“இதுதான் அம்மாவும் அப்பாவும் இருந்த ரூம்…” என அந்த அறையை திறந்து காண்பிக்க இப்போதும் அது அத்தனை சுத்தமாய் பராமரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.
ஒரு நறுமணம் கமழ்ந்து நாசியை நிறைக்க அறையில் ஏதோ ஸ்லோகம் மெல்லிய சத்தத்தில் கேட்டது.
“அம்மாவுக்கு இந்த ஸ்லோகம் ரொம்ப இஷ்டம். அதனால ட்வென்டி ஃபோர் ஹவ்ர்ஸ் இது ஓடிட்டே தான் இருக்கும்…” என்றான்.
“இது யார் மெய்ண்டெய்ன் பன்றாங்க?…”
“ஆகாஷ் பேமிலி தான். அவங்கக்கிட்ட கீ இருக்கும். இது ஆட்டோமேட்டிக் ரெக்காடர். சோ ஓடிட்டே இருக்கும். அவங்களும் வந்து டெய்லி லைட் போட்டு வீட்டை பார்த்துக்கறாங்க. அதனால வீடு எப்பவும் போல இருக்கும்…” என்றவன் வெளியே வந்து வீட்டை சுற்றி காண்பித்தான்.
ஒவ்வொன்றாய் முடித்து கடைசியாய் தன்னுடைய அறைக்குள் அவளை அழைத்து செல்ல அதுவும் காண்பிக்கத்தான் என இயல்பாய் உள்ளே வந்து அவ்வறையை அவள் சுற்றி பார்க்கும் பொழுதே கதவை சாற்றியிருந்தான்.
“ஹ்ம்ம், என்னாச்சு?…” என்று அவள் கேட்க,
“என்ன என்னாச்சு? இது நம்ம ரூம். ஏன்? லாக் பண்ண வேண்டாமா?…” என கேட்க திருதிருவென முழித்தாள்.
“என்ன லுக்கே சரியில்லை? என்ன நினைச்ச நீ?…” என்றான் அவளிடம் சற்று முறைப்புடன்.
‘இந்தா ஆரம்பிச்சுட்டான் முறைக்க. அடுத்து ஓஹோவோட ஒரு தோள் குலுக்கல் வரும். அப்பு’ என தன்னை நிதானப்படுத்தினாள்.
“இங்க வா உன்கிட்ட ஒன்னு காமிக்கனும்…” என்றவன் அங்கே இருந்த சிஸ்டத்தில் அமரவைத்து நின்றவாக்கில் அதனை ஆன் செய்தவன் அதில் ஒரு வீடியோவை ஓடவிட்டான்.
அது பழனியில் ஹாஸ்பிட்டலில் வைத்து விஜய், பவித்ரா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ.
“இது இன்னும் இருக்கா உங்கட்ட?…” என்றாள் அவனை திரும்பி பார்த்து.
“ஹ்ம்ம், அம்மா அடிக்கடி பார்த்துட்டே இருந்தாங்க. அதை அப்படியே வச்சிருக்கேன்…” என்றதும் திரும்பி திரையில் பார்வையை பதித்தாள்.
விஜய் அத்தனை நெருக்கத்தில் நின்றிருந்தான் அவளருகே. அவளின் கழுத்து வளைவில் தான் தன் தாடையை பதித்திருந்தான்.
மெல்ல விலகி அங்கிருந்து எழுந்து செல்ல முயல மற்றொரு கையோ அவளின் மறுபக்க தோளை அழுத்தி பிடித்திருந்தது.
“எங்க போற? நான் என்ன பாடமா எடுக்கறேன்? க்ளாஸை விடு ஓடற ஸ்டூடன்ட் மாதிரி ஓட பார்க்கற?…” என்றான்.
“நீங்க க்ளாஸ் எல்லாம் நல்லா தான் எடுப்பீங்க…” என்று அவனுக்கு அவனிடமே வக்காலத்துவாங்கி பேசியவளின் பேச்சில் சத்தமாய் சிரித்தவன்,
“இது கூட க்ளாஸ் ரூம் தான் கேர்ள். பர்ஸ்ட் டே ஸ்கூலுக்கு வந்த பேபி மாதிரி இருக்காம பதட்டமில்லாம இரு…” என்றான் லேசாய் கழுத்தையும், கன்னக்கதுப்பையும் வருடியபடி.
அரைநொடி கூட இருக்கமுடியாமல் படக்கென்று அவனை தள்ளிக்கொண்டு எழுந்து போக அவளின் கையை பிடித்து நிறுத்தியவன்,
“ஓகே ரிலாக்ஸ். வா பால்கனிக்கு போகலாம். கொஞ்சம் சில் பண்ணிக்கோ…” என நகர்த்திக்கொண்டு பால்கனி கதவை திறந்து சென்றான்.
“இத்தனை பயம் ஏன் பழனி என் மேல?…” என முன்னால் அவள் பக்கம் சாய்ந்து மெல்லிய குரலில் கேட்டவன் பேச்சில் கண்ணை மூடிக்கொண்டாலும் அவனின் நெருக்கமென்னவோ அன்றைய நாளை தான் ஞாபகப்படுத்தியது.
படபடப்புடன் திரும்பி நின்றுகொண்டாள் அவனின் முகத்தை பார்க்காமல். பயத்தில் முகமும் வியர்க்க விழிகள் எதிரே தெரிந்த இருளில் அலைபாய்ந்தது.
“என்ன இவ்வளவு நடுங்கற? ரொம்ப ஹர்ட் பண்ணிடுவேன்னா?…” என்றான் அவளின் விரிந்திருந்த கூந்தலை எடுத்து பின்னல் போட்டுக்கொண்டே.
“இல்லை நானே பன்றேன். விடுங்க….” என்றவளை விலகவிடவில்லை.
“ப்ச், ஷ்…” என்றான்.
“கிஸ் பண்ணும் போது டிஸ்டர்ப் பண்ணுது…” என்று பின்னலிட்டு அவளின் முன்னால் பின்னலை போட்டுவிட்டவன் பின்னிருந்தே அணைத்துக்கொண்டான்.
“பழனி…”
“ஹ்ம்ம் சொல்லுங்க….”
“இந்த ஊர் பிடிச்சிருக்கா?…” என்றான் அவளை சற்று இலகுவாக்க. ஆனாலும் அந்த அணைப்பு வலிமையாய் இருந்தது.
“ஹ்ம்ம், ஆமா. ரொம்ப பிடிச்சிருக்கு…”
“ஓஹ், இன்னைக்கு போனோமே கோவில்?…”
“ரொம்ப நல்லா இருந்துச்சு. நாளைக்கும் போவோமா?…”
“சூர்…” என்றவன்,
“ஹ்ம்ம், அப்பறம்…” என அவளை குறுகுறுப்பு மூட்ட,
“ஒண்ணுமில்லையே…” என்றாள் அவனின் கையை பிடித்தபடி.
அந்த நிமிடத்தை அந்த அணைப்பை பிடித்தும் கூட ஒரு பதட்டமான மனநிலை. அந்த உணர்வுக்குள் ஆட்பட்டு நின்றவளின் அடிவயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியின் தீண்டலில் உடல் கூச முழுவதுமாய் சிலிர்த்தாள்.
“வீடு. வீடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லை?…”
“நல்லா இருக்கு….”
“இந்த ரூம்?…”
“அதுவும் தான்…”
“நான்?…” என்றதும் ஒரு நொடி மௌனத்தின் பின்,
“ஹ்ம்ம், நீங்களும்…”
“எங்க என்னை பார்த்து சொல்லேன்…” என்று அவளை தன்பக்கம் திருப்பி முகம் நிமிர்த்தியவன் அவளின் இதழ்களை நெருங்கியனின் கரங்கள் அவளை இறுக்கி அழுத்தத்தை கூட்டியது.
“பார்த்து பார்த்து…” என்றுவிட்டாள் பதட்டத்தில்.
“என்ன? என்ன சொன்ன?….” என அவன் கேட்க,
“இல்ல பார்த்துன்னு…”
“என்ன பார்த்து? என்ன பார்க்கனும்?…” என்றதும் அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் விழிகளை தாழ்த்திக்கொண்டவள் நாணம் மீதுற அவனின் தோளில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
“இப்ப எதுக்கு சொன்ன? இல்லன்னா விடமாட்டேன்…” என விஜய்யும் பிடிவாதமாய் சொல்ல,
“கேட்காதீங்க…” என்றாள் முகத்தில் நிமிர்த்தாமல்.
“ஓஹ், கேர்ள், படுத்துற நீ…” என்றவனுக்கு அப்போதுதான் மூளையில் பளிச்சிட்டது.
“ஹேய் நீ அதை சொல்றியா?…” என்றதும் அவன் கண்டுகொண்டதை அறிந்தவளுக்கு இன்னும் வெட்கம் கூட அவளின் கைகள் தன்னைப்போல அவனை சுற்றிக்கொண்டது.
“அன்னைக்கு நானே அதை எதிர்பார்க்கலைம்மா. உன்னை ஹர்ட் பண்ணிருக்கும்னு இப்போ புரியுது…” என்றவன் அவளின் முதுகை வருட இன்னுமே அவன் மீதான அன்பு கூடியது.
“ஓஹ் மறந்துட்டேன் பாரேன்….” என்றவன் மீண்டும் சிஸ்டம் பக்கம் வந்தான்.
“காலையில ஏதோ சடங்கு இருக்காம். அதனால அலாரம் வச்சுக்க சொன்னார் ஜெகாண்ணா…”
“என்ன சடங்கு?…” என அவனிடம் கேள்வி கேட்கும் விதமாய் முகம் நிமிர்த்தி விலகி நின்று கேட்க விஷமத்துடன் அவளை பார்த்து புன்னகைத்தவன் மீண்டும் தனது கையை விரித்து வா எங்க அவனின் கரங்களுக்குள் புகுந்துகொண்டாள் பவித்ரா.
“சோ ஸ்வீட்…” என்றான் அவளாக தன் அணைப்பிற்கு வந்ததை.
வார்த்தைகளால் வரிக்கமுடியாத வார்ப்புகள் அவனிடத்தில் கொட்டிக்கிடக்க அதன் மென்மையை கொண்டு பெண்மையை ஆராதித்தான்.
அவனின் பார்வை படும் தூரமெல்லாம் அவளுள் பொங்கிபெருகிய நாணத்தை உருகவைத்து தன் தீண்டலில் உறையவைத்தவன் அவளின் வெட்கங்களுக்கு அன்று அதிகாரமாய் விலக்களித்து அதன் விடுதலைக்கான உத்தரவையும் பிறப்பித்தான்.
அவனின் மிச்சமிடும் எண்ணங்களை எல்லாம் சின்னதாய் தன் சிணுங்களில் அவள் உடைத்துக்கொண்டிருக்க அதிலிருந்து விஜயநெடுமாறன் மீளமுடியாமல் நெகிழ்ந்திருக்கும் உணர்வுகளை இன்னுமின்னும் பற்ற வைக்க அது ஒரு ஆனந்த பூக்காடு.
“மாமா சொல்லு பழனி. ஏன் நீ சொல்லவே இல்லை?…” என கேட்டு கேட்டு அவளை திணறடிக்க பதில் கூறா ஓவியமாய் அவனின் கைகளுள் உருகினாள் பவித்ரா.
“என்னை நல்லா பார்த்துப்பேன்னு அப்பாட்ட சொல்லிட்டு இப்படி நிமிர கூட மாட்டேன்ற நீ. இதான் நீ பார்த்துக்கறதா கேர்ள்?…” என்றான் விஜய்.
“அச்சோ…” என்றவளின் வழக்கமான பேச்சில் வாய்கொள்ளா சிரிப்புடன்,
“உன்னோட இந்த அச்சோக்கள் இன்னைக்கு எத்தனைன்னு ஒரு க்விஸ் கொஷின் வைச்சா உன்னோட ஆன்ஸர் என்ன பழனி?…” என வம்பிழுத்து திக்குமுக்காட வைத்தவன் அவளை நிறைவாய் அணைத்துக்கொண்டான்.
விழி தொட்டதா விரல் தொட்டதா
எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா
அனல் சுட்டதா குளிர் விட்டதா
அடடா என் நாணம் இன்று விடைபெற்றதா
நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும் இடம் போதுமே