வண்ணம் – (28)
பெருமூச்சு விட்ட வித்யா அன்று நடந்தவற்றை சொல்லத் தொடங்கினாள்.
“அன்னைக்கு என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட், ஸ்கூல்ல ஒன்னா படிச்சவளுக்கு கல்யாணம். அம்மா போக வேணாம்னு தான் சொன்னாங்க. நான் தான் அடம்பிடித்து போனேன்.
பழைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்ததாலே பேசிக்கிட்டே இருந்தோம். டைம் போனதே தெரியலை. இருட்டிடுச்சு, அதனால தனியா போக வேண்டாம். இருந்து மறுநாள் கிளம்ப சொன்னா. ஆனால் அம்மா திட்டுவாங்க என்று பயந்து நான் கிளம்பிட்டேன். நைட் என் போன்ல சார்ஜ் வேற இல்ல.
அப்ப நான் பஸ் ஸ்டாப்பில் தனியா நின்னு கிட்டு இருந்தேன். கொஞ்சம் பயமா இருந்துச்சு. அப்ப அங்க அந்த மினிஸ்டர் பையன் கார் அந்த வழியா போச்சு.
அவன் கொஞ்சம் போதையில வேற இருந்தான். வண்டி போயிட்டு ரிவர்ஸ் வந்து என் முன்னாடி நிறுத்தி கார் கண்ணாடியை இறக்கி என்ன ஒரு மாதிரியா பார்த்தான். எனக்கு பயமாயிடுச்சு, நான் வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.
என் பின்னாடியே வண்டியை மெதுவாக ஓட்டிட்டு வந்தான். கொஞ்சம் அசிங்கமா பேசினான். “செருப்பு பிஞ்சிரும்னு” சொல்லி அவனை திட்டி விட்டு வேகமாக நடந்தேன்.
அவன் டக்குனு கார் கதவை ஓபன் பண்ணி என்னை உள்ளே இழுத்து போட்டு லாக் பண்ணிட்டான்.
நான் கதவை நான் தட்டினேன். என்னாலும் திறக்க முடியவில்லை அவன் டிரைவர் சீட்டில் இருந்து வண்டி ஓட்டிட்டு இருந்தான். நான் அவனை அடிச்சு தலை முடியை பிடிச்சு இழுத்தேன். கடுப்பானாவன் என்ன இரண்டு அடி அடிச்சான். நான் மயங்கிட்டேன்.
அப்புறம் வண்டிய ஒரு இடத்துல நிறுத்தி என்ன தூக்குனான். அப்போவே எனக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு. எழுந்து தூக்கி கீழே படுக்க வைத்தான். அப்புறம் அசைவே இல்ல. நான் லைட்டா கண்ண முழிச்சு பார்த்தேன். அது காடு மாதிரி இருந்துச்சு அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் இருந்தது.
அவன் வண்டி மேலே உட்கார்ந்து தண்ணி அடிச்சிட்டு இருந்தான். நான் மெதுவா எழுந்து ஓட ஆரம்பிச்சேன். எதார்த்தமான திரும்பும் போது அவன் என்னை பார்த்துட்டான்.
வேகமா ஓட ஆரம்பிச்சேன். அவனும் என் பின்னாடியே வேகமா ஓடி வந்தான்.
கொஞ்ச தூரத்துல ரோடு வந்துருச்சு. அது கிட்ட போகும் போது அவன் என்ன பிடிச்சுட்டான்.
அவன் இழுத்ததுல என் ட்ரெஸ் கிழிச்சுடுச்சு. அங்கேயே வைத்து அவன் என்ன ரேப் பண்ண ட்ரை பண்ணான். நான் கத்துனேன்.
அப்பதான் ஒரு ஸ்கூட்டி எங்களை நோக்கி வந்துச்சு. அவன் என் வாயை மூடிட்டான். அது எங்கள தாண்டி போயிடுச்சு. நான் வேகமா அவன் கைய கடிச்சுட்டேன். வலி தாங்காம அவன் கையை எடுத்தான்.
“ஹெல்ப் பண்ணுங்க” என்று மறுபடியும் கத்துனேன். அந்த ஸ்கூட்டி திரும்பி வந்துச்சு. அதுல இருந்து இந்து அக்கா இறங்குனாங்க. அவங்க எங்களை பாத்துட்டாங்க.
“அவ மேல இருந்து கையை எடுடா” என்று சொன்னாங்க.
“முடியாது என்னடி பண்ணுவனு” அவன் சொல்ல அவங்க ஓங்கி அவனை அடிச்சாங்க.
என்ன விட்டுட்டு அவங்க தலை முடியை பிடித்து இழுத்தான். அவள விட்டுறேன். நீ எனக்கு வேணும்னு சொன்னா. அவங்க கோபம் வந்து திருப்பி அவனை அடிச்சாங்க.
அவன் அவங்க சேலைய பிடிச்சு இழுத்தான். நானும் அவனை அடிச்சேன். அவன் என்னை பிடித்து கீழே தள்ளி விட்டுட்டான். நான் கீழ விழுந்துட்டேன்.
இந்து அக்காவுக்கு கோபம் அதிகமாகி அவனை பிடிச்சு வேகமா தள்ளீட்டாங்க. அவன் பக்கத்துல இருந்த கல்லு மேல போய் விழுந்துட்டான். நான் வேகமாக ஓடிப் போய் அவங்களை அணைச்சுகிட்டேன்.
அவங்க அழாதனு சொல்லி ஆறுதல் சொன்னாங்க. அவன் எழுந்திருக்கவே இல்லை. கிட்ட போய் கையை வைத்து பார்த்தா அவனுக்கு மூச்சு இல்லை. நான் ரொம்ப பயந்துட்டேன். அவங்களும் பயந்துட்டாங்க.
“இந்த கையால எத்தனை உயிரை காப்பாற்றி இருப்பேன். இதே கையால இப்போ ஒரு உயிரை கொன்னுட்டேனு”
சொல்லி அழுதாங்க. “நான் கொலை பண்ணேன்” என்று சொல்லி சரண்டர் ஆகுறேன் சொன்னேன்.
அவங்க நான் பண்ண தப்புக்கு நீ எதுக்கு தண்டனை அனுபவிக்கனும்னு சொன்னாங்க. எனக்காக தான பண்ணுனீங்கனு சொன்னேன்.
சரி இப்போதைக்கு இதை வெளியே சொல்ல வேண்டாம்னு முடிவு எடுத்தோம்.
உடனே கிளம்பி வந்துட்டோம். இந்து அக்கா என்னைய அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. அவங்க தான் எனக்கு வேற டிரஸ் கொடுத்தாங்க.
நான் ரொம்ப பயந்து அழுதேன். அவங்க தான் ஆறுதல் சொன்னாங்க. அப்புறம் அம்மாக்கு போன் பண்ணி “நான் என் ஃப்ரெண்ட் வீட்டுல இருக்கேன். ரொம்ப டைம் ஆச்சு” என்று சொன்னேன்.
அவங்க “இதை சொல்ல உனக்கு இவ்வளவு நேரமா. உன் போனுக்கு எத்தனை தடவை கூப்பிடுறது” என்று சொல்லி திட்டுனாங்க.
இந்து அக்கா தான இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லாதனு சொன்னாங்க. அப்புறம் நான் வீட்டுக்கு வந்துட்டேன்.
மறுநாள் மினிஸ்டர் பையன் கொலைனு நியூஸ்ல வந்தது. அதை பார்த்து பயந்து ரெண்டு நாளா நான் எழுந்திருக்கவே இல்லை. ரொம்ப காய்ச்சல் வந்துருச்சு. ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன்.
அப்புறம் ஹாஸ்டல் போயிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாய் இதை மறந்துட்டேன். அதுக்கப்புறம் நான் அவங்களை பார்க்கவே இல்லை.
கோவில் திருவிழா அன்னைக்கு தான் பார்த்தேன். அவங்க கிட்ட பேசலாம் தோள் மேல கையை வச்சேன். அவங்க மயங்கி விழுந்தால் அங்க கூட்டம் கூடிருச்சு. அதனால் நான் விலகி போயிட்டேன்.
அப்புறம் இந்து அக்காவ அரெஸ்ட் பண்ணப்ப நான் ரொம்ப அழுதேன். என் அம்மாகிட்ட விஷயத்தை சொல்லி “சரண்டர் ஆக போறேன்” என்று சொன்னேன். அவங்க என்னை தடுத்துட்டாங்க. அவங்க பொண்ணு வாழ்க்கை வீணாகிடும்னு பயந்தாங்க.
நான் அவங்கள மீறி அஸ்வின்க்கு போன் பண்ணேன். அவங்க என் போன் புடுங்கி உடைச்சு போட்டுட்டு ரூம்ல அடைச்சு வச்சுட்டாங்க” எனக் கூறி அழுதாள்.
ரித்விக் மாமா, வாங்க
போலீஸ் ஸ்டேஷன் போவோம். நான் தான் கொலை பண்றேனு சொல்லி சரணடைகிறேன்.
ரித்விக், “ஒரு லூசு மாதிரி பேசாத இரு கொஞ்சம் யோசிப்போம்.”
வித்யா, “எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. எனக்காக இப்ப அவங்க தண்டனை அனுபவிக்கிறாங்க.”
ரித்விக், “நீங்க ரெண்டு பேருமே தப்பு பண்ணல. தப்பு பண்ணது அந்த நாய் தான். நீங்க தடுக்க தான் செஞ்சிங்க. நீங்க பயப்படாதீங்க. நான் கண்டிப்பா இந்துவ வெளியில் கொண்டு வருவேன்.
முகம் எப்படி இருக்குன்னு பாரு. முதல்ல அழுகைய நிறுத்து. நான் லாயர் கிட்ட இதை பத்தி பேசறேன். அஸ்வின் வித்யாவை உள்ள கூட்டிட்டு போ” என்றான்.
அஸ்வின் அவளை உள்ளே கூட்டிச் சென்ற சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து விட்டு வெளியே வந்தான்.
அஸ்வின், “ரித்விக் இப்ப என்ன பண்ணலாம்.”
ரித்விக், “ரோஹித் நாளைக்கு லாயர் கிட்ட போகலாம்னு சொல்லி இருக்கான். நம்ம நாளைக்கு போய் அவரை பார்த்து பேசுவோம்.”
கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அஸ்வின் நடந்தவற்றைக் கூறினான். அதைக் கேட்ட
சுந்தரராஜன், “ரித்விக் அடுத்து என்ன பண்ணலாம்.”
ரித்விக், “அப்பா நாளைக்கு ரோஹித் சொன்ன லாயரைப் போய் பார்க்க போறோம். அப்ப வித்யாவை கூட்டிட்டு போறோம். அவர் கிட்ட நடந்ததை சொல்லுவோம்.”
சாரதா, “நான் சொன்னேன்ல என் பொண்ணு தப்பு பண்ணி இருக்க மாட்டானு. எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பாக அவ வெளியில வருவா.”
வித்யா, “என்னை மன்னிச்சிடுங்கம்மா. என்னால தான் இந்து அக்காவுக்கு இந்த நிலைமை” எனக் கூறி அழுக அவளது கண்ணீரை துடைத்து விட்ட சாரதா “நீயும் என் பொண்ணு மாதிரி தான் வித்யா. அந்த இடத்தில் யார் இருந்தாலும் இந்து கண்டிப்பா உதவி பண்ணி இருப்பா. இதான் நடக்கும்னு விதி இருந்திருக்கு. அதை யாராலும் மாற்ற முடியாது. இனிமே இதை பத்தி பேசாம, அவளை எப்படி வெளியே கொண்டு வருவது என பார்ப்போம்.”
மீனாட்சி, “வித்யா நீ எதுக்கு அழுகுற. கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் கடவுள் காப்பாத்துவார். நீங்க ரெண்டு பேருமே தப்பு பண்ணலை பயப்படாதீங்க. நாளைக்கு லாயரை போய் பாருங்க. என்ன சொல்றான்னு பார்ப்போம்” எனக் கூறி அவளை சமாதானப்படுத்தினார்.
கஜேந்திரன் சதாசிவத்திற்கு அழைப்பு விடுக்க
சதாசிவம், “சொல்லு கஜா, என்ன விஷயம்.”
“ஐயா ஏன் திடீர்னு அந்த பொண்ணை கொல்ல வேண்டாம்னு சொல்லிட்டீங்க.”
“இல்ல கஜா, என் பையன் கொன்னவளை என் கையால தான் கொல்லனும். அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும். இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்டுக்கு கூட்டிட்டு வருவாங்க. ஆதாரம் எல்லா அவளுக்கு எதிரா தான் இருக்கு. கண்டிப்பா தண்டனை கிடைக்கும். ஆனால் எனக்கு அது பத்தாது. நானே கொல்லனும். சரி சூட் பண்றதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சுடு.”
“சரிங்கய்யா. நீங்க வாங்க நான் பார்த்துக்குறேன்.”
“அப்புறம் நாளைக்கு முக்கியமான சரக்குகளை கை மாத்தணும். நம்ம இடத்துக்கு வந்துடு. எனக்கு யாருமே நம்பிக்கை இல்ல. அதான் உன் கிட்ட சொல்றேன். நீ தான் இது செய்யணும். முக்கியமான விஷயம் யாருக்கும் தெரிய கூடாது. என் பதவியை எப்படி காலி பண்ணுறதுனு நிறைய பேர் எதிர்பார்த்து காத்துட்டு இருக்கானுங்க. ரொம்ப கவனமா நம்ம குடோனுக்கு வந்துடு.”
“சரிங்கய்யா, நான் வரேன்” எனக் கூறி அழைப்பை துண்டித்தான்.
மறுநாள் ரித்திக் மொபைலுக்கு அழைத்த ரோஹித், “ஹலோ ரித்விக் கிளம்பியாச்சா. கரெக்டா பத்து மணிக்கு அங்க வந்துடுங்க” என்றிட ரித்விக், “கிளம்பிட்டோம். அட்ரெஸ் மட்டும் அனுப்பு வந்துடுறோம்” எனக் கூறி அழைப்பை துண்டித்தான்.
அஸ்வினை அழைத்து விஷயத்தை கூறி வித்யாவை அழைத்துக் கொண்டு மூவரும் புறப்பட்டனர்.
ரித்விக் வண்டியை ஓட்ட அஸ்வின் அவன் அருகிலும் வித்யா பின்னாலும் அமர்ந்து இருந்தனர். செல்லும் போது ரித்விக் மொபைலுக்கு அழைப்பு வரவே வண்டியை நிறுத்தி இறங்கி பேசிவிட்டு வந்த அவனது முகத்தில் முகம் கலவரமாக இருந்தது.
அஸ்வின், “ஏன் ரித்விக் முகம் ஒரு மாதிரியா. இருக்கு போன்ல யாரு.”
ரித்விக், “எனக்கு முக்கியமான வேலை வந்துருச்சு. ரொம்ப அவசரம் நான் போகனும்.”
“ஏண்டா லாயரை பார்க்கிறத விட உனக்கு என்ன முக்கியமான வேலை.”
“அதை இப்ப என்னால சொல்ல முடியாது. ஆனால் நான் போயே ஆகணும் நீ வித்யாவும் போய் லாயர் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லுங்க. ரோஹித் உங்க கூட வருவான்” எனக் கூறியவன் வண்டி சாவியை அவனிடம் கொடுத்து விட்டு புறப்பட்டான்.
வண்ணங்கள் மிளிரும்….