ரம்யா தன் பின்னால் கத்துவது கூட கேட்காமல் வேகமாக அந்த மண்டபத்தை நோக்கி ஓடினால் தேஜஸ்வினி. அந்த இடத்தை அடைந்ததும் அதுவரை இருந்த கவலை மறைந்து புத்துணர்ச்சி பெற்றது போல் உணர்ந்தாள்.
மண்டபத்தை நோக்கி அடுத்த அடி வைப்பதற்குள் ரம்யா அவளை இழுத்து “பைத்தியம் ஏதாவது பிடிச்சு இருக்கா என்ன…. தைரியமா இருக்கிறவங்க யாருமே இந்த இடத்துக்கு வர மாட்டாங்க நீ சும்மாவே பயப்படுவ இந்த இடத்துக்கு வந்து என்ன பண்ண போற வா டி நைட் சென்னை கிளம்பனும்ல வா அதுக்கு ரெடி பண்ணலாம்” என்று அந்த இடத்தை விட்டு வராதவளை இழுத்து கொண்டு வீடு வந்தால் ரம்யா.
சில மணி நேரங்கள் கழித்து,
ரம்யா “தேஜூ எதுக்கு டி அந்த இடத்துக்கு போன” என்றதும் அமைதியாக இருந்தவள் பின் அவள் முகத்தை பார்த்து “தெரியலை ரம்யா அந்த நேரம் எனக்கு அங்க போகனும் போல இருந்துச்சு. எனக்கு வேண்டியதை காப்பாத்தனும் போல இருந்துச்சு. எனக்காக எதோ ஒன்னு தவிச்சா மாதிரி இருந்துச்சு” என
“என்ன டி என்ன என்னமோ சொல்ற வர வர ரொம்ப சீரியல் பார்த்து கெட்டு போய்ட்ட அதில தான் நீ சொன்னது எல்லாம் வரும்” என்று நொடித்துக் கொள்ள, கல கலவென சிரிக்க ஆரம்பித்தால் தேஜூ.
அவளின் சிரிப்பு சத்தத்தை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த பொன்னி “என்ன அதிசயம் என் பொண்ணு வாயெல்லாம் பல்லா இருக்கு” என
“அம்மா….. ” என்று சிணுங்கி கொண்டே தாயை கட்டிக் கொண்டாள்.
“என் செல்லம் இதே மாதிரி வாழ்க்கை முழுசா சிரிச்சிட்டே இருந்தா போதும் டா எனக்கு….. சரி நைட் கிளம்ப தேவையானதை எல்லாம் எடுத்து வெச்சிக்கிட்டியானு பாரு அம்மாடி ரம்யா கொஞ்சம் புள்ளைக்கு உதவி பண்ணு” என
“அம்மா அதெல்லாம் நேத்தே நானும் அண்ணாவும் எடுத்து வெச்சிட்டோம் இன்னும் இங்க இருக்கிற முக்கியமான பேப்பர்ஸ் மட்டுமே பாக்கி” என்று பையில் அடுக்கி கொண்டே கூற
“நீ குழந்தை எல்லாம் கிடையாது தான் வளர்ந்துட்ட தான் உங்க அண்ணா அப்பா சொல்றா மாதிரி வெளி உலகத்தை பார்க்கனும் தான் எனக்கு எல்லாம் புரியது இருந்தாலும் உன்னை பார்க்காமல் எப்படி இருக்க போறோம்னு தான் தெரியலை” என்று கண்ணீரோடு சொல்ல,
ஒரு நிமிடம் வேலையை தூக்கி போட்டு தாயிடமே இருந்து விடலாமா என்று நினைத்த மனதை கொட்டி வைத்து அடக்கி “அம்மா…. என்ன குழந்த மாதிரி அழுகிற.. . நான் என்ன கண்காணாத ஊருக்கா போறேன் இங்க இருக்கிற சென்னை மா…. கவலைப்படாத தினமும் உன் கூட பேசறேன்…. வீடியோ கால் பண்ணலாம்” என பல சமாதானம் சொல்லி தாயை சமாளித்தாள்.
இரவு, பேருந்து நிலையம் தேவேஷ் “குட்டி பத்திரமா இருக்கனும் எதுக்கும் பயப்பட கூடாது தைரியமா உன்னை நீ தான் பார்த்துக்கனும் ஒழுங்கா சாப்பிடு நேரத்துக்கு தூங்கனும்” என அட்வைஸ் மழையாக பொழிய
“டேய் போதும் நிறுத்து…. என் பொண்ணுக்கு தெரியும் நீ முதல தள்ளு…..” என்று தேஜூவிடம் வந்து “உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியது இல்ல இருந்தாலும் ஒன்னே ஒன்னு சொல்றேன் தைரியமா இருக்கனும்” என பேருந்து கிளம்ப தன் தந்தை அண்ணா விற்கு கை அசைத்து தன் வாழ்வின் முக்கிய அத்தியாயத்தை நோக்கி சென்றாள்.
இரண்டு நாள் கழித்து,
கௌசல்யா “தேஜூ ஆல் தி பெஸ்ட்… இன்றைக்கு தான் முதல் நாள். அந்த கம்பெனியில் வேலை கிடைக்கிறது ரொம்ப பெரிய விசயம். கோவிலுக்கு போய்ட்டு போ” என்றால் ஹாஸ்டலில் உடன் தங்கி இருக்கும் தோழி. சென்னை வந்ததும் தேஜூக்கு கிடைத்த முதல் தோழி.
அம்பத்தூர் செல்ல தெரியாமல் வழி மாறி கடைசியாக அம்பத்தூரில் இருக்கும் வர்மா குருப் ஆப் கம்பெனிஸ் க்கு சென்று அந்த ஆறு மாடி கட்டிடத்தில் முதல் அடி எடுத்து வைக்க,
அந்த இடமே பர பரப்பாக அனைவரும் அங்கு இங்கு என்று ஓடிக் கொண்டு, முகத்தில் கவலை அப்பட்டமாக தெரிய ஒன்றும் புரியாமல் மேனேஜர் இருக்கும் அறைக்கு செல்ல,
அங்கு கூடி இருந்த சிலர் “பாவம் நம்ம சர் அவரோட பையன் எங்க இருக்கார்னு தெரியாமல் கஷ்டப்படுறார். அவருக்கு எதுமே ஆக கூடாது” என்று பேசிக்கொண்டே செல்ல,
யாருக்கோ எதே ஆபத்து போல என்று நினைத்து ‘துர்காமா அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நீ தான் காப்பாதனும்’ என வேண்டும் சமயத்தில்,
மேனேஜர் மோகன் வேகமாக இந்த நிறுவனத்தின் எம். டி அறைக்கு ஓட எதுவும் புரியாததால் தேஜூவும் அவர் பின்னே சென்றாள்.
நாராயணன் வர்மா, மேனேஜிங் டைரக்டர் என்ற பெயர் பலகையை பார்த்து வெளியே நின்று விட,
மோகன் “சர் தம்பியோட சாப்பர் சிக்னல் கிடைச்சிருக்குனு சொல்றாங்க. சீக்கிரமா தம்பியை கண்டு பிடிச்சிடலாம்” என சந்தோசமாக சொல்ல,
“அப்படியா மோகன்…. மகமாயி என் பையனை பத்திரமா என் கிட்ட கொடுத்திறு” என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு மேலும் “எங்க இருக்கான் மோகன்” என
“சர் சவுத் அமெரிக்காவில் இருக்கிற எதோ ஒரு மலை அடிவாரத்தில் இருந்து சிக்னல் வருதாம். தம்பிக்கு எதுவும் ஆகாது சர்” என
“உன் கிட்ட சொல்ல என்ன அவன் இந்த தொழிலை பார்த்து கிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்…. அவன் நல்லா இருக்கனும்னு தான் அவனை படிக்க யூ. எஸ் அனுப்பினேன் அவன் படிச்சதும் அங்க இருக்கிற நம்ம கம்பெனியை பார்த்து கிட்டான். இப்ப நான் நம்ம ஊருக்கு வாடா என்றால் வரவே மாட்டன்றான்” என்று பேசிக்கொண்டே திரும்ப கதவின் ஓரத்தில் இருந்த தேஜூ அவர் கண்ணில் பட்டாள்.
“இங்க வாமா” என அவளும் அவர் அருகே செல்ல,
மோகன் “யாருமா நீ” என “குட் மார்னிங் சர் நான் நியூ ஜாயினி” என்று அவளின் ஆடரை காட்ட, நாராயணன் “பெயர் என்ன மா” என்றதுக்கு
“தேஜஸ்வினி சர்” என்று தயக்கத்துடன் சொல்ல
நாராயணன் “மோகன் பார்த்துங்க நான் வெளியே கிளம்பறேன் என்னோட இன்றைய எல்லா மீட்டிங்கையும் கன்சல் பண்ண சொல்லிடுங்க” என்று அவர் கிளம்பி விட மோகன் தேஜஸ்வினி யிடம் அவள் வேலை சம்பந்தமாக பேசிக்கொண்டே அவளை அனைவருக்கும் அறிமுகம் செய்து அவளது கேபினை காண்பித்தார்.
வெளியே வந்த நாராயணன் நேராக சென்றது ஒர் ஆசிரமத்திற்கு.
அங்கு தவத்தில் இருந்த சாமியை பார்த்து அவர் எதிரே அமர,
“வா நாராயணா நீ வருவனு நினைச்சேன் சொல்லு என்ன விசயம்” என்று சாந்தமாக கேட்க,
“சாமி இரண்டு நாளா என் பையன் எங்க இருக்கானே தெரியலை சொந்த நாட்டில் இருந்தால் அவன் உயிருக்கு ஆபத்து னு நீ சொன்னதால் தான் அவனை கண்காணாத இடத்திற்கு அனுப்பி இருக்கோம். அவனை திரும்ப இங்க கூப்பிட்டா வரவே இல்லை. ஒத்த பிள்ளை சாமி எங்களை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டா மாதிரியே இருக்கு” என
“நாராயணா அவன் தாயகம் திரும்பும் நாள் விரைவில் வரும். நான் முன்பே சொன்னது போல் அவனின் முப்பதாவது வயதில் மரண யோகம் உண்டு. அதை அவன் தாண்டும் பட்சத்தில் அவனை வெல்ல யாராலும் முடியாது” என
“சாமி அந்த கண்டத்தில் இருந்து தப்பிக்க எதாவது பரிகாரம் இல்ல அவனை அங்கவே இருக்க சொல்லட்டா” என்று மகனை காப்பாற்றும் நோக்கில் கேட்க,
“நாராயணா இனி நீயே நினைத்தாலும் அவன் அங்கே இருக்க மாட்டான். அவன் உயிரை நோக்கி தாயகம் வருவான். மரண கண்டம் அவனுக்கு விதிக்கப்பட்ட சாபம் ஜென்மங்களாக தொடரும் சாபம்” என
“ஐய்யோ…. சாமி சாபமா அதுக்கு சாமி சாபம்…. அதற்கு பரிகாரம்” என்று கேட்ட நாராயனை பார்த்து,
“ஹா ஹா ஹா கொடுப்பவனும் சிவனே எடுப்பவனும் சிவனே……. தன் மரணத்தோடு போராடி தன்னவன் உயிருக்காக எமனுடன் போராடும் மங்கை வருவாள்” என்று கூறி மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தியானத்தை தொடர்ந்தார்.
அவரை வணங்கி விட்டு வெளியே ஒரு யோசனையோடு வந்தவரை கைபேசி அழைக்க, எடுத்து பேசியவர் அதில் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து சிலையாகி விட்டார்.
விதிகள் தொடரும்…..
நிலா