அத்தியாயம் 28
பணம் படைத்தவர்கள் மட்டுமே வந்து செல்லும் உயர்ரகப் பார் அது. தரை தளத்தில் ஆட்டமும் பாட்டமும் என இளசுகள் கும்மாளாம் அடித்துக் கொண்டிருக்க, முதல் தளத்தில் போக்கர், பூல் விளையாட்டுக்களைச் சிலர் விளையாடிக் கொண்டிருக்க, கடைசியில் இருந்த மேசையில் அமர்ந்திருந்தான் விக்டர். நாற்பதுகளில் ஆரம்பத்தில் இருப்பவன்.
அவன் கண்கள் அடிக்கடி வாசலையும் கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது. சட்டென்று அவன் முகம் பிரகாசகமானது. அவனை நோக்கி வந்து கொண்டு இருந்தனர், அவனின் உதவியாளனும், மற்றொருவனும்.
“சர், இவன் தான் அந்த நாகராஜன்.” உதவியாளன் சொல்ல, அவன் கைகாட்டியை ஆளை பார்வையால் எடை போட்டான் விக்டர். ‘நம்ம காரியத்துக்குச் சரியான ஆள் தான்’ நினைத்தவன், “நீ போய் ரெண்டு ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வா!” உதவியாளனிடம் சொல்லிவிட்டு, நாகராஜை எதிர் இருக்கையில் அமர சொன்னான்.
நாகராஜோ, அந்த உயர்ரகப் பாரை சுற்றும் முற்றும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தான். இதற்கு முன்பு இந்த மாதிரி பணம் படைத்த இடங்களுக்கு அவன் வந்ததில்லை.
“நீ தான் நாகராஜா?” விக்டர் கேட்டதும் அவன் பக்கம் திரும்பினான் நாகராஜ்.
“ஆமா சார்!”
“மெண்டல் ஹாஸ்பிடல்ல என்ன வேலை பார்க்கிற?” பேச்சை வளர்த்தான் அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள.
“கம்பவுண்டரா இருக்கேன் சார்.”
“இப்போதான் உனக்குக் கல்யாணம் ஆச்சாமே? கேள்விப்பட்டேன்!”
சற்றே ஆச்சரியத்துடன், “ஆமாம் சார்!” என்ற நாகராஜ், “என்னை எதுக்கு சார் கூட்டிட்டு வர சொன்னீங்க?” எதிரில் இருந்தவனின் பணக்காரா தோற்றம் பார்த்து, தயக்கத்துடனே கேட்டான்.
“இரு சொல்றேன்.” கை அமர்த்தினான்.
அதற்குள் விக்டரின் உதவியாளன், இரண்டு கையிலும் மதுபான க்ளாசுடன் அங்கு வந்து சேர்ந்தான். தன் முதலாளிக்கு ஒன்றும், நாகராஜுக்கு ஒன்றும் வைத்துவிட்டு நிமிர, ‘நீ போ!’ அவனைப் பார்த்துச் சைகை செய்தான் விக்டர். தலை அசைப்புடன் அங்கிருந்து சென்றான்.
“ம்ம்! குடி!” அதிகாரமாகச் சொல்லிவிட்டு தன் க்ளாசை எடுத்துப் பருகினான். நாகராஜோ நடுக்கத்துடன் க்ளாசை எடுத்தவன், எதோ அமிர்தத்தைக் குடிப்பது போலச் சிந்தாமல் சிதரமால் ரசித்து ருசித்துக் குடித்தான்.
சிறுது நேரம் கழித்து அவனை எதற்காக அழைத்து வந்துள்ளோம் என்பதைச் சொன்னான் விக்டர். அதைக் கேட்டதும் அதிர்ந்து போனான் நாகராஜ். அவனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு, “முடிச்சு கொடுத்தா ஒரு பீசுக்கு, ஒரு லட்சம்.” என்றான்.
“அம்மாடி! ஒன்னுக்கு ஒரு லட்சமா?!” வாயை பிளந்தான் நாகராஜ்.
அதற்குள் விக்டருக்கு, ஏதோ ஃபோன் கால் வர, பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து நாகராஜிடம் கொடுத்தவன், “ஒகேனா இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணு.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, காகிதத்தை எடுத்துச் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன், கையில் இருந்ததை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, விறுவிறுவென்று வீட்டுக்கு கிளம்பி சென்றான்.
அடுத்த நாள் மருத்துவமனையில், நல்லசிவத்தைத் தனியே சந்தித்த நாகராஜ், மடமடவென விஷயத்தைச் சொன்னான்.
“சர்! புட்ச்சா ஒரு பார்டி கிடைச்சு இருக்கு!”
“காரியம் என்னவாம்?!” ஆர்வமுன் கேட்டார் நல்லசிவம்.
“கிட்னி, லிவரு எல்லாம் வேணுமாம். அதுவும் சுட! சுட! ஒரு பீசுக்கு ஒரு லட்சம் தரதா சொன்னாங்க.”
அதிர்ந்து போய்ப் பார்த்தார் நல்லசிவம். “ஒரு லட்சமா!!”
“ஆமாம் சார். ஒகேனா இந்த நம்பருக்கு ஃபோன் போட சொன்னாங்க!” சொல்லிவிட்டுக் காகிதத்தை அவரிடம் நீட்டினான்.
அதை வாங்கிய நல்லசிவத்தின் மூளை பரபரவெனக் கணக்கு போட்டது.
“என்ன சொல்லட்டும் சார்?!’
சில நிமிடங்கள் கழித்து, “செஞ்சு தரோம்ன்னு சொல்லிடு.” தீர்க்கமாகப் பதில் சொன்னார்.
“எப்படிச் சார் ரெடி பண்ண போற?”
“கையில வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்கு எதுக்கு டா அலையணும்?”
“புரில சார்!”
“உள்ள இருக்கிற லேடி பேஷண்ட்ஸ் தான் வெண்ணை.” மனதுக்குள் திட்டம் போட்டப்படி சொன்னார்.
“அது ஏன் சார் லேடீசு! ஆம்பளைங்க கிட்ட எடுக்க மாட்டியா?”
“அவங்க எல்லாம் நாளைக்குக் குணமாகி வெளிய போனா, நம்ம விஷயம் தெரிஞ்சுடும். பொம்பளைங்க அப்படி இல்லை. கேக்க நாதி கிடையாது.”
“சோக்கா ப்ளேன் போடுற சார்.” மெச்சி கொண்டான் நாகராஜ்.
“சரி நீ அந்தப் பார்ட்டிகிட்ட எப்போ, என்னைக்கு வேணும்னு கேட்டு சொல்லு.”
“சரி சார்!” சொல்லிவிட்டுச் சென்றான் நாகராஜ்.
அதன்பின் அவன் விக்டரை அழைத்துப் பேச, ஒரு வாரத்திற்குள் வேண்டும் என்று அவன் சொல்ல, அதை அப்படியே இங்கு வந்து சொன்னான் நாகராஜ்.
சில நிமிடங்கள் யோசித்த நல்லசிவம், “சரி முடிச்சு தரேன்னு சொல்லிடு.” என்றவர், பெண் நோயாளிகளின் பெயர் கொண்ட ரெஜிஸ்டரை எடுத்து அவர்களின் உடல் தகுதியை பார்த்தார். நல்ல உடல் தகுதி கொண்டவர்களின் பெயர்களை மட்டும், ஒரு பேப்பரில் தனியாக எழுத ஆரம்பித்தார்.
கமலா
செல்வி
மஞ்சுளா
சாந்தி
மாதுரி.
படித்துப் பார்த்துவிட்டு மாதுரியின் பக்கத்தில் ஒரு பெருக்கல் குறியை போட்டார். “மொதல்ல இந்தப் பொண்ணு! ரிகார்ட்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு.” தனக்குள் சொல்லிக் கொண்டவர், காகிதத்தை மடித்துப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
அன்று இரவே கெளஷிக்கை சந்தித்த நல்லசிவம், விஷயத்தைச் சொல்லி அவனிடம் பேரம் பேசினார். முதலில் அதிர்ந்து போன கௌஷிக், பின் பல நிமிட யோசனைக்குப் பிறகு, அம்பது பெர்சென்ட் கமிஷனுடன் ஒத்துக் கொண்டான். ஆனால் இது பற்றி நந்தாவிடம் எதுவும் சொல்லாமல் மறைத்துவிட்டான்.
அடுத்த நாள் மாலை ect முடிந்த மாதுரியை, கௌஷிக் சொன்னதின் பேரில் நல்லசிவத்தின் அறைக்கு வில்சேரில் அழைத்து வந்து கொண்டு இருந்தாள் ஒரு செவிலியர். அரை மயக்க நிலையில் இருந்தாள் மாதுரி.
நல்லசிவம் சொல்லிவிட்டதின் பேரில் அவளை அழைத்து வர ect அறை நோக்கி வந்து கொண்டிருந்த நாகராஜ், எதிரில் நடந்து வந்து கொண்டிருந்த செவிலியரை பார்த்துவிட்டு, வேகவேகமாக அவள் அருகில் வந்தவன்,
“நல்லசிவம் டாக்டர் ரூமுக்கு தானே கூட்டிட்டு போற? என்கிட்டே கொடு!” என்று சொல்ல, அப்பெண்ணோ “நீங்க லேடீஸ் வார்ட்ல என்ன பண்றீங்க?” என்று தயங்க, “டாக்டர் தான் என்னை வந்து கூட்டிட்டு வர சொன்னாரு. வேணும்னா நீயே டாக்டர் கிட்ட கேட்டுக்கோ!” என்றான் விட்டேரியாக. நல்லசிவத்தின் கோப குணத்தைப் பத்தி தெரிந்திருந்த அப்பெண், மாதுரியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த மாதுரியையே பார்த்தப்படி வீல்சேரை உருட்டிக்கொண்டு வந்த நாகராஜுக்கு, அவளின் அழகும், நிறமும், உடம்பை என்னவோ செய்தது. அவளின் அதீத அழகை வைத்தே, இவள் தான் மாணிக்கம் சொன்ன பெண் என்று புரிந்து கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். இருட்ட தொடங்கியிருந்த அந்த வேளையில் ஒன்றிரண்டு நர்ஸ்களைத் தவிர யாரையும் காணவில்லை. நல்லசிவம் ஏதோ வேலையாக வெளியே போயிருப்பது இவனுக்கு மட்டும் தான் தெரியும். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தான்.
யாருக்கும் தெரியாமல் மாதுரியை சற்று தள்ளி இருந்த பழைய அறைக்கு அழைத்துச் சென்றான். உள்ளே சென்றதும் ஜன்னல்களை அடைத்து, கதவை சாத்திவிட்டு, மாணிக்கத்துக்கு ஃபோன் போட்டான்.
“டேய்! மாணிக்கம்! மீனு சிக்கிருச்சு!” கிசுகிசுத்தான்.
“என்ன டா சொல்ற? அந்த வடக்கத்தி பொண்ணா?” குரலில் உற்சாகம்.
“ஆமாம்! இப்போ தான் மாணிக்கம், அந்தப் பொண்ணை நேர்ல பாக்குறேன். நீ சொன்னது நிஜம். பார்க்கும்போதே போதை ஏறுது. இன்னும் என்னென்னன பண்ணா? நீ உடனே கிளம்பி வா……..” இடத்தைக் கூறினான்.
நாகராஜ் பேசியதை கேட்ட மாதுரி, அதிர்ந்து போய், இங்கிருந்து தப்பிக்கவேண்டி, சேரில் இருந்து எழுந்துகொள்ள முயற்சிக்க, சற்று முன்பு கொடுக்கப்பட்ட ect ட்ரீட்மென்ட்னால், உடல் சோர்வாக இருந்தது. வீல்சேரில் கைபிடியில் அழுத்தம் கொடுத்து உன்னி எழ, வீல் சேர் வழுக்கியது. தொப்பென்று கீழே விழுந்தாள்.
சத்தம் கேட்டு திரும்பி பார்த்த நாகராஜ், வேகேகமாக வந்து அவளைத் தூக்க, அவனைத் தள்ளிவிட முயன்றாள் மாதுரி. ஆனால் முடியவில்லை. அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது. “மரியாதையா என்னை விடு. இல்லன உன்னைப் பத்தி டாக்டர் கிட்ட சொல்லிடுவேன்.” மூச்சுவாங்க பேசினாள்.
“ஏய்! ச்சே! சும்மா கிட! உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது. ஒழுங்கு மரியாதையா எங்களுக்கு ஒத்துழைச்சுடு, இல்லனா உடம்பு புண்ணாகிடும்.” அடிக்குரலில் எச்சரித்தான்.
“ஒத்துழைக்கனுமா அப்போ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வா டா! அவ தான் உனக்கு ஒத்துழைப்பா! நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ஜாய் பண்ணுங்க!” அவனை முறைத்தபடி கர்ஜித்தாள் மாதுரி.
“என்னடி சொன்ன?!” ஆக்ரோஷத்துடன் அவளை அறைந்த நாகராஜ், “கேள்விபட்டேன் நீ பெரிய சண்டி குதிரையாமே! இன்னைக்கு உன்னை அடக்குறது தான்டி என் வேலை.” என்று சூளுரைத்தவன், அவளைத் தரையில் தள்ளினான். ஏற்கனவே உடல் அசதியில் இருந்த மாதுரிக்கு, நாகராஜ் அறைந்ததில், இருந்த கொஞ்சநஞ்ச உடல்பலமும் முற்றிலும் வடிந்துவிட, உயிரற்ற உடல் போல அப்படியே கிடந்தாள்.
மடமடவெனச் சட்டையைக் கழற்றிய நாகராஜ், மாதுரியின் மேல் படர்ந்தான்.
கயவன் ஒருவனைத் தடுக்க முடியாமல் இருக்கும் தன் நிலைமையை வெறுத்த மாதுரி, முதல் முறையாகப் பெண்ணாகப் பிறந்ததை நினைத்து தன்னையே வெறுத்தாள். நாக்கு கடிபட்டு ரத்தம் வருவதைப் பொருட்படுத்தாமல், பற்களை அழுத்தி கடித்தபடி, விரல் எலும்புகள் முறிந்தாலும் பரவாயில்லை என்று, கை முஷ்டியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கி, கண்களை இறுக மூடியபடி கிடந்தாள்.
மனம் முழுவதும் வெறி! வெறி! வெறி மட்டுமே நிறைந்திருந்தது. அவனைத் துண்டு துண்டாக வெட்டும் வெறி! உயிரோடு எரிக்கும் வெறி! துப்பாக்கி குண்டுகளால் சல்லைடையாக்கும் வெறி!
நாகராஜை நெருப்பில் பொசுக்க முடியாமல், தன் உள்ளத்தைக் கொழுந்துவிட்டு எரிய செய்து கொண்டிருந்தாள்.
சிறுமியை வன்புணர்கின்றாய்!
கிழவியை வன்புணர்கின்றாய்!
தெரிந்த பெண்ணை வன்புணர்கின்றாய்!
தெரியாத பெண்ணை வன்புணர்கின்றாய்!
வீட்டிற்குள் வன்புணர்கின்றாய்!
வெளியே வன்புணர்கின்றாய்!
தனியே வரும் பெண்ணை வன்புணர்கின்றாய்!
துணையோடு வரும் பெண்ணை வன்புணர்கின்றாய்!
ஒருவனாக வன்புணர்கின்றாய்!
கூட்டாக வன்புணர்கின்றாய்!
காதலோடு வன்புணர்கின்றாய்!
பழிவாங்க வன்புணர்கின்றாய்!
பெண் போகப் பொருள் என உனக்கு யார் சொல்லித் தந்தது?
அவளை அடக்கிவை என்று உனக்கு யார் கற்றுத் தந்தது?
இயற்கை கொடுத்த காற்றை மாசாக்கிவிட்டு,
எதைச் சுவாசித்து உயிர்வாழ போகிறாய்?
இயற்கை அருளிய தண்ணீரை வத்த செய்துவிட்டு,
எதைப் பருகி உயிர்வாழ போகிறாய்?
இயற்கை படைத்த பெண்ணினத்தை அழித்துவிட்டு,
எப்படிப் பிறப்பெடுப்பாய்?
படைப்பதால் அந்தப் பிரம்மன் கடவுள் என்றால்,
அந்தப் படைப்புக்கு உயிர் கொடுக்கும் பெண் யார்?
காக்க வேண்டிய கடவுள் எங்களைக் காக்கவில்லை!
அழிக்க வேண்டிய கடவுள் உன்னை அழிக்கவில்லை!
இதற்கு,
படைக்கும் கடவுள் எங்களைப் படைக்காமலே இருந்திருக்கலாம்.
கடவுளே! எங்களை அழித்துவிடு இல்லை,
எங்களுக்கென்று தனி உலகத்தைக் கொடுத்துவிடு!
முற்கள் சூழ் ரோஜாவாக இருந்தது போதும்.
இனி தனித்து இருக்கிறோம்!
தன் வெறி அடங்கியதும், வெறி நாயை போல ஆத்திரத்தோடு எழுந்தான் நாகராஜ். கண்மூடி இருந்த மாதுரியின் கண்களில் கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது.
“நல்லா அழு டி! அசிங்கப்பட்டுடோமேன்னு அழு! தோத்துட்டோமேன்னு அழு! என்னைக்கும் நீ ஒரு பொண்ணு! நான் ஒரு ஆம்பளை!” சொல்லிவிட்டுப் பலமாகச் சிரித்தான்.
அந்த நேரம் கதவு தட்டப்பட, வாசலில் மாணிக்கம் நின்றிருந்தான். நாகராஜ் கதவை திறக்க அவசரமாக உள்ளே வந்தவன், “முடிச்சிட்டியா?!” என்றுவிட்டு, தான் வந்த வேலையில் இறங்கினான். மூடிய கண்ணைத் திறக்கவே இல்லை மாதுரி.
நாக்கை தொங்க போட்டுக் கொண்டு எத்தனை வெறி நாய்கள் வந்தாலும் சரி, நெருப்புச் சுடரை தொட முடியுமே தவிர, தீ ஜுவாலைக்குள் நுழைய முடியாது. சாம்பலாகி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவான். இது தெரியாமல், சுடரை தொட்டு விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் கும்பல் இவர்கள் எல்லாம்.
“டேய்! சீக்கிரம்! யாராவது வந்துட போறாங்க!” நாகராஜ் அவசரப்படுத்த, மடமடவென எழுந்தான் மாணிக்கம். “கல்லு மாதிரி கிடக்குறா டா!” அலுத்துக் கொண்டான். “கொழுப்பு! வேற ஒண்ணுமில்லை. சரி வா! நேரம் ஆச்சு.” நாகராஜ் சொல்ல, மாதுரியின் நெகிழ்ந்த உடையைச் சரி செய்துவிட்டு, அவளைத் தூக்கி வீல்சேரில் அமர வைத்துவிட்டு, நல்லசிவத்தின் அறையை நோக்கி சென்றனர்.
வழி நெடுகிலும் கண்ணீர் வழியை இருந்தாள் மாதுரி. துடைக்கத் தோன்றவில்லை! ஒருவேளை புலி தன் காயத்தைத் தன் எச்சில் கொண்டு ஆற்றுவது போல, தன் கண்ணீரால் தன்னைத் தானே சுத்தப்படுத்துகிறாள் போல!
காப்பகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த அந்த அறையில், மயக்க ஊசி போடப்பட்டுப் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள் மாதுரி. முககவசம், கையுரையை மாட்டிக்கொண்டு, அவளருகில் வந்தார் நல்லசிவம். அவளின் முகத்திலும், உடலிலும் இருந்த காயங்களைப் பார்த்துவிட்டு, “என்னடா நாகராஜு! ருசி பார்த்துட்ட போல?” என்று கேட்க, நெளிந்தான் அவன்.
“எங்கையோ மச்சம் இருக்கு டா உனக்கு!” சொல்லிவிட்டு சிரித்தவர், தன் கையில் வைத்திருந்த கத்தியை மாதுரியின் இடுப்பின் மேல் பகுதியில் வைத்து கீழ்நோக்கி இழுத்தார். கத்தி வெண்ணையாக வழுக்கிகொண்டு செல்ல, மாதுரியின் இடுப்புத் தோல் இரண்டாகப் பிளந்து, உள்ளே இருந்த சிவப்பை காட்ட, வெட்டப்பட்ட இடத்தில் கோடாக வழிய ஆரம்பித்தது ரத்தம்.
இதோ எல்லாம் முடிந்துவிட்டது. அவளின் ஒருபக்க சிறுநீரகம் ஒரு பிளாஸ்டிக் கவரில் சீல் செய்யப்பட்டு, ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டது.
அடுந்த ஐந்து நாட்களில் மற்ற பெண்களுடையதும், அந்த ஐஸ் பெட்டிக்குள் உறங்கியது.