காதல் 7
பெங்களூரு நெடுசாலையில் வேகமாக சென்றது சிவாவின் கார். ஒரு திருப்பத்தில் திருப்பிய போது எதிர்பாராவிதமாக ஒருவர் காரை நோக்கி ஓடி வர சிவா நிறுத்துதியும் அவரின் மேல் மோதியது. காரில் இருந்து வெளிய வந்து பார்த்தால், பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி கண்ணில் பயத்ததோடு கீழே விழுந்ததால் சிறு காயத்தோடு இருந்தால்.
‘அக்கா.. காப்பாத்துங்க’, என கன்னடத்தில் கூறினால்.
‘என்னமா என்ன ஆச்சு’, என அவளும் கன்னடத்தில் பேசிக்கொண்டே எதிரே பார்க்க நான்கு பேர் அடியாள் போல அவளை நெருங்கி வந்தனர்.
அந்த சிறு பெண், க்கா.. இவங்க…இவங்க… என அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.
‘ஓகே டா. கூல் நான் பார்த்துகிறேன்’, அந்த சிறுமியை காரில் உட்கார வைத்துவிட்டு அவர்களை நோக்கி சென்றால்.
யார் நீங்க எதுக்கு அந்த பாப்பாவை தொரத்தறிங்க, என
ஒருவன், ‘மச்சி அந்த பாப்பாவை விட இந்த குட்டி செமயா இருக்காடா’,
இன்னொருவன், “அப்ப ரெண்டு பேரையும் தொக்கிடலாமா?”
சிவா, “ஓ… நீங்க பேசறது கேட்கல கொஞ்சம் கிட்ட வந்து பேசறீங்களா?”
அருகில் வந்து ஒருவன் அவளின் கையை பிடிக்க, அடுத்த நிமிடம் அவன் தரையில் இருந்தான். சிவா அவனின் கையை உடைத்து இருந்தாள்.
மற்ற மூவரையும் சரமாரியாக அடிக்க அனைவரும் கீழே விழுந்தனர். சிவாவின் அருகே ஓடி வந்தால் அந்த சிறுமி,
“க்கா, அங்க நிறைய பேர் இருக்காங்க இவங்கள் போல”, என எதோ சொல்ல வருவதற்குள் எங்கிருதோ வந்த துப்பாக்கி குண்டு சிவாவின் வலது தோள்பட்டையை உரசிக்கொண்டு அவளில் இதயத்தை துளைத்தது.
அம்மா… என அலறிக்கொண்டு எழுந்தாள் சிவா. தன் வீட்டில் இருப்பதை உணர்ந்து ஒரு வார முன் அடிப்பட்ட கையை பார்த்தால். நேரம் ஐந்து என காட்ட தனது வேலையை காண சென்றாள்.
பிரகாஷுக்கு போன் செய்து, “நான் சொன்ன வேலை என்ன ஆச்சு?”,
“ம்ம்.. சிவா இந்த ஒரு வாரத்தில் நான் தேடிய வரை, அந்த காங் லீடரை கண்டுபிடிக்க முடியல. பட் ஒரே கிளு அவர் பின்னாடி கண்டிப்பா பொலிடிகல் சப்போர்ட் இருக்கும். இல்லனா எந்த நேரம் எங்கிட்ட கண்டிப்பா மாட்டிருப்பான். டாமன் இட்”, என கோவமா பேச
“பிரகாஷ் பீ கூல்”, என சில ஐடியா சொல்லிவிட்டு போனினை வைத்தாள்.
சிவா தனது கேபினில் காலையில் வந்த கனவை பற்றி யோசித்து கொண்டு இருக்க, அவளது அம்மாவிடம் இருந்து போன் வந்தது.
“என்ன மா இந்த நேரத்தில் கால் பண்றிங்க. எதாவது ப்ரோப்ளேமா?” என
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மா. சந்தோஷோட அப்பா அம்மா இவங்க ரெண்டுபேரையும் கோவிலுக்கு கூப்பிட்டு போறாங்களாம். என்னையும் வர சொன்னாங்க. அதன் உன் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு தான் கால் பண்ணேன். நான் போயிடு ஈவினிங் வந்துறேன்”, என் பேசிவிட்டு வைத்தார்.
மதியம், சிவா தனது சைட்டிற்கு கோபியுடன் காரில் சென்றாள். எப்பொழுதும் போல பரபரப்பாக வேலை நடக்க, ஒவொன்றாக பார்த்துக்கொண்டே வந்தவள் தனக்கு பின்னால் வேகமாக வந்த லாரியை கவனிக்க தவறினாள்.
பேசிக்கொண்டே திரும்பிய கோபி அந்த லாரியை பார்த்தான். வேகமாக சிவாவை நோக்கி வருவதை பார்த்தவன் “மேடம்” என அவளை நோக்கி ஓடினான்.
நொடி நேரத்தில் சிவாவை தள்ளி விட்டவனின் மேல் மோதியது லாரி. ‘கோபி’ என அவனிடன் செல்லும் முன்னே பலரும் அங்கு கூடிவிட்டனர். தலையில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த அவனை ஹாஸ்பிடல் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து அங்கு வேலை செய்தவரிடம், “கொஞ்சம் தூக்குங்க” என்னும் போது சரியாக அவளது போன் அலறியது.
போனினை கட் செய்தாள். மறுபடியும் அலற, எடுத்து காதில் வைத்தால், “என்ன மேடம் கடைசி நிமிடத்தில் தப்பிச்சிட்டீங்க போல. ஆனாலும் மேடம் உங்க வீட்டுல எல்லாரும் ஒரே இடமா இருக்க மாட்டிங்களா. எனக்கு தான் அங்க அங்க ஸ்பாட் வைக்க கஷ்டமா இருக்கு” என காலை கட் செய்தான்.
ஒரு நிமிடம் யோசித்தவள் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் கோபியை ஹாஸ்பிடல் கொண்டு செல்ல சொல்லிவிட்டு, தனக்கு தகவலை சொல்லவேண்டும் என கூறிவிட்டு தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
கோவிலுக்கு சென்ற தன் குடும்பத்தை காப்பாத்த வேண்டும் என சந்தோஷுக்கு கால் செய்தாள். முதலில் எடுக்காமல் இருக்க உடனே தனது தங்கைக்கு கால் செய்தாள். அவளது நல்ல நேரம் போட்டோ எடுத்துக்கொண்டு இருந்த ரித்து அக்காவின் நம்பரை பார்த்து எடுத்த,
“ரித்து எல்லாரும் எங்க இருக்கீங்க?”,
“என்ன ஆச்சு க்கா.. நாங்க எப்ப தான் காஞ்சிபுரம் கிராஸ் பண்ணோம்” , என
“ஓகே பைன் சந்தோஷ் கிட்ட கொடு” என வண்டி ஓட்டும் சந்தோஷிடம் போன் கொடுத்தால்.
“சொல்லுங்க சிவா என்ன எதாவது பிரச்சனையா?”
“ஆமா சந்தோஷ். நீங்க எப்ப செங்கல்பட்டு வழியா வராதீங்க ஒரகடம் வழியா வாங்க. உங்க பின்னாடி நம்ப கார்ட்ஸ் வரங்களா?”
ஹ்ம்ம்.. வராங்க.
“ஓகே.. வழில எங்கவும் வண்டியை நிறுத்தாதீங்க. சந்தேகம் வர மாதிரி எதாவது வண்டி இல்ல லாரி உங்க பின்னாடி வந்தா உடனே சொல்லுங்க. முதலில் சீக்கிரமா என் வீட்டுக்கு வாங்க” என பேசிக்கொண்டே தனது வீட்டுக்கு வந்தாள்.
ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் அனைவரையும் பத்திரமாக சிவாவின் வீட்டுக்கு கொண்டு வந்தான். உள்ளே சென்ற அனைவரும் சோபாவில் இருந்த சிவாவை பார்த்தனர்.
கீழே விழும் போது ஏற்பட்ட காயத்தில் ரத்தம் வர அதை கவனிக்காமல் இன்னும் இவர்கள் வந்ததை கூட கவனிக்காமல் எதோ யோசனையில் இருந்தால்.
சிவா பாப்பா என்ன ஆச்சு? என சந்தோஷின் அம்மா அவளிடம் செல்லும் போது தான் அவர்களை கவனித்தால்,
“எல்லாரும் இங்கவே இருங்க. யாரும் வெளிய போக வேண்டாம்” என
காமாட்சி, “சிவா நீ பண்ற வேலையில் எங்களால நிம்மதியா சாமிகூட கும்பிட முடியல. உனக்கு மட்டும் தான் வாய் இருக்குனு நீ சொல்றதை மட்டும் தான் நாங்க கேட்கணும் என்று நினைக்காத. முதலில் ஒரு பொண்ணா நடந்துக்கோ. எப்ப பாத்தாலும் நீ புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு இருக்காதா”
‘எப்ப எதுக்கு சம்மதமே இல்லாம பேசறீங்க. நான் என்ன சொன்னேன் வீட்டுலே இருக்க சொன்னேன் அவ்வளோதான்’, சிவா தன் கோபத்தை பொறுத்து கொண்டு பேச,
‘க்கா.. ஏன் எப்படி பண்றிங்க உங்களால சந்தோஷ் அப்பாவும் அம்மாவும் தன கஷ்ட போடுறாங்க. நீங்க உங்களை மாத்திக்க கூடாதா’, என ரித்து சொல்ல
“என்ன மாத்திக்க சொல்றிங்க. பேசாம இருந்தா நீங்க ரெண்டு பெரும் ரொம்ப தான் பேசறீங்க. என்ன தெரியும் இங்க நடக்குற பிரச்சினை பற்றி. உங்க கிட்ட சொல்லாம இருக்கேன்னா எதோ பெரிய விஷயம்னு கூட உங்களால புரிஞ்சிக்க முடியல,
என்னால உங்கள மாதிரி தப்பு நடந்த பார்த்துட்டு போக முடியாது”, என
சந்தோஷ், “என்ன ப்ரோப்லேம் மா” என பொறுமையாக கேட்க,
பெங்களூரில் நடத்தை கூறினால். பின், நா அந்த பொண்ணு சொன்ன இடத்துக்கு போனேன். அங்க ,
என்னடா இன்னிக்கு எப்படி போச்சு வியாபாரம், என ஒருவன் கேட்க
“அடா போங்க அண்ணா. எப்ப இருக்குற குழந்தை எல்லாம் ரொம்ப உஷாரா இருக்கு. வாரத்துக்கு ஐந்து தான் நாம கிட்ட கிடைக்குது”, என சோகமாக சொல்ல,
“விடு டா அதன் பாஸ் நாம நாடு முழுக்க இருக்குற பசங்கள தூக்க ஆள் இருக்கே”, என வில்லத்தனமான சிரிக்க,
இதை கேட்ட சிவாவின் மனதில் ‘இவங்க எதோ பெரிய தப்பு பண்றங்க. இங்க தனியா இருக்க கூடாது’ என வேகமாக அங்கு இருந்து கிளம்பினாள்.
அப்புறம், இதை விசாரித்தவளுக்கு கிடைத்த தகவல் அவளை அதிர வைத்தது.
அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்மல். அதுவும் பெரிய அளவில். கடத்தும் குழந்தை பெண்ணாக இருந்தால், முடித்து அவளது லைப். ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை நம் நாட்டில் கடத்தப்படுகிறது. பணத்துக்காக பெத்தவங்களே அவங்க குழந்தையை விட்குறாங்க. அந்த பசங்க என்ன தப்பு பண்ணாங்க. ரோட்டில் பிச்சை எடுக்குறாங்க இல்லனா பெண் குழந்தையை என்றால் பலவந்தமாக பாலியல் தொழிலுக்கு தள்ள படுகிறார்கள்.
இப்போ போதை பொருட்களை கடத்த அவர் பயன்படுகிறார்கள். நம்ப என்ன தப்பு பண்றோம் என்று தெரியமா மூன்று வேல சாப்பாட்டுக்காக தப்பு பண்றங்க, “சொல்லுங்க மா இவங்களை எல்லாம் என்ன பண்றதுனு” என தன் தாயிடம் கேட்டால் சிவா.
காமாட்சி, “கரெக்ட் தா சிவா ஆனா நீ என்ன பண்ண முடியும். அவங்கள சட்டம் பத்துக்கும். நீ அதுல தலையிடாத”
“சட்டமா? நம்ப இருக்கிற நாட்டில் தப்பு பண்ணவர்களை தப்பிக்க வைக்க தான் பல சட்டம் இருக்கு. என்னக்கு கிடைத்த தகவல் படி சென்னையில் இருக்குற ஆளு தான் ஹெட். அவனை பிடிச்சா மொத்த நெட்ஒர்க் கிளோஸ் பண்ணிடலாம். பட் அவன் வெளிய வர மாட்டான். வர வைக்கிறேன்” என கோவமாக பேச அவ வீட்டின் லேண்ட்லானை போன் ரிங்கானது.
அதை எடுத்த ரித்து ஸ்பீக்கர் ஆன் செய்து, “க்கா உனக்கு தான் கால்” என
‘ஹலோ ‘ என்றால் சிவா
“என்ன மேடம் மொத்த குடும்பத்தையும் காப்பாத்திட்டீங்க போல”, என நக்கலா கேட்க
“யார்டா நீ என் கிட்ட மாட்னா”,என கோபத்தில் பற்களை கடித்து கொண்டே வீட்டை ஒரு முறை பார்த்தால்
“ஓ … எல்லாரும் உன் கூட இருக்குறாங்க என்ற திமிர நல்லா பாருங்க எல்லாரும் இருக்கைகளை என்று”
சந்தோஷின் அம்மா, ‘ஐயோ பிரகாஷ் எங்க இருக்கான்?’ என சிவாவிற்கு உலகம் ஒரு நிமிடம் நின்று விட்டது. பின் அவனிடம்,
“இங்க பாரு பிரச்னை எனக்கும் உனக்கும் தானே அவனை விட்டுடு” என்ற அவளது குரலில் இருந்தது கோபமா பயமா இல்ல என்ன என்று தெரியவில்லை.
“மேடம்.. பிரச்சனை எல்லாம் விடுங்க. யாருக்கும் தெரியாதா என்னை கரெக்டா கண்டுபிடிச்ச அவனை சும்மா விட முடியுமா.. ஒரு சாதாரண பிசினஸ் பண்றவன் என்னை அழிக்க பார்க்கிறான்”
“நீ தேவையில்லாம தப்புக்கு மேல தப்பு பண்ற. அவனை பத்தி தெரியாம இருக்க. அவன் கிட்ட அடிபட்டு சாகாத” என்ற சிவாவின் குரலில் இருந்த நம்பிக்கையை கண்டு வீட்டிலிருந்த அனைவரும் ஆச்சிரியமாக பார்த்தனர்.
“என்ன மேடம் பிலிம் காட்டுறிங்க. ரெண்டு பெரு கத்தி காட்டுனதும் பயந்துட்டாரு உங்க ஆளு. பிரகாஷ் தானே அவன் பேர். நான் விசாரிச்சா வரை இரண்டு விஷயம் எனக்கு சாதகமா இருந்தது. ஒன்னு உன்னோட மிக பெரிய மைனஸ் அவன் தான். அப்புறம் அவன் ஒரு சாதாரண பிசினஸ்மென்”, அகோரமாக சிரிக்க,
அவனை விட சத்தமா சிரித்தாள் சிவா பின், “ஹலோ மிஸ்டர் நீங்க அவனை பிரகாஷா நினைச்சு தப்பு பண்ணிட்டீங்க. ஒத்துகிறேன் அவன் என்னோட மிக பெரிய பெரிய மைனஸ் தான்” என சந்தோஷும் ரித்துவும் புரியாமல் பார்க்க, சிவா மேலும் “ஆனா அதை விட அவன் எனக்கு பெரிய பலம். இந்த சிவாவோட சக்தியா அவனை உனக்கு தெரியாது. தெரிஞ்ச இப்படி பேச மாட்ட”
“என்னடி உன் புருஷன் என் கிட்ட இருக்கான் அந்த பயம் கூட இல்லாம நக்கலா பேசிட்டு இருக்க. அவனை கண்ட துண்டமா வெட்டி உனக்கு அனுப்புனதான் உன் கொழுப்பு அடங்கும்”
“ஹலோ எக்ஸ் மினிஸ்டர் அவன் என்னோட புருஷன் என்று கண்டு பிடிச்ச உனக்கு அவனை பத்தி கண்டு பிடிக்காதது தான் விதி என்று சொல்லுவாங்க போல. உயிரோட இருந்தா மீட் பண்ணலாம்” சிவா தன்னை கண்டுகொண்டாள் என்ற கோபத்தோடு போனினை தூக்கி போட்டார் அந்த எக்ஸ் மினிஸ்டர்.
சிவா போனினை வைத்த பின் தான் கண்டால் அனைவரும் அவளை கேள்வியுடன் நோக்கியுள்ளார் என்று.
காமாட்சி, “சிவா, பிரகாஷ் தம்பி உன்னோட புருஷனா? உண்மையா மட்டும் சொல்லு” என
அவளும் ஆம் என்று தலையை ஆட்டினாள். எப்படி என்ற கேள்வியுடன் அனைவரும் அவளை பார்த்தனர்.
தொடரும்
நிலா ♥