நக்கீரன் ப்ரக்யாவிடம் தன் விருப்பம் சொல்லும்வரை கொஞ்சமும் அப்படி ஒரு எண்ணத்தின் துளி கூட அவனிடம் இல்லை. ஆனால் சொல்லிய பின் துளியென்ன அகக்கடலின் அத்தனையிலும் அந்த எண்ணம்தான்! அதில் வண்ணம்தான்!
ப்ரக்யா மறுத்துவிட்ட வருத்தம் கூட அவனிடம் இல்லை, அவன் விருப்பம் சொல்லிவிட்டான். அவனையே தெரிந்த புன்னகை அவனிடம்.
நக்கீரனுக்குத்தான் அவள் மனதிலே மையம் கொண்டு அவனை மையல் கொள்ள வைத்தாள். ஆழ்மனம் அவள் மீதான விருப்பத்தை உணர, அந்த பிடித்தத்தை நிலைத்து வைக்க, மற்ற காரணம் தேடியது மனம்.
***************
‘ஏற்கனவே அவளுக்கு ப்ரேக் அப், ஸோ டைம் எடுக்கட்டும்’ என்றவனுக்கு ஆழமாக ஒரு நம்பிக்கை, ப்ரக்யாவிற்கு அவனை பிடிக்குமென்று.
அதே உற்சாகத்துடன் அவன் விசிலடித்தபடி கீழே வர, கபிலன் பிடித்துக்கொண்டான்.
“கொஞ்சமாச்சும் வயசுக்குத் தகுந்த மாறி நடந்துக்கோடா. சும்மா விசில் அடிச்சிட்டு” என்று ஆரம்பிக்க
“ஏண்டா வயசுல பெரியவன்னா சிடுசிடுனு இருக்கனும், பொறுப்பா இருக்கறதுன்னா வெரப்பா இருக்கறது.. இதெல்லாம் எவன் கண்டுபிடிச்சான். காலையில நான் ஜாலி மூட்ல இருக்கேன், ஸோ உன்னை மன்னிச்சு விடுறேன், ஓடிடு” என்று நக்கீரன் சொன்னவன் புன்னகையுடன் இட்லியை எடுத்து தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
**************
“ஏண்டா அப்படி என்ன ஜாலி மூட்? ப்ரோமோஷன் கிடைச்சிடுச்சா இல்லை போனஸா இல்லை வேற ஜாப் அப்ளை பண்ணியிருக்கியா?” என்று விடாமல் கபிலன் கேட்க
“திருந்த மாட்டியா ப்ரோ?” என்று நக்கலாகக் கேட்ட நக்கீரன்
“இதெல்லாம் உனக்கு சந்தோஷம், எனக்கு சந்தோஷம் வேற” என்றான் கண்ணடித்து.
“டேய் நக்கீ, என்னனு சொல்லுடா” என்று கபிலன் வாய்விட, கடுப்பான நக்கீரன் தண்ணீரை எடுத்து அலுவலகத்திற்குத் தயாராயிருந்த கபிலன் மேல் ஊற்றினான்.
********************
ப்ரக்யாவின் போன பிறந்த நாள் காதலனின் வாழ்த்துடன் ஆரம்பித்தது. இந்த வருடம் அதையெல்லாம் நினைக்கக் கூடாது என்று மனதினைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க காதல் சொல்லி ஆரம்பித்துவிட்டான் நக்கீரன்.
எல்லாம் பகிர்வது போல் பரணியிடம் இதனை சொல்ல
“என்னதூ ப்ரோஃப்ஸர் ப்ரோபோஸ் பண்ணிட்டாரா?” என்றாள் கண்கள் விரிய.
“ப்ரோபோஸ்னா லவ் இல்லை மேரேஜூக்கு” என்றாள் ப்ரக்யா.