன், “சிவா பாப்பா கொஞ்சம் ரெஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் வர முடியுமா” என
“சூர் அங்கிள்” அப்போது தான் சக்தியை பிக் செய்ய ஏர்போர்ட் வந்தால்,
சிவா, “சக்தி அங்கிள் கால் பண்ணாங்க. அவரை பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம்” என சக்தியும் சரி என்று இருந்தான்.
ரெஜிஸ்டர் ஆபீஸ் வெளியே பதற்றமாக இருந்தார் கோவிந்தன்.
“என்ன அங்கிள் என்ன ஆச்சு. எதாவது பிரச்சனையா” என அவர் ” இல்ல மா கடன் பிரச்சனை எல்லாம் சால்வ் பண்ணிக்கலாம். ஆனா…..அது உனக்கு நீ தத்து பிள்ளை என்ற விஷயம் தெரியுமா” என கேள்வி கேட்டார்
‘என்ன’ என அதிர்ந்து நின்றாள் சிவா அதுக்குள் சக்தி அவரிடம் “இதை ஏன் சார் இவ கிட்ட சொன்னிங்க. நானும் மாமாவும் இது இவளுக்கு எப்பமே தெரிய கூடாது என்று இருந்தோம்” என இருவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.
‘நீ யாரு பா’ என “சார் நான் இவ ஹஸ்பாண்ட்” என்று மேலும் “எனக்கு இதுக்கு அப்புறம் என்ன செய்யணும்னு தெரியும். அதுக்கு முன்னாடி இவள் கிட்ட பேசணும். சோ நாங்க கிளம்புறோம். பிஸ்னஸ் எல்லாம் இவள் பேருக்கு எப்பவோ மாமா மாத்திட்டாங்க. நீங்க கவலை படாதீங்க” என சொல்லிவிட்டு சிவாவை வேகமாக அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றான். அவளுடன் பீச்க்கு வந்தவன் அவளிடம் “உன் மனசுல நிறைய கேள்வி இருக்கும். அதுக்கு நான் கண்டிப்பா பதில் சொல்லணும்” என
சிவா அவனை தீயாய் பார்த்து “எதுக்கு என் கிட்ட சொல்லல” என
“மாமா தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரு. நான் சொல்ல ட்ரை பண்ணேன் பட் ப்ரோமிஸ் வாங்கிட்டாரு” என பாவமாக சொல்ல,
“சரி இப்பாவது உண்மையை சொல்லுவிங்களா” என நக்கலாக அதே நேரம் பொறுமையாக கேட்டாள்.
அவளின் பொறுமை எவ்வளவு ஆபத்து என அறியாமல், “கண்டிப்பா சொல்றேன் ஸ்ரீ. எனக்கு உன்னை பத்தி நம்ப ஸ்கூல் படிக்கும் போதே தெரியும். மாமா ஒரு நாள் கால் பண்ணி உன்னை பத்தி சொன்னார். அன்றைக்கு,
போன் அடிக்க யாரோ புது நம்பர் என எடுத்தான் சக்தி “ஹலோ” என “சக்தி தானே” என எதிர் பக்கம் கேள்வி. “ஆம் நீங்க யாரு”
“நான் ஷிவானி அப்பா பா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும் அதான் இப்ப கால் பண்ணேன். நீ பிரீயா இருக்கியா” என “எஸ் அங்கிள் சொல்லுங்க”
“நான் சொல்லுறதை பொறுமையா கேளுப்பா என தொடங்கியவர், சிவா என்னோட பொண்ணு இல்லப்பா. என் சித்தி பையனோட பொண்ணு. என் தம்பி பொண்ணு. ஆனா எனக்கும் என் தம்பி எவளோ தொடர்பு எல்லாம் இல்ல. இப்ப என் கிட்ட இருக்கிற மொத்த சொத்தும் அவனது தான். அவனோட கல்யாணம் தான் எங்களை இணைச்சுது. எங்களுக்கு குழந்தை பிறக்கலை ஆனா அவனுக்கு தான் முதலில் குழந்தை பிறந்தது. அவ தான் ஷிவானி. அவ பிறந்த உடனே எல்லா சொத்தையும் அவ பேருக்கு மாத்திட்டாங்க. நான் கூட ஏன் பிறந்த குழந்தை மேல எவளோ சொத்தை எழுதற என்று கேட்டேன். ஆனா அவன் எதுமே சொல்லல. ஒரு வாரத்தில் சிவாவோட அம்மாக்கு சுகம் இல்லாததுனால அவளை கூப்பிட்டு ஹாஸ்பிடல் போனான். ஆனா போற வழியில் அச்சிடேன்ட் இரண்டு பெரும் ஸ்பாட் அவுட்”
“ஐயோ.. அங்கிள்” என சக்தி பதற “அப்புறம் என்ன ஆச்சு” என பதட்டமாக கேட்க
“அவங்க கூட சிவா போகத்துனால அவ தப்பிச்சிட்டா. ஆனா அவளை கொல்ல பார்த்தாங்க. ஆம் பா அது அச்சிடேன்ட் இல்ல சொத்துக்காக சொந்தம் என்று பார்க்காமல் கொன்னுட்டாங்க. அவங்க கிட்ட இருந்து காப்பாத்த தான் சிவாவை யாருக்கும் தெரியாத ஊரில் படிக்க வைக்கிறேன். அவளை இங்க எல்லாரும் தேடுறாங்க. அவளை நீ லண்டன் கூப்பிட்டு போயிடு பா. அவ நாளைக்கு சென்னை வரதா சொன்ன. என்னால அவ கிட்ட உண்மையை சொல்ல முடியாது. அவளோட அப்பா நான் இல்லனு சொல்லுற தைரியம் எனக்கு இல்ல. அவ என் பொண்ணுப்பா. பத்திரமா பார்த்துக்கிறிய” என
“கண்டிப்பா அங்கிள்” என அவருக்கு நம்பிக்கை அளித்து விட்டு அவளை கூப்பிட்டு கொண்டு லண்டன் சென்றான். பின் சில மாதங்கள் பின் அவர் கால் செய்தார். அப்போ,
“ஒரு இரண்டு நாள் சென்னை வர முடியுமா பா. எங்க சில போர்மாலிட்டீஸ் இருக்கு. சிவா அப்பா உயில் எழுதும் போது அவளோட கல்யாண வயசுல அவளோட புருஷன் சம்மதத்தோடு கையொப்பம் போட்டா தான் அவ பெயரில் இருக்குற சொத்துக்கு முழு உரிமை அவளுக்கு வரும் அதுக்கு முன்னாடி அவ இறந்துட்டா சொத்து மொத்தம் டிரஸ்ட்க்கு போய்டும். அதும் அவங்க சொந்தக்காரர் வைத்து இருக்கிற டிரஸ்ட். அதான் அவளை சின்ன வயசுல இருந்து பத்திரமா அவளை பாத்துக்கிறேன். நீ வாப்பா அவளோட சொத்தை அவ கிட்ட முழுசா கொடுத்துட்டா என் கடமை முடியும்” அவரின் அறிவுரை படி அவர்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் மற்றும் சொத்துக்களுக்கு முழு உரிமையும் உனக்கு வந்துச்சு என பேசிவிட்டு சிவாவை பார்க்க,
“நீங்க லண்டனுக்கு கிளம்புங்க” என மூன்றாம் மனிதனிடம் பேசுவது போல் பேச ‘ஏண்டி’ என அவளை பார்க்க,
“நான் உன் மேல செம கோபத்தில் இருக்கேன். இங்க இருந்த கோபத்தில் உன்னை எதாவது ஹுர்ட் பண்ணிடுவேன். நான் திரும்பி கூப்பிடும் வரைக்கும் சென்னை வராத. என்ன புரியுதா” என அவளுக்கு அவன் இந்த பிரச்னையை முதலில் சொல்லவில்லை என்று தான் கோபம். அவளின் மனநிலையை புரிந்து கொண்டு,
“நம்ப கல்யாணம் அக்னி சாட்சிய பெரியவங்க ஆசிர்வாதத்தோடு நடக்கலை தான். ஒரு கையெழுத்தில் நீ எனக்கு பொண்டாட்டிய ஆகிட்டடி. ஊர் கூடி பண்ற எல்லா கல்யாணமும் கடைசி வரைக்கும் நிலைக்கிறது இல்ல டி. அதே மாதிரி நாலு பேர் மட்டும் இருந்து பண்ற அவசர கல்யாணமும் பாதியில் முடியாது. உனக்கு என் மேல கோபம் மட்டும் தான். அது எப்ப போகுதோ நான் அப்ப தான் உன் முன்னாடி வருவேன். ஒரு வேல சந்தர்ப்ப சூழ்நிலையில் அதுக்கு முன்னாடியே வந்தாலும் உன்னை தெரியாத மாதிரி தான் இருப்பேன். லவ் யூ டி என் கியூட் பொண்டாட்டி” என அவளது கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு கிளம்பி விட்டான்.
லண்டன் சென்றவன் அங்கே உள்ள கிரீம் பிரென்ச்யில் வேலை செய்ய அதில் முழுகிவிட்டான். அண்ணாவின் திருமணத்திற்கு வரும் சாக்கில் சென்னையில் சிவாவின் அழைப்புக்கு முன்னாடியே வந்து விட்டான், என்று கூறி விட்டு குடும்பத்தார் பார்க்க
சந்தோஷ், “டேய் உன்னை எல்லாம்…. தம்பிய டா நீ…. சரி எப்படி நீ சிபிஐ ஆஃபீசரா வந்த” என
சக்தி, “நம்ப ஊரில் சைல்ட் ட்ராபிக்கிங் அதிகமா ஆகிடுச்சு டா. சிவா பெங்களூரு போயிடு வரும் போது அவளே நேரில் பார்த்து இருக்க. ஆனா அப்ப நான் பதவியில் இல்ல. நான் ஜாயின் பண்ண நிறைய ப்ரொசீஜர் இருந்தது. அது வரைக்கும் சிவா அவ ஆளுங்க மூலமா இதை பதில் அவளோட ஸ்டைலில் விசாரிச்சா. எங்க பிரின்ட் கோகுல் ஹெல்ப் பண்ணான்”
அன்று காரில்,
“ஹலோ கோகுல் நான் சிவா. எனக்கு ஒரு ஹெல்ப் வேண்டும்” என “கண்டிப்பா சிவா உனக்கு இல்லாத ஹெல்பா”
“இது கொஞ்சம் சீரியஸ் இஸ்சு. நான் நாட்டில் இப்ப நிறைய குழந்தைங்க காணாமல் போறத நியூஸ் வந்து இருக்கு. அவங்க எல்லாம் திட்டம் போடு கடத்த படுறாங்க. பெங்களூரு தான் ஹெட் போல. எனக்கு கொஞ்சம் எவிடென்ஸ் வேண்டும் நெஸ்ட் வீக் சக்தி சார்ஜ் எடுத்துப்பான். அதுக்கு அப்புறம் அவனே பார்த்துப்பான்” என
“ஓ… ஓகே மா… ஒரு டூ டேஸ் டைம் கொடு. என்னால முடிச்ச அளவுக்கு கலெக்ட் பண்றேன். பட் நீயும் உன் சைடுயில் உனக்கு தெரிஞ்சதை பார்த்துக்கோ” என
“அவங்க முக்கியமா சென்னை மும்பை டெல்லி கொல்கத்தா பெங்களூரு இப்படி ஹை டெக் சிட்டி தான் டார்கெட் என்று நினைக்கிறேன். முதலில் அங்கேயெல்லாம் நம்ப ஆளுங்களை கிளோஸா வாட்ச் பண்ண சொல்லணும் அப்புறம் முக்கியமான விஷயம் இதுல சம்மந்த பட்டவர் சென்ட்ரல் மினிஸ்டர் சுரேந்தர். அவரோட பிஏவை தனியா பிடிக்க முடியுமா டா” என சிவா கேட்க,
“ஏய்…. உண்மையா அவரை….. பாஆஆ என்னமா வெளியே நல்லவர் மாதிரி நடிக்கிறாரு. லக்கிலி அவரோட பிஏ காசிநாதன் எனக்கு தெரிஞ்ச அங்கிள் தான். ஓவர் பணத்தாசை பிடிச்சவர் டி. அவரை பிடிச்சு கொஞ்சம் பணத்தை கண்ணில் காமிச்சலே போதும் மொத்தத்தையும் சொல்லிடுவேன். அவன் கிட்ட இருந்து ஆதாரத்தை வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ மத்த வேலைய பாரு” என இருவரும் பேசிவிட்டு கைபேசியை அணைத்தனர்.
“இது தான் நடந்துச்சு. அவர் கிட்ட இருந்த சில பாண்ட் பேப்பர் அப்புறம் பத்திரங்கள் இது எல்லாம் எனக்கு கிடைச்சிதும். அதை வைத்து அவரை உள்ள தள்ளனும்” என சக்தி சொல்ல
சிவா, “ஒகே சக்தி நீ அவரை அர்ரெஸ்ட் பண்ணிட்டு. உள்ள என்னோட ஆளுங்களை இறக்கி ஜெயிலயே அவனுக்கு சமாதி கட்டுறேன்” என கோபமாக சொல்ல,
சந்தோஷ், “இந்த மாதிரி அடிதடிக்கு எல்லாம் உங்க அக்கா முதல வருவார்களே” என ரித்துவின் காதில் முணுமுணுக்க
“என்னடா ப்ரோ அங்க சத்தம்” என சக்தி கேட்க “ஒன்னும் இல்லடா பேசிட்டு இருக்கோம்” என இழித்தபடியே சொன்னான்.
ஒரு வாரம் பின்,
சுரேந்தர் கைது செய்யப்பட அவரை கேட்கும் எந்த கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. சொல்ல கூடாது என்ன தெளிவாக இருந்தார் அவர். ஆனால் சக்தி மொத்த விஷயத்தையும் அவரின் பிஏ விடம் இருந்து வாங்கியதால், பொறுமையாக விசாரிக்கும் அதே வேளையில் பல சிறுவர்கள் சிறுமிகள் மீட்க பட்டனர். அவர்களை பாதுக்காப்பாக அரசின் ஆசிரமத்தில் அனுமதிக்கபட்டனர். மொத்தம் பதினைந்து பேர் இந்த கேஸ் விஷயமாக கைது செய்யப்பட்டனர்.
சில நாட்கள் கழித்து, ‘குழந்தை கடத்தல் சம்மந்தமாக கைது செய்யப்பட்ட பதினைந்து பேரையும் நீதிமன்றம் அழைத்து செல்லும் வழியில் அடையாளம் தெரியாத சில மர்ம கும்பல் அந்த வண்டியின் மீது வெடிகுண்டு வீசியதால் சம்பவ இடத்திலே கைதிகள் அனைவரும் உடல் சிதறி இறந்தனர். இதில் முன்னாள் அமைச்சர் சுரேந்தரூம் இறந்தது குறிப்பிடதக்கது. மேலும் இந்த கேஸை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து எமது நியூஸ் சேனலை பார்க்கவும்’ என நாடு முழுவதும் அணைத்து மொழிகளிலும் இது தான் தலைப்பு செய்தியாக இருந்தது.
அனைத்தும் முடிந்து தன் வீட்டுக்கு வந்தான் சக்தி.
ஜோதி “டேய் சக்தி உனக்கும் சிவாக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் டா. நீ என்ன சொல்ற டா” என “எனக்கு ஒன்னும் இல்லாம சிவா கிட்ட கேட்டுக்கோங்க. அவளுக்கு ஓகேனா எனக்கும் ஒகே” என்ற மகனை கனிவாய் பார்த்தார். எத்தனை பேர் மனைவியின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள் தெரியாது ஆனால் அவரின் மகனோ மனைவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மூன்று வருடம் வெளிநாட்டில் இருந்துள்ளான். அவளின் மேல் அத்தனை காதல். அவளின் வார்த்தையின் மேல் உள்ள நம்பிக்கை.
காமாட்சி சிவாவிடம் “சிவா எனக்கு உன்னை கல்யாண கோலத்தில் பார்க்கணும் என்று ஆசையா இருக்குமா. ஜோதி அண்ணி கால் பண்ணாங்க. உங்களுக்கு முறைப்படி கல்யாணம் பண்ணலாம் னு பிரகாஷ் தம்பி கிட்ட கேட்டார்களாம் உனக்கு ஒகேனா அவர்க்கும் ஓகேயாம். நீ என்ன சொல்ற” என
சக்தியை நினைத்து சிரித்து கொண்டே “எனக்கு ஒகே. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க” என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்.
சிவாவும் கல்யாணத்திற்கு சம்மதிக்க ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் இருவரின் திருமணம் என பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டது.
மறுநாள் கல்யாணம், மாடியில் சிவாவும் சக்தியும் நிலவை ரசித்து கொண்டு இருந்தனர். சக்தி “ஒய்… ஸ்ரீகுட்டி நாளைக்கு காலையில் கல்யாணம் டி. இன்னும் கூட என் கிட்ட லவ் யூ சொல்லல”
“டேய்.. எப்பவாச்சு சொல்லி இருப்பேன். நீ தான் மறந்துட்டு பேசற” என அவளை என்னும் தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டு “அடிப்பாவி.. சரி இப்ப சொல்லேன்” என அவளின் கண்களை பார்த்து கேட்க,
‘இதுக்கு மேல இங்க இருந்த நீ வேற என்ன எல்லாம் கேட்பானும் எனக்கு தெரியும். வா கிழ போகலாம்” என வர மாட்டேன் என்றவனை இழுத்து கொண்டு அவனது அறையில் தள்ளினாள்.
காலை , அந்த திருமன மண்டபமே மக்கள் வெள்ளத்தில் இருக்க, சக்தி கம்பிரமாக மனமேடையில் உட்கார்ந்து இருக்க, தேவலோக மங்கையே தொற்கும் அளவிற்கு அழகு பெட்டகமாக நடந்து வந்தாள் சிவா.
சக்தியின் அருகில் வந்து அமர்ந்த சிவாவிற்கு நடிப்புக்கு கூட வெக்கம் வரவில்லை. சக்தி அதை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அனைவரும் வாழ்த்து மழை தூவ சிவாவின் கழுத்தில் மங்கள நாணை கட்டினான் சக்தி. பின் அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்து “ஐ லவ் யூ டி பேபி” என அதுவரை வெட்க படாத சிவாவிற்கு கன்னம் செம்மையாகி வெக்கத்தில் தலையை குனிந்துக் கொண்டாள்.
முதலிரவுக்காக அலங்காரம் பன்ன ஆரம்பிக்கும் போது அவர்களை சிவா தடுத்துவிட்டாள். ஏன் என்று கேட்டதிற்கு ஒரு இடத்திற்கு போக வேண்டும் மட்டும் கூறினாள்.
இரவு சாலையை கிழித்துக் கொண்டது சென்றது அந்த கார்.
“ஏய் மெதுவா தான் போயேன்டி”, என சக்தி சொல்ல அதை எதையும் காதில் வாங்காமல் போனால் சிவா. அவள் காரை நிறுத்திய இடம் அவர்களின் ரசசிய வீடு.
“இங்க எதுக்கு டி நம்ப வந்துருக்கோம்” என அவளை கேட்க
“நம்ம லைப்பை இங்க தான் ஆரம்பிச்சோம், இப்பவும் இங்கே தான் நம்ப லைப்போட செகண்ட் இன்னிக்ஸை ஆரம்பிக்கணும் ஒரு ஆசை அதான்”, என சிவா சொல்ல
“அதுக்கு என்ன பேபி ஆரம்பிச்சிட்டா போச்சு”, என சக்தியும் சிவாவை தன் கரத்தினால் தூக்கிக் கொண்டான்.
இனி அவர்கள் வாழ்வில் என்றும் சந்தோஷம் மட்டுமே…..
முற்றும்
அன்புடன்
நிலா