“Asphyxiation தட் மீன்ஸ் மூச்சுத்திணறல், ஆக்ஸிஜனை சுவாசிக்க முடியாம ஏற்படுற இறப்பு, கார்வண்ணனோட ப்ளட்ல நியுரோ டாக்சின் இருந்திருக்கு. அமராவதி சொன்னதை வைச்சுப் பார்க்கும்போது அவர் இன்ஹேலர் யூஸ் பண்ணின கொஞ்ச நேரத்துல ஹி கொலாப்ஸ்ட், ரைட் பரத்” என்று கார்வண்ணனின் கேஸ் ஃபைலின் ஒவ்வொரு வரியாகப் படித்து பரத்தைப் பார்த்தான் சிரஞ்சீவி வரப்ரசாத்.
“எஸ் ஸர், அந்த டாக்சினை சுவாசிச்சதால ஆக்ஸீஜன் சப்ளை கட் ஆகிடுச்சு, மஸ்குலர் கன்வலுஷன்ஸ் நடந்திருக்கு( தசை வலிப்பு) நரம்பு மண்டலமும் பாதிப்படைஞ்சு ஹால்ஃப் அன் ஹவர்ல அவர் இறந்துட்டார். ஹாஸ்பிட்டல் கொண்டு போன டென் மினிட்ஸ்ல ஹி வாஸ் டெட்”
“சந்தோஷ் சொன்ன ஸ்டேட்மெண்ட் படி அமராவதிதான் அவனை ஊட்டிக்கு வர சொன்னதா சொல்லியிருக்கான்” என்றதுமே ஆத்திரத்தில் கத்திய அமராவதியின் முகம் சிரஞ்சீவிக்கு மறக்கவே இல்லை.
“அவன் என்ன ஹரிச்சந்திரன் வாரிசா? உண்மையை மட்டும் பேசுவானா? அந்த பரதேசியை நான் கல்யாணத்துக்கு முன்னாடி கடைசியா பார்த்தது. என் ஹஸ்பண்ட் அவனை மிரட்டி வைச்ச பின்னாடி அவன் என் பார்வையில படல, பட் லாஸ்ட் த்ரீ மந்தஸ் என் கண்ல பட்டுட்டே இருந்தான், வந்து எம்.எல்.ஏனாலதானே அவன் பின்னாடி போய்ட்டேன்னு உளறிட்டு இருப்பான். என்னை விட அவன் என்ன அழகா அப்படி இப்படி பேசினான். நான் திட்டிவிட்டேன்”
“ஊட்டில என்ன பேசினான்?”
“ஊட்டிக்கு அவன் எப்படி வந்தான் தெரியல, இங்க வந்தும் ரொம்ப பேசினான். என் ஹஸ்பண்ட் கிட்ட சொன்னா உன்னை உண்டில்லைன்னு ஆக்கிடுவார் சொல்லிட்டேன்”
“நான் ஜஸ்ட் அமராவதி இல்லை அமராவதி கார்வண்ணன், நீங்க சொல்ற மாதிரி மினிஸ்டரோட மருமகள், அதுவும் அது ஒரு பொது இடம், நான் அங்க வைச்சுக் கத்தினா எல்லாரும் என்னைப் பத்தி, என் ஃபேமிலி பத்தி எழுதுவாங்க, வீடியோஸ் எடுத்து சோசியல் மீடியாவுல போடுவாங்க. அதனாலதான் பல்லைக் கடிச்சிட்டு முகத்தை சாதாரணமா வைச்சிட்டு அவனைத் திட்டினேன், போதுமா விளக்கம்?” என்றபோது அமராவதிக்கு மட்டுப்பட்டிருந்த எரிச்சல் மீண்டுவிட்டது.
“நீங்க சந்தோஷ் உங்களை அடிக்கடி மீட் பண்ணினதை ஏன் உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லல?”
“ஏன் சொல்லனும்? அந்த சந்தோஷ் எல்லாம் ஒரு ஆளா? என் ஹஸ்பண்ட் கூட என்னால இருக்க முடியறதே கொஞ்ச நேரம், அந்த நேரத்துல அவனை விட எங்களுக்குப் பேச எவ்வளவோ நல்ல விஷயம் இருக்..இருந்துச்சு” கோபத்தில் ஆரம்பித்தவளின் குரல் கடைசியில் வலியுடன் முடிந்தது.
இன்றியமையாத ஒருத்தன் இப்போது இறந்த காலமாகிவிட்ட வலி வார்த்தைகளில் தெரிந்தது.
சிரஞ்சீவியின் நினைவை பரத்தின் குரல் கலைத்தது.
“ஸர், அப்போ அமராவதி மேல தப்பு இல்லை, ஆனா ஏன் அவங்களை இவ்வளவு ப்ளான் செஞ்சு மாட்டிவிடனும்?” என்று சிரஞ்சீவியைப் பார்க்க
“எஸ் வெல் ப்ளாண்ட் ஒன்! ஏன் அமராவதியை மாட்டிவிடனும்? பெர்சனல் ரீசன்காக கொன்னதாக கேஸை க்ளோஸ் பண்ணிட்டாங்க, இங்க அந்த மோடீவே பொய். கார்வண்ணனைக் கொல்றதுக்கான மோடீவ் பெர்சனலா இல்லாம ஏன் இருக்க கூடாது? அமராவதியை சிக்க வைச்சதே இந்த கேஸை டைவர்ட் செய்யத்தான். கேஸோட மோடிவ் மாறிப்போனதால கேஸே மாறிப்போயிடுச்சு பரத்”
“அதாவது அமராவதி தன்னோட கள்ளக்காதலுக்காக கார்வண்ணனைக் கொன்னுட்டாங்கன்னு ப்ரூவ் பண்ணிட்டா, கேஸ் வேற எந்த அங்கிளையும் மூவ் ஆகாது, ரைட் ஸர்?”
“கச்சிதங்கா” என்றவன் “ஐ மீன் எக்ஸாக்ட்லி” என்றான் சின்ன புன்னகையுடன்.
பரத்தும் சிறு புன்னகையுடன்
“அமராவதியை தவிர இப்போ நம்ம டவுட் படுற ஆட்கள் சந்தோஷ், அன்பழகன், கவியரசன், மணிமாறன், பரந்தாமன் ஸர். இன்னும் இதுல நம்ம சந்தோஷையும் பரந்தாமனையும் விசாரிக்கல” என்றான்.
“சந்தோஷை அப்புறம் பார்க்கலாம், பரந்தாமனை விசாரிப்போம் அவர்தான் அன்பழகன் கார்வண்ணன் இரண்டு கேஸ்லையும் சம்மந்தப்பட்டிருக்கார்” என்று சிரஞ்சீவி சொல்ல அவரைப் பார்க்கப் போனார்கள் இருவரும்.
*******************
அந்த இருள் சூழ்ந்த அறையின் கதவு மெல்லத் திறக்கப்பட சந்தோஷின் விழிகள் விழித்துக் கொண்டன, தாகம் வாட்டியது. காலையில் இருந்து தண்ணீர் கூட இன்றி அடைக்கப்பட்டிருந்தான். யார் என்ன ஒன்றும் தெரியவில்லை.
அலுவலகம் சென்று கொண்டிருந்த வழியில் ஒருவன் வழி கேட்டது மட்டுமே நினைவில் நிற்க, அதன் பின் இதோ இந்த இருளில்தான் விழித்தான்.
“யாரு? யாரு என்னை அடைச்சு வைச்சுருக்கீங்க?” என்று சந்தோஷ் கத்த
“அதி நேனே. என்னைத் தெரியுமா என்ன?”
“டேய்! என்னை ஏன் டா அடைச்சு வைச்சிருக்க? என்ன வேணும் டா?” சந்தோஷ் கத்த அவனின் சத்தம் அப்படியே நின்று போனது.
படாரென்று ஒரு அடி அவன் கன்னத்தில் இறங்கியது.
“ரெஸ்பெக்ட், எஸ்பி சிரஞ்சீவி வரப்ரசாத் டா, என்னை டா போடுவியா?” என்று இன்னொரு கன்னத்திலும் அடிக்க, எரிந்தது.
வாழ்வில் முதல்முறையாகப் போலிஸ் அடி, பயத்தில் வியர்த்தது. இருந்தும் ஒரு குருட்டு நம்பிக்கையில்
“எஸ்பின்னா பெரிய இவனா? என்னை அடிச்சதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும், என்னைக் காணும்னு தேடினா நீதான் மாட்டிப்ப” சந்தோஷ் சிரஞ்சீவி பற்றி அறியாது இருக்கும் சூழ்னிலை ஆராயாது பேச
“நீயா? ராஸ்கல்” என்றவன் விடாமல் அவனின் இரு கன்னங்களிலும் மாறி மாறி இடைவேளை விடாது அடித்துக் கொண்டே இருந்தான். சந்தோஷ் வலி தாங்காமல் அலற, அவனின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது.
அப்போதும் அடங்காமல் அவனை காப்பாற்றிவிடுவார்கள் என்றெண்ணி “இப்படி என்னைக் கொடுமை பண்ணினா ஹூமன் ரைட்ஸ்ல நீங்க பதில் சொல்லனும், என் பவர் தெரியாம பேசுறீங்க” என்றதும் சத்தமாய் சிரித்தவன்
“ஹூமன் ரைட்ஸ்?” என்று கேட்டு
“உன்னை மாதிரி ஒருத்தன் இருந்த அடையாளமே இல்லாம செஞ்சிடுவேன் டா, குற்றத்தைக் கண்டுபிடிக்கத் தெரிஞ்ச எனக்கு குற்றம் செய்யத் தெரியாத என்ன? ப்ளடி ராஸ்கல் என்ன உன் பவர் காட்டுடா பார்க்கலாம். நீ யாரைக் காப்பாத்த நினைக்கிறியோ அவங்களைக் காப்பாத்திக்க உன்னைக் கொல்லவும் தயங்க மாட்டாங்க”
“அப்படி என்னை விசாரக்கனும்னா கேஸ் போட்டு ஜெயில்ல போடுங்க, இப்படி அடைச்சு வைக்கறதெல்லாம் ரூல்ஸ் இல்லை”
“ரூல்ஸ்.. ரூல்ஸ் பேசுறியா நீ?” என்று கேட்டு லத்தியை எடுத்து அவன் இரு முட்டிகளிலும் ரத்தம் வரும்வரை அடிக்க
“ஸர் ஸார் அடிக்காதீங்க ப்ளீஸ்” என்று அடி பொறுக்காமல் கெஞ்ச
“ஓகே அடிக்கல, உண்மையை சொல்லு” என்று சிரஞ்சீவியின் கர்ஜனை சிங்கத்தின் கர்ஜனையாய் அந்த அறையெங்கும் ஒலிக்க, சந்தோஷுக்கு இதெல்லாம் புதிது. உடல் வலிக்க, உள்ளம் நடுங்கியது.
“எந்த உண்மை ஸர்?”
“கார்வண்ணனை கொன்னது யார்? ஏன் அமராவதிக்கு எதிரா பொய் சாட்சி சொன்ன நீ? செப்பு” என்று சொல்ல அவனோ
“அதெல்லாம் எனக்குத் தெரியாது ஸர், அமராவதிதான் என்னை விட்டு அவனைக் கல்யாணம் செஞ்சா, அதுக்கு அப்புறம் அவனைப் பிடிக்கலன்னு என்னைக் கல்யாணம் செய்ய சொன்னா” என்று முடிக்க கூட இல்லை நாற்காலியில் இருந்தவனை அப்படியே எட்டி உதைக்க, அவன் நாற்காலியுடன் கீழே விழுந்தான். அப்போதும் சிரஞ்சீவி விடாது, அவனது பூட்ஸ் காலால் சந்தோஷின் கையை நசுக்க
“அய்யோ….விடுங்க….விட்ருங்க” என்று கத்த, அறையெங்கும் அவனின் அலறல் சத்தம்தான். அவனை நாற்காலியுடன் தூக்கி நிறுத்திய சிரஞ்சீவி
“சேப்பு ரா” என்று சொல்ல
“நிஜமா அந்த அமரா சரி கிடையாது ஸார்” என்று சொல்ல
“நிஜம் செப்பு ரா” என்றவன் மீண்டும் மீண்டும் சப்பென்று கன்னத்தில் அடிக்க,
“அய்யோ இதான் உண்மை, அடிக்காதீங்க” என்று அவன் துடிக்க
“என் ஊர் என்னனு தெரியுமா உனக்கு? குண்டூர். குண்டூர் எதுக்கு ஃபேமஸ் தெரியுமா, மிர்ச்சி ரா, மிளகா. வொர்ட் க்ளாஸ் மிளகா” என்றதும் சந்தோஷ் பயத்துடன் சிரஞ்சீவியைப் பார்க்க, சிரஞ்சீவி தான் கொண்டு வந்திருந்த பாட்டில் தண்ணீரை அப்படியே சந்தோஷின் கன்னத்தில் ஊற்றினான்.
“அய்யோ எரியுதே, எரியுதே” என்று அவன் நாற்காலியில் அப்படியும் இப்படியும் நகர, மீண்டும் கீழே விழுந்தான்.
ஏற்கனவே சிரஞ்சீவியின் அடிகளினால் சிவந்து போயிருந்த கன்னத்தில் இப்போது மிளகாய்த் தூள் கலந்த தண்ணீரையும் ஊற்றிவிட, எரிச்சலில் உயிர் போனது. சில துளிகள் கண்ணிலும் தெறித்திருக்க காரம் தாங்காமல் துடித்தான் சந்தோஷ்.
“அவுட் வித் ட்ரூத்” சிரஞ்சீவியின் குரலில் உயிரே ஆடிப்போனது சந்தோஷுக்கு.
“உண்மையை சொன்னா நீ அப்ரூவர், இல்லையா இந்த ரூம்ல சாப்பாடு தண்ணியிலாம செத்துப் போ” என்றதும் இதயம் எல்லாம் பயம் கவ்வியது.
“எப்படி ஈசிஆர்ல வில்லா வாங்க பணம் வந்துச்சு சொல்லு சந்தோஷ், இல்லை இன்னும் தண்ணி வேணுமா?” என்றதும் உண்மையை சொல்லத் தொடங்கினான்.
“கார்வண்ணனைக் கொல்லனும், அமராவதி மேல பழி வரனும்னு சொன்னாங்க. எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை, பயமாயிருக்கு சொன்னேன். அதுக்கு நீ இதுல மாட்டாம பார்த்துக்கிறேன், நீ கொல்ல எல்லாம் வேண்டாம் சும்மா அந்த அமராவதியைப் பார்த்து பேசி வை, போலிஸ் விசாரிக்கும்போது இப்படி சொல்லுன்னு சொன்னாங்க. மத்தபடி கார்வண்ணன் கொலைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஸர்” என்றதும்
“யார் உன்னை அப்படி சொல்ல சொன்னா?” என்றான் சிரஞ்சீவி வரப்ரசாத்.
‘யார்?’ என்று அவன் சொல்லவும் சிரஞ்சீவியின் இதழ்களில் அழுத்தமான புன்னகை.
***********************
மூன்று நாட்களாகியும் இன்னும் அமராவதி சிறைக்கு அனுப்பப்படவில்லை, மருத்துவமனை வாசம்தான். அவளது பிபியில் ஏற்ற இறக்கங்கள் இருக்க முழு நேர மருத்துவ கண்காணிப்பு கூடவே கவனிப்பும்.
மருமகளின் நிலையைத் தினமும் கேட்டறிந்தார் அமைச்சர் வீகே. அவளது மன நலனே உடல் நலனை தீர்மானிக்கும் என்று மருத்துவர் சொல்லியிருக்க, அன்று அவளின் பெற்றோர்களை மகளைக் காணப் போகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அமராவதி ஜெயிலில் இருந்த போது அவளே அவர்களை வராதீர்கள் என்று சொல்லிவிட்டாள். தன்னை இந்த நிலையில் பார்த்தால் அவர்கள் தாளமாட்டார்கள் என்று தெரியும் கூடவே அவளாலும் தாங்க முடியாது என்று சொல்லியிருக்க, மாதங்கள் கடந்து மகளைப் பார்க்க வந்திருந்தனர் கங்காவும் அவர் கணவர் ராஜேந்திரனும்.
அமராவதி அப்போது முழித்துதான் இருந்தாள். அம்மா அப்பாவைக் காணவுமே கண்ணீல் நீர் கோர்த்தது. மகளைக் கண்டதும் கங்காவால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை, கதறிவிட்டார். இருபத்து மூன்று வயதில் தன் பெண் இருக்க வேண்டிய கோலமா இது?
பார்க்க பார்க்க ரணமாய் வலித்தது பெற்றவர்களுக்கு. ராஜேந்திரன் மகளின் அருகே வந்து உட்கார்ந்தவர் மௌனமாய்க் கண்ணீர் வடிக்க வார்த்தைகள் கூட சொல்ல முடியாத வலி அவர்களுக்கு.
குழந்தையை சுமந்து கொண்டு கணவனை இழந்து குற்றவாளியாய் வாழும் பெண்ணின் நிலை. எந்த பெற்றோரால் தாங்க முடியும்?
அம்மாவின் கதறலில் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள் அமராவதி.
அவர்கள் வெளியே எத்தனை எத்தனை கடக்க நேரிட்டிருக்கும் என்பது புரிந்தது, புரிதல் வலியைக் கொடுத்தது. வலி வலிமையைக் கொடுத்தது.
அவள் வாழ்வில் வண்ணங்கள் இல்லை என்பது கார்வண்ணன் இறந்த போதே அவளுக்குத் தெரியும், வாழும் எண்ணம் கூட இல்லாதிருந்த நொடிகளும் நிமிடங்களும் கூட உண்டு. இருந்தும் அவள் குழந்தை, அது மட்டுமே அந்த நொடி அவளை தற்கொலை எண்ணத்தைக் கைவிட தூண்டியது.
இப்போது அம்மாவைப் போல் இவளும் அழுதால் அவர் தாங்க மாட்டார். அழுது மட்டும் என்னவாகப்போகிறது? இயல்பில் அவளுள் ஊறியிருந்த தைரியம் துணைக் கொடுத்தது.
“ம்மா, ஏன் அழற?” என்றாள்.
“அழாம எப்படி டா…. உன்னை இந்த நிலைமையில பார்க்க” என்று முடிக்க முடியாமல் ராஜேந்திரன் தழுதழுக்க
“என்னைப் பத்தி மத்தவங்க சொல்றதை நீங்க நம்புறீங்களா என்ன?” என்ற பெண்ணின் கேள்வியில் இருவரும் நிமிர கங்கா உடனே
“என்ன அமரா? உன்னைப் போய்” என்றவர் அழ
“அது போதும் ம்மா, உங்க மாப்பிள்ளை மத்தவங்க நினைச்சபடி வாழனும்னா நிமிஷத்துக்கு ஒரு அவதாரம் எடுக்கனும், நம்ம மனசு படி மனசாட்சி வாழனும் அப்படின்னு சொல்வார். உங்களுக்கு உங்க பொண்ணு எப்படினு தெரியும்ல, மத்தவங்களை விடுங்க. சீக்கிரமே உங்களுக்குப் பேரக் குழந்தை வரப்போகுது, இன்னும் நாலு மாசம். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க” என்றதும்
“எப்படி அமரா அதை நினைச்சு சந்தோஷப்பட முடியும், மாப்பிள்ளை இல்லாம நீயும் இந்த நிலைமையில” கங்கா மீண்டும் அழ அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டவர்
“ம்மா, நம்மதான் நம்மை சந்தோஷமா வைச்சுக்கனும். உன் மாப்பிள்ளை என்னை அழ வைச்சதே இல்லை, இப்போ நீ அழ வைக்கப்போறியா?” என்றதும் ராஜேந்திரனுக்குப் பெண்ணின் மனம் புரிந்தது. தங்களுக்காக அவள் தன்னைத் தேற்றுகிறாள் என, தேறட்டும் மாறட்டும்!
எப்படியோ அவள் மனதளவில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைத்த ராஜேந்திரன் மனைவியைப் பார்த்து
“அவளை அழ வைக்காம இரு கங்கா, முதல்ல அவளுக்கு ஜூஸைக் கொடு” என்று அதட்ட கங்காவும் கணவரைப் பார்க்க, அவர் கண்ணசைக்க உடனே மகளுக்கென தயாரித்துக் கொண்டு வந்த ஜூசைக் கொடுக்க
“அப்புறம் எப்படிப்பா என்னைப் பார்க்க பெர்மிஷன் கிடைச்சது?” அமரா கேட்க
“நாங்க பெர்மிஷன் கேட்லடா, உன் மாமனாரே எங்களுக்குப் போன் செஞ்சு உன்னைப் பார்க்க சொன்னார்” என்றதும்
‘எனக்கான அக்கறை இல்லை இது, என் குழந்தைக்கானது’ என்று நினைவு எழ, முயன்று அடக்கினாள்.
“உன்னோட உடம்பைப் பார்த்துக்கோ அமரா, இரண்டு உயிரா இருக்கடா” கங்கா கவலையாய் சொல்ல
“அது கொஞ்சம் டென்ஷன்மா, உங்களைப் பார்த்துட்டேன்ல. இனி நார்மல் ஆகிடுவேன்” என்று சொன்னவள் இரண்டு மணி நேரம் பெற்றவர்களுடன் நேரம் செலவிட்டாள்.
அவர்கள் போன பின் பிபி செக் அப் செய்ய, நார்மலாக இருக்க உடனே அந்த தகவலும் அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் செல்லவும் தன் மேடிட்ட வயிற்றைப் பார்த்தவள், இனி பெற்றோருக்காகவும், பெறப்போகும் உயிருக்காகவும் தான் துணிவுடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
விடியல் அவளுக்கான விடுதலையை வைத்திருப்பதை அவள் அறியவில்லை, சிரஞ்சீவி எனும் சஞ்சீவியினால்.
*********************
அலுவலகத்தில் சிரஞ்சீவியின் அறைக்குள் நுழைந்த பரத் பரபரப்புடன்
“ஸர், ஒரு விஷயம் நான் உங்க கிட்ட சொல்லாம விட்டுட்டேன், அக்சுவலி இப்போதான் நோட்டீஸ் செஞ்சேன்” என்றதும்
“சொல்லுங்க பரத்” சிரஞ்சீவி பொறுமையாய் சொல்ல
“கவியரசனும் கார்வண்ணனும் சொந்த பரதர்ஸ் கிடையாது ஸர், ஸ்டெப் ப்ரதர்ஸ்” என்று சொல்லி சிரஞ்சீவியின் முகத்தைப் பார்க்க அதில் எந்த மாற்றமும் இல்லை.