வண்ணம் – 30
டி.வியில் மினிஸ்டர் சதாசிவம் நேற்று இரவு அவரது குடோனில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி ஒளிபரப்பாகியது.
மீனாட்சி, “ஏங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. ரித்விக்கை வேற காணோம். இந்த ஆளை வேற கொன்னுட்டாங்க…”
சுந்தரராஜன், “இரு என்னன்னு பார்ப்போம்” என்றிட அஸ்வின் அபிஷேக்கிற்கு அழைப்பு விடுத்தான்.
அபிஷேக், “சொல்லு அஸ்வின், ரித்விக் வீட்டுக்கு வந்துட்டானா?”
“இல்லண்ணா, டி. வி ல அந்த மினிஸ்டரை கொலை பண்ணதா போட்டு இருக்காங்க. அதான் ரொம்ப பயமா இருக்கு. உங்க கிட்ட கேட்கலாம்னு போன் பண்ணேன்.”
அபிஷேக், “எனக்கும் ஷாக்கா தான் இருக்கு… இப்ப தான் நியூஸ் வந்துச்சு…. அங்க தான் போயிட்டு இருக்கேன். எனக்கு தலை சுத்துது. இன்னும் இந்த அந்த ஆள் பையன் கேஸே முடியலை, அதுக்குள்ள இவரை வேற கொன்னுட்டாங்க. என்ன பண்றதுனே தெரியலை. நான் முதல்ல ஸ்பாட்டுக்கு போறேன். ரித்விக் நம்பர் குடுத்து டிரேஸ் பண்ண சொல்லி இருக்கேன். தகவல் கிடைச்ச உடனே உனக்கு இன்பார்ம் பன்றேன். சரி நான் அப்புறமா கூப்பிடுறேன்” எனக் கூறி இணைப்பைத் துண்டித்தான்.
அஸ்வின், அபிஷேக் சொன்ன விஷயங்களை கூற மீனாட்சி மேலும் அழுக ஆரம்பித்தார்.
சாரதா, “மீனாட்சி அழுகாத. கண்டிப்பா ரித்விக் திரும்பி வந்துடுவான்” என ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.
அஸ்வின், “அப்பா நான் வெளில போய் தேடிப் பார்க்கிறேன்” எனக் கூறி கிளம்பினான்.
சுந்தரராஜனும் எல்லோரிடமும் போன் மூலம் விசாரித்துக் கொண்டிருந்தார். மாலைப் பொழுதும் வந்துவிட்டது. அஸ்வின் வீட்டிற்கு வர மீனாட்சி, “என்னடா ஏதாவது நியூஸ் கிடைச்சுதா?”
“இல்லம்மா…. நானும் அவன் ஆபீஸ் கன்ஸ்டிரக்ஷன் எல்லா இடத்திலும் தேடிட்டேன். எங்கேயும் அவன் போகலையாம்.”
மீனாட்சி, “அஸ்வின் ஒரு தடவை அபிஷேக்கு போன் பண்ணுடா.”
அவன் அபிஷேக் எண்ணிற்கு முயற்சிக்க இருமுறை முழுமையாக சென்று அழைப்பு துண்டானது.
மூன்றாவது முறை அழைப்பை ஏற்கப்பட்டவுடன் அஸ்வின், “அண்ணா ரித்விக் பற்றி ஏதாவது நியூஸ் கிடைச்சதா” என்றிட
“சாரிடா சொல்ல மறந்துட்டேன். ரித்விக் மொபைல் சுவிட்ச் ஆப்னு வருது. அதனால கரெக்டா ட்ரேஸ் பண்ண முடியலை. நான் கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி தேடச் சொல்லியிருக்கேன். மினிஸ்டர் இறந்ததால அவர் பாடியோட ஹாஸ்பிட்டல்ல இருக்கேன். போஸ்ட்மார்டம் நடந்துட்டு இருக்கு அதான் உன்கிட்ட சொல்லலைடா. கண்டிப்பா ரித்விகை கண்டுபிடிச்சுடுவாங்க.”
என்றுக் கூற அஸ்வின் அழைப்பை துண்டித்தான்.
அஸ்வினா விஷயத்தைக் கூற
சுந்தரராஜன், “டேய் நாளைக்கு கோர்ட்ல கேஸ் ஹியரிங் வேற இருக்கு. இந்த பையன் வேற காணோம். இப்ப என்ன பண்றதுன்னே தெரியலை” என்றார்.
மீனாட்சி அழுது புலம்ப வித்யாவும் சாரதாவும் அவரை சமாதானப் படுத்தினார்கள்.
அஸ்வின், “அம்மா நம்ம கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கோம். கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவாங்க” என்றுக் கூற மீனாட்சி, “யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலை. நல்லா இருந்த குடும்பம் இப்படி ஆயிடுச்சே. என் மருமக ஜெயில்ல போட்டுடாங்க. என் மகன் எங்க இருக்கான்னு தெரியலையே” என அழுது புலம்ப எல்லோரும் சேர்ந்து அவரை சமாதானப்படுத்தினார். அபிஷேக் போன் பண்ணி “கண்டிப்பா ரித்விக்கை கண்டுபிடித்து தரேன்” என்றுக் கூறிய பிறகே மீனாட்சி கொஞ்சம் சமாதானம் ஆனார்.
மறுநாள் வழக்கு விசாரணைக்கு வந்தது. சாரதா, “அண்ணா, நான் ரித்விக்கை நம்பி தான் தைரியமாக இருந்தேன். என் பொண்ணை நினைச்சா பயமா இருக்குண்ணா.”
சுந்தர்ராஜன், “கவலைப்படாத, இரும்மா பார்ப்போம்” என்று கூறி அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்.
இந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இரு தரப்பு வக்கீல் வாதாட தொடங்கினார்கள்.
இந்து நடந்ததை போலீஸில் வாக்குமூலம் கொடுக்க அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்துவின் வக்கீல் “அவள் தற்காப்புக்காக அவன் கொலை செய்தாள்” என்று வாதாடினார்.
வித்யா நடந்ததை சாட்சியாக கோர்டில் கூறினாள். கேஸ் நடந்து கொண்டிருக்க இடையில் ரித்விக் தலை, கை மற்றும் கால்களில் கட்டுடன் தாங்கி தாங்கி நடந்து வர அவனை பிடித்து அழைத்துக் கொண்டு மற்றொருவன் உடன் வந்தான்.
அவனது கோலத்தை கண்டு மீனாட்சி பதறி எழ கைகளால் அமரும்படி சைகை செய்தான். இந்து அவன் அருகில் வர முயற்சி செய்ய அந்த போலீஸ்காரப் பெண்மணி அவளைத் தடுத்தார்.
நீதிபதி, “யார் நீங்க?… இப்படி இடையில் வர்றீங்க” என்று வினவ ரித்விக், “சார் ஐயம் ரித்விக்குமார் ப்ரம் சிபிஐ. சார் இந்த கேஸ்ல முக்கியமான ஆதாரம் கொண்டு வந்திருக்கேன்” என்றான்.
நீதிபதி, “நீங்க எது சொன்னாலும் மேலே வந்து சொல்லுங்க” என்றிட அரசு தரப்பு வக்கீல் “நீதிபதி அவர்களே மிஸ்டர் ரித்விக்குமார் கொலை குற்றம் சுமத்தப்பட்ட இந்துவின் கணவர் என்பதால் அவரை சாட்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ரித்விக், “நீதிபதி அவர்களே! நான் சாட்சி சொல்லவில்லை. இவர் தான் சாட்சி சொல்ல போகிறார்” என அருகில் இருந்தவனை கைகாட்டியவன் “அவர் கூறுவதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது” என தனது பைலை சமர்பித்தான்.
தன் அருகில் இருந்தவனை பார்த்து “விஷ்வா நீ போ” என ரித்விக் கூற அவன் குற்றவாளி கூண்டில் ஏறினான்.
விஷ்வா, “நீதிபதி அவர்களே நான் சொல்றது முழுவதும் உண்மை. மினிஸ்டர் சதாசிவம் மற்றும் அவரோட பையன் ஆர்யா ரெண்டு பேரையுமே கொலை பண்ணது நான் தான்.”
அரசுத்தரப்பு வக்கீல், “நீங்க யார் உங்களுக்கும் இந்த கேஸ்க்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்க
“சார் என் பேர் விஷ்வா. ஆர்யா மேல ஏற்கனவே இரண்டு கற்பழிப்பு கேஸ் இருக்கு. அதுல ஒரு பொண்ணு தான் என் தங்கச்சி. அவன் தப்பு பண்ணிட்டு ஜாலியா வெளிய சுத்தனான். ஆனால் என் தங்கச்சி அவனால பாதிக்கப்பட்டு வெளியே வரவே அசிங்கப்பட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா. காசு இருந்தா எந்த தப்பும் வேணா பண்ணிட்டு ஈசியாக இருந்து வெளியே வந்து விடலாமா? அப்புறம் எதுக்கு இந்த கோர்ட்டு, சட்டம், போலீஸ்.
தப்பு பண்ணவனை நீங்க தண்டிக்கலை.
அதான் நான் தண்டனை கொடுத்தேன்.
பெண் குழந்தைகளை வெளியில அனுப்பவே பயமாயிருக்கு. ஐஞ்சு வயசு குழந்தையிலிருந்து அறுபது வயசு கிழவி வரைக்கும் கற்பழிக்கிறீங்க. உங்க காமவெறிக்கு ஒரு நாள் தப்பு பண்ணிறீங்க.
அப்புறம் அந்த பொண்ணோட நிலைமையும் குடும்பத்தோட நிலைமையும் யாரவது யோசிக்கிறீங்களா? என் தங்கச்சி தற்கொலை பண்ணிக்கிட்டதால் எங்க அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.
அவர் உயிருக்கு போராடிட்டு இருக்கார். நிம்மதியா சந்தோசமா இந்த குடும்பத்தை அவனை இப்படி நாசமாக்கிட்டான். அதான் அவனை கொன்னேன்.
அவன கொல்றதுக்காக பிளான் பண்ணி அவன் கார் டிக்கில ஒளிஞ்சுருந்தேன். அவன் டிக்கியை நல்ல மூடிட்டான்.
அதனால நான் அதுக்குள்ள அரை மயக்கத்தில் இருந்தேன். அப்புறம் கஷ்டப்பட்டு டிக்கிய துறந்து வெளிய வந்தப்ப அவன் வண்டி மட்டும் ஒரு காட்டுல நின்று கிட்டு இருந்துச்சு.
ஆர்யாவை காணோம்னு தேடினேன்.
அப்ப கொஞ்ச தூரம் தள்ளி அந்த ரோட்டில் விழுந்து கிடந்தான். வேகமாக கிட்ட போனப்ப அவன் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான்.
எனக்கு அவனை என் கையால தான் கொல்லனும் என்ற வெறி. அதான் அவன் நெஞ்சில் கையை வைத்து அமுக்கினேன். அவனுக்கு லைட்டா முழிப்பு வந்துடுச்சு. நான் பக்கத்தில் இருந்த கல்ல அவன் மண்டைய பலமா மோதுனேன்.
ஒவ்வொரு தடவை மோதும் போது அவன் வலியில் துடிச்சான். அப்பதான் எனக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு. என் தங்கச்சி இப்படித் தான துடிச்சுருப்பா. அப்புறம் அங்கிருந்து கிளம்பிட்டேன். காலையில் அவன் செத்துட்டான் நியூஸ் வந்துருச்சு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.”
அரசுத்தரப்பு வக்கீல், “ஓகே உங்க தங்கச்சியை கற்பழிச்ச குற்றத்துக்காக ஆர்யாவ கொலை பண்ணீங்க. அப்புறம் எதுக்கு மினிஸ்டர் சதாசிவத்தை கொலை பண்ணுனீங்க?”
விஷ்வா, “பிள்ளைங்க தப்பு பண்ணா அதை திருத்த வேண்டியது பெத்தவங்ஙளோட கடமை. ஆனால் சதாசிவம் அவன் பண்ண தப்பை ஊக்குவிச்சான். அதான் அவன் என் தங்கச்சி வாழ்க்கையோட சேர்த்து இன்னொரு பொண்ணு வாழ்க்கையும் அழிச்சான்.
முதல் தடவை அவன் தப்பும் பண்ணப்பவே தண்டனை கிடைச்சிருந்தா திருப்பி அவன் அந்த தப்பை செய்ய பயப்பட்டு இருப்பான். ஆனா அதுக்கு அந்த சதாசிவம் வாய்ப்பே குடுக்கல.
அவன் பதவி யூஸ் பண்ணி ஆர்யாவை காப்பாத்திட்டான். அதான் அவனையும் கொலை பண்ணனேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிமே எனக்கு நீங்க தூக்கு தண்டனை கொடுத்தாலும் கவலை இல்லை. ஒரு அண்ணனா என் தங்கச்சிக்கு நியாயம் வாங்கி கொடுத்துட்டுடேன்” என்றவன்
இந்துவின் புறம் திரும்பி
” நீ என்ன மன்னிச்சிடும்மா. நான் பண்ண கொலைக்கு இதனை நாள் நீ உள்ள இருந்திட்ட. உன்ன அரெஸ்ட் அன்னைக்கே நான் சரண்டர் ஆகி இருக்கணும். ஆனா அந்த மினிஸ்டர் கொலை பண்றதுக்கு தான் வெயிட் பண்ணேன். அதையும் முடிச்சுட்டேன். அதான் இன்னைக்கு சரண்டர் ஆனேன்” என்றான்.
அவனது வாக்குமூலத்தை கேட்ட இந்துவின் வக்கீல் “நீதிபதி அவர்களே கொலையாளியே தனது தவறை ஒத்துக் கொண்டதால், தக்க தண்டனை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றிட ரித்விக், “நீதிபதி அவர்களே நான் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்” எனறான்.
ரித்விக் கூண்டில் ஏறி “நீதிபதி அவர்களே என் பெயர் ரித்விக்குமார் சுந்தரராஜன். கடந்த வருடம் சி.பி.ஐ அதிகாரியாக பணியில் சேர்ந்தேன்.
என் மேலதிகாரி உத்தரவுப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு அன்டர்கவர் ஆபரேஷன் நடத்தினோம்.
இறந்து போன மினிஸ்டர் சதாசிவமும் அவரது மகன் ஆர்யாவும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களது குடோனில் வைத்து போதை பொருளை விற்பனை செய்தனர். இவர்களால் பல கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையும் சீரழிந்துள்ளது” எனக் கூறி அதற்கான ஆதாரத்தையும் சமர்பித்தான்.
இது எல்லாத்தையும் கேட்டறிந்த நீதிபதி இந்துவை நிரபராதி என விடுதலை செய்தார். மினிஸ்டரின் குடோன் மற்றும் அவரது மற்ற தொழில் நிறுவனங்களையும் ஆராய்ந்து அதில் போதை பொருள் இருக்கும் பட்சத்தில் சீல் வைக்க உத்தரவிட்டார். விஷ்வா செய்த கொலைக்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.
இந்துவை விடுதலை செய்ய வேகமாக கீழே ஓடி வந்தவள் ரித்விக்கை அணைத்துக்கொண்டாள். மொத்த குடும்பமும் அவர்களை சூழ்ந்துகொண்டது.
வண்ணங்கள் மிளிரும்…