“ம்மா, எங்க ரோஜா? வந்ததுல இருந்து தேடறேன்…” என விதுரன் வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டே வைத்தீஸ்வரியிடம் தண்ணீரை வாங்கி குடிக்க,
“ஒரு இடத்துல நின்னா சொல்லலாம். வந்த, வந்ததும் வேகமா மாடிக்கு போய்ட்டே கேட்ட, இப்ப பின்னால போய்க்கிட்டே கேட்ட. அடுத்து பதில் சொல்லுமுன்ன தோட்டத்துக்கு போய்ட்டு வர…” என வைத்தீஸ்வரி கேலியாய் சொல்ல அவரை பார்த்தவன்,
“இத்தனை சுத்தறேன், நில்லுடான்னா நிக்க போறேன். அதை விட்டுட்டு நான் வீட்டை சுத்தி பார்க்கறதை வேடிக்கை பார்த்திருக்கீங்க…” என அவரருகே வந்து தொப்பென அமர அவனை கண்டிக்கும் பார்வை பார்த்தார்.
“விது, என்ன இது இப்படி உட்கார்ந்துட்டு? மெதுவா உட்கார மாட்ட? அதென்ன கொஞ்சமும் ரிலாக்ஸா இல்லாம அத்தனை படபடப்பு?…” என பேச,
“சரி நான் ரிலாக்ஸ்…” என்றவன் தன் மூச்சை ஆழமாய் இழுத்து விட்டுக்கொண்டு நிதானமான பார்வையுடன்,
“இப்ப சொல்லுங்க, ரோஜா எங்க?…” என்றான் மிக மெதுவான குரலில்.
“இன்னைக்கு அக்காட்ட நல்லா வாங்கி கட்ட போற…” என சிரித்தபடி வைத்தீஸ்வரி சென்றுவிட,
“அதென்ன அவ பண்ணினா மட்டும் எதுவும் சொல்றதில்லை. என்னை மட்டும் கன்ட்ரோல் பன்றீங்க…” என்றதற்கு பதில் சொல்லாமல் மீண்டும் பேப்பரை பார்க்க ஆரம்பிக்க,
“இப்ப ரோஜா எங்க?…” என்றான் மீண்டும்.
“கோவிலுக்கு போயிருக்கா…”
“யாரோட போயிருக்கா? எந்த கோவில்? எப்போ போனா? இப்ப ஏன் கோவிலுக்கு அனுப்புனீங்க? நேத்து தான் வளைகாப்பு முடிஞ்சிருக்கு. இப்ப இப்படி போகலாமா?…” என விடாமல் கேட்க பட்டென பேப்பரை மூடி வைத்துவிட்டு எழுந்து விறுவிறுவென நடக்க ஆரம்பித்துவிட்டார்.
“கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டோமோ?” என தன் தலையில் தட்டிக்கொண்டவன்,
“அம்மா…” என்ற அழைப்புடன் பின்னே சென்று அவரின் கையை பிடிக்க,
“இத்தனை அக்கறை இருக்கறவன் வீட்ல இருந்து அவளை பார்த்துக்கனும். அதை விட்டுட்டு விடிஞ்சதும் கடைக்கு ஓடின தானே?…”
“அது முக்கியமான…”
“ரோஜாவும் முக்கியம் தான். உன் அப்பா படிச்சு படிச்சு சொன்னாங்க. இப்ப தான் கூடவே இருந்து பார்க்கனும்னு. கேட்டியா நீ?…” என சொல்லவும் அமைதியாய் நின்றான். அதற்கு மேல் மகனிடம் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் புன்னகைத்தவர்,
“ஸ்ரீநிதி வந்திருந்தா கண்ணனோட. அடுத்த தெருவில இருக்கற கோவிலுக்கு தான் போயிருக்காங்க. ரோஜாவும் போகனும் போல இருக்குன்னு சொன்னா. அதான் அனுப்பி வச்சேன். கார்ல தான் போயிருக்காங்க. இப்ப தான் நீ வரதுக்கு கொஞ்சம் முன்ன. ஒரு கால்மணி நேரம் இருக்கும். போய் பார்த்து கூட்டிட்டு வா…”
என மொத்த தகவலையும் சொல்லவும் சிரிப்புடன் தலையசைத்து கோவிலுக்கு கிளம்பினான் விதுரன்.
அது சிறிதும் இல்லாத பெரிதும் இல்லாத கோவில். வார நாட்கள் கூட்டமும் மிக குறைவாகவே தான் இருந்தது. உள்ளே வந்து பார்வையை சுழலவிட ஸ்ரீநிதி தனியாக கண்ணனுடன் அமர்ந்திருந்தாள் அவனிடம் பேசியபடி. அங்கே சென்றவன்,
“ரோஜா எங்க ஸ்ரீநிதி?…” என்றான்.
திடீரென அவன் வந்து நின்றதும் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியவள் பார்வை அவளின் பின்பக்கம் திரும்பியது. மீண்டும் விதுரனை பார்த்தவளுக்கு வியர்க்க ஆரம்பிக்க அவளின் பயம் எதனால் என புரியாமல் பார்த்தவன்,
“உங்களைத்தான் ஸ்ரீநிதி, ரோஜா எங்க? உங்களோட தான வந்தந்தா அம்மா சொன்னாங்க…” என மீண்டும் கேட்க,
“வந்து ர்ர்ர்ர்….ரோஜா அங்..க சா..மி…” என திணறி சொல்ல சுர்ரென கோபம் கூடியது. கண்ணனை மனதில் வைத்து,
“சாமி கும்பிடறாளா? அங்க அவளை தனியா விட்டுட்டு நீங்க ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? இதுக்கா கூட்டிட்டு வந்தீங்க?…” என பல்லை கடித்துக்கொண்டு கேட்டவன் அவளை தாண்டிக்கொண்டு செல்ல,
“ஸார், ஸார் ப்ளீஸ்…” என்று அவனை தடுக்க பார்க்க,
“என்ன பன்றீங்க ஸ்ரீநிதி?…” என அவளின் செயலில் அதிர்ந்து அவன் கேட்க,
“இப்ப வந்துடுவா…” என அவளும் சமாளிக்க,
“வாட்ஸ் கோயிங் ஆன்?…” என்று புருவத்தை சுளித்துக்கொண்டு அவன் கேட்டவிதம் ஸ்ரீநிதிக்கு இன்னமும் அச்சத்தை கொடுத்தது.
“ஸாரி ஸார். ரோஜாவோட அப்பா…” என்றதும் விதுரனின் கண்கள் சிவந்துவிட்டது. மொத்த ரத்தமும் தலைக்குள் பாய்ந்துவிட்டதொரு ஆக்ரோஷம் அவனிடத்தில்.
“வாட்? சேகரா?…” என்றதும் ஆமாமென அவள் தலை அசைத்து,
“ரோஜாவை பார்க்கனும்னு ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டார். அதான். ரோஜாவுக்கும் தெரியாது. சொல்லாம தான் கூட்டிட்டு வந்தேன்…”
“ஸ்டாப் இட் ஸ்ரீநிதி. எங்க லைப்ல நீங்க ஏன் குறுக்க? ப்ச், இதான் உங்களோட லிமிட். டேமிட் இந்த லிமிட் கூட தெரியாதா? அவளோட பாஸ்ட் என்னனு உங்களுக்கு தெரியுமா? சைல்ட்டுட் எப்படின்னு உங்களுக்கு தெரியுமா? நீங்கலாம் என்ன ப்ரென்ட்? அதுவும் அவ இப்ப இருக்கற சூழ்நிலையில்…”
விதுரனின் பொறுமை பறந்து வார்த்தைகளை தெறிக்கவிட்டதும் ஸ்ரீநிதி அரண்டு போய் நின்றவள் கண்ணில் கண்ணீர்.
“சக்தி வொய்ப்னு இத்தோட விடறேன். மைண்ட் இட்…” என்றவன் வேகமாய் அவளை தாண்டிக்கொண்டு ரோஜாவை தேடி செல்ல ஸ்ரீநிதி அங்கேயே அமர்ந்து அழுதுகொண்டே சக்திக்கு அழைத்தாள்.
ரோஜாவை தேடிக்கொண்டு வந்த விதுரன் சன்னிதியின் அருகே கை கூப்பியபடி நின்ற சேகரனையும் மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி அவரை தீர்க்கமாய் பார்த்துக்கொண்டிருந்த ரோஜாவையும் பார்த்தான்.
இவனை கவனிக்காமல் ரோஜா அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள். கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அப்படியே அசையாமல் நின்றான் அவள் சொல்லிய செய்தியில்.
“நான் விதுரனை லவ் பண்ணேன் டாடி. ரொம்ப ரொம்ப லவ் பண்ணேன். அவருக்கே தெரியாது. இப்போ வரை. இன்னைக்கு வரை. இனி எப்பவும் தெரியவும் போறதில்லை. அது எங்க விஷயம். ஆனா விரும்பினவரை விட்டுட்டு உங்களுக்காக தானே நீங்க ஏற்பாடு பண்ணின கல்யாணம் சரின்னு வந்தேன்…”
“ஏதாவது மறுத்தேனா? எதுவுமே பண்ணலை. பண்ணவும் விரும்பல. பெத்தீங்க, வளர்த்தீங்க. யாருன்னே தெரியாதவனுக்கு கட்டி வைக்க முடிவெடுத்தீங்க. எனக்கு உண்மையா புடிச்சிருக்கா? அப்போ கல்யாணம் பண்ண விருப்பமா? இப்படி எதுவுமே கேட்கலை. இட்ஸ் ஓகே. எல்லாம் ஓகே…” என்றவள் கசிய இருந்த கண்ணீரை துடைத்தபடி,
“ஆனா அத்தனை பேர் மத்தியில என்னை இன்னொருத்தன் அவமானப்படுத்தி பேசறப்போ பெத்தவரா என்ன பண்ணுனீங்க? அவன் கால்ல விழுந்து அவனுக்கே என்னை தாரைவார்த்து குடுக்கத்தான இருந்தீங்க?…”
“அம்மாடி பாப்பா தப்புதான்டா. பெரிய தப்புடா. இந்த பாவியை மன்னிச்சுக்கடா. அம்மாவுக்கு ரொம்ப முடியலை. உன்னை ஒருதடவை பார்க்கனும்னு ஆசைப்படறாம்மா…”
“அட போங்க டாடி. உங்க பொண்ணு என்னைக்கோ செத்துட்டா. உண்மையா தான் சொல்றேன். ஒரு சதவீதம் கூட என்னை நம்பாம மம்மியும் தானே பேசினாங்க. மறுத்தீங்களா? அட்லீஸ்ட் என் மேல தப்பு இருக்காதுன்னு ஏதாவது சொன்னேங்களா? எதுவுமே இல்லையே…”
“இனிமே இப்படி வந்து நிக்காதீங்க. தயவு செஞ்சு போய்டுங்க. என்கிட்டே மன்னிப்பு கேட்கனும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு அது எந்த விதத்திலும் ஆறுதலை தராது. அனுபவிச்சு ஆறிப்போன பின்னால வந்து காயத்துக்கு மருந்து போட்டா அது உடம்புல ஒட்டாது டாடி…”
“இப்ப நான் உங்களை டாடின்றது கூட மனசார இல்லை. என்னால முடியலை. உங்க கண்ணீர் என்னை பாதிக்கவே இல்லை. எனக்கு ஐயோன்னு தோணவே இல்லை. ஆனா நீங்க அழறீங்கன்னு மட்டும் தோணுது. வருத்தமா இருக்குது தான். ஆனா மனசை பிசையலை. பதறலை. ஏன் டாடி?…”
அவளுக்கே ஏன் என தெரியாத ஒன்றை தந்தையிடம் கேட்க சேகரன் நொறுங்கி போனார்.
“போதும் டாடி, எப்பவும் அவ ரூல் பண்ணி ரூல் பண்ணி அதை நான் கேட்டு. அவ அக்கறையில் பண்ணியிருந்தா கூட பரவாயில்லை. ஆனா அவ செஞ்சதுக்கெல்லாம் நீங்களும் சரின்னேங்க பாருங்க…”
“ஐயோ தப்பும்மா, தப்பு தான். மன்னிச்சிரு பாப்பா…” என கண்ணீருடன் கெஞ்சியவரை உணர்வின்றி பார்த்தவள்,
“நான் இப்படி இருக்கறதுக்கு காரணமும் நீங்க தான? தப்பு பண்ணீட்டு மன்னிப்பு கேட்க உங்களுக்கு எதுவுமில்லை. ஆனா ப்ச், பேச முடியலை என்னால. கிளம்பிருங்க. ப்ளீஸ். என்னால வேகமா நடக்க கூட முடியலை. உங்களை பார்க்க கூடாதுன்னு நான் வேகமா இங்க இருந்து நடந்து போய் கீழே விழுந்துடுவேனொன்னு பயமா இருக்கு…”
அப்போது தான் அவளின் உடல் வியர்த்தபடி லேசான நடுக்கத்துடன் நிற்பதே அவருக்கு தெரிந்தது.
தனக்கு மகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவள் இனியாவது நன்றாக வாழ்ந்தால் போதும் என நினைத்துக்கொண்டவர்,
“நான் கிளம்பறேன்டா. நீ நல்லா இருந்தா போதும். என்னைக்காவது எங்களை பார்க்கனும்னு நினைச்சா ஒரு போன் பண்ணுடா. அப்பா அம்மாவோட ஓடி வந்துடறேன்…” என்றவர்,
“ஒரே ஒரு தடவை பாப்பா…” என சொல்லி ரோஜாவின் அருகே வந்து அவளின் தலையில் கை வைத்து வருடியவர் பின் அவளின் கன்னத்தை தடவி முத்தமிட்டார்.
“எத்தனை வருஷம் ஆச்சுல. அதான்…” என்றவர் அவளின் கையை பிடித்து ஒரு அழுத்தம் கொடுத்தவர் தளர்ந்த நடையுடன் செல்வதை பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழுந்தது.
வந்தவர் விதுரன் தன் வீட்டிற்கு வந்ததையோ பிரஷாந்தியின் பிம்பம் உடைக்கப்பட்டதையோ சொல்லவே இல்லை.
சொன்னால் அது தெரிந்ததனால் தான் வந்தீர்களா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என மௌனமாகிவிட்டார். சொல்லாமலே சென்றுவிட்டார்.
அதுவரை தைரியமாய் பேசிக்கொண்டிருந்த ரோஜா அவரின் கடைசி செயலில் உள்ளுக்குள் கதறிவிட்டாள்.
நினைவு தெரிந்த நாளில் எங்கோ ஒரு மூலையில் ஒட்டியிருந்த ஞாபகம். பள்ளியில் கொண்டு விடும் பொழுது அவர் இப்படி கன்னத்தை தடவி முத்தமிட்டது. அதன் பின்னர் இன்று.
நிற்கமுடியாமல் லேசாய் நகர்ந்து சென்று ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தவள் அப்படியே இருக்க விதுரனுக்கு அவள் உணர்வுகளின் பிடியில் சிக்கியிருப்பது நன்றாக புரிந்தது.
அதைவிட உணர்ச்சிக்குவியலாய் தான் அவன் நின்றிருந்தான் தன்னவளின் தன்மீதான காதலை அறிந்து.
“மை லிட்டில் டெவில்…” என முணுமுணுத்தவன் பின் சுதாரித்தவனாய் ஸ்ரீநிதி பக்கம் வந்தான். அவள் அழுதுகொண்டு அமர்ந்திருப்பதை கண்டுகொள்ளாதவன்,
“ஸ்ரீநிதி…” என அழைக்க இன்னும் என்ன என்பதை போல நிமிர்ந்து பார்த்தவள் குற்றவுணர்வுடன் அமைதியாக நின்றாள்.
“போய் ரோஜாவை பாருங்க. கூட்டிட்டு வந்தீங்க தானே? இங்க உட்கார்ந்தா எப்படி?…” என இலகுவாகவும், சற்று நக்கலாகவும் சொல்ல,
“இல்லை நான் கிளம்பறேன் ஸார். இப்ப அவர் வந்திடுவார்…” என சொல்ல,
“போய் பாருங்க. நான் வந்ததை பத்தி எதுவும் சொல்லவேண்டாம். எனக்கு தெரியாத மாதிரியே இருக்கட்டும்…” என்றவனை புரியாமல் அவள் பார்க்க புதிதாய் அவன் முகத்தில் ஒரு உணர்வு.
ஆராயும் அளவிற்கு அவன் அனுமதிக்கவும் இல்லை. முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டவன்,
“போங்கன்னு சொன்னேன்…” என சொல்லி ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுத்து,
“இதையும் குடுங்க…” என்றதும் வாங்கிக்கொண்டு கண்ணனுடன் சென்றாள். அவளின் பின்னே சென்ற விதுரன் முன்பை போலவே மறைந்து நின்றான்.
“எங்க போன டேக்ஸ்? அவர்ட்ட பேசறப்போ நீ ஏன் விட்டுட்டு போன? என்னால நிக்கவும் முடியலை. நடக்கவும் முடியலை. ஒரு மாதிரி தொண்டை அடைக்குது…” என சொல்லி அவளிடம் இருந்த தண்ணீரை வாங்கி குடித்தவள்,
“உனக்கு தெரியுமா? நான் டாடிட்ட அங்கிளை லவ் பண்ணேன்னு சொல்லிட்டேன். அவர் மூஞ்சியே மாறிடுச்சு. இப்ப தெரிஞ்சுப்பார் நான் சூழ்நிலைக்காக கல்யாணம் பண்ணலைன்னு. விரும்பித்தான் பிடிச்சு தான் பண்ணினேன்னு. சும்மா சும்மா என் புருஷனை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்ன்னு இனி சொல்லமாட்டார்ல…” என மூக்கை உறிஞ்சிக்கொண்டு சொல்லியவள்,
“உனக்கு தெரியுமா டேக்ஸ், அங்கிள் கண்ணை மூடிட்டு என்னை கல்யாணம் பண்ண முடிவெடுத்தாரே? அவ்வளவு ஈஸியா காப்பாத்தன்னு முடிவு எடுத்திட முடியுமா என்ன? கல்யாணம் அத்தனை விளையாட்டு விஷயமா? ம்ஹூம்…”
“அவர் மனசுல நான் இருந்திருக்கேன். லவ் அட் பர்ஸ்ட் சைட் நிச்சயம் அவரை நான் பாதிச்சிருக்கேன் . இல்லைனா கொஞ்சம் நாளே பழகின ஒருத்தியோட வாழ்நாள் முழுக்க பயணப்பட அதுவும் விதுரன் மாதிரி ஒருத்தர் முடிவெடுக்கார்னா சுலபம் இல்லை…” என சொல்ல ஸ்ரீநிதிக்கு அவஸ்தையான உணர்வு.
மெல்ல திரும்பி விதுரனை பார்க்க அவனோ பேசட்டும் என்பதை போல கை அசைத்து சைகை செய்ய மீண்டும் ரோஜாவை பார்த்தாள்.
“இப்ப எதுக்கு ரோஜா இதெல்லாம்?…” என ஸ்ரீநிதி அமைதிப்படுத்த பார்க்க,
“என்னை அவர் எப்டி வேணாலும் சேவ் பண்ணிருக்கலாம். ஆனா இத செஞ்சுதான் பண்ணனும்னு ஒரு செகெண்ட்ல டிஸைட் பண்ணினார்ல. அதுதான் அவர். தாலி கட்டினதுல இருந்து கணவனா அவர் எடுத்துக்கிட்ட உரிமை மனைவியா என்னை உணர வச்ச அந்த இனிமை என்னால எதையும் மறக்க முடியாது…” என்று ரசித்து அனுபவித்து சொல்ல,
“உனக்கு என்ன ஆச்சு?…” என ஸ்ரீநிதி பயந்து பார்த்தாள்.
“கேளு ஸ்ரீ, ஐ லவ் அங்கிள். ஆனா அவர்ட்ட சொல்ல முடியாது பாரு. இப்ப சொன்னா கூட மனுஷன் சிரிப்பார். ஆனா திரும்ப அதை சொல்ல மாட்டார். ஐ டூ அப்படின்னுடுவார். அவர் வேணா லவ் இல்லைன்னு சொல்லலாம். எனக்கு அதை பத்தி பிரச்சனை இல்லை. என்னால புரிஞ்சுக்க முடியும். ஆனாலும் ஐ லவ் அங்கிள்…”
ரோஜா இன்னும் இன்னும் பேசிக்கொண்டிருந்தாள். சேகரன் வந்து சென்றதன் தாக்கம் தீர தீர விதுரனை பற்றிய தன் காதலின் ஆழத்தை இன்னுமின்னும் பறைசாற்றிக்கொண்டிருந்தாள்.
“விது…” என சக்தி வந்து அவனின் தோளில் கை வைக்கவும் தான் திரும்பி பார்த்தான்.
“என்னடா இங்க நிக்கற?…” என்றதும்,
“ஏன் உன் வொய்ப் உன்கிட்ட எதையும் சொல்லலையா?…” என கோபமாய் கேட்டான்.
“அது தெரியும், ஆனா ஏன் நீ தள்ளி நின்னுட்டு இருக்கன்னு கேட்கறேன். ஓகே, பர்ஸ்ட் ஸ்ரீ பண்ணினதுக்கு நான் ஸாரி கேட்டுக்கறேன்…” என சொல்லவும் அவனின் கையை தட்டிவிட்ட விதுரன்,
“ஏய் ச்சீ, உன் ஸாரியை தூக்கி குப்பையில் போடு. கேட்டேனா உன்கிட்ட? சும்மா பெரியமனுஷன் மாதிரி எதையாச்சும் உளறாத. ஸ்ரீக்கு எதுவும் தெரியாது. உனக்கு தெரியும் தானே என்னோட கோபம் ஏன்னு…”
“அது தெரிஞ்சதால தான் ஸாரி…” சக்தியும் இறங்கிவிட்ட குரலில் கேட்க அவனை தோளோடு அணைத்து கொண்டான் விதுரன்.
“ஓகே இதை அம்மாவுக்கு தெரியாம பார்த்துக்கனும். தெரிஞ்சா அவ்வளோ தான்…” என நண்பனுக்கு சொல்லி,
“சரி வா, போகலாம்…” என்று அவனுடன் ரோஜாவை நெருங்கினான்.
“ஸ்ரீ…” என சக்தி அழைத்ததும் அடங்கியிருந்த அழுகை மீண்டும் தொடங்க,
“ப்ச், அதான் நான் வந்துட்டேன்ல…” என்று அவளை சமாதானம் செய்யவும் அவனை நெருங்கி நின்றுகொண்டாள் அவள். விதுரனை பார்க்கவே இல்லை.
“பார்ரா டேக்ஸ் அழறதை? என்னவாம் இப்போ?…” என ரோஜா கேட்க,
“ப்பா…” என கண்ணன் எதுவோ சொல்ல வர அவனை தூக்கிக்கொண்ட சக்தி,
“கண்ணாவுக்கு ஒரு சப்ரைஸ்…” என அவனின் பேச்சை மாற்றி திசை திருப்பினான்.
“ஓகேடா நாங்க கிளம்பறோம். ஒரு முக்கியமான வேலை இருக்கு. வெளில போலாம்னு ப்ளான் பண்ணிருந்தேன். அதுக்குள்ளே ஸ்ரீ இங்க வந்துட்டா…” என சொல்லி விடைபெற,
“சங்குட்ட சொல்லிரு டேக்ஸ், ரொம்ப ரொம்ப மிஸ் பன்றேன்னு. டெலிவரி முடியவும் அங்க தான் ஒரு வாரம்…” என ரோஜாவும் சொல்ல அவளிடம் புன்னகை முகமாய் விடைபெற்று சென்றனர் சக்தி குடும்பத்தினர்.
“என்ன அங்கிள் வந்ததுல இருந்தே சைலன்ட்? இன்னைக்கு மௌனவிரதமா? காலையில கூட பேசினீங்க தானே?…” என மீண்டும் படபடவென ரோஜா பேச சிரித்தபடி அவளிடம் தலையசைத்தான்.
“ஓகே, போகலாம். ரொம்ப டயர்டா இருக்கு…” என சொல்லியவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான். வந்ததில் இருந்து அவனிடம் பேசவேண்டும் பேசவேண்டும் என ரோஜா சுற்ற அதை அவன் காது கொடுத்து கேட்கவே இல்லை அவன்.
இரவு அவர்களுக்கான தனியறையில் ரோஜா அவனுக்கு முன்பே வந்து படுத்திருக்க சிரிப்புடன் அவளை நெருங்கி படுத்தவன் பின்னிருந்து அணைத்துக்கொண்டான்.
“தென் தென் தென் சரியான தென்னைமரத்துக்கு பிறந்திருப்பான் போல. எப்ப பார்த்தாலும் தென்னை கட்டிக்கிட்டு சுத்தறான்…” என்று கடுகடுத்தாள் ரோஜா. அவளின் கோபத்தில் குலுங்கி சிரித்தவன்,
“லிட்டில் டெவில் கோவமா இருக்கீங்களா?…” என காதுமடல்களை உரசியபடி அவன் கேட்க,
“பேசமாட்டேன்…” என்றாள் விரைப்புடன்.
“அதான் பேசறீங்க தானே?…” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் கேட்க திரும்பி முறைத்தவள் அவனுன் மார்பில் முகம் மறைத்துக்கொண்டாள்.
“ஒரு விஷயம் சொல்லனும், சொல்லனும்னு வந்தா கேட்க கூட நேரமில்லை அங்கிள்…” என்று கிள்ளி வைக்க,
“ஓகே, இப்போ சொல்லு. கேட்கறேன்…” என அவளின் தலையை கோதிக்கொண்டே கேட்க,
“இன்னைக்கு டாடியை மீட் பண்ணேன்…” என்று சொல்லிவிட்டு அவனின் ரியாக்ஷனை பார்க்க அண்ணாந்து பார்க்க அவனும் இவளை தான் பார்த்தான்.
அவனின் பார்வையுடன் விழிகளை கலக்கவிட்டவள் அவனை பார்த்துக்கொண்டே நடந்ததை சொல்லி,
“ஸ்ரீயை திட்டிட்ட கூடாது. இதத்தான் சொல்ல வந்தேன். நீங்க கேட்கவே இல்லை…” என்று சிணுங்க,