ஆர்கலி முன்னே முகமெல்லாம் நிறைந்து போன ஒரு முறுவலுடன் நடக்க, பின் நடந்தவனுக்கும் அதே நிலை இத நிலைதான். அவளுடன் இணைந்து நடக்கத் துவக்கியவனிடம்,
“என்ன பண்ணின… இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி..?” என்று அவன் கட்டிக்கொண்டதைக் கேட்க,“ஹ்ம்ம்.. அது நீ அமெரிக்கா போனப்ப உன்னை இப்படி இந்த டிரஸ்ல பார்க்கறப்ப கொஞ்சனும்னு தோணிச்சு… அப்ப முடியல அதான் இன்னிக்கு…” என்று சிரித்தபடி கூற
“இதான் கொஞ்சுறதா..?”
“இது கொஞ்சல் இல்லன்னா… அப்போ எப்படி கொஞ்சுறதுன்னு என்னைக் கொஞ்சிக் காட்டு…” என்று அவன் கொஞ்சலாக கேட்க
“கொஞ்சுற அளவுக்கு நீ ஒன்னும் பண்ணல போ..” என்றவளின் பார்வை பார்க்கிங் ஏரியா வரவும் அங்கிருந்த ஒரு புத்தம் புது கருப்பு நீற ஜீப்பின் மீது பாய,
“ஹே..! அங்க பாரேன் செமையா இருக்கு… புது ஜீப் போல..” என்று சொல்லியபடி நடக்க, “சரி சரி வா…” என்றுகண்டுகொள்ளாது முன்னே நடந்தவன் அந்த ஜீப்பின் அருகே போக, அவன் கள்ளப்பார்வையில் அவனைக் கண்டுகொண்டவள்,
“ஜீப்… நீ வாங்கினியா..?” என்று சரியாகக் கேட்க“நான் தான் வாங்கினேன்… உனக்காக…” என்று சொல்ல
“ப்ச்… என்ன நீ எனக்குஉன்னைத் தவிர எதையும் வாழ்க்கையில கூட வைச்சு வாழனும் அனுபவிக்கனும்னு ஆசை கிடையாது.. ஏன் வீண் செலவு..” என்று சொல்ல
“என்னத்துக்கு சம்பாதிக்கிறோம்.. செலவு செய்ய தானே..?
“எவ்வளவு ஆச்சு..?”
“அதெல்லாம் சொல்ல மாட்டேன்… என்னடி இப்படி இம்சை பண்ற… முதல்ல ஏறு உன்னைத் தான் ஃப்ர்ஸ்ட் ஏத்தனும்னு ஒரு வாரமாஎடுக்காம சுத்தினேன்…” என்றவன் ஜீப்பில் லக்கேஜை ஏற்றி விட்டு அவளைப் பார்க்க, அவளோ போனில் ஜீப்பின் விலை விவரம் பார்த்தவள்,
“ஏய்… என்ன இது பத்து லட்சம் மேல வருது? இதுல இரண்டு கல்யாணம் பண்ணிடலாம். என் தங்கச்சிங்களுக்கு மொத்தமா ஃபீஸே கட்டிடுவேன் நான்..” என்றவளை காதலாக, மரியாதையாகப் பார்த்தவன்,
“இதுக்காக தான் வாங்கினேன்.. அப்ப கூடஉன் தங்கச்சிங்களுக்கு செய்யனும்னு தானே தோணுது. உனக்குன்னு நீ எதுவுமே ஆசைப்பட மாட்டேங்கிறியே அதான்..” என்றவன்,
“ஒழுங்கா ஏறு… இவ்வளவு கேள்விலாம் கேட்காத….. காசு கொடுத்த வரதன் கூட இப்படி கேட்கல..” என்று அவளை முறைத்தான்.
அவனுக்காக அதில் ஏறி அமர்ந்தாள். முதல் முறையாக வாழ்க்கையில் ரசித்த ஒரு விசயத்தை அனுபவிக்கிறாள். அந்த அனுபவம் தந்தவன் அருகில் இருக்கிறான். அவளுக்குள் நிறைந்துவிட்டநிம்மதி நிலை.
“ஆமா….. நீ நைட்டெல்லாம் தூங்கவே இல்லையா..? எனக்காகவா..?”
“அது உன்னைப் பார்க்காம இருக்க ரொம்ப கஷ்டம்… எனக்கு ரொம்ப பிடிச்சது முதல்ல வரதன். அடுத்து நீ ஷ்யாம், மாணிக்கம், மாஸ்கோ எல்லாரையும் பிடிக்கும். ஆனா நீங்க இரண்டு பேரும் எனக்கு ரொம்ப முக்கியம்… எப்படி சொல்றதுன்னு தெரியல. வரதனை நான் பிரிஞ்சதே இல்ல… அதுவும் இவ்வளவு நாள் எல்லாம்..”
“எல்லாருக்கும்நீதான் பேர் வைச்ச மாதிரி பெயர் சொல்லிக் கூப்பிடுற….” என்றவள் அவனை கோபமாகப் பார்க்க,
“ஹாஹா எனக்குப் பழகிடுச்சுடி..” என்றவன் ஜீப்பை எடுக்காமல் அவள் முகம் பார்த்தவாறே,
“முதல் தடவ இப்படி ஒரு விஷயம் அனுபவிக்கிறேன். நிஜமா ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… முதல்ல நீ சொல்லாம போன்னன்னு கோபம் இருந்தாலும்என்னை மாதிரி தானே நீயும் கஷ்டப்படுவன்னு புரிஞ்சது..” என்றான் முதல் முறையாகப் புரிதலோடு.
அதனைக் காதலோடு கண் நோக்கினாள் ஆர்கலி ஜீப்பை ஸ்டார்ட் செய்தவன், விசிலடித்தபடி அதனை இயக்கினான். மியுசிக் ப்ளேயரை ஆன் செய்தவன், பாடலை ஒலிக்க விட்டான்.
‘ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே..’
ஆர்கலிக்கு இது புதுவிதமான அனுபவம். அந்த நிசர் நேரத்தில் நிலவின் வெளிச்சத்தில், அதன் நிழலில், வாடையின் வகத்தில், பயணம் செய்வது இதுவே முதல் முறை. இரவில் பேருந்தில் போயிருக்கிறாள். ஆனால் உறங்கிடுவாள். இது போன்ற தனிமை கிடையாது. இதில் நிலவும் இனிமை கிடையாது.
தாய்மொழி கவிதையெனத் தென்றல் அவளைத் தாலாட்டிட, குளிரில் தன் ஹூடியை நன்றாகப் பிடித்துக் கொண்டவள் பிடித்தவனை தான் பார்த்தாள்.
“தேங்க்ஸ் இப்படி ஒருநாள் கூட நான் போனதே இல்ல.. ஏன் போகனும்னு ஆசைப்பட்டது கூட இல்லை….. ஆனா நீ நிறைவேத்திட்ட…. என்ன செய்யப் போறேன் உனக்குன்னே தெரியல…”
“அன்னிக்கு ஒரு நாள் வைச்சியே மட்டன் குழம்பு.. அது மாதிரி வை…” என்றவனை அதுவரையில் அகமெல்லாம்நிறைந்த காதலோடு பார்த்தவள் கடுப்பாகப் பார்த்தாள்.
“சோத்து மூட்ட…” என்று திட்ட“ஹாஹா…!” என்று அவன் அந்த நள்ளிரவில் சத்தமாக சிரிக்க,
“ஏன்டா… இப்படி அர்த்த ராத்திரியில கத்துற… எவ்வளவு ஆசையா பேசினாலும் உனக்கு எப்பவும் சோறுதானா..?” என்றாள் நிஜமான கோபத்துடன்.
“அது என்னோட இருபது வயசு வரைக்கும் ரொம்ப வேலை செய்வேன்… அதுவும் பதினைஞ்சு வயசு வரைக்கும் மார்க்கெட்ல இருந்தேன்….. மூட்டைத் தூக்கனும்… லோட் இறக்கனும்… நடு ராத்திரில லோட் வந்து இறங்கும்… வேற ஊருக்குப் போற லாரில லோட் ஏத்திட்டு கூட போயிருக்கேன்.. அப்பவெல்லாம் தூக்கமே இருக்காது. நிறைய உடல் உழைப்பு உள்ள வேலை இல்லையா… அதனால பசிக்கும், அப்படியே நல்லா சாப்பிட்டே பழகிட்டேன்… எந்த ஊர்ல என்ன இருந்தாலும் சாப்பிடுவேன்…” என்றான் இயல்பாக.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் போன்ற பாவமெல்லாம் இல்லை. தன் கதையை சொல்லும் சாதாரண நிலையில் தான் சொன்னான்.
வழியில் ஒருஹோட்டலில் அவன் வண்டியை நிறுத்த, அந்த நள்ளிரவிலும்மக்கள் நடமாட்டம் இருந்தது.
“ஏன்இங்க நிறுத்துற…?” என்றவளிடம்
“மணி ஒன்றரை ஆகுது…. நைட் நீ எப்ப சாப்பிட்டியோ. போக இன்னும் ஒன்றரை மணி நேரமாகும்… அதனால் வா ஒரு காபி குடிச்சிட்டுப் போகலாம்..” என்று ஜீப்பை ஓரங்கட்டினான்.
“நான் காபியெல்லாம் குடிக்க மாட்டேன்…”
“ஓஹ் டீ… அதுவுமில்ல இல்ல…. ஏன் டி நீ எதுவும் குடிக்க மாட்ற…?”
“பிடிக்கல…. இப்ப எனக்கு எதுவும் வேண்டாம். இங்கு நின்னு டைம் வேஸ்ட் பண்றதை விட்டு நீ ஜீப் எடு.. நம்ம வீட்டுக்கே போயிடலாம்..” என்று மறுக்க,
“என்ன பிடிக்கல…. வீட்டுக்கு நடு ராத்திரில போவோம்… உன் அருமை தங்கச்சிங்க இரண்டும் தூங்கும்…. உங்க அம்மா எது கொடுத்தாலும் நீ சாப்பிட மாட்ட…. ஏதோ ஒரு பாசக்கார தம்பி இருந்தான் அவனும் பெங்களூர்ல இருக்கான். நீயே போய் என்ன செஞ்சு சாப்பிடுவ…”
“இங்க பாரு இந்த வேண்டாம் பிடிக்காதெல்லாம் உங்கப்பா கிட்ட வைச்சுக்கோ. அவர் தான் ஆருன்னு செல்லம் கொஞ்சிட்டுத் திரிவார்… எங்கிட்ட அதெல்லாம் நடக்காதுடி… எப்படி இருக்க நீ…? எவ்வளவு இளைச்சுப் போய் சாப்பிடுவியா இல்லையா…?” என்று அதட்ட,
“என்னது கொஞ்ச மாட்டியா… அப்போ ஏர்ப்போட்ல செஞ்சது..?” என்று அவள் கேட்க
“அதெல்லாம் கொஞ்சறது இல்லன்னு சொல்லிட்ட தானே… பேச்சை மாத்தாதடி….. ஒழுங்கா வந்து நீ சாப்பிடுற… இல்லன்னா நான் வண்டியை எடுக்க மாட்டேன்..” என்று பிடிவாதமாக உட்கார்ந்திருக்க
“நடுராத்திரிலசாப்பிடு சாப்பிடுன்னு டார்ச்சர் பண்ற..” என்று அவள் புலம்பினாலும் அவன் அசையவே இல்லை.
பதினைந்து நிமிடம் யார் விட்டுக்கொடுப்பர் என்று தெரியாமல் கழிந்துவிட, ஆர்கலி தான் அவனின் அன்பிற்கு இறங்கி வந்தாள். அவளருகே இறங்கி நடந்தவன்,
“எப்போவுமே நீ டீ காபி எல்லாம் குடிக்க மாட்டியா… ஏன்.?” என்று கேட்க
“அது சின்ன வயசுல என் சித்தி எனக்குக் கொடுத்த தண்ணில கொஞ்சுண்டு பால் ஊத்திட்டாங்க… கேட்டதுக்கு அவங்க வீட்டுக்கார் சம்பாதிக்கிறது அவங்க பசங்களுக்குத் தான் வாங்க முடியும் சொல்ல… என் தாத்தாவும் ஆத்தாவும் அவங்களோட சண்டை போட… அந்த டீயால தானே அவ்வளவு பிரச்சனைன்னு அத்தோட விட்டுட்டேன்…. பாலைத் தொடுறதே இல்ல…. எங்க தாத்தா எவ்வளவோ சொல்லியும் கேட்கல நான்..” என்று அவனிடம் காரணத்தை மறைக்காது சொன்னாள்.
காரணம் காதல்…!
“நானா இருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா… இருக்கிற எல்லா பாலையும் டெய்லி காலி பண்ணி விட்டிருப்பேன்… நீ என்னடான்னா இப்படி பண்ணிட்ட லூசு..” என்றான் செல்லமாக.
இருவரும் போய் அந்த வெட்ட வெளியில் போடப்பட்டிருந்தநாற்காலியில் உட்கார்ந்து கொள்ள, பெரிய கடையெல்லாம் இல்லை. காபி டீ இன்ன பிற மட்டுமே இருக்க, இருவருக்கும் காபி வாங்கிக் கொண்டு வந்தவன்,ஒரு கப் காபியை அவளிடம் கொடுத்து விட்டு,
“கையில வைச்சிக்கோ…” என்று சொல்லி அவனது காபியை சிறிது நேரத்திலேயே காலி செய்துவிட்டான். பின் அவள் கையில் இருந்த காபியை வாங்கி, அதை குடிக்கும் பதத்திற்கு ஆற்றியவன் அவள் கையில் கொடுத்து,
“குடி… இந்த கடை காபி செம வாசனையா இருக்கும்… நான் ஏர்ப்போர்ட் பக்கம் வந்தாலே இங்க காபி குடிக்காம போக மாட்டேன்…” என்று சொல்ல
“நான் தான் குடிக்க மாட்டேனே…. எனக்கு எதுக்கு….?” என்று அவள் மறுக்க,
“எனக்காக என்ன செய்றதுன்னு கேட்ட தானே… இதை செய் இங்க பாருடி உனக்குப் பிடிக்கலன்னு நீ விட்டா அது வேற… அவங்க சொன்னாங்கன்னு இவங்க ரோஷத்துல விட்டாங்களாம்… பாரு உன் தங்கச்சிங்க எல்லாம் உன்னை விட புஷ்டியா இருக்காங்க. நீ பாரு குச்சிக்குக் கோட் போட்ட மாதிரி இருக்க….” என்று திட்டினான்.