வீட்டிற்குக் கையில் காயத்துடன் வந்த மகளைக் கண்ட மஞ்சரி பதற , அவள் நடந்ததைச் சொன்னாள்.ஆனால் மகளின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக மஞ்சரி அவளை எதுவும் சொல்லாது ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டார்.
வாசு நேராகக் கோர்ட்டிலிருந்து சுந்தரலிங்கத்தின் வீட்டுக்குச் சென்றான்.அவன் எப்போதாவது ராஜேஸ்வரனோடு அங்குச் செல்வான்.அதனால் அவர்கள் இவனுக்குப் பழக்கம்.அவனைச் சுந்தரமும் பார்வதியும் வரவேற்க , சிறிது நேரம் அவர்களோடு பேசியவன் ,
“அங்கிள் சத்யா இருக்காரா….?”
“ம்…இருக்கானே பா……மேல தான் இருக்கான்…”
“நான் கொஞ்சம் பேசணும்….”
“போய்ப் பேசு வாசு….அவன் ரூம் ரைட்ல இருக்கு…” என்று வழி சொல்ல அவனும் சத்யாவை சந்திக்கச் சென்றான்.
அங்கே அவனது அறையில் சத்யா லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.
இவன் வாயிலில் நின்றபடியே , “உள்ளே வரலாமா ?” எனக் கேட்க
“ஹே…!! வாசு…வா வா…” என உற்சாகமாய் வரவேற்றான் சத்யசாகரன்.
“எப்படியிருக்க வாசு…?”
ஆனால் வாசுவோ சத்யாவின் வரவேற்பை ஏற்காது , கோபமாக
“ஏன் அண்ணா இப்படிப் பண்ணுனீங்க?” எனக் கேட்க
“என்னடா வந்ததும் வராததுமா இப்படிக் கோவமா என்ன செஞ்சன்னு கேட்குற….?
“அகல்யாவ ஏன் அப்படிப் பேசுனீங்க….நீங்க இப்படிச் செய்வீங்கன்னு நான் நினைக்கலண்ணா…”
அவன் எதைச் சொல்கிறான் என உணர்ந்தவன் ,“ஏன் அப்படிச் செஞ்சேன்னு யோசிச்சியாடா?” என
“தப்புதான் நான் இல்லன்னு சொல்ல மாட்டேன்….ஆனா அதைக் கேட்டு அகல்யாவோ நீயோ கஷ்டப்பட்டத விட நான் பட்டது தான் அதிகம்…..நான் சொன்ன வார்த்தை அவளை எவ்வளவு காயப்படுத்தும்னு தெரியும்டா…..எனக்கு மட்டும் அவ மேல ஆசை இல்லயா என்ன….?”
“அண்ணா……………..”
“எஸ்……அவனா எனக்கு உயிருடா…அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்….” என
“அப்போ அவ கிட்ட லவ்வ சொல்றதுக்கு என்ன…?”
“அது எல்லாம் முடியாதுடா…….என் நிலைமை அப்படி…”
“என்ன அப்படிப் பொல்லாத நிலைமை..நானா இருந்திருந்தா தைரியமா போய்ச் சொல்லியிருப்பேன்..அவ என் உயிர்…தயிர்னு டயலாக் பேசிட்டு இப்படித் தயிர்சாதமா இருக்க மாட்டேன்…..சரியோ தப்போ போய்ச் சொல்லியிருப்பேன்……காதலிச்சா மட்டும் போதாது….இப்படியா கோழையாவ இருப்பாங்க…” என வாசு பொங்க
“ஆமாடா நான் கோழைதான்…..” என்று கத்தினான் சத்யசாகரன்.
“ நீ நீயாயிருந்தா உடனே காதல சொல்லியிருப்ப….ஆனா இதே நீ நானா இருந்தா நெவர்….” என்றான் கோபமாய்.
“என்ன உளறுறீங்க அண்ணா….”
“உளறல…..நீ வாசுவா இருந்தா ஈசியா சொல்லலாம்..ஆனா சத்யாவா இருந்தா சொல்ல முடியாதுடா…எனக்கு என்ன தகுதி இருக்கு…..அகல்யாவ கல்யாணம் செஞ்சிக்க..நான் என்ன புது மாப்பிள்ளையா…..அவங்க அம்மா கிட்ட நான் இன்னிக்குப் போய்ப் பேசணும்னு தான் நினைச்சேன்…ஆனாலும் முடியல……..அவ வேணும்னு மனசு அடிச்சிக்குது………ஆனாலும் என் சூழ்நிலை என்னைத் தடுக்குதுடா……வாழவும் முடியாம சாகவும் முடியாம……சை…….எரிச்சலா வருதுடா……….” என்றவன் கோபத்தில் இயலாமையில் அங்கிருந்த பென் ஸ்டாண்டை தூக்கி அடித்தான்.
வாசுவுக்குச் சத்யாவின் மனப்போராட்டம் புரிந்தது.
“என்னண்ணா இப்படிப் பண்றீங்க…உங்களுக்கு என்ன குறை அண்ணா…?”
“இல்ல வாசு..இதே நானும் உன்னை மாறி எலிஜிபில் பேச்சிலரா இருந்தா……அகல்யா கிட்ட போய்த் தைரியாமா லவ்வ சொல்லியிருப்பேன்..அவங்க அம்மாக்கிட்ட போய்ப் பேசியிருப்பேன்…பட்..இப்போ….உனக்குப் புரியாது வாசு…….இப்போவே ரெண்டாவது கல்யாணம் பண்ண அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு தெரியுமா…..அந்த வினிதா செஞ்ச காரியத்துக்கு நான் அனுபவிக்கிறேன்…….அவ எப்படிச் செத்தா..உங்க பையன் கொடுமைப் பண்ணான்னு தினம் தினம் எங்களை நோக்கி வீசப்படுற கேள்விகள் இருக்கே…..ஜெயில்ல கூட நான் இப்படி நரக வேதனையை அனுபவிக்கலடா……ரெண்டு வருசம் அமெரிக்காவுல இருந்தேன்….சந்தோசம் இல்ல தான் பட் நிம்மதியா இருந்தேன்…..ஆனா இங்க……..ப்ச்…” என்றவன் தொப்பெனக் கட்டிலில் அமர்ந்தான்.
“அய்யோ அண்ணா….நாட்டில நாலு பேர் நாலு விதமா பேசவே பிறவி எடுத்திருப்பாங்க…இதுக்கெல்லாம் கவலைப்படலாமா….உங்க கிட்ட எனக்கும் அகலுக்கும் பிடிச்சதே..நீங்க உங்க பிரச்சனையை அழகா சமாளிச்சு வெளியே வந்ததுதான்…….உங்க தைரியம்…..உங்க போல்ட்னெஸ் எல்லாமே தான் உங்க ப்ள்ஸ்…உங்களோட மாறுப்பட்ட கோணத்துல யோசிக்கிற அந்தத் திங்கிங் ……எல்லாமே அகலுக்குப் பிடிக்கும்….நானே உங்களுக்கு ஃபேன் தெரியுமா….?”
“இப்போ நான் கேட்கிற கொஸ்டின்ஸ்க்கு நீங்க மறைக்காம உண்மையை மட்டுமே பேசணும்..ஓகேவா…?”
“ப்ச்…இது வேறயா…” எனபது போல் சலிப்பான பார்வையை விசியவன் ,
“கேளு..” என
“உங்களுக்கு இப்போ அகல்யாவை பிடிச்சிருக்கா…”
“டேய்…..கொலைவெறில..இருக்கேன்…அவளைத் தான் பிடிச்சிருக்குன்னு தானே முதல்லே இருந்து சொல்றேன்.”
“தெரியல….ஆனா வேறா யாராவது இருந்தா மன்னிக்க மாட்டா….அகல்யா எப்போவும் ஒரு விசயத்தை எடுத்தா தீர்மானமா ஸ்டப்பர்னா இருப்பா….காதல் என்ன பேப்பரா டக்குனு தூக்கிப்போட…அவ கிட்ட காதல் அணுக்கள் இல்லாமயா போகிடும்…முயற்சி செய்யுங்க…..முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்க முடியும்…..”
“ஹா ஹா தேங்க் யூ மேன்…”
அடுத்த நாள் சத்யா தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு அகல்யாவை சந்திக்கப் பூங்கொத்தோடு சென்றான்.அவன் வாசுவிடம் பேசிய உடனே தாயிடமும் தந்தையிடமும் தன் முடிவை சொன்னான்.சுந்தரலிங்கத்துக்கு உள்ளே மகிழ்ச்சியாய் இருந்தாலும் அவர் மகன் அகல்யாவைத் திட்டி விட்டான் என்று கேட்டதும் அவனைத் தாளித்து விட்டார்.பார்வதிக்கோ மகன் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணமே…!
அவள் மாலையில் விடு திரும்பும் நேரத்தை வாசு மூலமாய் அறிந்தவன் ஒரு சாலையில் அவளுக்காகக் காத்திருந்தான்.அவனுக்கு மீண்டும் கோர்ட்டுக்கெல்லாம் செல்ல விருப்பமில்லை.
அவள் வரும் வழியில் ரோட்டில் காரின் மீது சாய்ந்து நின்றவன் , அவள் வந்த பின் அவள் முன் போய் நிற்க , சடாரெனப் பிரேக் போட்டவள் சத்யசாகரனை முறைக்க ,
“ஹாய் அகல்….” என்றான் புன்னகையோடு.
“என்ன வேணும் மிஸ்டர்…” என்றாள் இவள் விரைப்பாய்.
“நிறையா வேணும் தான்..பட் இப்போதைக்கு உன் கிட்ட மன்னிப்பு வேணும்..”
“சாரி அகல்மா..அன்னிக்குக் கோபத்தில பேசிட்டேன்..உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன்……மனசார மன்னிப்புக் கேட்கிறேன்…நான் செஞ்சது தப்பு…என்னை மன்னிச்சிடு…அன்ட்…..சொல்ல பயமா தான் இருக்கு..இருந்தாலும் சொல்லியே ஆகனும்……அடிச்சா கூடப் பரவாயில்ல….பேபி……ஐ லவ் யூ லயா.” என்றவன் புன்னகையோடு பூங்கொத்தை நீட்ட ,
அவளது வண்டியில் ஒரு காலையும் தரையில் ஒரு காலையும் ஊன்றியவள் , ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்து யோசிப்பது போல் பாவனைச் செய்தவள் , அவனிடம் ஒரு திமிரான பார்வையை வீசியபடியே ,
“சூப்பர் பெர்பாமன்ஸ்..பட்…..இந்த சீன் இப்ப நான் எதிர்ப்பார்க்கல….” என்று முறைப்பாய் சொல்ல
அவனோ , “தெரியும் நீ கோவப்படுவேன்னு..இருந்தாலும் சாரி பேபி……………..உண்மையைச் சொல்லனும்னா உன்னை அன்னிக்கு ஏர்ப்போர்ட்ல பார்த்தேன்னே டூ இயர்ஸ் கழிச்சு அப்போவே என் மனசுல ஒரு இதம் பரவுச்சு…நீ வெயிட் பண்ணதும் நான் ஸ்ட்ன் ஆகிட்டேன்..ஆனா கூட இந்தச் சமூகம் எப்படிப் பேசும்….நான் மதிக்கிற உனக்கு இரண்டாந்தாரம்னு பேர் வரத நான் விரும்பல….அதான்…நான் அப்படிப் பேசிட்டேன்……..வெரி சாரி.” என உணர்ந்து மன்னிப்புக் கேட்க
“அப்போ…இப்போ சொன்னீங்களே…அதுக்கு என்ன அர்த்தம்…..இப்போ மட்டும் நான் ரெண்டாந்தாரம் இல்லயா…?”
“அகல்மா…புரியுதும்மா…ஆனா அப்போ எனக்கே என் மனசு தெளிவில்லாம இருந்ததுடா………உன்னை அப்படிப் பேசி அனுப்பினதும் நான் தவிச்ச தவிப்பு இருக்கே….நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு அப்போதான் புரிஞ்சது…..அதான்மா…ஊர் உலகம் பத்தி நீயும் கவலைப்பட மாட்ட…நானும் கவலைப்பட மாட்டேன்….அப்புறம்…என்னம்மா….?”
“ஓ…உங்க மனசு ஒரு நாள் குழம்பிப் போயிருக்கும்..ஒரு நாள் தெளிவாகும்,… எனக்கு மட்டும் மனசு இல்ல,….திட்டினா வாங்கிக்கனும்…கொஞ்சினா ஏத்துக்கணுமில்ல….” எனக் கோபமாகக் கேட்டவள் ,
“இங்க பாருங்க……நீங்க அன்னிக்கு சொன்ன வார்த்தைகளைத் திரும்ப உங்க வாழ்க்கையில சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் சத்யா…நீங்க வித்தியாசமானவர்னு நினைச்சேன்,,…பட் நீங்களும் சராசரியான ஆணா தான் நடந்து கிட்டீங்க…..என்னோட கேரக்டரை நீங்க கலங்கப்படுத்திட்டீங்க……..”
“வேண்டாம் சத்யா……இப்போ தான் நான் தெளிவா இருக்கேன்…என் பொறுமையைச் சோதிக்காதீங்க….நான் இனிமே உங்க வழிக்கு வரமாட்டேன்..நீங்களும் இப்படி வந்து நீக்காதீங்க…” எனக் கறாராகப் பேச
“சரி….என் லவ்வை ஏத்துக்க வேண்டாம்மா…அட்லீஸ்ட் அக்சப்ட் மை சாரி ஃபார் யூ……..” எனப் பூங்கொத்தை நீட்ட
அவனை நேர்ப்பார்வைப் பார்த்தவள் ,”காதலை எப்படி மனசு ஏத்துகலையோ அப்படித்தான் உங்க மன்னிப்பையும் நான் ஏத்துக்கல…சோ நீங்க போகலாம்..அப்புறம் இந்த மாதிரி பொக்கே கொடுக்கறது , ரோட்ல போகும் போது என்னை இம்ப்ரெஸ் செய்ய யாருக்காவது உதவி செய்றது, பெட் அனிமலைப் பார்த்துக்கறது…..சாக்லெட் வாங்கித் தரது……இந்த மாதிரி ஐடியாஎல்லாம் செய்யாதீங்க…பார்க்கவே எரிச்சலா இருக்கு…..எவன் சொன்னா இதெல்லாம் செஞ்சா பொண்ணுங்க இம்பரெஸ் ஆவாங்கன்னு…..அப்படி பார்த்தா பொண்ணுங்க சோசியல் சர்வீஸ் பண்றவனத்தான் கட்டிக்கனும் ஹீரோ ஹீரோயின்….. வீட்டு நாய்க்குட்டி , எதிர்த்த வீட்டு குழந்தை , அவ பாட்டி தாத்தா , ப்ரெண்ட்னு எல்லாரையும் கரெக்டு செய்யுற மாதிரி காண்பிச்சு..இந்த இடியாட்டிக் சினிமா ஒரு டிரண்டைக் கிரீயேட் பண்ணிட்டாங்க……ரெடிகுலஸ்…… நானெல்லாம் இதுக்கெல்லாம் மயங்க மாட்டேன்…” என எரிச்சலாக மொழிய
“இல்ல பேபி…ஒன்னு ஒருத்தரை இம்ப்ரெஸ் செய்யப் பிடிச்ச விசயத்தையெல்லாம் செய்யனும்….இல்ல பிடிக்காத விசயத்தைச் செய்யாம இருக்கனும்…இப்போ நீயோ உனக்கு எதெல்லாம் பிடிக்காதுன்னு ஒரு லிஸ்ட் தந்துட்ட…சோ ஈஸில்ல எனக்கு….உனக்குப் பிடிச்ச விசயத்தைச் செய்ய…….” எனக் கண் சிமிட்ட
உள்ளே அவனுக்காக அவளுள் உறங்கும் நேசமும் கொஞ்சமாய் விழித்துக் கொண்டது.ஆனால் கோபம் எனும் போர்வையைத் தாண்டி அதனால் வெளி வர முடியவில்லை.
அவன் சொன்னதைக் கேட்டவள் , “இனிமே இப்படி எதாவது செஞ்சுக்கிட்டு வந்து நீன்னீங்க…..ஈவ் டீசிங்ல…பிடிச்சுக் கொடுத்துடுவேன்….” என்ற மிரட்டலோடு அவள் வண்டியில் பறந்தாள்.
“கஷ்டமா இருக்கும்போலேயே என அவன் மனம் நினைக்க
“கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்…..……பரவாயில்ல வாசுதேவா…நல்லா இருடா……நல்ல காலம்….அவளுக்குக் காதல் அணுக்கள் இருக்கத்தான் செய்யுது..இல்லனா கண்டிப்பா நின்னு பேசியிருக்க மாட்டா…” என நம்பிக்கையாய் சொல்லிக் கொண்டான்.
ஒரு மாதம் ஓடியிருக்க , அன்று சத்யா மிகவும் உற்சாகமாய் விசிலடித்தபடியே கிளம்பினான்.கார் பார்க்கிங்கில் நின்று கொண்டு அவன் ஹம் செய்வதைக் கேட்ட ஜான்சன் ,
“என்னடா பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூவா…பாட்டெல்லாம் பலமயிருக்கே எஸ்.எஸ்…….நான் உன் ஆளு நெருப்பூன்ல கேள்விப்பட்டேன்……..” எனச் சத்யசாகரனை சீண்ட
“ஆமா நெருப்புதான் டா …ஆனா அன்புங்கற தண்ணி ஊத்தி நான் அணைச்சிடுவேன்….இவன் வேற..நானே கொஞ்சம் நம்பிக்கையாய்ப் போனா கூட நீ போதும்டா…”
“ஏய்..என்ன மச்சான்….சும்மாடா..ஆல் தி பெஸ்ட்….ஆனா ஒன்னு…சிஸ்டர் என்ன அடிச்சாலும் நாளைக்கு ஆபிஸுக்கு லீவ் மட்டும் போட்டுறாத..ப்ராஜ்க்ட் முடிக்கனும்டா…”
“சரி சரி….ரம்பம் போடாத..எனக்கு டைம் ஆகுது..அவ வந்துடுவா…”
என்றவன் அகல்யாவைக் காண வேண்டி காதல் பாடல்களைக் காரில் ஓலிக்க விட்டபடி சென்றான்.