சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்பு!
தன் உடைகளையும், மகளின் உடைகளையும் பெட்டியில் அடுக்கிக்கொண்டு இருந்தாள், மாதுரி. அங்கே சித்தார்த் அறையில், கணவன் சித்தார்த், மற்றும் தன்னுடைய துணிகளைப் பெட்டியில் பேக் செய்துகொண்டு இருந்தாள், ஸ்வப்னா. அவளை வேலை செய்ய விடாமல் கொஞ்சிக்கொண்டு தொல்லை செய்து கொண்டும் இருந்தான் சித்தார்த். இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. ஸ்வப்னா, அம்பரீஷின் தொழில் நண்பர் ஜெகதீஷின் ஒரே மகள்.
தங்கை தனியாக இருக்கும்பொழுது, தான் திருமணம் செய்துகொள்வதா என்று ரொம்பவே தயங்கினான் சித்தார்த். ஆனால் மாதுரி தனக்கு வேறொரு திருமணத்தில் இஷ்டமில்லை என்பதை உறுதியாகச் சொன்னவள், கூடி கொண்டே போகும் அவனுடைய வயதையும் சுட்டிக்காட்டினாள். ராஜேஸ்வரியும் மாதுரி சொன்னதையே தானும் சொல்ல, யோசிப்பதாகப் பதில் சொன்னான்.
மாதுரிக்குக் காப்பகத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை ஓர் அவளுக்கு யூகித்திருந்தான் சித்தார்த். அன்று அவன் பட்ட வேதனை கொஞ்சநஞ்சம் இல்லை. துடிதுடித்துப் போனான். ஆனால் தாயிடம் எதையும் பகிர்ந்துகொள்ள வில்லை. அந்த ரணம் இன்றும் அவனை வாட்டுகிறது.
இருந்தும் தாய், மற்றும் தங்கையின் ஆசைக்காகத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தான். அவனின் சம்மதம் கேள்விப்பட்டு, நான் நீ என்று பெண் கொடுக்க முன்வந்தனர் பலர். தங்களை விட வசதி குறைவாக இருந்தாலும் சரி என, நல்ல குணம் பொருந்திய ஸ்வப்னாவை பிடித்துப்போனது பெண்கள் இருவருக்கும். அவளைப்பற்றிச் சித்தார்த்திடம் தெரிவித்தனர். அவனோ, தனியார் துப்பறியும் நிறுவனத்தை வைத்து அவளின் குணங்களைத் தெரிந்துகொண்டே திருமணம் செய்து கொண்டான்.
மூவரும் எதிர்பார்த்தது போலவே, நல்ல குணவதியாக இருந்தாள் ஸ்வப்னா. மாதுரி அளவுக்கு இல்லையென்றாலும், நல்ல அழகி. மருமகள், மனைவி, அண்ணி என எல்லா நாற்காலியிலும், அழகாகப் பொருந்தினாள்.
சித்தார்த், ஸ்வப்னா திருமணம் முடிந்து தேனிலவுக்குத் தான் தற்பொழுது அனைவரும் அந்தமான் புறப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
“கிளம்பியாச்சா பப்பு?” அண்ணியின் குரல் கேட்டு, பெட்டியுடன் வெளியே வந்தாள் மாதுரி. அவளிடம் இருந்து தனீக்க்ஷாவை வாங்கிக்கொண்ட ஸ்வப்னா, “அழகா இருக்கப் பப்பு! உன் கலருக்கு இந்தச் சேலை எடுப்பா இருக்கு.” என்றாள் நாத்தனாரின் கன்னம் வழித்து.
“பப்பு!” என்ற அவளின் அழைப்பு தந்தையை நினைவுப்படுத்த, சற்றே கலங்கியது மாதுரியின் கண்கள். இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு என்பதால், ஒன்றும் சொல்லாமல் தன் சேலை முந்தானையால், மாதுரியின் கண்களைத் துடைத்து விட்டாள் ஸ்வப்னா. அண்ணியை அணைத்துக் கொண்டாள் மாதுரி.
அந்த நேரம் சித்தார்த்தும் அறையில் இருந்து வெளியே வர, ‘ரெண்டு பேர் ஜோடி பொருத்தம் சுப்பர்!’ எனச் சைகை செய்தாள் மாதுரி. தங்கையின் தலையில் செல்லமாகத் தட்டினான் சித்தார்த்.
அதற்குள் விமானத்துக்கு நேரம் ஆக, அனைவரும் கிளம்பி சென்னை விமான நிலையத்துக்குச் சென்றனர். அங்கே இவர்களுடன் சேர்ந்து கொண்டனர் மிதுனும், சஞ்சனாவும். மாதுரி கட்டாயப்படுத்தியத்தின் பேரில் வந்திருந்தனர்.
விமான நிலையத்தில் வைத்து, யாரோ தன்னை தொடர்வது போல உறுத்த, திரும்பி பார்த்தாள் மாதுரி. ஆனால் யாரையும் காணவில்லை.
அதற்குள் சித்தார்த் அழைக்கும் சத்தம் கேட்கவும், போர்டிங் இடத்திற்குச் சென்றுவிட்டாள்.
அடுத்த நாள் அந்தமான் சென்று சேர்ந்தவர்கள், அன்று முழுவதும் அறைக்குள் ஓய்வெடுக்க, மறுநாள் ராஜேஸ்வரி அறையில் தங்கிவிட, மற்றவர்கள் கடற்கரைக்குச் சென்று கும்மாளமிட்டு பொழுதை கழித்தனர்.
மறுநாள், தனக்கு டயர்டாக இருப்பதாகச் சொல்லிவிட்டு, குழந்தையையும் மற்றவர்களையும் சுற்றிப்பார்க்க அனுப்பிவிட்டு அறைக்குள் முடங்கினாள் மாதுரி. மற்றவர்கள் சென்றதும், படுக்கையில் படுத்திருந்த மாதுரி, எழுந்து மடமடவென உடைகளை மாற்ற ஆரம்பித்தாள். பேன்ட், ஷர்ட் என்று ஆளே சுத்தமாக மாறி போனாள்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் மாதுரியின் அறைக்கு வந்தான் குரு. அவன் வந்ததும், அறையைப் பூட்டிவிட்டு, அவனுடம் கிளம்பி சென்றாள்.
சில மணிநேர பயணத்திற்குப் பிறகு, மக்களின் கண்பார்வைக்கு எட்டாத அந்தத் தீவிற்கு வந்து இறங்கினர் இருவரும்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் கிட்டதட்ட 572 தீவுகள் இருக்கின்றன. அதில் 37 தீவில் மட்டுமே, மனிதர்கள் வாழ்கின்றனர். மீதம் இருக்கும் பல தீவுகள் மனித நடமாட்டம் இல்லாமல் இருக்க, அதில் ஒரு தீவு தான் தற்பொழுது மாதுரி வந்து இறங்கியுள்ளது.
கரையில் இருந்து சிறிது தூரம் நடக்க, காடு போன்று இருந்த தீவுக்கு மத்தியில் இருந்தது, அந்தப் பழைய கட்டிடம். கட்டிடத்தைச் சுற்றி, பாதுகாப்புக்கு பத்து பேர் நின்றிருந்தனர். ஒருவரும் இங்குள்ளவர்கள் போல் தெரியவில்லை.
வாசலில் நின்று திரும்பி குருவை பார்த்தாள். “இது தான் மேம். என்கூட வாங்க!” சொன்னவன், அவளை அழைத்துக்கொண்டு கட்டிடத்துக்குள் சென்றான். உள்ளே செல்ல செல்ல, பலரின் கூச்சல் சத்தமும், ‘எங்களை வெளியே விடு!’ தயவு செஞ்சு எங்களை வெளியே விடு!’ என்ற கதறல் சத்தமும் கேட்டது.
உள்ளே, ஹால் போன்ற பெரிய அமைப்பு நடுவில் இருக்க, சிறைச்சாலையில் இருப்பது போன்ற சிறிய அறைகள், வரிசையாக இருந்தது. மொத்தம் ஆறு அறைகள். ஒரு மருத்துவர் நின்றிருந்தார். பக்கா செட்டப்!
முதல் அறையில் நின்றிருந்தான் நந்தா!
இரண்டாவது அறையில் – கௌஷிக்
மூன்றாவது அறையில் – நரசிம்மன்
நான்காவது அறையில் – நாகராஜ்
ஐந்தாவது அறையில் – மாணிக்கம்
ஆறாவது அறையில் – நல்லசிவம்
ஆறு பேருமே, பச்சை சட்டை, பச்சை ட்ரவுசர் போட்டிருந்தனர். மனநல மருத்துவமனை உடை. அனைவருமே உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் அரை உயிராய் மாறி போயிருந்தனர்.
அறைக்குள் நுழைந்த மாதுரியை பார்த்ததும் அதிர்ந்து போனார்கள், சிறைக்குள் இருந்தவர்கள்.
“மாதுரி! தயவு செஞ்சு என்னை வெளியே விடச் சொல்லு. ப்ளீஸ்! இனிமே எந்தத் தப்பும் செய்ய மாட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு.” கம்பியை பிடித்து உலுக்கியபடி கெஞ்சினான் நந்தா!
மாதுரி கெஞ்சிய அதே கதறல்!
அவனைப் புழுவை பார்ப்பது போலப் பார்த்தாள் மாதுரி.
அவன் மட்டுமில்லை மற்றவர்களும் கூட மண்டியிட்டு கெஞ்சினர் மாதுரியிடம்.
“மேம்! ப்ளீஸ் இனி எந்தத் தப்பும் செய்ய மாட்டோம். எங்களை விடச் சொல்லுங்க.”
அவர்களின் எந்தக் கதறலையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், திரும்பி குருவை பார்த்தாள் மாதுரி. அவன் என்ன கேட்கிறாள் என்பது புரிந்து பதில் சொன்னான்.
“ஒரு வேளை சாப்பாடு போடுறோம் மேம். தினமும் கரென்ட் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கிறோம். உங்களுக்குக் கொடுத்த அதே மாத்திரை அவங்களுக்கும் தினமும் சாப்பாட்டுல கலந்து கொடுக்கிறோம். மிஞ்சி மிஞ்சி போனா, இன்னும் நாலஞ்சு மாசத்தில ஆள் இல்லாத அனாதையா செத்து போய்டுவாங்க. ஏற்கனவே வெளியூரை பொறுத்தவரை இவனுங்க செத்தவனுங்க தான். கூடிய சீக்கிரம் நிஜமாவே செத்துப்போகப் போறாங்க.” அனைவரையும் முறைத்தபடி பதில் சொன்னான்.
பின் மாதுரியின் பக்கம் திரும்பியவன், “இப்போ நந்தாக்கும், கௌஷிக்கிக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் டைமிங் மேம்.” குரு சொல்ல, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இரும்பு கட்டிலில் கட்டி வைக்கப்பட்டனர் இருவரும்.
அவர்களின் அருகில் சென்றாள் மாதுரி. இருவரின் கண்களும் மிரட்சியைக் காட்டியது. கட்டிலிலேயே துள்ள ஆரம்பித்தனர். இருவரின் கன்னத்திலும் ஓங்கி ‘பளார்’ என்று அறைந்தாள்.
நந்தா முன்பு அடித்த அதே அடி!
கௌஷிக்கை பார்த்ததும், அன்று அடிக்கும்பொழுது அவன் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்தது.
“உன்னைக் கொல்றதுக்காக, கரென்ட் பாக்ஸ்ல மருந்தை வச்சுட்டு வந்தா, நீ என்னடான்னா, இங்க வந்து நிக்குற!” அவன் சொன்னபின்பு தான் தெரிந்தது, அவன் தீ விபத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
‘எவ்ளோ ஈசியா பல உயிரை கொல்ல துணிஞ்ச?’ நினைத்தபடி இருவரையும் முறைத்தாள்.
தனக்கு நடந்தது எல்லாம் அவளின் கண்முன் வந்து போனது. ஒரு பக்கம் கண்ணீரும், மறுபக்கம் வெறியும் உண்டாக, எலெக்ட்ரிக் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் பட்டனை ஆன் செய்தாள்.
சர்ரென்று மின்சாரம் இருவர் உடலிலும் பாய, துடித்தனர் அவர்கள் இருவரும்.
அவள் துடித்த அதே துடிப்பு!
அவளுக்கு ஏற்பட அதே உடல் விறைப்பு!
இருவரையும் வெறித்தபடி கல் மாதிரி நின்றாள். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கினர்.
கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டவள், பின் நாகராஜன், மற்றும் மாணிக்கத்தின் அருகில் வந்தாள்.
அவர்கள் இருவரின் கைகளும் கம்பிக்கு வெளியே கட்டப்பட்டிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சி கொண்டு இருந்தனர். சிறுது நேரத்தில் மரத்தை அறுக்கும் இயந்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் குரு. அதைப் பார்த்ததும் மிரண்டு போனார்கள். அவர்களின் கதறல் இன்னும் அதிகரித்தது.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை மாதுரி. ‘இந்தக் கை தானே பொண்ணுங்களைத் தொட்டுச்சு!’ மனதுக்குள் நினைத்தவள் அதே வெறியோடு இருவரின் கைகளையும் துண்டாக அறுத்தாள். அன்று நடந்த நிகழ்வின் போது கொளுந்துவிட்ட வெறி, இப்பொழுது தான் அடங்கியது போல இருந்தது. துடிதுடித்த இருவரும், மயங்கி சரிந்தனர்.
நல்லசிவத்துக்கு ஏற்கனவே உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டிருந்தது. படுத்தப்படுக்கையாகக் கிடந்தார்.
இறுதியாக நரசிம்மன் அருகில் வந்தாள். அவரோ இவளை மிரட்சியுடன் பார்த்தார். தந்தையின் நினைவு வந்தது. ‘இன்னைக்கு எங்க அப்பா உயிரோட இல்லைன்னா, அதுக்கு நீ தான் காரணம்.’ நினைத்தவள், ஆத்திரத்தோடு தன் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்தவள், அவரின் நெற்றிப்பொட்டில் வைத்து, பட்டென்று சுட்டுத் தள்ளினாள். துடிதுடித்து இறந்து போனார் நரசிம்மன்.
அதுநாள் வரை மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த வெறி, மெல்ல மெல்ல தணிந்தது. அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, விறுவிறுவென்று கட்டிடத்தை விட்டு வெளியேறினாள். உள்ளே இருந்தவர்களின் அலறல் வெளியே வரை கேட்டது. காதை பொத்திக் கொண்டவள், ‘இங்கயே கிடந்தது சாகுங்கடா!’ நினைத்தவள், வேகமாகப் படகு இருந்த இடத்திற்கு வந்தாள்.
அந்திமாலை நேரம்! காற்று சிலுசிலுவென அடிக்க, கடற்கரை மணலில் நின்றுகொண்டு அந்த நீல நிற கடலை ரசித்துக் கொண்டிருந்தாள் மாதுரி. பல மாதங்கள் கழித்து, மனம் நிம்மதியானது போன்ற ஓர் உணர்வு. திரும்பி பார்த்தாள். தூரத்தில் இருந்த குடிலில் அமர்ந்திருந்தனர், குடும்பத்தார்.
அந்தே நேரம் யாரோ தன்னைப் பார்ப்பது போலத் தோன்ற, சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சற்று தள்ளி நின்ற குருவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டாள். அவன் இவளை கண்காணித்த படி தான் அமர்ந்திருந்தான். சற்றே நிம்மதியாக இருந்தது. கடல் அலையில் கவனம் செலுத்த முயன்றாள். சில நிமிடங்களில் மீண்டும் அதே உணர்வு. மறுபடியும் இரண்டு பக்கமும் பார்த்தாள். தூரத்தில் தன்னைப் பார்த்தபடி யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. ‘யாரது?’ கூர்ந்து அவள் பார்த்துக் கொண்டிருந்த நேரம், சட்டென்று அவளின் மொபைல் ஃபோன் அடிக்க, மொபைல் திரையைப் பார்த்தாள். ஏதோ தெரியாத நம்பர்.
ஆன் செய்யலாமா வேண்டாமா என்று யோசித்தவள், பின் ஆன் செய்து காதில் வைத்தாள்.
“ஹலோ! மாதுரி! யாரையோ தேடிட்டு இருக்கீங்களே? யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?”
இது சுதர்ஷனின் குரல்! அடையாளம் கண்டு கொண்டாள். அதே நேரம் தூரத்தில் நின்றிருந்த உருவம் அவளை நோக்கி நடந்து வந்தது. புரிந்தது, சுதர்ஷன் அவளைப் பலாவ் செய்து வந்திருக்கின்றான் என்று! ஆனால் ஏன்? அவள் யோசிப்பதற்குள் அவன் அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
“கண்டுபிடிச்சுட்டீங்க போல!” சொல்லிவிட்டு சிறிது இடைவெளி விட்டவன், “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் மாதுரி? பெர்மிஷன் கிடைக்குமா?” என்று கேட்டான்.
“ம்ம்!” என்றாள்.
“தேங்க்ஸ்!” என்று சொன்னவன், சில நிமிடங்களில் அவள் முன் வந்து நின்றான். ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு, “நீங்க சென்னையில இருந்து இங்க வர்றதா இன்ஃபர்மேஷன் கிடைச்சது. ஏதோ உள்மனசு சொல்லுச்சு. அதான் உங்களை ஃபாலோவ் செஞ்சு வந்தேன்.” சொன்னான்.
ஆனால் அவன் மனமோ, ‘உங்களைப் பாக்கணும் போலத் தோனுச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன்’ என்றது. அதுதான் மாதுரியின் காதுக்குக் கேட்க போவதில்லையே.
மாதுரியோ திரும்பி குருவை பார்த்தாள். “அவர்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு தான் உங்களுக்கு ஃபோன் போட்டேன்.” அவள் கேட்பதற்கு முன், பதில் சொன்னான்.
“காலையில நீங்க எங்கோ கிளம்பி போனீங்க போல!” தெரிந்துகொண்டே கேட்டான்.
மாதுரிக்குப் புரிந்துபோனது, அவனுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று. ஒன்றும் பதில் சொல்லாமல் அவனைப் பதில் பார்வை பார்த்தாள். அவள் கண்களே சொன்னது,
‘கடவுளோட அவதாரமான கிருஷ்ணா பரமாத்மாவுக்கே மகாபாரதப் போர்ல எதிரிகளை அழிக்க, சூழ்ச்சி தேவைப்பட்டது. அப்படி இருக்கச்ச, நான் வெறும் மனுஷி தானே!’
அவளின் கண்களையே பார்த்தவன், பின் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “கவலைப்படாதீங்க! நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன். சொல்ற பொசிஷன்லையும் இல்லை. வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.” கூலாகச் சொன்னான்.
மாதுரியின் முகத்தில் தெரிந்த கேள்வியைப் பார்த்துவிட்டு, “நீங்க அன்னைக்குச் சொன்னது என் மனசை உறுத்திட்டே இருந்துச்சு. நினைச்சுப் பார்த்தேன். நீங்க சொன்னது சரி. ஒரு போலீஸா, நானும் குற்றவாளிங்களைப் பிடிச்சு கொடுக்கிறேதோட சரி. அவங்களுக்கான தண்டனை கிடைக்குதான்னு நான் பார்க்கிறது இல்லை. அப்போ நானும் கடமை தவறினவன் தானே, அதான் போஸ்டை ரிசைன் செஞ்சுட்டேன்.” சலனம் இல்லாமல் பதில் சொன்னான்.
மாதுரி கவலையாக அவனைப் பார்த்தவள், திரும்பி கடற்கரையை வெறித்தாள்.
அதற்குள் அவர்கள் அருகில் வந்தான் சித்தார்த். அவன் கையில் மாதுரியின் குழந்தை.
“சுதர்ஷன் சர்! நீங்க இங்க?” ஆச்சரியமாகக் கேட்டான்.
“சும்மா! சுத்திப்பார்க்க வந்தேன்!” பொய் சொன்னான்.
“குழந்தை அழகா இருக்கா!” சுதர்ஷன் சொல்ல, அவனிடம் தாவினாள் தனீக்க்ஷா!
ஆச்சரியத்துடன் குழந்தையைக் கைகளில் ஏந்தி கொண்டான்.
“அவ ஈசியா எல்லார்கிட்டையும் ஓட்டிப்பா!” சொன்னான் சித்தார்த்.
அந்த நேரம் குழந்தை, சுதர்ஷனை கைகாட்டி, “இது தான் புது அப்பாவா, மம்மி!” என்று கேட்டுவிட, அனைவருமே அதிர்ந்து போயினர்.
குழந்தையுடன் நந்தா ஒருமுறை சொன்ன, ‘புது மம்ம்மியை கூட்டிட்டு வரேன்.’ என்ற வார்த்தைகளின் நினைவாகத் தான் இப்படிக் கேட்டாள். ஏனெனில், மாதுரியிடம், ‘அப்பா எங்கே மா?’ என்று கேட்ட குழந்தையிடம், அவன் விட்டுவிட்டுப் போய்விட்டதாகச் சொல்லி இருந்தாள். அதன் தாக்கமாக இருக்குமோ?!
சித்தார்த் சங்கடமாகச் சுதர்ஷனை பார்க்க, அவனோ மாதுரியை சங்கடமாகப் பார்த்தான். அந்த நேரம் ஸ்வப்னா அவசரமாகக் கூப்பிட, அங்கிருந்து சென்றான் சித்தார்த்.
“சாரி!” சுதர்ஷனிடம் மன்னிப்பு கேட்டாள் மாதுரி.
“மன்னிப்பு கேட்கிற அளவுக்கு அவ தப்பா எதுவும் கேட்கல மாதுரி.” அமைதியாகச் சொன்னவன், “இப்போ இதை உங்க கிட்ட சொல்றது தப்பு. இருந்தாலும் சொல்லாம இருக்க முடியல. எனக்கு உங்களைப் பிடிச்சு இருக்கு. உங்களை முதல் முதலா பார்த்த நாள்ல இருந்து என் மனசுல நீங்க என்னமோ செய்றீங்க. ஆனா என்னனு தெரியல.” படபடவெனச் சொன்னவன், மாதுரியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு, “ஜஸ்ட் சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன், அவ்ளோதான். நீங்க எதையும் மனசில வச்சுக்காதீங்க!” சாதரணமாகச் சொல்லிவிட்டு, அவளைப் பார்த்து புன்னகைத்தவன், குழந்தையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
போகும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் மாதுரி!
அதேநேரம் அங்கே குடிலுக்குள் அமர்ந்திருந்த, மிதுனும் சஞ்சனாவும், மாதுரி, சுதர்ஷன் ஜோடி பொருத்தத்தை பற்றி அடிதடியுடன் கூடிய தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சுதர்ஷன், மாதுரி இருவரையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த குரு, தனக்குள் சிரித்துக் கொண்டான்.
மாதுரி கடந்து வந்த பாதையும், அதில் அவள் அனுபவித்த காயங்களும் மிக பெரியது என்றாலும், விரைவில் அந்த காயங்கள் ஆறவும், அவளின் காயத்துக்கு இறகு போல, காயப்படுத்தாத மென்மையான மருந்தாக சுதர்ஷன் இருப்பான் என்று நம்புவோம்!
x———-முற்றும்———-x