“அய்யோ நான் குடிச்சு ரொம்ப வருஷம் ஆகுது… இப்ப ஒத்துக்குமோ என்னவோ…. ப்ளீஸ் வேண்டாம்…” என்று மறுக்க
“அதெல்லாம் கிடையாது… ஒத்துக்கலன்னா ஒத்துக்க வைக்கனும்…. குடி என்ன ஆனாலும் நான் பார்த்துக்கிறேன்… முதல்ல அந்த வாசனையைப் பாருடி… அப்படியே அந்த காபி கொட்டை வாசனை எப்படி இருக்கு…. எனக்காக குடி….” என்று மல்லுக்கட்டி அவளைக் குடிக்க வைத்தான்.
“ப்பா இம்சைடா நீ…” என்றாள் காபி குடித்து விட்டு வாயைத் துடைத்துக்கொள்ள,
“இனிமே கவலைப்படாத… நம்ம வீட்டுக்கு வந்ததும்.. காலையில பெட் காபி நான் தரேன்…” என்று சொல்ல அவனை அன்போடு பார்த்திருந்தாள்.
ஆர்கலிக்கோ அலைபாய்தல் இல்லை. அலைப்புறுதல் இல்லை. அகமெல்லாம் அன்பின் அருவி மட்டுமே. பேரிரைச்சலோடு. இவன் பெயரோடு. இப்படி ஒரு அமைதியை அவள் வாழ்வில் கண்டதே இல்லை. எப்போதும் ஒரு கோபம் எரிச்சல் எல்லாம் இருக்கும். மையலின் மாயத்தில் அதெல்லாம் மாயமாயின.
நாற்காலியை அவன் அருகே இழுத்துப் போட்டவள் அவன் கையை இறுகப்பற்றிக் கொண்டு உட்கார்ந்தாள். அவள் செயலில் அவன் நெஞ்சோரம் தேவாரம் இசைத்தது. அவள் தோளில் கைப்போட்டபடி இருந்தவனிடம்,
“இன்னிக்கே வா…?” என்று அவன் ஆச்சரியப்பட, “ஆமா… இப்பவே எனக்கு இருபத்தேழு ஆச்சுடா…”
“நீயெல்லாம் பேச வேண்டாம்… நீ எங்கிட்ட பேசறதோட நிறுத்திக்கோ… வரதன் பேசுவார்…” என்றான் முடிவாக.
சிறிது நேரம் அப்படியே அந்த சில்காற்றினில் சிந்தை மகிழ்ந்து இருந்தவளை, “போகலாம் வா.. அப்புறம் விடிஞ்சிடும்…” என்று சொல்லிநெப்போலியன் அழைத்து போக, என்னதான் முயன்றாலும் ஆர்கலிக்கு உறக்கம் வந்துவிட அப்படியே ஜீப்பில் சாய்ந்து உறங்கிவிட்டாள்.
இவனும் பாட்டை நிறுத்திவிட்டு, அமைதியாக வண்டியை செலுத்தினான். காஞ்சிபுரம் வரவும் தான் எழுப்பினான். அன்று இரவே வரதராஜனிடம் பேசினான் நெப்போலியன்.
“டாடி நைனா…. எப்போ போய் மாணிக்கத்துக்கிட்ட பேச போற..”
“என்ன பேசனும்..?”
“என்ன பேசனுமா…இரண்டு வருஷமா. கல்யாணம் பண்ணனும், பேரக்குழந்தைப் பார்க்கனும்னு அதே புலம்பிட்டு இப்ப இப்படி சொல்ற…?” என்று அவன் கடுப்போடு அவரைப் பார்க்க,
“இப்பவும் அதே தான்… ஆனா நான் போய் பேச மாட்டேன்…. நீயே போய் பேசு…” என்றார்.
“என்ன நான் பேசனுமா… என்னத்துக்கு அப்போ நீ இருக்க..?” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“ம்ம்… இப்ப அந்த பொண்ணோட ராசியாகிட்ட சரி… ஆனா அது அமெரிக்கா போகுதுன்னு சொல்லியும் பேசாம அழுத்தமா தானே இருந்த… அவ்வளவு திமிர் உனக்கு இருக்குதுதானே..? நான் இன்னிக்குப் பேசிட்டு வந்துட்டு நீ நாளைக்கு சண்டை போட்டா…. நீ போய் முதல்ல அவர்கிட்ட பேசு… பொண்ணு கொடுங்கன்னு கேளு அந்த பொண்ணா வந்து துரைக்கிட்ட பிடிச்சிருக்கன்னு சொல்லனும். நான் போய் இவருக்காகப் பொண்ணு கேட்கனும்… நீ சொகுசா இருப்பியோ… நீயா போய் கேட்டா தான் அதோட அருமை தெரியும்.. போடா… போடா..” என்று அவர் முடிவாக சொல்லிவிட,
“என்ன எனக்குப் பேச தெரியாதா…? நம்ம மாணிக் தானே..? பாருய்யா நாளைக்கு நான் பேசுறதை..” என்று அவரிடம் கோபமாகப் பேசினான்.
ஆனால் அடுத்த நாள் காலையில் மாணிக்கத்திடம் பேச திணறித் திண்டாடினான். இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரைக் காலையிலே வணங்கி விட்டு, கடைக்குப் போனவன் மாணிக்கத்தை உள்ளறைக்கு அழைத்தான். உடன் வரதராஜனும் இருந்தார்.
“மாணிக்கம் எனக்கு உங்கக்கிட்ட பேசனும்..” புதுவிதமாக ஒரு தயக்கம் வர, அதனுடனே அவன் பேச்சைத் தொடர“எப்போ பெர்மிஷன் கேட்டு எல்லாம் பேச ஆரம்பிச்ச நீ..?” என்று அவர் சிரிப்போடு கேட்க,
“என்னை உங்களுக்குப் பிடிக்குமா..?” என்றான் இன்னும் தயக்கத்துடன்.
“என்ன வீரா இப்படி சொல்லிட்ட…. என்னோட மகன் மாதிரிஉன்னை நினைக்கிறேன் நான்..” என்றார் பாசத்தோடு.
“ஏன்…?” என்று அவ்வளவு கோபமாகநெப்போலியன் சண்டையிடுவது போல் கேட்க
“என்ன ஏன்…? என்ன ஏன்னு கேட்கிறேன்…. இப்ப கூட மரியாதையா மாமான்னு சொல்லாம மாணிக்கம்னு சொன்னா எப்படி என் பொண்ணை உனக்குத் தரது…” என்று மாணிக்கமும் கோபமாகப் பேச, அவர் பேசிய விதம் திகைப்பினைத் தந்தாலும் அடுத்த நொடி அவரது மொழி புரிந்துவிட, அவனது விழிகளில் ஈரம்.
இருக்கையில் இருந்து எழுந்தவன் மாணிக்கத்தின் அருகில் சென்று அவரைக் கட்டிக்கொண்டான். அவனது கண்ணீர்த் துளி அவர் மேல் பட்டுத்தெறிக்க,
“ஏய் வீரா என்ன இது…!” என்று அவர் பாசமாக அவன் தோளில் தட்டி கேட்க, அவனோ அவரை விட்டு விலகி வெளியே சென்றான்.
“பையன் ரொம்ப பயந்துட்டான் போல சம்மந்தி…” என்று வரதராஜன் சிரிக்க, மாணிக்கமும் இணைந்து நகைத்தார்.
வரதராஜனுக்கு நெப்போலியன் காதல் விவகாரம் தெரிந்த சில நாளிலேயே மாணிக்கத்திடம் அதை சொல்லிவிட்டார். மாணிக்கத்திற்கும்மனதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கவே செய்தது. ஆனாலும் மகளிடம் கேட்காமல் ஒரு முடிவுக்கு வர அவருக்கு விருப்பமில்லை. வரட்டும் பார்ப்போம் என்றுதான் இருந்தார்.
அமெரிக்காவில் இருந்த அவனுடன் வந்திறங்கிய காலையில் மகளது பார்வை நெப்போலியனைப் பார்ப்பதைக் கண்டவருக்கு அவளது மனம் புரிய, சில தடை இருந்தாலும் இதற்குத் தடை சொல்ல அவர் விரும்பவில்லை.
அவர்கள் வேறு இனம் என்று தெரியும். இதனால் தம்பி மகள்களுக்குத் திருமணத்திற்குப் பார்க்கையில் ஏதாவது சலசலப்பு ஏற்படும் என்று தெரியும். ஊரில் பங்காளிகள் எதாவது சொல்வார்கள் என்ற எல்லாம் புரிந்தாலும் மகளது மனமே, அவளது சந்தோஷம் மட்டும் அவருக்கு மிக மிக முக்கியமாகப் பட, என்ன வந்தாலும் எதிர்க்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தார்.
நெப்போலியனுக்கு ஆர்கலி காதல் சொன்ன போது கூட இல்லாத ஒரு நிம்மதி இப்போது. அவர் பார்த்த மாப்பிள்ளைகளுக்கு இவன் கொஞ்சமும் ஈடாக மாட்டான். ஆர்கலி ஒத்துக்கொள்வது வேறு. அது காதல்..!
வரதராஜனோடு பல காலம் பழகிய நண்பர்களே, அவர்களுக்காக வரதராஜன் நிறைய செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர்களே முகத்தாட்சண்யம் பார்க்காது இவனை வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றனர். ஆனால் மாணிக்கம், அவர் மகளுக்காக என்றாலும் கூட மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கொண்டாரே. அது அவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை தந்தது.
கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அறைக்குள் சென்றவன், “எனக்கு உங்களுக்கு எப்படி..” என்று அவன் திணற,அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டவர்,
“நீ என் பொண்ணை என்னைவிட நல்லா பார்த்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு வீரா…” என்றார் மன நிறைவுடன்.
“அப்புறம்என்ன…. நாளைக்கு வேற நாள் நல்லா இருக்கு. நாளைக்கு சாயங்காலமே நாங்க வீட்டுக்கு வரோம் சம்மந்தி…. அடுத்த மாசத்துக்குள்ள கல்யாணத்தை முடிக்கனும்..” என்று வரதராஜன் சொல்ல,
“யோவ் என்ட்ட பேசாதய்யா… என்னை ஏமாத்திட்ட இல்ல…” என்று அவரைக் கட்டிக்கொண்டான் பெருமகிழ்வோடு.
“மாப்பிள்ள… நீயும் உன் மார்கழியும் எங்களை ஏமாத்தினதை விடவா…?” என்று மாணிக்கம் கிண்டல் செய்ய, அசடு வழிந்தான் மாவீரன்.
அன்று மாலை மகளிடம் சென்ற மாணிக்கம், “ஆரும்மா… நாளைக்கு உன்னைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டு காரங்க வராங்கடா…. ரெடியா இரு..” என்று சொல்ல
“என்னப்பா யார்…? போட்டோ கூட காட்டாம இப்படி சொன்னா எப்படி..? எனக்கு இஷ்டமில்ல..” என்று உடனே மறுத்துவிட, “அதெல்லாம் கிடையாது அப்பா சொல்றதைக் கேட்கனும்…” என்று மிரட்டிப் பேச,
அவர் முகம் பார்த்தவள், “அப்படியா உங்க மாப்பிள்ளையை வர சொல்லுங்க..” என்று சொல்ல, அவர் அதிர்ந்து போய் மகளைப் பார்க்க
“என்னப்பா பார்க்குறீங்க? அதான் வர சொல்லிட்டேனே உங்க மாப்பிள்ளை என்னை தெருவில நின்னு சண்டை போட்டு கூடபார்த்திட்டான்… ஸோ புதுசா பார்க்க என்ன இருக்கு..?” என்று முகமெல்லாம் பூரிப்போடுசொல்ல,
“கண்டுபிடிச்சிட்டியாடா…?” என்று அவரும் மனம் விட்டு சிரித்தார்.
மகளின் சிரிப்பு அவரை அவ்வளவு சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்க, சத்தமாக ஒரு சந்தோஷ சிரிப்பு.
“ஆமா…. என் அப்பா எனக்குப் பிடிக்காததை செய்ய மாட்டார்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி உங்க மாப்பிள்ளையும் இந்த நேரம் எப்படியும் பேசியிருப்பான்னு தெரியும். ஆனாலும் சொல்லவே இல்ல இரண்டு பேரும் கூட்டு களவாணிங்க..” என்று செல்லமாக அவள் முறைக்க, மகளை அணைத்துக் கொண்டு முத்தமிட்டார் மாணிக்கவாசகம்.
“உனக்கு முழுசா சந்தோஷம் தானேடா…? அப்பாவுக்கு ஒரு டவுட் இருந்துச்சு… ஆனாலும் சந்தோஷம்டா உனக்கு எந்த குறையும் இல்ல தானே?” என்றுநெப்போலியன் சம்மந்தமாகக் கேட்டு வைக்க,
“எனக்கு சந்தோஷம் மட்டும் தான்ப்பா இருக்கு. குறையெல்லாம் இருந்தா கூட அவனை என்னால விட முடியாதுப்பா..” என்றாள் உறுதியாக.
“தேங்க்ஸ் ஸோ மச்ப்பா..” என்ற ஆர்கலிக்கும் மனம் நிறைந்து போயிருக்க, அன்று அவர்கள் வீட்டில் ஒரே சந்தோஷம் தான். காயத்ரிக்கும் ஷாலினிக்கும் கூட நெப்போலியன் மாப்பிள்ளையாக வருவதில் மகிழ்ச்சி இருந்தது.
ரவிவர்மன் கூட, “ஆல் தி பெஸ்ட் அத்தப்பொண்ணு..” என்று குறுஞ்செய்தி தட்டி இருந்தான். ஆனால் இது பிடிக்காத ஒரே ஆள் ரஞ்சித் தான். என்னவோ அக்காவிற்கு இன்னும் பெட்டர் அண்ட் பெஸ்டாக அவன் எதிர்ப்பார்த்தான்.
படித்து, நல்ல வேலையில் ஒரு ஹை ஃப்ரோஃபைல் மாப்பிள்ளையாக அவன் நினைக்க, நெப்போலியன் அவனின் கற்பனைக்கே வராத ஒருவன். அதனால் அடித்து பிடித்து பெண் பார்ப்பது முடிந்த அடுத்த நாள் அவன் சனிக்கிழமை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தவன் அக்காவை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பேசினான்.
அவனது கவலை வேறு. ஒருவேளை திருமணம் தள்ளிப்போகிறது வயதாகிறது. இல்லை பணக்கஷ்டம் என்பதால் ஆர்கலிநெப்போலியனைத் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டிருக்கிறாளோ என்பதாக அவன் கற்பனை நீண்டிருக்க, மனதே கேட்கவில்லை.
அக்காவிடம், “அக்கா…. என்ன பிரச்சனை உனக்கு….? நிஜமா உனக்கு அந்த அண்ணாவைப் பிடிச்சிருக்கா..?”
“பிடிச்சிருக்குடா..” என்று சிரித்தபடி பொறுமையாகவே பதில் சொன்னாள் ஆர்கலி. அவனது அக்கறை அவளுக்குத் தெரியுமே..!
ஆனாலும் அவன் விடவில்லை.
“அக்கா… உண்மையை சொல்லு…. அவர் உன்னை எதாவது மிரட்டினாரா…? இல்ல நீ எப்படிக்கா அவரை…..? வேற யார்னாலும் பரவாயில்ல….. எதுனாலும் நான் இருக்கேன்கா… சொல்லு…” என்று டென்ஷனாகப் பேச,
“ரஞ்சி நிஜமா எனக்குப் பிடிச்சு தான்டா கல்யாணம் நடக்குது… நீதானே சொன்னா உன் மனசுக்குப் பிடிச்சதை செய். உன் வாழ்க்கைன்னு…”
“சொன்னேன் தான்… ஆனா இதுவா உன் மனசுக்குப் பிடிச்சது? அவர் ஸ்கூல் பக்கம் கூட போனதே இல்ல… உனக்கு அவர் பொருத்தமே இல்லக்கா…” என்றான் வருத்தமாய்.
“டேய் நீ சொல்றதெல்லாம் சரிதான்…” என்று தம்பியிடம் அவள் எடுத்து சொல்கையில், ஷ்யாம் வீட்டு மொட்டை மாடியில் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தால் நெப்போலியன் அங்கே விழிகள் சிவக்க நின்றிருந்தான்.
அவன் பார்வையே எல்லாம் அவன் கேட்டிருந்தான் என்று சொல்ல, அவன் இவளைப் பார்த்தவாறே கீழிறிங்கி செல்லப் போக,
“நெப்போலியன்… நில்லு நில்லுன்னு சொல்றேன்ல…” என்று அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அவன் கீழே போய்விட“ச்ச… போடா…!” என்று தம்பியிடம் நொந்து கொண்டாள்.