வண்ணம் – 32
சில வாரங்களுக்கு பிறகு….
அந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த கல்யாண மண்டபம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
மண்டபத்தின் வாசல் “அஸ்வின் வெட்ஸ் வித்யா” என்ற பெயர்பலகையை தாங்கி அனைவரையும் வரவேற்றது. மண்டபமே கொள்ளா அளவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மீனாட்சியும் சுந்தர்ராஜனும் வாசலில் நின்று விஷேசத்திற்கு வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். சாராதாவும் பார்வதமும் மண்டபத்தின் உள்ளே கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரித்விக் அங்கும் இங்கும் அலைந்து சாரதா கூறும் வேலைகளை செய்துக் கொண்டிருந்தான். இந்து மணமகள் அறையில் பியூட்டிஷனுடன் சேர்ந்து வித்யாவை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
வித்யாவின் தோழி ராகினி, “வித்யா, நீ ரொம்ப குடுத்துவச்சவடி… அம்மா மாதிரி ஒரு மாமியார், அக்கா மாதிரி ஒரு ஒரகத்தி… அதுமட்டுமில்லாம குரங்கு சேட்டை பண்ற ஒரு வீட்டுக்காரரு… இனிமேல் டைம் போறதே தெரியாது….”
வித்யா, “அடிப்பாவி! சந்தடி சாக்குல அஸ்வினை குரங்குன்னு சொல்ற…”
ராகினி, “பின்ன என்னடி…. சும்மா போற என்னைக் கூப்பிட்டு மூஞ்சிக்கு எத்தனை கோட்டிங் போட்ருக்கன்னு கேக்குறான்..”
வித்யா சிரித்துக் கொண்டே, “கரெக்டா தானடி கேட்ருக்கான்….” என்றாள். ராகினி வித்யாவை முறைத்தாள்.
பவித்ரா, “என்கிட்டயும் உன் ஆளு குரங்கு சேட்டை பண்றான்டி…”
வித்யா, “உன்கிட்ட என்னடி சொன்னான்?”
பவித்ரா, “சே! மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னான். நான் என்ன மிஸ் பண்ணுனன்னு கேட்டேன். ஆங்… வித்யாவை பார்க்குறதுக்கு முன்னாடி உன்னைப் பார்த்துருந்தா, கண்டிப்பா உன்னைதான் கரெக்ட் பண்ணிருப்பேன்னு சொன்னான். நான் என் ஃபாய் ப்ரண்ட் நம்பர் இருக்கு… வேணா அவர் கிட்ட இதை பேசுறீயான்னு கேட்டேன். பேபி! பியூட்டியை பத்தி பேசும் போது ஏன் அந்த குரங்கைலாம் ஞாபகப் படுத்துற… வேணா உன் நம்பர் கொடு.. நான் ஃப்ரியா இருக்கும் போது பேசலாம்னு சொன்னான். நான் முறைச்சுட்டு வந்துட்டேன்டி….”
வித்யா, “அப்படியா சொன்னான்… அவனுக்கு இருக்கு…” என்றாள். ராகினி
பவித்ரா காதில், “ஏன்டி அவன் இவ்ளோ பேசலையே! நம்பர்லாம் கேக்கவே இல்லையே! நீயே இரண்டு பிட்டை சேர்த்துப் போட்றீயேடி…”
பவித்ரா, “இல்லேடி.. ரொம்ப பேசனான்ல… கொஞ்சம் வாங்கட்டும் வித்யா கிட்ட… அமைதியா இரு…” என்றாள். இவர்கள் பேசுவதை கேட்டு இந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அங்கே அஸ்வின் மணமேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கூறிக் கொண்டே மணமகள் அறையை ஒற்றைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்த ரித்விக், “அடேய் தம்பி… இப்படி ஒத்தை கண்ணால அந்த பக்கம் பார்த்துட்டே இருக்காதடா. வித்யாவை கூட்டீட்டு வருவாங்க…. கீழே ரெண்டு பேரு… பொண்ணு நல்ல லட்சணமா தான இருக்கு. ஆனால் ஏன் இப்படி மாறுகண்ணு இருக்க மாப்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்குறாங்கன்னு கேக்குறாங்க டா…”
அஸ்வின் அவன் கூறியதை கேட்டு திரும்பி ரித்விக்கை முறைக்க…. “டேய் நான் என்னமோ சொன்ன மாதிரி சொல்ற… வந்தவங்க தான்டா சொல்றாங்க….”
அஸ்வின், “அவங்க சொல்றாங்களோ இல்லையோ… நீயே எனக்கு ஏதாவது குறை இருக்குன்னு பரப்பிடுவ போல… டேய் அண்ணா கஷ்டப்பட்டு ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி வீட்ல நாளு வசவு வாங்கி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுருக்கேன் டா…. தயவு செஞ்சு அதுல மண்ணள்ளி போட்றாதடா….”
ரித்விக், “இல்லைடா… உனக்கு ஏதாவது உதவி பண்ணலாம்னு…”
அஸ்வின், “நீ எதுவும் பண்ணாம அமைதியா இருந்தாலே அது எனக்கு பெரிய உதவிடா… எதும் குட்டி கலாட்டா பண்ணிடாதடா… உன்னை கையெடுத்து கும்புடுறேன்..”
ரித்விக், “சரிடா தம்பி, நீ இவ்ளோ கொஞ்சிக் கேக்குறதுனால நான் அமைதியா இருக்கேன்டா….” என்றான். இவ்ர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்க ஐயர் எப்பவுமே சொல்வாரே அந்த டையலாக்கை கூறினார். அதாங்க, “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ… நாழி ஆயிட்டு…” என்றார்.
அம்புஜம் மணமகள் அறைக்குச் சென்று, “பொண்ணை கூட்டீட்டு வாங்க… ஐயர் கூப்பிடுராரு…” என்றார். இந்துவும் வித்யாவின் தோழிகளும் வித்யாவை அழைத்து வர அவள் குனிந்த தலை நிமிராமல் பொண்ணுக்கே உரிய நாணத்துடன் நடந்து வந்தாள். அஸ்வின் வித்யாவை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, ரித்விக் இந்துவை சைட்டடித்துக் கொண்டிருந்தான்.
வித்யா அஸ்வின் அருகில் அமர அப்போதுதான் அஸ்வின் கவனித்தான். வித்யா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவன், ‘இப்ப எதுக்கு இவ என்னை முறைக்கிறா? ரித்விக் ஏதும் செஞ்சுருப்பானோ? சே சே இருக்காது… அவன் இவ்ளோ நேரம் என் கூடதான இருந்தான்’ என நினைத்துப் பார்க்க, ராகினியும் பவித்ராவும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன்ர்.
அடிப்பாவிகளா! சும்மா விளையாட்டுக்கு தானடி உங்க கிட்ட வம்புழுத்தேன்… அதுக்கு என்னடி பண்ணி வச்சீங்க.. இவ இந்த முறை முறைக்குறா…’ என நினைத்து அவர்களை பார்க்க, பவித்ரா அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தாள்.
‘சரி விடு அஸ்வினு…. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம். நைட்டு கால்ல விழுந்தாது அவளை சமாதானம் பண்ணிடலாம். இப்போதைக்கு காரியத்துல கண்ணா இரு… எப்படியாவது நல்லபடியா கல்யாணத்தை முடிக்கனும்’ என நினைத்துக் கொண்டு ஐயர் கூறும் மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தான்.
மீனாட்சி மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசி பெற்று வாங்கி வர, ஐயர் அதை வாங்கி சில பல மந்திரங்களை கூறி, அஸ்வின் கையில் கொடுத்தார். மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க அஸ்வின் வித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.
அம்புஜமும் ராஜேந்திரனும் அதை பார்த்து மனநிறைவு பெற்றனர். அடுத்தாக தம்பதி சரிதமாக அஸ்வினும் வித்யாவும் மீனாட்சி, சுந்தர்ராஜனிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அம்புஜம் ராஜேந்திரனிடம் ஆசிர்வாதம் வாங்கினர்… வந்த சுற்றத்தார் அனைவரும் மணமக்களை வாழத்திவிட்டு சென்றனர்.
ஒருவாறாக வந்த உறவினர்கள் எல்லோரும் கிளம்ப பொண்ணு மாப்பிள்ளையை காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்லபட்டனர்.
ஒரு காரில் அஸ்வினும் வித்யாவும் வர பின் மற்றொரு காரில் மற்றவர்கள் வந்தனர்.
காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அஸ்வின் வித்யாவை சமாதானப் படுத்தும் முதல் முயற்சியாக அவள் கைமீது தன் கையை வைக்க, வித்யா வெடுக்கென தன் கையை உருவி அவனை முறைத்து விட்டு ஜன்னல் பக்கம் திரும்பி உட்கார்ந்தாள்.
‘டேய், அஸ்வின் உன் பாடு திண்டாட்ட தான் போல.. இவ்ளோ சூடா இருக்களே என்னத்தை சொல்லிருப்பாளுக… இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் நைட் கட்டுதான்டி மாப்ளை… நைட்டு தரைல தான் படுக்கப் போற போலயே! ம்கூம் அஸ்வின் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. முயற்சியை கைவிட்றாதடா… எப்படியாவது அவளை சமாதானப் படுத்திடு…’ என தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
ஒருவழியாக சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தனர். மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். வந்த உறவினர்களில் அனைவரும் கிளம்பிவிட முக்கியமான ஒரு சில உறவினர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். வித்யாவிற்கு களைப்பாக இருக்கும் என்று அவளை ஒரு அறையில் ஒவ்வெடுக்க சொன்னார் மீனாட்சி.
நைசாக அப்படியே அந்த அறைக்குள் அஸ்வின் நுழைய பார்க்க, மீனாட்சி அவன் காதை பிடித்து திருகி, “டேய் உன்னை வேற ரூம்ல தான ரெஸ்ட் எடுக்க சொன்னேன். நீ எதுக்குடா இந்த ரூம்குள்ள போற..? மானத்தை வாங்கதடா மகனே!” என்றார்.
அவன் ஹிஹிஹி.. என இளித்து “சும்மாதான்மா போனேன்…” என்றான். மீனாட்சி, “நீ சும்மாவும் போக வேணாம்.. காசுக்கும் போக வேணாம்.. ஒழுங்கா நீ உன் ரூம்க்கு போ… ” என அவனை துரத்திவிட்டார்.
அப்படியே இரவும் வந்துவிட இந்துவும் வித்யாவின் தோழிகளும் வித்யாவை அலங்கரித்துக் கொண்டு இருந்தனர். ஒரு வழியாக அலங்காரம் முடிந்துவிட மீனாட்சி சுந்தராஜனிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வித்யாவை இந்து அறையில் விட கிளம்ப, பவித்ரா, “ஏய் வித்யா, நான் சொன்னதை மறந்துடாதடி…” என்றாள். வித்யா அவளைப் பார்த்து தலையாட்டி விட்டு சென்றாள். ராகினி, “ஏன்டி பவி, உனக்கு இந்த வேலை. அவளே மறந்தாலும் நீ ஞாபகப்படுத்திவிடுற….”
பவி, “கொஞ்ச நேரம் அவனை கதற விடுவோம்டி….” என்று சிரித்துக் கொண்டே கூறினாள். ராகினி, “என்னமோ போடி…” என்றாள்.
இந்து வித்யாவை அஸ்வின் அறையில் விட்டுட்டு தன் அறைக்குள் நுழைய ரித்விக் அறையில் இல்லை. அவள் சுற்றும் அவனைத் தேட, பின்னிருந்து ஒரு வலிய கரம் அவளை இடையோடு சேர்த்து அணைத்தது. அது தன்னவனின் ஸ்பரிசம் என்று உணர்ந்தவள் முகத்தில் புன்னகை அரும்பியது.
ரித்விக் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து, “இந்து.. இந்து..” என்று அழைத்தான். இந்து சிரித்துக் கொண்டே, “நான் உன் பக்கத்துல தான் இருக்கேன்டா…. என்னன்னு சொல்லு…”
ரித்விக், “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி….”
இந்து, “என்னவாம் ஐயாவுக்கு இவ்ளோ சந்தோஷம்?”
ரித்விக், “தெரியலைடி…. இதுதான்னு சொல்ல தெரியலை. அஸ்வின் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது…. அப்புறம் நீ கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆனது.. இனிமேல் நீ எனக்கு மட்டும்தான் சொந்தமானவ… என்கூடவேதான் இருக்கப் போற… இப்படி நிறைய விஷயம்டி…”
இந்து, “ஆமா ரித்விக்… எனக்கும் தான். இப்போதான் ஒரு நிம்மதி கிடைச்ச மாதிரி இருக்கு… போதும் ரித்விக், எனக்குத் தூக்கம் வருது… மீதிய காலைல பேசுவோம்… என்றாள் சிரித்துக் கொண்டே.
ரித்விக் ஏகத்துக்கும் கடுப்பாகி, “என்னது தூங்கப் போறீயா?”
இந்து, “ஆமா ரித்விக்… காலைல இருந்து வேலை செஞ்சு செஞ்சு ரொம்ப டயர்டாகிட்டேன்டா….” என்று சிரித்துக் கொண்டே கூறினாள். அவள் சிரிப்பதை அறியாத ரித்விக், “போ… போய் நல்லா தூங்கு… சரியான கும்பகர்ணிடி நீ” என்றான் தன் பிடியை தளர்த்தி.
இந்து அவனுக்கு முன்புறமாக திரும்பி, “ரித்விக், உன்கிட்ட ஒன்னு சொல்லனும்டா… ரொம்ப நாளா சொல்லனும்னு நினைச்சுட்டே இருந்தேன்… இப்ப சொல்லவா?”
ரித்விக் அவள் முகத்தைப் பார்க்காமல், ‘என்னத்தை சொல்ல போறா’ என நினைத்து விட்டு, “ம்ம்… சொல்லு” என்றான்.
இந்து, “ரித்விக், என் முகத்தைப் பாரு…” என நிமிர்த்தி, “ஐ லவ் யூடா என் செல்ல புருஷா…” என்றாள்.
ரித்விக் ஆச்சிரியமா, “ஏய் இந்து என்னடி சொன்ன… ஒரே ஒருதடவை திரும்பி சொல்லுடி” என்றான்.
இந்து சிரித்துக் கொண்டே, “ஒரு தடவை இல்லை… இனி என் வாழ்க்கை முழுசும் சொல்லுவேன்… ஐ லவ் யூ… ஐ லவ் யூ.. ஐ…” என்று மூன்றாவது தடவையாக அவள் கூற வரும் முன் ரித்விக் அவள் இதழை ஆக்கிரமிப்பு செய்திருந்தான். அவள் இமைகள் தானாக மூடிக் கொண்டது. சிறிது நேரத்திற்கு பிறகு அவளை விடுவித்தவன் அவளுடைய சம்மதத்திற்காக இந்துவை பார்க்க, அவளோ அவனை காண முடியாமல் நாணத்தில் சிவந்த கன்னங்களை மறைப்பதற்காக கீழே குனிந்து இருந்தாள்.
ரித்விக், “இந்து… இந்து..” என குழைவான குரலில் அழைக்க, “ம்ம்…” என்றவள், நிமிர்ந்து பார்த்து அவள் கண்களாலேயே அவனுக்கு தன் சம்மதத்தை தெரிவித்தாள். அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான் ரித்விக். அவர்கள் வாழ்க்கை இனிதாக துவங்கியது……
பால் சொம்புடன் வித்யா அஸ்வின் அறைக்குள் நுழைய, அவன் அவளை எவ்வாறு சமாதானப்படுத்தலாம் என்று ஒத்திகைகப் பார்த்து கொண்டிருந்தான். வித்யா சரியாக உள்ளே நுழைய, அஸ்வின் தனக்குத் தானே பேசி ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தான். வித்யா, ‘என்ன இவன் லூசாகிட்டானோ?’ என ரேஞ்சுக்கு ஒரு பார்வையை செலுத்திவிட்டு கதவை சாத்திவிட்டு, பால் சொம்பை டேபிளில் வைத்தாள்.
அவள் வைத்த வேகத்திலயே அவள் கோபத்தின் அளவு புரிந்தவன், “வித்யா…” என்று ஏதோ செல்ல வர, தன் கைகளை நீட்டி அவனை அமைதிப் படுத்தியவள், “எப்புடி? எப்புடி? என்னைப் பார்க்குறதுக்கு முன்னாடி அவளைப் பார்த்துருந்தா அவளை கரெக்ட் பண்ணிருப்ப….”
அஸ்வின், “அது ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன்டி….”
வித்யா, “அவ சூப்பர் ஃபிகர்னா நான் சப்பை ஃபிகரா?”
அஸ்வின், “நான் அவளை சூப்பர் பிகர்னு மட்டும் தானடி சொன்னேன். உன்னை சப்பை ஃபிகர்னு சொல்லவே இல்லைடி…”
வித்யா, “நீ சொன்னதுக்கு அர்த்தம் என்னவாம்… நீ அப்படி தான் சொல்லிருக்க…”
அஸ்வின், “அதான் சொல்றேன்ல டி… அவங்க உன் ஃப்ரண்ட்ஸ்னால விளையாட்டுக்கு சொன்னேன்டி…”
வித்யா, “விளையாட்டுக்கு…? மவனே நீ இன்னைக்கு தரைல தான்டா படுக்கப் போற…. இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் நைட்டு கட்டுடா…”
அஸ்வின், ‘ஆபத்துக்கு பாவம் இல்லைடா அஸ்வினு… பேசாமல் கால்ல விழுந்துடுடா…’ என நினைத்தவன், வித்யா காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டான்.
வித்யா அவன் செய்ததைப் பார்த்து சத்தமாக சிரித்துவிட்டாள். அவள் சிரிப்பதை பார்த்த அஸ்வின் என்ன இவ சிரிக்குறா? என நினைத்துப் பார்க்க, வித்யா, “நான் சும்மா விளையாட்டுக்கு தான் உன் கிட்ட விளையாடலாம்னு நினைச்சேன்… ஆனால் நீ கால்ல விழுந்துட்ட…” என சிரித்துக் கொண்டே கூறினாள்.
அஸ்வின், ‘இப்படி அசிங்க பட்டுட்டியேடா அஸ்வினு…. சே’ என நினைத்து அவளை பார்க்க அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அஸ்வின், “இதுக்கு உனக்கு கண்டிப்பா தண்டனை இருக்கு…” என் கூறி மர்மமாக சிரித்துக் கொண்டே அவளை நோக்கி நடந்தான். அவர்கள் வாழ்க்கை இனிதாக துவங்கயது…
சில வருடங்களுக்கு பிறகு….
“ஏய் ஆதிரா… அப்பா சொல்றதை கேளுமா… சமத்துப் பொண்ணு இல்லை… சாப்பிடுமா..” தன் மகளை ரித்விக் கெஞ்சிக் கொண்டிருக்க, அவள் சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்து கொண்டிருந்தாள். இந்து ரித்விகை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
ரித்விக் இந்துவிடம், “நான் என் தோல்வியை ஒத்துக்குறேன்டி…. என்னாலை முடிலைடி…” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு…
இந்து, “அப்படி வா வழிக்கு… என்னமோ குழந்தைக்கு சாப்பாடு ஊட்றது அவ்ளோ பெரிய கம்ப சூத்திரமா? நான் எவ்வளவோ பெரிய கேஸ்லாம் ஈஸியா டீல் பண்ணிருக்கேன்… ஆ ஊன்னு… சீன் போட்ட… இப்ப புரியுதா எங்க கஷ்டம்…” என்றாள்.
“அப்படி சொல்லுங்க்கா….” என கூறிக் கொண்டே வித்யா அங்கே வந்தாள்.
இந்து, “என்ன வித்யா, அஸ்வினை இன்னும் காணோம்….”
வித்யா, “அவன் காலைலயே வாயை கொடுத்தான். அதான் குழந்தையை குளிக்க வைச்சு ட்ர்ஸ் போட்டுவிடுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்…” என்றாள்.
“டேய் நில்லுடா…. அப்பா சொல்றதை கேளுடா.. அடம் பிடிக்காம இந்த ட்ரெஸ்ஸை மட்டும் போட்டுக்கடா….” என கூறிக் கொண்டே அஸ்வின் வர, அவன் முன் அஸ்வின் வித்யாவின் செல்ல மகன் நிதிஷ் ஓடிக் கொண்டிருந்தான்.
அஸ்வின் வந்த கோலத்தைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். அவன் தலையெல்லாம் சோப்பு நுரை… ஆபிஸ் போவதற்காக கிளம்பி இருந்த அவனின் அயர்ன் பண்ணி சட்டை கசங்கி ஒரு வழியாகி இருந்தது. அவன் நதிஷை துரத்திக் கொண்டு ஓட அவன் அஸ்வின் கையில் மாட்டாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தான்….
அஸ்வின் ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாமல் மூச்சு வாங்கியதால் கீழே உக்கார்ந்து விட்டான். வித்யா அவன் அருகில் சென்று, “வாய் மட்டும் பேசுனா பத்தாது…” என கூறி அவன் கையிலிருந்த சட்டையை வாங்கி நிதிஷ்க்கு போட்டுவிட்டாள்.
அதைப் பார்த்த அஸ்வின், “டேய்! இவ்ளோ நேரம் நான் அந்த சட்டையை தான போட சொன்னேன். நான் சொன்னப்ப கேக்காம அவ சொன்னா மட்டும் கேக்குற….
நிதிஷ், “நீ தானப்பா குளிக்குறப்ப சொன்ன.. உங்க அம்மா ஒரு அடங்காபிடாரி.. சொல்றதையே கேட்கமாட்டா.. நீ அப்புடி இருக்காதுன்னு… அதான் அம்மா மட்டும் நீ சொல்றதை கேக்காதாம்.. நான் மட்டும் கேக்கனுமா?” என்றான்.
அவன் கூறியதைக் கேட்டு, வித்யா அஸ்வினை முறைக்க, அஸ்வின் மைண்ட் வாய்ஸில், ‘அடப்பாவி மகனே! இப்படி போட்டுக் கொடுத்துட்டீயேடா… பெருசுல இருந்து சிரிசு வரைக்கும் என் வாழ்க்கைல விளையாடுதுங்களே!’ என நினைத்து வித்யாவை பாவமாக பார்க்க, வித்யா அவனை முறைத்து விட்டு ரூம்க்குள் செல்ல அஸ்வின் அவளை சமாதானப் படுத்த, கெஞ்சிக் கொண்டே அவள் பின் சென்றான்.
இதைப் பார்த்து ரித்விக், இந்து, ரித்விக்கின் அம்மா அப்பாவும் சிரித்துக் கொண்டு இருந்தனர்.
நிதிஷ் ரித்விக் அருகில் வந்து, “அப்பா தூங்குங்க…” என கையை நீட்ட, ரித்விக் அவனை தூக்கினான்.
நிதிஷ், “அப்பா எனக்கு சாக்லேட் தாங்க… நீங்க சொன்ன மாதிரி அஸ்வின் அப்பாவை மாட்டிக் கொடுத்துட்டேன்…” என்றான்.
ரித்விக் நிதிஷ் கூறியதை கேட்டு திருதிருவென முழிக்க, இந்து ரித்விக்கை முறைத்து, “இதெல்லாம் உங்க வேலைதானா? ரூம்க்கு வாங்க… உங்களுக்கு இருக்கு..” என கூறிக்கொண்டே ரூம்க்குள் நுழைந்தாள். ரித்விக் அவளை சாமாதானம் செய்யும் பொருட்டு அவளிடம் கெஞ்சிக் கொண்டே ரித்விக் அவள் பின்னால் சென்றாள்.
நிதிஷூம் ஆதிராவும் ஹைபை அடித்துக்கொண்டனர். அதைப் பார்த்த மீனாட்சியும் சுந்தர்ராஜனும் இதெல்லாம் உங்க வேலைதானா? என வாயைப் பிளக்க, நிதிஷ், “பாட்டி வாழ்க்கைல ஒரு கிக்கு வேணாமா?” என கூறி கண்ண்டித்தான்.
“அடி படவா…” என சுந்தர்ராஜன் அவனை துரத்த அவன் மீண்டும் தனது ஓட்டத்தை தொடர்ந்தான்….. ????
சுபம்…
இன்று போல் என்றும் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய நாமும் வாழ்த்துவோம்.. நன்றி… ?????
அப்பாடா ஒரு வழியா கதைய முடிச்சுட்டேன்??….
இது என்னுடைய முதல் கதை. படிச்ச எல்லோருமே கண்டிப்பா ஒரு லைன்லயாவது கமெண்ட் பண்ணுங்க. நிறை குறை எதுவா இருந்தாலும். சொல்லுங்க. நீங்க சொல்லறத பொறுத்து தான் நான் என்ன மேம்படுத்திக்க முடியும். அப்புறம் கமெண்ட் பண்ண எல்லா நல்ல உள்ளங்களும் மனமார்ந்த நன்றி….உங்க கமெண்ட் தான் என்ன இவ்வளவு தூரம் கொண்டு வந்துச்சு…