“பாலா என்னை கேட்டதுல எந்த தப்புமே இல்லை. மனைவின்ற உறவு எத்தனை முக்கியத்துவமானதுன்னு நான் சொல்லி உங்களுக்கு புரியவேண்டியதில்லை. என்னால ஏதாவது அவளுக்கு ஆகிடும்னு நீங்க சொன்னதால தான் விலகி போனேன்…” என்றவன் பாலாவை தன்னருகே நிறுத்தி,
“அதுவே அவளுக்கு கஷ்டத்தை குடுக்கும்னா என்னால சும்மா இருக்க முடியாது. எத்தனை சோதனை வந்தாலும் அதை நாங்க பார்த்துக்கறோம். அதையும் தாண்டி சந்தோஷமா நாங்க வாழ முடியும்னு நம்பறோம்…” என்று சொல்லியவனின் காதில்,
“அத்தைன்னு சொல்லுங்க. அத்தைன்னு சொல்லுங்க…” என பாலா முணங்க,
“மூச் பாலா. சும்மா இரு…” என சொல்ல,
“என்னோட முடிவு இதுதான். பாலாவோட முடிவு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். என்னாலையும் கோபமா பேச முடியும் தான். ஆனா யாரையும் காயப்படுத்த விரும்பலை. ஏற்கனவே வருத்தத்துல இருக்கற உங்களை மேலும் வேதனைப்படுத்த வேண்டாம்னு தான் பொறுமையா பேசறேன்…”
“ஆனா இதுக்கும் மேல அவளை கூட்டிட்டு போனும்னு நீங்க பிடிவாதமா இருந்தா என்னை மீறி உங்க யாராலையும் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போக முடியாது. பார்த்துக்கலாம்…” என்று அவன் கையை கட்டியபடி அழுத்தமாய் சொல்ல,
“ஆமா, கரெக்ட். ஆனா நீ பேசறதே எனக்கு புடிக்கலை…” என்று பாலா கவுன்ட்டர் கொடுக்க,
“அடங்குடி. நானே பொறுமையா ஹேண்டில் பண்ணிட்டு இருக்கேன்…” என்று அவளின் வாயை மூடவைக்க பார்த்தான்.
“இங்க பாரும்மா மோகனா, இதுதான் நடக்கனும்னுறது ப்ராப்தம். கண்டிப்பா தவறா எதுவும் நடக்காது. இதுவே திருஷ்டி கழிஞ்ச மாதிரி. எல்லாமே முடிஞ்சு போச்சு. இனி எதுவும் இல்லை…” என்று கோபாலசுவாமி சொல்ல,
“எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. ஆனா அவ சந்தோஷமா இருந்தா போதும்னு தோணுது. இன்னும் முழுசா மனசு ஏத்துக்க மறுக்குது. ஆனா எனக்கும் வேற வழி இல்லையே…” என்று கண்ணை துடைத்துக்கொண்டவர்,
“அவ விருப்பப்படி இங்க இருக்கட்டும். நல்லா நானும் யோசிச்சுட்டேன். நான் கூப்பிட்டாலும் அவ வரவோ, உங்க பிள்ளை அனுப்பவோ போறதில்லை. அதனால அவ இங்கயே இருக்கட்டும். ஆனா…”
“இந்த ஆனாவுக்கு அவசியமில்லைன்னு சொல்லுங்க…” என பாலா வேகமாய் சத்தமாய் சொல்ல அனைவரின் இறுக்கம் தளர்ந்த மெல்லிய புன்னகை.
பின் அடுத்து எப்படி சுமூகமாக பேச என்று தெரியாமல் சங்கடத்துடன் முகம் பார்த்தபடி இருக்க,
“பசிக்குது…” என ஆரம்பித்தாள் பாலா.
“ரெடி பண்ணிட்டேன். ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா…” என்று சொல்லி அவன் கிட்சனுக்குள் செல்ல அவனின் பின்னோடே சென்றாள் பாலா.
“இன்னும் என்ன? அங்க போய் பேசு…”
“ம்ஹூம், மாட்டேன். உன்கிட்ட வேணா பேசிட்டு இருக்கேன்…” என்று அவன் கூடவே நிற்க அவளை முறைத்தவன்,
“கோபமா பேசிட்டு வந்த தானே? போய் நீயாவது நார்மலா பேசு. என்கிட்டே தான் பேச மாட்டாங்க. நீ போய் பேசேன்…” என்றபடி செய்ததை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான்.
“ம்ஹூம், நான் மாட்டேன். உன்னை பேச விட கூடாது. அவங்கக்கிட்ட வாயே திறக்க கூடாது. மண்டையை கழுவி, கன்னைத்தை தடவி கூட்டிட்டு போய்ட்டா? நீயும் சொக்கான்னு என்னை பேக்கப் பண்ணிடுவ…” என்று பாலா சொல்ல,
“நான் அவ்வளவு பேசியுமா உனக்கு நம்பிக்கை வரலை…”
“ம்ஹூம், வரலை…” என அவள் உதட்டை பிதுக்க,
“போயிரு…” என்றான் எரிச்சலுடன். இத்தனை பேசியும் நம்பமுடியாதென்று சொல்பவளை கண்டு கடுப்பாய் இருந்தது. என்னவும் முறைத்துக்கொள் என்று அவனை மேலும் கீழும் ஆராய,
“என்ன லுக்கு? …” என்று அவளின் பார்வையை கண்டு கேட்க,
“அவசரத்துல என் ட்ரெஸ் எடுத்து போட்டிருந்தா? அதான் செக் பண்ணேன்…” என்றவளின் தலையில் குட்டியவன்,
“போய் பிளேட்ஸ் எடுத்து வை. எல்லாருக்கும்…”
“எல்லாருக்கும்னா? எல்லாருக்குமா சமைச்சீங்க?…” என்றவள் வேகமாய் அந்த பாத்திரங்களை பார்க்க அப்படித்தான் செய்திருந்தான்.
“பார்த்தாச்சுல. போ…” என்று சொல்ல,
“என்ன சத்தம் கூடுது. பனிஷ்மென்ட் மறந்து போச்சா? தூக்குன்னு சொல்லிடுவேன்…” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்ட அந்த விரலில் சிரித்தபடி முத்தம் வைத்தவன்,
“இந்த சுட்சுவேஷன் எவ்வளோ ஹார்டா இருக்குது. நீ என்னை கூல் பண்ணிட்டு இருக்கியா?…” என்று சொல்லி,
“நீ போ…” என அனுப்ப ம்ஹூம். பாலாவை நகற்றவே முடியவில்லை.
சூர்யாவே அனைத்தையும் எடுத்து வைக்க மோகனா அனைத்தையும் பார்த்திருந்தாலும் எதுவும் கேட்கவில்லை. எழுந்துகொள்ளவும் இல்லை. பார்த்துக்கொண்டே இருந்தார்.
அர்ச்சனாவோ மகன் பேசுவானோ, சத்தம் போட்டால் என்ன செய்ய என்று அவரும் எழுந்துகொள்ளவில்லை.
பாலா அவன் ஒவ்வொன்றாய் தூக்கி வந்து வைக்கும்போதும், மீண்டும் உள்ளே செல்லும் போதும் அவனை தொடுத்துக்கொண்டே செல்ல,
“கூடவே தான போற. எடுத்து வைக்கிறதுக்கு என்ன உனக்கு? ஒரு வேலையும் பார்க்கறதில்லை. அவன ஒத்தையில வேலை வாங்கிட்டு இருக்க…” என்று தன்னை மறந்து பாலாவை திட்டிவிட அனைவருக்கும் ஆச்சர்யமாக போக,
“ம்மா, என்னை பேசு. அவரை ஏன் அவன் இவன்னு பேசற? நேத்தே சொல்லிட்டேன். என்கிட்டே பேசாத…” என்று வரிந்துகட்டினாள்.
“பாலா, ஷட்அப்…” என்று சூர்யா கண்டிக்க,
“யூ ஷட்அப். பேசிட்டிருக்கேன்ல. இப்ப நீங்க மூச்…” என்று அவனின் கையை கட்டிவிட்டவள் வலது கை விரலை எடுத்து அவனின் இதழ்களுக்கு வைத்துவிட்டு,
“இப்படியே இருக்கனும்…” என்று கண்ணை உருட்டி மிரட்டி,
“என்ன இப்ப சொல்லு. என்ன சொன்ன?…” என தாயிடம் பாய கோபாலசுவாமி அதிர்ந்து போய் பார்த்தார்.
அவர் பாலா இப்படி பேசி பார்த்ததே இல்லை எனலாம். சத்தம் கூட அத்தனை மெதுவாக தான் வரும் அவரின் முன்னால். கலகலப்பா பேசும் பெண். அவ்வளவு தான். வாயாடி என்றளவுகே அவர் நினையாதிருக்க இப்படி குரலை உயர்த்தி கத்தியதுமில்லாமல் மகனை நிற்க வைத்த பாங்கு அவரை புருவம் உயர்த்த செய்தது.
அதிலும் அவளின் பேச்சிற்கு கட்டுண்டு மகனும் அசையாமல் நிற்க தன் கண்களையே நம்பமுடியாது பார்த்தார்.
“என்ன சொல்லன்னா? அங்கயும் அத்தனை பேசிட்டு இங்கயும் வந்து அவன் கன்னத்தை என்ன பண்ணிவச்சிருக்க? அப்படி என்ன உனக்கு கோவம்? இப்பவும் வேலை செய்யாம அவனையும் செய்ய விடாம துரத்திட்டே இருக்க?…”
“ஆமா, துரத்துவேன். இப்போ என்ன? திரும்பவும் சொல்றேன் அவன் இவன்னு சொல்லாத. அதான் அக்காவே இல்லைன்னு சொல்லிட்ட தானே? இனிமே உனக்கு மருமகன். எங்க நீ மருமகனேன்னு கூப்பிடு…” என்று மோகனாவை பாலா மிரட்ட சூர்யாவிற்கு அந்த நிலையிலும் சிரிப்பு பொங்கியது.
“பாலா இப்படி எடுத்தெறிஞ்சு பேசாத…” என சந்திரன் சொல்ல,
“எனக்கு யாரை கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும் மருமகன்னு தான சொல்லுவீங்க? இப்ப இவரை கல்யாணம் செஞ்சு வச்சீங்க. அப்போ அக்கா அக்கான்னு சுத்தறதால தான ஒத்த வார்த்தையில அடக்கி வச்சீங்க. இனிமே அப்படி எல்லாம் செய்ய முடியாது…” என்றவள் சூர்யாவிடம் திரும்பி அவனின் விரலை எடுத்துவிட்டு,
“அத்தை சொல்லுங்க…” என்றாள் அவனிடம்.
“பாலா…” என சூர்யா சிரிப்பை அடக்கிக்கொண்டு பேச,
“அத்தைன்னு சொல்லுங்கன்னா கசக்குதா? அத்தை சொல்லுங்க. இனி நோ அக்கா. அத்தை தான். அத்தை தான் சொல்லனும்…” என அவள் பேச பேச அர்ச்சனாவும் சிரித்துவிட கோபாலசுவாமிக்கும் புன்னகை தான்.
அமைதியாக அதை வேடிக்கை பார்த்தபடி அவர் இருக்க அங்கே பாலாவை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
“அவன் என்னை என்ன கூப்பிடனும்னு நீ ஏன்டி சொல்ற? உன் வேலையை நீ பாரு…”
“எதுக்கு, நான் பேசாம இருந்து திரும்பவும் அக்கா சொல்றேன்னு நீ நாட்டாமை மாதிரி பாலாவை விட்டு ஒதுக்கி வைக்கறேன்னு தீர்ப்பை சொல்ல இவர் ஆமாஞ்சாமி போடறதுக்கா?…” என்று பட்டென்று கேட்டுவிட சட்டென அந்த இடமே இறுக்கம் சூழ்ந்துவிட்டது மீண்டும்.
“இப்பவும் நான் சொல்றதை செய்ய மாட்டேன்னு நிக்கறாரே. இதுவும் உன் மேல உள்ள பாசத்தால தான். பார்த்துக்கோ. இப்பவும் உனக்கடுத்து தான் போல…” என பாலா இருவரையும் மாறி மாறி முறைக்க,
“பாலா, ஏன் நீ இப்ப பிரச்சனை பண்ணிட்டு இருக்க? அவங்களை சாப்பிட சொல்லு…” என சூர்யா சொல்ல,
“ஏன் நீங்களே சொல்லுங்களேன். நான் சொன்னா அவங்க சாப்பிட மாட்டாங்க. அதான் ஆசையா செஞ்சு வச்சிருக்கீங்களே?…” என சொல்ல,
“அப்ப நீ சமைக்கவும் இல்லையா?…” என்றார் மோகனா.
“நீங்க வரதே தெரியாது…” என சொல்ல,
“ப்ச், போதும் உங்க ஆர்க்யூமென்ட். பாலா, சாப்பிட சொல்லு…” என சூர்யா சொல்ல,
“ம்ஹூம், அவங்க சொன்னாலும் உட்கார மாட்டாங்க. நம்ம மேல இன்னும் கோபம்…” பாலாவும் மல்லுக்கு நிற்க,
“கோவம் தான். உன் மேல கோவம். அவன் என்ன பண்ணான்? நான் அப்படித்தான் சொல்லுவேன். சூர்யான்னு தான் சொல்லுவேன். நீ சொல்லி ஒன்னும் சாப்பிட வேண்டாம். போ…” என்றவர் தானே அமர்ந்துகொள்ள முதலில் சந்திரனுக்கு போட்டுக்கொடுத்துவிட்டு அர்ச்சனாவை பார்க்க,
“சேர்ந்தே சாப்பிடுவோம்…” என அவரும் கோபாலசுவாமிக்கு வைத்து தந்துவிட்டு மோகனாவுடன் அமர்ந்துவிட்டார்.
“எப்புடி?…” என பாலா அவனிடம் கண்ணடிக்க,
“போதும், போதும். முதல்ல சாப்பிடு…” என அவளுக்கு அவனே வைத்து தந்து தானும் சாப்பிட்டான்.
பாலாவுடன் சண்டையிட்டாலும் மோகனா நேரடியாக சூர்யாவிடம் பேசவில்லை. அதே நேரம் அவனும் பேச முயற்சிக்கவில்லை. தயக்கம் சூழ்ந்த அந்த சூழ்நிலையை பாலாவின் பேச்சு மட்டுமே கொஞ்சம் இலகுவாக்கியது.
சாப்பிட்டு முடிக்க வெற்றியும், ஜெயஸ்ரீயும் வந்துவிட்டனர். வெற்றிக்கு அதற்கு மேலும் இருப்புக்கொள்ளவில்லை. அர்ச்சனா போன் செய்வார் என பார்த்து பார்த்து இருந்துவிட்டு இதோ கிளம்பிவிட்டான்.
வந்தவனை கதவை திறந்து பாலா தான் வரவேற்றாள். அவனையும் ஜெய்யையும் பார்த்ததுமே துள்ளிக்கொண்டு பாய்ந்து சென்று அணைத்துக்கொள்ள வெற்றி அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டான்.
“டேய் கீழே இறக்கி விடுடா. மாசமா இருக்கறவளை இப்படி தூக்கி சுத்தற. இறக்கிவிடு…” என்று மோகனா அதட்டவும் நம்பமுடியாமல் பார்த்தவன்,
“அக்கா…” என அவரிடம் செல்ல,
“பாலா, இவனை என்கிட்டே பேச வேண்டாம்னு சொல்லு….” என்று மகளிடம் திரும்ப,
“நான் சொல்லித்தான் இப்ப நீ திட்டினியா? ம்மா நீ அவுட்…” என்று ஜெய்யுடன் ஹைபை கொடுத்துக்கொள்ள இத்தனை நாட்களுக்கு பின்னான மகளின் சந்தோஷ சிரிப்பும், பூரிப்பு பொங்கும் முகமுமாக அவளை காண காண பெற்ற மனம் குளிர்ந்து. ஆனாலும் நெறிஞ்சி முள்ளென மனதின் ஓரத்தில் ஒரு நெருடல்.
“சூர்யா…” என்ற அழைப்பில் திரும்பி பார்த்தவன் அவனை முறைக்க,
“என்னடா கன்னத்துல இத்தனை கடி? அடி?…” என்று சத்தமாய் வெற்றி கேட்க,
“இவன் வேற…” என சொல்லி அவனை முறைத்துக்கொண்டு சூர்யா உள்ளே செல்ல பாலாவும் பின்னே ஓடினாள்.
“படுத்தற பாலா. இப்ப எதுக்கு கூடவே வர?…” என்று நிற்க,
“பார்த்தியா நானா வரவும் ஈசியாகிடுச்சு. கொஞ்சம் முன்ன என்னை தாங்கிட்டு இப்ப முறைக்கிற…” என்றவள்,
“இப்படி ஒன்னும் முறைச்சுட்டே என்னோட இருக்க வேண்டாம். உன் அப்பா வீட்டுக்கு கிளம்பு. நான் இங்க இருந்துப்பேன்…” என்று போ என்னும் விதமாய் கை நீட்டி விரட்ட மூடியிருந்த கதவை பார்த்தவன்,
“அடங்கவே மாட்ட நீ இல்ல. இன்னைக்கு ரொம்ப ரொம்ப பேசிட்ட…” என்று அவளை தன் அணைப்பிற்குள் கொண்டுவந்தவன்,
“இவ்வளோ பேசற. பாவமில்லையா அவங்க?…” என,
“அந்த அவங்க எவங்க?…” என்று கேட்டவளிடம் பதில் சொல்லமுடியாமல் முழித்தான் சூர்யா.
“அவங்க பாவம்னா, என் மாமா கூட நீங்களும் தான் எதுவும் பேசாம வந்தீங்க. அப்ப அவங்க பாவமில்லையா?…”
“அவன் பண்ணின காரியத்துக்கு அவனை சும்மா விட்டிருக்கேனேன்னு சந்தோஷப்படு…”
“என்ன காரியத்துக்கு? என்னை இழுத்துபிடிச்சு உங்க தலையில கட்டிவச்ச அந்த காரியத்துக்கா? அப்போ என்ன கட்டிக்கிட்டதுல இந்த மெக்குக்கு அவ்வளவா உடன்பாடு இல்லை போல…” என்றவள்,
“இப்பத்தான தெரியுது. வளைச்சு வளைச்சு எல்லார்ட்டயும் இப்படி கட்டி வச்சுட்டீங்களேன்னு புலம்பினது. அப்போ என்னை கட்டி வச்சதை தான சொல்றீங்க?…” என கேட்டு அவன் பக்கமே திருப்ப,
“பாலா, இதெல்லாம் அநியாயம். இப்படி பிளேட்டை மாத்தற பாரு…”
“உங்க கோபத்துக்கான காரணம் அதுதான. ஆமா சொல்லுங்க…”
“எதே? நான் ஆமான்னு சொல்லனுமா? அவங்க உண்மையை மறைச்சு உன்னை போர்ஸ் பண்ணி…” என்று சொல்லவும் அவள் முறைக்க,
“இல்லை, என்னை என்னை தான். போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அதை தான். அவங்க மறைச்சதுக்கு தான் கோவப்பட்டேன். மத்தபடி நான் ஓகே தான். ஹேப்பி தான்…” என்றவனை நம்பாத பார்வை பார்க்க,
“சரி வா நான் ப்ரூ பன்றேன்…” என்றவன் அவளையும் கூட்டிக்கொண்டு வெளியே சென்றவன்,