அகல்யா ரோட்டை க்ராஸ் செய்து ஆட்டோ பிடிக்கப் போக , அவள் கைப்பிடித்த சத்யா அவளைப் பரபரவென்று இழுத்து அவனின் காரினுள் தள்ளினான்.
இதைக் கண்ட ரிஷி வேகமாய்ச் சத்யாவின் காரருகே செல்ல , கதவை லாக் செய்த சத்யா ஜன்னல் வழியே ரிஷியிடம் திரும்பி , “ரிஷி ப்ளீஸ்….ஒரு டென் மினிட்ஸ்….இருடா……நான் இவ கிட்ட பேசணும்…அவள நான் ஒன்னும் செய்ய மாட்டேன்…” என்றவன் வேகமாகக் காரை எடுத்துக் கொண்டு அருகே இருந்த மெரினா கடற்கரைக்கு அகல்யாவின் கோபம் , கத்தல் ஆகியவற்றைச் சட்டை செய்யாமல் சென்றான்.
ஒரு வழக்கு விசயமாக டெபுடி கமிஷனர் அலுவலகம் வந்த அகல்யாவை ரிஷி பார்க்க , இருவரும் அருகே இருந்த உணவகத்தில் அமர்ந்து பேசும்போதுதான் சத்யா வந்தான்.சத்யசாகரனும் ரிஷிகார்த்திக்கேயனும் கல்லூரி கால நண்பர்கள்.நெருங்கிய நட்பு இல்லாவிட்டாலும் கூட , நல்ல நண்பர்கள்.படிப்பு முடிந்த பின் ரிஷி காவல் துறையிலும் சத்யா கணினித்துறையிலும் சேர அடிக்கடி நண்பர்கள் சந்திக்க முடியாமல் போனது.சத்யாவின் திருமணத்தின் போதுதான் அவர்கள் கடைசியாகச் சந்தித்துக் கொண்ட்து.அதன்பின் ரிஷி மாற்றலாக வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல தொடர்பு அற்றுப்போயிற்று.
இன்றைய சத்யாவின் நடவடிக்கைகள் ரிஷிக்கு ஒப்பவில்லை என்றாலும் கூட அவன் மீது கொண்ட நம்பிக்கையால் தான் அகல்யாவை அவனோடு அனுப்பி வைத்தான்.இல்லாவிடில் அவனது ஜீவாவின் உயிர்த்தோழியை அனுப்புவானா என்ன….?
கடற்கரையில் சத்யசாகரனின் கார் கீரிச்சிட்டு நிற்க ,
சத்யா அகல்யாவைப் பார்த்து , “இப்போ இதுக்குக் காரணம் நீதான் அகல்யா…..நான் உன்கிட்ட அமைதியா பேசதான் வந்தேன்…நீதான் என்னை இந்தளவு கோவப்படுத்தி உன் பர்மிஷன் இல்லாம உன்னைக் கிட்னாப் செய்ற ரேஞ்சிக்கு என்னைச் செய்ய வைச்சிட்ட….” எனச் சொல்ல
அகல்யாவின் முகம் அனலில் இட்டாற் போல் சிவந்து , “உங்கள தான் நான் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு சொன்னேன்ல……..அப்புறம் ஏன் டார்ச்சர் பண்றீங்க…”
“நான் செஞ்சதுக்கு விளக்கம் சொல்ல எனக்கு வாய்ப்பு தர மாட்டியா……?”
“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்…..உன்னை நான் பார்த்ததுதான் என் லைஃப்ல நான் செஞ்ச தப்பு……..உன்கிட்ட பேசினது ரெண்டாவது தப்பு….உன்னை ரொம்ப நல்லவன்னு
நினைச்சது மூணாவது தப்பு…உன்னை காதலிச்சது தான் பெரிய தப்பு….என் மனசில கல்யாணம்னு ஒரு எண்ணமே உன்னைப் பார்த்த பின்னாடி தான் வந்தது…..இல்லன்னா…நான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வாழ்ந்திருப்பேன்…ஒரு ஆம்பளையைச் சார்ந்து நான் வாழனும்னு நான் நினைச்சதே இல்ல…..ஆனா நீ எல்லாத்தையும் மாத்தினே….உன்னை உயிரா நேசிச்சேன்னு நான் சொல்ல மாட்டேன்……ஆனா உன்னை அவ்வளவு பிடிச்சது” என்று மனதில் உள்ளதை கொட்டியவள் கண்கலங்க ,
“பட்….நீ என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் ரொம்ப ஜாஸ்தி…………..என்னால தாங்க முடியல……அப்படியே எனக்குக் கூசிப்போயிடுச்சு…..அப்படி நான் யார் பின்னாடி டா அலைஞ்சேன்….உனக்கான என்னோட தேடல….காதல….நீ கொச்சைப்படுத்திட்டேல்ல……………….அப்பவே எல்லாம் முடிஞ்சிடுச்சு………இனி……காதல்…………………………..கல்யாணம்……………………………எதுவும் இல்ல…இனி நீ என் வாழ்க்கையில இல்லை…………..நீ இல்லவே இல்ல………எதுவுமே இல்ல……………….என்னை விட்டுரு…..ஒவ்வொரு தடவையும் நீ சமாதானம் செய்றேன்னு என்னைப் பார்க்கும் போது நீ சொன்ன வார்த்தை தான் ஞாபகம் வந்து என்னைக் கீழா நினைக்க வைக்குது……..என் மேலயே எனக்கு மரியாதை இல்லாம பண்ணிட்ட நீ………………………………இனிமே இப்படி என்னைத் தொந்தரவு செஞ்ச………………அடிச்சிருவேன் உன்னை…………..” என்றவள் உணர்ச்சிவசப்பட்டு அழப்போக , அவள் கையை ஆதரவாக அவன் பற்ற வர ,
“இங்க பாரு……….என்னை உன் முன்னாடி அழ வைச்சுடாத…………சத்யா….” என அவள் பாவமாய்ச் சொல்ல
சத்யாவுக்கு முகமே வாடி விட்டது.ஏற்கனவே வினிதாவைப் பற்றி ரிஷி விசாரித்து அவன் பழைய ரணங்களைக் கீறி விட,இவளும் இப்படிப் பேச ,
அவனோ அவளை வேகமாய் இழுத்து அணைத்துக் கொண்டு , “நீ அழாதடி….நான் அழறேன்…….” என்றவன் அழ , அவனின் ஆண்மைக்குக் கண்டு வியந்தவள் , பண்பு கண்டு விழுந்தவள் , கண்ணியம் கண்டு நேசித்தவள் , அவன் கண்ணீரில் கரைந்தாள்.அவளையும் மீறி அவள் விழிகள் கண்ணீரை பொழிந்தன.
இருவருமே அழ, சத்யா “……என் முன்னாடி அழக்கூடாத அளவுக்கு உனக்கு ஆச்சுல்ல……….ஆனா எனக்கு ஒன்னுமில்ல……….நான் அழனும்டி…..நல்லா அழனும்…………வெளியே கத்துற அந்தக் கடல் மாறி கடைசியா ஒரு தடவை நான் நல்லா கதறி அழுதுக்குறேன்………ஆம்பிளன்னா அழக்கூடாதா………….நானும் மனுசன் தானே………சின்ன வயசில….தடுக்கி விழுந்தா……..அழுவேன்………ஆனா இப்போ………என் வாழ்க்கையிலே நான் தடுக்கிட்டேன்…..ஆனாலும் அம்மாக்காக , என் அழுகையை அடக்கிட்டேன்……..ப்ச்….எவன்டி சொன்னது ஆம்பிள கலங்க கூடாதுன்னு….ப்ளடி………நான் அழுவேன்…….”.. என்றவனின் இதழ்கள் பேசினாலும் விழிகளிலிருந்து அணையிடாமல் நீர் வந்து கொண்டே தான் இருந்தது.இருவருமே உணர்ச்சிவசப்பட்டு இருந்தனர்.அதனால் அகல்யா எதுவும் பேசாமல் அமைதியாய் அவனின் தோளிலே முகம் புதைத்து அழுதாள்.
“ஏற்கனவே ஒருத்தி மொத்தமா…..என் வாழ்க்கையை அழிச்சிட்டுப் போய்ட்டா…. ஆனாலும் அப்பா அம்மாக்காகத் தான் இன்னொரு கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன்…………..அதுவும் என்னை மாதிரியே ரெண்டாந்தாரமா உள்ளவங்களதான்…………ஆனா நீ என் பின்னாடி வந்தப்போ……………எனக்கு உன்னை அப்படிப் பார்க்கத் தோணல……நீ என் ஏஞ்சல் டி……உன்னைப் போய்…………….எனக்குச் சை……….உன்னை நான் மரியாதையாய்ப் பார்த்தேன்……..பார்க்க நினைச்சேன்….அதனால தான் உன் மனசு கஷ்டப்படும்படி நான் முகத்தில அடிச்ச மாறி நடந்துக்கிட்டேன்……………..”
“ஆனாலும்……………………… உன்னை மாறி ஒருத்தி வேணும்னு மனசு……………………….ஏங்கிச்சு………..உன்னை தான் நான் எங்கம்மா பாத்த பொண்ணுக்கிட்ட தேடினேன்…………உன்னை மாறி வாய்ஸ்….உன்னை மாறி குணம்….………….உன்னை மாறி தைரியம்…….இப்படி உன்னை மாறி உன்னை மாறின்னு நினைச்சது போய் உன்னையே நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன்………….அன்னிக்குக் கடைசியா உன்னை நான் திட்டினப்போ……எனக்குப் பார்த்த பொண்ணு வந்துடுவான்னு டென்ஷன்……..எங்க உன்கிட்ட பேசினா நான் என்னோட கட்டுப்பாட்டை இழந்துட்டு உன்னை லவ் பண்றேன்னு சொல்லிடுவேனேனோ பயந்துட்டேன்…….உனக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு நினைச்ச….கௌரவமா நீ வாழனும்னு நான் ஆசைப்பட்டேன்…..”
“இருந்தும் கூட உன்னைத் திட்டிட்டு மனசு கேட்காம அப்படியே உட்கார்ந்து இருந்தேன்……………அந்த கடல்ல ஓயாம அடிக்கிற அலை மாறி மனசு பூராவும் நீதான் அகல்யா………….அந்த பொண்ணு கிட்ட கூட………….உன்னைப் பத்தியே தான் பேசினேன்…………..என்னடா இவன் பெரிய காதல் மன்னனாட்டம் பேசுறேன்னு நினைக்காதம்மா……”
“ஒரு வேளை வினிதா என்னைப் புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்திருந்தா நான் அவளைக் கண்டிப்பா விரும்பியிருப்பேன்……….ஆனா அவளுக்கு நான் ஜஸ்ட் பெயருக்குத் தான் புருஷன்……….இதோ…….என் அம்மாக்கு அப்புறம்………நான் தோள் சாய்ஞ்சு அழற முதல் பொண்ணு நீதான்…………….எனக்கு அழனும் அகல்யா……………அந்த அகலிகை மாறி நீ பவித்ரமானவடா. சாரிம்மா….ஐ…………………அம்………ரியலி சாரிம்மா… நீ தப்பெல்லம் செய்யல…எல்லாமே என்னோடது தவறுகள் தான்….பட்…….ஐ லவ்…யூ சோ மச் பேபி” எனக் கதறியழுதான்.
காதல் மழை பொழிய வேண்டியவர்கள் இருவரும் கண்ணீர்மழை பொழிய சிறிது நேரம் கழித்துச் சத்யா அகல்யாவை விட்டு விலகினான் ஒரு சாரியோடு……
அழுத பின் இருவரின் மனதும் லேசானது.மழை பெய்த பின் தெளிந்து காணப்படும் வானம் போல் இருவரும் தங்கள் வேதனையை அழுதுத் தீர்த்த பின் மனதால் கொஞ்சம் தெளிந்தனர்.
“நான் போகனும்………………சத்யா…………….இப்போ எதுவும் பேச நான் தயாரில்ல…..ப்ளீஸ்……….” என அகல்யா சொல்ல
“போகலாம்….நானே உன்னைக் கொண்டு போய் வீட்ல விடுறேன்………நீ இப்போ ரொம்ப டென்ஷனா இருக்கம்மா……தனியா போகவேண்டாம்மா”
“ப்ச்………… நானே போய்க்குவேன்………நீங்க தான் அழுது..முகமெல்லாம் சிவந்து…….டென்ஷனா இருக்கீங்க………நீங்க ஒரு பத்து நிமிசம் கழிச்சு ரிலாக்ஸ் பண்ணிட்டு போங்க…..” என அக்கறையாகச் சொல்ல
“அங்க மட்டும் என்னவாம்…….இதை மட்டும் அந்தப் போலிஸ்காரன் பார்த்தான் என்னை உள்ள தள்ளி லாடம் கட்டிடுவான்……” என ரிஷியை நினைத்து கூற,
அவன் கூறிய பாவனையில் அவளுக்குச் சிரிப்பு வர “இவ்வளவு பயம் இருக்கறவர் எதுக்கு இப்படிக் கடத்திட்டு வரனும்….?” எனப் புருவம் தூக்கிக் கேள்வி கேட்க ,
“உன் முடிவை கேட்கத்தான்……..”
“இப்போ சொல்ல முடியாது………..எனக்கு டைம் வேணும்….”
“ஓகே டைம் எடுத்துக்கோ…ஆனா ஒன்லி டூ சாய்ஸ்.. ஒன்னு ..என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ…இல்லை வேற யாராவது நல்லவன்னா பார்த்துப் பண்ணிக்கோ….ஆனா தனியா மட்டும் உன்னை நான்விட மாட்டேன்….அப்படி லூசு மாதிரி தனியா வாழுவேன்னு விதாண்டாவாதம் செஞ்ச நான் உன்னைக் கடத்திட்டுப் போய்த் தாலி கட்டுவேன்…” எனக் கறாராகப் பேச
“தோடா……கடத்திட்டா……உங்கள ரிஷி சும்மா விடுவாரா….இல்ல நான் தான் விடுவேனா….கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன் மிஸ்டர்.சத்யசாகரன்….” என அருகில் வந்து விரல் நீட்டி மிரட்ட
“இப்படிப் பக்கத்துல வந்து பேசும்போது கடத்துனா தப்பில்லன்னு தோணுது…பரவாயில்ல உள்ளே தள்ளிக்கோ…….என் பொண்டாட்டியும் பெரிய வக்கீல் தான் என்னை வெளியே எடுத்திடுவா….” எனக் கண்சிமிட்ட
“உங்களுக்கு வாய் ஜாஸ்தியாகிடுச்சு…….சத்யா”
“பின்ன…வக்கீலம்மா உன் வாய்க்கு ஈகுவளா இருக்க வேண்டாமா…..?”
“எடுத்துக்கோம்மா…..ஐ அம் வெயிடிங்…..நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்…..ஐ ப்ராமிஸ்……………பட்…இப்போ…என் கூட வா………நான் உன்னை ட்ராப் செய்றேன்…..” என்றவன் மறக்காது ரிஷியின் எண்ணை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்.
அவளை அவள் வீட்டினருகே இறக்கி விட்டவன் ரிஷிக்குப் போன் செய்து நேரில் சந்தித்து அவனது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உரைத்தான்.நண்பனின் கடந்த காலம் கேட்ட ரிஷிகார்த்திக்கேயன் தன்னால் அச்சமயம் உதவாமல் போனதற்காக வருந்தினான்.எப்படி அகல்யாவைத் தனக்குத் தெரியும் என்று ரிஷி உரைக்க ,அதன்பின் இருவரும் தங்களது நினைவுகளை அசைப்போட்டனர்.சத்யா ரிஷியை திருமணத்துக்கு வற்புறுத்த அவன் சன்னமாய் மறுத்தான்.
“பட்….நீயும் அகலும் சேரதுல ஐ அம் வெரி ஹாப்பிடா….ஜீவா எப்போவும் அகல்யாவைப் பத்தி கவலைப்படுவா…அவளுக்கு ஆம்பிளைங்கள பிடிக்கல…கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றா…………அவ இப்படி இருக்கும்போது… நான் உங்கள லவ் பண்றது குற்றவுணர்வா இருக்குன்னு சொல்லுவா……அவளுக்கு நல்ல லைஃப் அமைஞ்சு அவளை மாத்துற மாறி ஒருத்தர் வரனும்ங்கன்னு சொல்லிட்டே இருப்பா….இப்போ என் ஜீவா ஆத்மா அவளுக்காகச் சந்தோசப்படும்டா….”
அன்றிரவே ரிஷி தன் பங்கிற்குப் போன் போட்டு அகல்யாவிடம் சத்யாவுக்கு நற்சான்றிதழ் வழங்கினான்.அதைக் கேட்டு அகல்யாவுக்குச் சுறுசுறுவெனக் கோபம் வந்தது.