“இப்ப நானும் ஒரு அப்பா ஆக போறேன் தானே?…” என்ற கேள்வியில்,
“சோ ஸ்வீட் அங்கிள்….” என்று அவனை இறுக்கிக்கொள்ள,
“பேபி இருக்கு எல்டி…” என்று அவளை எச்சரிக்க சிரித்தபடி மீண்டும் தளர்ந்து படுத்தாள். சட்டென்று ஒரு மௌனம். ஆனால் இதழ்களில் நிறைந்திருந்த புன்னகை.
“ரோஜா…”
“ஹ்ம்ம்…”
“தூங்கிட்டியா?…” என்றதற்கு இல்லை என்பதே தலையை மட்டும் அசைக்க,
“ஹேய் லிட்டில் டெவில், உனக்கு என்னை புடிக்குமா?…” என விதுரன் மெதுவாய் கேட்டான். சட்டென்று எழுந்து அமர்ந்தவள்,
“குபீர் சிரிப்பு மொமெண்ட் அங்கிள்…” என ரோஜா வெடித்து சிரிக்க,
“ப்ச், சொல்லு ரோஜா, புடிக்குமா? நம்ம மேரேஜ் முன்னாடி?…” என்றவனின் கண்களில் தெரிந்த அவனின் எதிர்பார்ப்பில், தவிப்பில் மையலுடன் புன்னகைத்தவள் அவனின் கையை பிடித்து தன் நெஞ்சக்கூட்டில் வைத்து அழுத்திக்கொண்டாள்.
“புடிக்குமே, ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும். வா என்னோடன்னு அங்கிள் கூப்பிட்டா அவர் வீட்டுக்கும் வர புடிக்கும். வாழ்க்கைக்குள்ளயும் வர புடிக்கும். அவ்வளோ புடிக்கும். ஆமா என்ன திடீர்ன்னு?…” என ரோஜா அகேட்க பதில் சொல்லாமல் தன் மீது அவளை சாய்த்து அணைத்துக்கொண்டான்.
அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
அழகே ஒளி விழும் மெழுகே இமையில் உன் இறகே வருடிப் போனாய்
கண்மூடி காதல் நானானேன்,
நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன், உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்…
மெல்லிய குரலில் பாட திரும்பி பார்த்தவளின் கண்களில் அன்பையும் ஆசையையும் தாண்டிய காதல் அதில் பரிமளித்தது.
“அங்கிள்…” என்றவள் உணர்ச்சிவசப்பட்டு அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டாள்.
“இப்ப நான் உணர்றேன் ரோஜா. சொல்லவும் செய்வேன். ஐ…” என்றவனின் இதழ்களை மூடியவள்,
“ஐயோ அங்கிள் நீங்க வேற….” என சிரித்தவள் பின் அவன் கண்களுக்குள் பார்த்து,
“அந்த வார்த்தை மட்டும் எதையும் உணர்த்தாது அங்கிள். அதான் வாழ்க்கை முழுவதுக்கும் உணர வைக்கறீங்க தானே? ஒவ்வொரு நொடியும். இதை விட அந்த வார்த்தை ஒரு நிறைவை குடுத்திருமா? சும்மா சின்ன பிள்ளை மாதிரி…” என்று கிண்டல் பேசி புன்னகைத்தவளை சேர்த்து இன்னும் அணைத்துக்கொண்டான்.
“உன்னை நம்ம வீட்ல பர்ஸ்ட் டைம் பார்த்தப்போ நான் சொன்னேன் நீ ரொம்ப ப்ரீஷியஸ்ன்னு. இப்ப ஒவ்வொரு நிமிஷமும் பீல் பன்றேன்…” என சொல்லி,
“உனக்கொரு கிப்ட் வச்சிருக்கேன். அதை குடுக்கத்தான் வந்தேன்…” என்றவன் வாட்ரோபை திறந்து ஒரு கவரை எடுத்துவந்து அவளிடம் நீட்டினான். ஆர்வத்துடன் வாங்கி பிரித்து பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.
அந்த புடவை தான் காதலை உணர்ந்த அன்று கனவில் கட்டியிருந்த அதே புடவை. அதனை திருப்பி திருப்பி பார்த்தவள் முகமோ சந்தோஷத்தில் விகசிக்க,
“என்ன இவ்வளோ எக்ஸைட் ஆகிட்ட. புடிச்சிருக்கா?…” என்று நின்றபடி கேட்டவனை இரு கை நீட்டி வா என்று அழைத்து அணைத்தவள் அவளின் சந்தோஷத்திற்கான காரணத்தை சொல்ல,
“அடிப்பாவி, அப்பவே உனக்கு ஸ்பார்க் ஆகிருக்கா?…” என்று கேட்டு நெற்றியோடு முட்டியவன் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான்.
மறுநாள் அந்த புடவையை அவனுக்கு கட்டி காண்பிக்க ஆசைப்பட்டு கட்டிக்கொண்டிருக்க அவளின் சிரமம் உணர்ந்து தானும் உதவி செய்ய பாதி கட்டி முடித்திருக்க,
“அங்கிள்…” என்றபடி பிடிமானமற்று அவள் மீதே சாய்ந்திருந்தாள் ரோஜா. கீழே விழுந்துவிடாமல் தாங்கியவன் சத்தமிட்டு தாயை அழைத்தான்.
நொடி பொழுதும் தாமதிக்காமல் அவளை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் விரைய அங்கே இன்னும் வலி வர வேண்டும் என்று டாக்டர்ஸ் சொல்லிவிட விதுரனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. சங்கவி, ஸ்ரீநிதி கூட வந்துவிட்டனர்.
விதுரன் குடும்பத்தினரும் கூடிவிட நேரம் கடந்து கொண்டே இருந்தது. வலி விட்டு விட்டு வந்து கொண்டிருக்க ரோஜா மிக தைரியமாய் அதை எதிர்கொண்டாள்.
ஆனால் விதுரன் தான் அறைக்கு வெளியே இருந்து ஓயாமல் அவளை பற்றி விசாரித்துக்கொண்டே இருக்க அவளுடன் கயல்விழியும் வைத்தீஸ்வரியும் உள்ளே இருந்தனர்.
விதுரன் நர்ஸ் வெளியே செல்லும் பொழுதும், உள்ளே வரும் பொழுதும் குழந்தை எப்போ பிறக்கும்? ரோஜாவை எப்போ பார்க்கலாம்? என கேட்டுக்கொண்டே இருந்தான்.
காலை அட்மிட் ஆனவள் மதியம் கடந்து விட்டது. இன்னும் பிள்ளை வலி வரவில்லை என்றனர். ஆனால் அது பிரசவத்திற்கான வலி என்று அட்மிட் செய்துவிட்டனர்.
“டாக்டர் அவர் ஒரே கொஸ்டினை கேட்டுட்டே இருக்கார்…” என்று உள்ளே அந்த நர்ஸ் சொல்ல அதை கேட்ட ரோஜா,
“அத்தம்மா, போய் அவரை பேசாம இருக்க சொல்லுங்க. இல்லை நான் எழுந்து வெளில வந்துருவேன். அவரை அனுப்புங்க, நான் பேசறேன்…” என்று ரோஜா சொல்ல,
“அவனை பார்க்கனும்னா சொல்லேன். அதுக்கு ஏன் சுத்தி வளைச்சு மூக்கை தொடற?…” என வைத்தீஸ்வரி சொல்ல,
“இங்க வாங்க…” என்று அவரின் நுனிமூக்கை தொட்டவள்,
“இப்ப வர சொல்லுங்க…” என்று புன்னகைக்க அந்த சோர்விலும், வலியிலும் அவளின் குறும்பு ரசனைக்குரியதாய் இருந்தது அவர்களுக்கு.
டாக்டரிடம் கேட்டு விதுரனை உள்ளே அனுமதிக்க வந்தவன் வேகமாய் அவளின் கையை பிடித்துக்கொண்டான்.
“ரோஜா ரொம்ப வலிக்குதா? மை லிட்டில் டெவில். என்னை கொன்னுட்டிருக்க. சீக்கிரம் குழந்தையோட வெளில வா…” என்று கண்கள் கலங்க சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட,
“அய்யோ அங்கிள், பப்பி ஷேம், அழறீங்களே நீங்க…” என அவனின் கண்ணீரை துடைத்தவள்,
“என்ன இது? இதென்ன ஹாஸ்பிட்டலா? ஒய்ன்ஷாப்பா? பிரபா ஒயின்ஷாப் ஓனரா? கடையை எப்ப ஸார் திறப்பீங்கன்ற மாதிரி சும்மா போட்டு படுத்திட்டு. குழந்தை பிறக்கறப்ப பிறக்கட்டும்…” என்று அவனை கலாய்க்க அவளின் நுனுமூக்கை பிடித்து ஆட்டியவன்,
“இப்பவும் உனக்கு பேச்சு குறையுதா?…” என சிரித்துவிட்டு மென்மையாய் அவளின் இதழில் முத்தமிட்டு விலகி மனமின்றி வெளியே வந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் வலி அதிகமாகி அழகான பெண்குழந்தையை ஈன்றெடுத்தாள் ரோஜா.
“ரோஜாவுக்கு ரோஜா பிறந்திருக்கா…” என கயல்விழி வெளியே வந்து சொல்ல அனைவரும் சந்தோஷத்தில் ஆனந்த கூத்தாடினர்.
———————————————————————
அந்த நகைக்கடையையே புரட்டிக்கொண்டிருந்தாள் ரோஜா. எந்த டிஸைனும் அவளுக்கு திருப்தியாகேவே இல்லை. முகத்தில் அதிருப்தியுடன் பார்த்துக்கொண்டே இருக்க,
“இன்னும் எவ்வளவு நேரம் ரோஜா? கிளம்ப வேண்டாமா?…” என விதுரன் அவசரப்படுத்திக்கொண்டு இருந்தான்.
“ஒரு தோடும், செயினும் எடுக்க எத்தனை பாடு…” என்று சலிப்புடன் முணுமுணுக்க சக்தி அழைத்துவிட்டான்.
“டேய் இன்னைக்கு வந்திருவியா?…” என்று கேட்க,
“சும்மா இரு நீ வேற. ரோஜா கடையையே புரட்டிட்டு இருக்கா…” என சொல்லவும்,
“என் தங்கச்சியாச்சே…” என சக்தி பெருமை பேச,
“என் பொண்டாட்டி ஞாபகம் இருக்கட்டும்…” என விதுரன் எச்சரிக்க,
“இவன் தொல்லை தாங்கமுடியலை. சீக்கிரம் வந்து சேருங்க. மொட்டை போட இன்னும் நேரமிருக்கு. நீ பாட்டுக்கு ஸ்பீடா வராத…” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.
சக்தி, ஸ்ரீநிதி குழந்தைக்கு மொட்டை போடும் வைபவம் கோவிலில் வைத்து. அதற்காக அத்தை முறையில் சீர் செய்ய தான் ரோஜா இத்தனை மெனக்கெடல்.
ரோஜாவின் குழந்தைக்கு தாய்மாமனென உரிமையாய் வந்து அனைத்தும் செய்தவன் அவன். ரோஜா குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்ச்சியில் கூட விதுரன் சொந்தத்தில் மாமா முறைக்கு அமர வைக்க ஆட்கள் இருந்தாலும் கயல்விழி சக்தியை தான் அமர வைத்தார்.
அதிலேயே அத்தனை நெகிழ்ந்து போனான் அவன். அவனின் ஆசையும் அதுவே. ஆனால் வெளிப்படுத்த தான் தயங்கினான். அதை புரிந்தவர் போல அவனுக்கான மரியாதையை தந்துவிட சிலிர்த்துத்தான் போனான்.
பின்னே ரோஜா அந்த குடும்பத்தில் வந்ததில் இருந்து அவனின் அணுகுமுறையை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாரே. அதிலும் அவர்களின் குழந்தைக்கு பார்த்து பார்த்து அவன் செய்யும் விதம்.
குழந்தை பிறந்ததும் சில நாட்கள் கழித்து ரோஜாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று சில நாட்கள் போல் சீராட்டி தான் அனுப்பி வைத்தான். ஸ்ரீநிதியும் அதனை மனமுவந்து தோழிக்கு செய்ததில் கயல்விழிக்கு அத்தனை திருப்தி.
கயல்விழி பேச்சிற்கு அந்த வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. இனி ரோஜாவிற்கு அண்ணன் வீடென்று ஒன்று உரிமையாக செல்ல முடியும் அல்லவா?
“ரோஜா…” என்று மீண்டும் அழைக்க அங்கே அவள் இல்லை.
முதல் தளத்தில் இருந்து இரண்டாம் தளம் செல்ல அங்கே கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“உங்க பேபின்னதும் இது இறுக்கமோ? இதுக்கு பேர் தான் டைட் ஹக். எனக்கு நீங்க செய்யும் போது? நீங்க பண்ணா லவ், நான் பண்ணா பேபி பாவமா?…” என்று அவள் கண்ணடிக்க நொடியில் அவளின் செயலில் தடுமாறி,
“யூ ஆர் அமேஸிங் லிட்டில் டெவில்…” என்று வழக்கம் போல சொல்ல,
“தெரியும் தெரியும் போங்க எல்ஈடி அங்கிள்…” என்று பழிப்பு காட்ட குழந்தையை கையில் வாங்கியவன்,
“இதுக்கு தான் முன்னாடியே எடுத்து வைக்கனும்னு சொல்றது….”
“எடுத்து வச்சதை உங்க பொண்ணு கழுத்துல போட்டுட்டா. அவளுக்கு புடிச்சுடுச்சே. அதை எப்படி கிப்ட் பன்றது. என் மருமகளுக்கு புதுசா தான் தருவேன்…” என்று முறைத்துவிட்டு வேறு பார்க்க குழந்தையுடன் சற்று தள்ளி வந்தான் அவன்.
கீழே இறங்கி நடக்கவேண்டும் என்று இறங்கினாள் மூன்றரை வயது ஜனனி. அவளை இறக்கிவிட்டு ஒரு கையை பிடித்துக்கொண்டவன்,
“பேபிக்கு நடக்கனுமா?…” என பேசிக்கொண்டே அவளுடன் நடக்க குழந்தை கையை விட்டுவிட்டு இங்குமங்குமாய் ஓடியது.
ஒருவரின் மேல் முட்டிக்கொண்டு கீழே விழ போக அவர் பிடித்து நிறுத்தி தூக்கிகொண்டான்.
“ஹேய் பார்பி டால். யார் நீங்க?…” என கொஞ்சியபடி அவளிடம் கேட்க குழந்தை விதுரனை காண்பித்தது. விதுரனை பார்த்து எங்கோ பார்த்திருக்கிறோமே என அவன் திகைக்க,
“ஹாய் நிர்மல்…” என்று வந்து கையை நீட்டினான் விதுரன்.
“நீங்க…” என்று இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் குழப்பத்துடன் பார்க்க குழந்தை தந்தையிடம் தாவியது.
“விதுரன், ரோஜாவோட விதுரன்…” என்றதும் பளிச்சென புரிய நிர்மலும் கையை நீட்டி குலுக்கிக்கொண்டான். அதிலும் விதுரன் தன்னை அறிமுகப்படுத்திய விதம் நிர்மலை கவர்ந்தது.
“எப்படி இருக்கீங்க? ரோஜா நல்லா இருக்காளா?…” என்று கேட்கும் பொழுதே ரோஜா வந்துவிட்டாள்.
“என்ன செலக்ட் பண்ணியாச்சா?…” என மனைவியிடம் கேட்டுவிட்டு நிர்மலை பார்க்க,
“ஹாய் ரோஜா, ஹவ் ஆர் யூ?…” என்றதும் ரோஜாவும் மரியாதை நிமித்தம் பதில் சொல்லியவள் அவனையும் அவனின் பிள்ளையையும் மட்டும் விசாரித்துவிட்டு,
“நான் கீழே பில்லிங் செக்ஷன்ல இருக்கேன். வாங்க…” என சொல்லி நகர்ந்துவிட்டாள்.
அவளின் ஒதுக்கத்தில் நிர்மலுக்கு எதுவும் வருத்தம் இருக்க கூடுமோ என விதுரன் அவனை பார்க்க,
“என்னால் புரிஞ்சுக்க முடியுது விதுரன். இட்ஸ் ஓகே. நான் எதுவும் நினைக்கலை. எனக்கு உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். கீப் இன் டச்…” என சொல்லிவிட்டு அவனும் தலையசைத்து விடைபெற்று உள்ளே செல்ல மாடிப்படியில் நின்று அதிர்ச்சியுடன் இதனை பார்த்தாள் பிரஷாந்தி.
ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு லிப்டிற்கு காத்திராமல் படிகளில் அவள் வந்திருக்க விதுரனுடன் நிர்மலை பார்த்து விட்டாள். ரோஜா நகர்ந்ததும் அவர்கள் இருவரும் பேசி விடைபெற அப்படியே நின்றவளை விதுரனும் கண்டுகொண்டான்.
சட்டென ஒரு இறுக்கம் பரவ அவளை நெருங்கியவனின் இதழ்களுள் இகழ்ச்சி புன்னகை.
“என்ன ரொம்ப பயந்து போய் நிக்கற மாதிரி இருக்குதே?…” என அவன் கேட்டதும் லேசாய் அதிர்வுடன் பார்த்தவள் கண்கள் கலங்க,
“அழறியா? அப்ப நிஜமாவே பயம் தான் இல்லையா? எனக்கும் அது தான் வேணும்…” என்று குத்தி கிழிக்கும் பார்வையுடன் சொன்னவன்,
“ஆனா பாரு, நீ என்னை பார்த்து பயப்படறப்போ எல்லாம் இந்த பயம் என் ரோஜாவோட பயத்துல ஒரு பங்கு கூட இல்லை. ம்ஹூம், உன்னோட இந்த பயம் எனக்கு பத்தவே இல்லை…” என்று உறுமினான் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.
ஆம், இன்று வரை ரோஜாவின் அந்த இருள் பயம் மட்டும் ஏனோ விலகவே இல்லை. குழந்தையை வைத்தும் சொல்லி பார்த்தும் பயனில்லை. அந்த பயம் என்பது அவளிடம் ரத்தத்தோடு கலந்துவிட்டிருந்தது.
“காலம் முழுக்க நீ பயந்துட்டே இருக்கனும். இனி நீ என்னோட ரோஜாவோட சிரிப்பை பார்த்தா கூட பார்க்காத மாதிரியே தான் போய்டனும். காட் இட்…” என்று எச்சரித்து அவன் விலகி சென்றதும் தான் நிம்மதியான மூச்சை விட்டாள் அவள்.
“என்ன கிளம்பலாமா?…” என கேட்டு ரோஜாவுடன் வெளியேறியவனை படிகளில் நின்றபடி பார்த்துக்கொண்டே தான் இருந்தாள் அவள்.
ரோஜாவின் முகத்தை பார்க்கும் பொழுது இப்பொழுதும் கூட உள்ளுக்குள் ஏதோ தீயாய் எரியத்தான் செய்தது. ஏன் என்றே தெரியாமல் ஒரு துவேஷம். ஆனாலும் இனி தன்னால் என்ன செய்துவிட முடியும்? கணவன் தேடுவானே என்ற நினைப்பில் மேலே ஏறி சென்றாள் பிரஷாந்தி.
விதுரனும், ரோஜாவும் இத்தனை வருடங்களில் நான்கைந்து முறை சேகரனையும் வளர்மதியையும் பார்த்துவிட்டனர் பொது இடங்களில். பேசாமல் நகர்ந்துவிடுவார்கள்.
ஆனால் சேகரன் அப்படி இருக்கமாட்டார். நெருங்கி வந்து பேத்தியை பார்த்து கொஞ்சிவிட்டு தான் நகர்வார். வளர்மதிக்கு மகளை நெருங்கவே அத்தனை குற்றவுணர்ச்சி. ஆனால் தள்ளி நின்று பார்த்துக்கொள்வார்.
சேகரனை விதுரன் மறுக்கவில்லை. அதே நேரம் பேசவோ ஒரு மன்னிப்பு பார்வையோ எதையும் கொடுக்க மாட்டான். வருகிறாயா வா, பார்த்து செல்கிறாயா செல் இதுதான் அவனின் பார்வை.
சின்னமகளிடம் எத்தனை ஒட்டுதலாய் தேடிதேடி வந்து பார்க்கிறார்களோ அதே அளவு பெரியமகளிடம் தாமரை இலை தண்ணீர் தான். அந்த நிலை மாறுமென காத்திருக்கிறார்கள்.
—————————————————————-
அந்த இரவு நேரம் விதுரனின் வீடு அத்தனை நிசப்தமாய் இருந்தது. விதுரன் மகளும் மனைவியும் கண்டுபிடித்துவிடாத படி வாட்ரோபினுள் தன்னை முடக்கிக்கொண்டு ஒளிந்து இருக்க,
“அங்கிள் அங்கிள் வேர் ஆர் யூ?…” என கேட்டுக்கொண்டே மகளின் உயரத்திற்கு ரோஜாவும் மண்டியிட்டு தவழ்வதை போல விதுரனை தேடிக்கொண்டே நடக்க,
“ஆகில் ஆகில் வேத் ஆத் ஊஊ?…” என்று மகளும் மழலையாய் ரோஜாவை பின்பற்றி சொல்ல ஒளிந்திருந்தவன் வேகமாய் வெளியேறி இடுப்பில் கை வைத்து ரோஜாவை முறைத்தான்.
“ஹைய்யா மாட்டினீங்களா?…” என கை தட்டி சிரிக்க குழந்தையும் அவளை போலவே அரிசி பற்கள் தெரிய கைகொட்டி குதூகலித்தது.
“உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது பேபியை வச்சுட்டு அங்கிள்ன்னு சொல்லாதன்னு. பாரு அவளும் சொல்றா…” என அவளின் காதை பிடித்து திருகியவன்,
“அப்பா சொல்லுடா செல்லக்குட்டி…” என மகளிடம் பாடம் சொல்ல ரோஜாவோ சிலிர்த்துக்கொண்டு,
“கூப்பிடாம இருந்தா அதுக்கும் கத்தறது. கூப்பிட்டா அதுக்கும் கத்தறது. இனி நான் என்னதான் செய்ய?…” என்று அவளும் இடுப்பில் கை வைத்து முறைக்க,
“பேபி ஆனு கோச்சு கோச்சு…” என்று அவர்களை போலவே ஜனனியும் இடுப்பில் கைவைத்து கோபமாய் முறைத்து பார்க்க அந்த அழகில் இருவரும் முறைப்பை விட்டுவிட்டு சேர்ந்து குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள்.
“சரி போதும் சாப்பிடுவோம். வாங்க…” என்று இருவரையும் கூட்டிக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து ஜனனியை மேலே அமர வைத்தான்.
சரியாய் அதே நேரம் கயல்விழி வீடியோகாலில் அழைத்து விட பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்ததும் ரோஜாவிற்கு காபியை போட்டவன் தனக்கும் குழந்தைக்கும் பாலை ஆற்றி குடித்து விட்டு ஜனனியை தோளில் போட்டு தூங்க செய்தான்.
சில நிமிடங்களில் குழந்தையும் தூங்கிவிட உறங்க வைத்துவிட்டு வந்தவன் ரோஜா ஸ்ரீநிதி, விலாசினி, சங்கவியுடன், கான்பரன்ஸ் காலில் இருப்பதை பார்த்தவன் அவளருகே அமர்ந்தான்.
அமைதியாய் அமர்ந்திருக்கும் அவனை பார்த்ததும் நம்பாத பார்வையை கொடுத்தபடி அவள் இருக்க சோபாவை தட்டிக்கொண்டே,
நீராக உன்னுடல் நெளியுது வளையுது மூழ்கவா…
தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா…
என பாடி ரோஜாவை பார்க்கவும் புன்னகையுடன் அவனை பார்த்தபடி மொபைலை அணைத்து தூர வைத்தாள். உடனே அவனை மடிதாங்கியவள்,
“அந்த கனவை சொன்னது தப்பா போச்சு. எப்போ பார்த்தாலும் பாடறீங்க. படுத்தறீங்க அங்கிள்…” என அவனின் கன்னத்தை பிடித்து ஆட்ட காதலாய் புன்னகைத்தான் விதுரன்.
அந்த கனவை பன்றி சொன்னதில் இருந்து விதுரன் அதை தவிர வேறு எந்த பாடலும் பாடுவதில்லை. இந்த வரிகளை பாடினால் ரோஜாவிற்கும் எந்த வேலையும் ஓடாது.
அவனை பார்த்த நிமிடத்தில் இருந்து எதையும் யோசிக்காமல் அவன் மீது காதலானவள் இப்பொழுது அவனின் கண்மூடித்தனமான காதலில் திளைத்துக்கொண்டிருந்தாள்.
ரோஜா கொண்ட காதல் அவளுக்கான வாழ்க்கையை விதுரனாய் கொடுத்தது. விதுரனின் வாழ்க்கை அவனுடைய காதலாய் ரோஜாவை கொடுத்தது. இருவரின் வாழ்க்கை அவர்களுக்கான அழகான குடும்பத்தை பரிசளித்தது.