“என்னடா, ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி போய்ட்டிருக்குது?…” என சகஜமாய் பேசுவதை போல கேட்க,
“கங்க்ராட்ஸ்டா சூர்யா. அப்பறம் உன் கன்னத்துல என்னடா சூர்யா? பாலா ரொம்ப அடிச்சுட்டாளாமே? இப்பத்தான் அர்ச்சும்மா சொல்லிட்டு இருந்தாங்க…” என்று சொல்லி அவனை டோட்டல் டேமேஜ் செய்ய,
“இதை கேட்கத்தான் இந்த மூஞ்சியை பாவமா வச்சுட்டு கிளம்பி வந்தியா நீ?…” என்று முறைக்க,
“ஆமா, அதுவும் அர்ச்சும்மா போன் செய்யவும் போவோம்னு சொன்னேன். என்ன சாப்பிட கூட விடலை. கூட்டிட்டே வந்துட்டாங்க…” என்று ஜெயஸ்ரீ சொல்ல,
“சாப்பாடு இருக்குது ஜெய். சாப்பிடு…” என சூர்யா சொல்ல,
“ஒழுங்கா சாப்பிடறதில்லை போல. எதுக்காம் இப்படி மெலிஞ்சு போய் இருக்கா?…” என மோகனா ஜெய்யிடம் கேட்காமல் பொதுவாய் கேட்க,
“எங்க உங்க தம்பிக்கு அக்கா அக்கான்னு உங்க நினைப்பும், அக்கா மகளோட நினைப்பும் தான். என்னை கவனிக்க யார் இருக்கா அண்ணி?…” என்று ஜெய் சொல்ல,
“அவன் என்னைக்குதான் யாரைத்தான் கவனிச்சான். அறிவுன்றதே இல்லை. இப்ப என்ன என்னோட கிளம்பி வா. நான் பார்த்துக்கறேன்…” என்று மோகனா சொல்ல,
“ஏன் அங்க இருந்து பார்த்துக்கமுடியாதா? நீ மாமா வீட்டுல இருந்தா நானும் அடிக்கடி உன்னை பார்த்துப்பேன்ல. அப்பாட்ட நீ சொல்லும்மா. கேட்பாங்க…” என்று பாலா சலுகையாய் கேட்க அவளின் கன்னத்தை பிடித்து வாஞ்சையுடன் வருடியவர்,
“அம்மா மேல கோவமாடா?…” என்று கேட்டு மகளை அணைத்துக்கொள்ள,
“அந்த டாப்பிக் வேண்டாம்மா. இந்த நாளெல்லாம் நான் மறக்கனும். ப்ளீஸ்…” என்றவளின் முதுகை ஆதுரமாய் வருடிவிட்டவர் ஜெய்யையும் தனக்கருகே அழைத்துக்கொண்டார்.
“இப்பவும் கடவுள் மேல பாரத்தை போட்டுட்டேன். என்னோட வேண்டுதல் எல்லாம் அந்த ஆண்டவன் கேட்கவும். என் பிள்ளைங்க எல்லாம் நல்லா இருந்தா அதை விட என்ன வேணும்? அவ்வளவு தான்…” என்று சொல்ல அவரின் காலடியில் வெற்றி அமர்ந்துகொண்டவன்,
“வீட்டுக்கு வாக்கா. என்னை எத்தனை அடி வேணாலும் அடிச்சுக்கோ. ப்ளீஸ். வீட்டுக்கு வா. என்னவோ யாருமில்லாத மாதிரி பீல் ஆகுது எனக்கும் ஜெய்க்கும். அநாதையாகிட்ட…” என்றவனின் பேச்சில் கோபத்துடன் அவனின் கன்னத்தில் அடித்தவர்,
“பேசலை, வேண்டாம்னா அநாதையாகிடுவியா? இப்படி பேசின பல்லை தட்டி கைல குடுத்துருவேன்…” என்று தம்பியை மிரட்ட,
“நல்லா சொல்லுங்க அண்ணி. ஒரே கண்ணீரும் கம்பலையுமா சுத்திட்டு. கேட்க ஆளில்லாம ஓவர் அழுகாச்சியா போய்டுச்சு…” என்று சொல்லியவளுக்கும் சந்தோஷத்தில் கண்கள் கண் கலங்கியது.
இதை எல்லாவற்றையும் பார்த்தபடி இருந்த கோபாலசுவாமிக்கு அப்போதே மனது நிறைந்துவிட்ட உணர்வு.
“சரி, அப்ப நாங்க புறப்படறோம்…” என்று அவர் எழுந்துகொள்ள,
“இருந்துட்டு நைட் போங்களேன்…” என சூர்யா சொல்லியவன் பாலாவை பார்க்க,
“ஆமா அங்கிள், எல்லாரும் இங்க இருக்கோம். நீங்களும் இருங்க. ரொம்ப நாள் கழிச்சு ஒண்ணா இருக்கோம்…” என்று பாலா சொல்ல,
“மாமான்னு கூப்பிடும்மா. நானும் உன்னோட விருப்பப்படி கூப்பிடட்டும்னு கட்டாயப்படுத்தாம விட்டுட்டேன். இப்ப கேட்கனும் போல இருக்குது…” என்று சொல்லவும் மோகனா ஜெயஸ்ரீ காதில் என்னவோ முணுமுணுக்க உடனே உள்ளே சென்றாள்.
பால்கனியில் இருந்த ரோஜாவை பறித்து ஒரு தட்டில் உதிர்த்துவிட்டு அரிசியில் மஞ்சள் கலந்து விபூதி குங்குமம் வைத்து எடுத்து வந்தாள்.
“பாலா ஆசிர்வாதம் வாங்கிக்கோ. குழந்தை பிறக்க போகுது. பெரியவங்க ஆசிர்வாதம் ரொம்ப முக்கியம்…” என்று சொல்ல சூர்யாவுடன் சேர்ந்து பாலாவும் கோபாலசுவாமி, அர்ச்சனாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர்கள் மோகனா, சந்திரனிடமும் வாங்கிக்கொண்டனர்.
“இப்ப இருக்கலாம் தானே மாமா?…” என பாலா சொல்ல,
“இதுக்கு மேல என்ன பேச்சு? கண்டிப்பா இருக்கறோம்…” என்றதும் உடனே வெற்றி சூர்யாவிடம் பேசி வருண், ஹரிணி, அஸ்வினி, உமா, உத்தமன் என அனைவரையும் வரவழைத்துவிட இரவு வரை அத்தனை கொண்டாட்டமாக கழிந்தது.
பெரியவர்களிடம் அதிக பேச்சுக்கள் இல்லை என்றாலும் பொதுவாய் பேசிக்கொண்டனர். பிரச்சனைகள் இருந்த போதும் அதனையே பிடித்துக்கொண்டு இராமல் அந்த நேர சந்தோஷத்தை ஏற்றுக்கொள்ள முயன்றனர்.
அதன் பொருட்டே மோகனாவும் கோபம் இருப்பினும் அதனை தள்ளி வைத்துவிட்டு மகளுக்காக பார்க்க இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறவுகளுக்காக கசப்பை தள்ளிவைத்தனர்.
இரவு வெளியே ஆடர் செய்துவிட்டு சாப்பிட்டுக்கொள்ள உறங்கும் நேரம் நெருங்கியதும் தான் அனைவருமே கிளம்ப ஆரம்பித்தனர்.
அர்ச்சனாவிடம் முன்பை போல நெருங்கவில்லை என்றாலும் உமாவிடம் ஏனோ மோகனா ஒட்டுதல் காண்பித்தார். தன்னை போலவே அவரும் மகளை பிரிந்ததனாலோ என்னவோ திவ்யாவை பற்றி விசாரிக்க மகளிடம் பேசியதாகவும் விரைவில் அவளும் வந்து பார்ப்பதாக சொல்லியதாகவும் பேசினார் உமா.
‘தன் மேலுள்ள தவறால் மகள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாள். நீயாவது உன் பிடிவாதத்தை தளர்த்து. பிள்ளைகள் சந்தோஷம் தான நமக்கு முக்கியம்’ என்று அவரிடம் அறிவுறுத்தினார்.
அந்த உறவுகள் சூழ் உலகில் ஜாதகத்தின் கட்டங்கள் கூட ஒதுங்கி நின்று தான் வேடிக்கை பார்த்தது.
“சரி இப்போவாச்சும் கிளம்புவோம் அர்ச்சு…” என கோபாலசுவாமி கிளம்ப அனைவருமே எழுந்துகொள்ள லிப்ட் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்து கதவை அடைத்ததுமே பாலாவை கைகளில் அள்ளிக்கொள்ள,
“எல்லாரும் போனா தூக்கி வச்சிப்பீங்க. இருந்தா தூக்கமாட்டீங்க. அப்படித்தான?…” என்று பாலா அவன் கைகளில் துள்ள,
“ஓகே, போனவங்க எல்லாரையும் வர சொல்லி தூக்கிக்கட்டா?…” என்றவனின் சிரிப்பில் அனைத்தையும் மறந்தவள்,
“கிட்ட வாங்களேன்…” என அவனின் தலையை பற்றி இழுத்து கன்னங்களில் மாறி மாறி இதழ்கொண்டு ஒற்றி எடுக்க,
“என்ன பன்ற பாலா?…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“கடிச்சுவச்சது வலிச்சிருக்கும்ல. அதான் கிஸ் பன்றேன்….”
“ஆஹாங்…” என்றவன் விளக்கை அணைத்துவிட்டு அவளோடு சோபாவில் மறந்தவன்,
“இத்தனை நாள் கேப்ல இதை எல்லாம் கூட மறந்துட்ட. நீ சைலன்ட்டா இரு. நான் சொல்லி குடுக்கறேன்…” என்றவனின் இதழ் மீறலில் பாலா மூழ்கிக்கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் கேட்டது.
“இந்த நேரத்துல யாரா இருக்கும்?…” என்றபடி தன் மடியில் இருந்து அவளை நகர்த்தியவன் லைட்டை போட்டு யாரென்று பார்க்க கதவை திறக்க,
“நாங்க வந்துட்டோம். இன்னைக்கு நைட் இங்க தான் ஸ்டே…” என்றபடி வீட்டிற்கு கிளம்பிய மொத்த கும்பலும் வந்து நின்றிருந்தது.
வெற்றி, ஜெயஸ்ரீ, வருண், ஹரிணி, அஸ்வினி என்று நிற்க விழிபிதுங்கி நிற்க அவனின் முகத்தை பார்த்தவர்களுக்கு சிரிப்பு பீறிட்டது.
“இப்பத்தான கிளம்பினீங்க?…” என்று சூர்யா யாரையும் உள்ளே விடாமல் அங்கேயே நின்று கேட்டான் கடுப்புடன்.
“போனோம் தான். ஆனாலும் இன்னைக்கு இங்க தங்கலாம்னு வெற்றி தான் ஐடியா குடுத்தார்…” என்று வருண் கோர்த்துவிட,
“கிராதகா…” என அவனை முறைத்தவன்,
“எல்லாம் அவங்கவங்க வீட்டுக்கு போங்க. கிளம்புங்க. இங்க தங்க இடமில்ல…”
“ஒரு பிரச்சனையும் இல்லை. இருக்கற இடத்துல தங்கிக்கறோம். சொல்லேன் ஹரிணி…” என வருண் வம்புக்கென்று சூர்யாவை சீண்ட,
“சோதிக்காதீங்கடா என்னைய…”
“அதான் நாம எல்லாம் சமாதானம் ஆகிட்டோம்ல. அதனால இன்னைக்கே இங்க இருந்து ஜாலியா பேசி சிரிச்சு உறவை இன்னும் ஸ்ட்ராங் ஆக்கிக்குவோம்…” என்று வருண் சொல்ல,
“இங்க பாருடா, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இவங்க எல்லாரும் தான் கூட்டிட்டு வந்தாங்க…” என வெற்றி ஜகா வாங்கினான். அனைவரையும் ஒரு பார்வை பார்த்து முறைத்தவன்,
“நான் இன்னும் சமாதானம் ஆகலை. சண்டை சண்டை தான். பத்து நாள் கழிச்சு வந்து உறவை வளர்த்து ஸ்ட்ராங் பண்ணிக்கோங்க. இப்ப கிளம்புங்க…”
“என்ன ஹரிணி, உன் அண்ணனுக்கு கொஞ்சம் கூட வீட்டு மாப்பிளைன்ற மரியாதைன்றதே இல்லாம போச்சு. வீட்டுக்குள்ளயே விடமாட்டேன்றாரு…” என்றதில் விழி தெறிக்க அவனை பார்த்த சூர்யா,
“ஹரிணி…” என தங்கையை பார்க்க,
“நான் எப்பவும் அண்ணன் சைட் தான். அண்ணா கோவமா இருக்காருல. வாங்க வாங்க, நாம கிளம்புவோம். அப்பறமா வந்து சமாதானம் செய்வோம்…” என்ற ஹரிணி,
“என்ன நான் சொல்றது?…” என கேட்க அஸ்வினியும், ஜெயஸ்ரீயும் ஆமாம் என தலையாட்டி சூர்யாவின் தங்கைகள் என்று நிரூபிக்க,
“டெப்பாஸிட் காலி. கிளம்புவோமா?…” என்று வெற்றி கிண்டலாக வருணிடம் சொல்ல,
“அடேய்களா இப்ப போறேங்களா? இல்லையா?…” என்று கேட்கவும் அவனை உற்று பார்த்த வருண்,
“கவுன்ட் பண்ணிட்டேன். நாளைக்கு வந்து இன்க்ரீஸ் ஆகிருக்கான்னு பார்த்து செக் பண்ணிக்கறேன்…” என்று சொல்ல,
“எதை…” என சூர்யா கேட்க,
“இதை…” என அவனின் கன்னத்தை காட்டி சொல்லிவிட்டு ஓடியேவிட்டான். அவனை தொடர்ந்து மற்றவர்களும் சொல்லிக்கொண்டு கிளம்ப சிரித்தபடி கதவை பூட்டிவிட்டு வந்தான்.
“எல்லாம் உன்னால தான். உன்னால தான்…” என்று பாலாவை தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல,
“பேபி இருக்குது…” என்றாள் அவனின் எண்ணம் புரிந்தவள்.
“சோ வாட். உனக்கு தான் ஒரு ஹோம் அட்வைசர் இருக்காங்களே. கேட்டு தெளிவு பண்ணிக்கோ. ஐ திங்க் ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு தான் நினைக்கறேன்…” என சொல்லியவன் போனை கொடுத்துவிட்டு பாத்ரூமிற்குள் சென்றான்.
அவன் செல்லவும் வெட்கத்துடன் ஜெயஸ்ரீக்கு அழைத்தவள் அவளிடம் எப்படி பேசுவதென்று புரியாமல் அமர்ந்திருக்க,
“என்ன பாலா, கிளம்பி வரனுமா என்ன? இப்பத்தான கீழேயே வந்தோம்…” என்று அவள் கிண்டல் பேச,
“ஜெய்…” என்று சிணுங்கினாள்.
“சரி சொல்லு. என்ன?…”
“ஹான், ஒண்ணுமில்ல…” என்ற தடுமாற்றமான குரலில் புன்னகைத்த ஜெயஸ்ரீ,
“நத்திங் வொர்ரி. சந்தோஷமா இருடா பாலா…” என்றாள்.
“சூர்…”
“எஸ், நாளைக்கு ஹாஸ்பிடல் போகனுமாம். அங்க உன்னோட டவுட்ஸ் கிளியர் பண்ணிக்கோ. ஓகே…” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட,
“யார் பாலா?….” என வந்தான் அவன்.
“என்ன யார்?…”
“போன்ல யார்ன்னு கேட்டேன்…” என தெரியாததை போல பேச,
“நீங்க தான ஜெய்க்கிட்ட டவுட் கேட்க சொல்லி சொன்னீங்க…” என சொல்ல,
“நிஜமாவே கேட்டுட்டியா? நான் சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். உன்னை யார் இதெல்லாம் கேட்க சொன்னா?…” என அவன் பேச,
“என்ன? அப்ப நானா தான் கேட்டேனா?…” என்று தலையை தட்டிக்கொண்டவள் தன்னருகே அமர்ந்திருந்தவனின் உடல் சிரிப்பில் குலுங்க அவனின் விளையாட்டு புரிந்தவள் பில்லோவை எடுத்து மொத்தி,
“என்ன நினைச்சிருப்பாங்க என்னை? போச்சு போச்சு. கேட்கறதுக்குள்ள எவ்வளவு ஷையா இருந்துச்சு தெரியுமா? உன்னால தான். உன்னால தான்…” என அவளின் அடிகளுக்கு இறுதியில் அவளின் அணைப்பிற்குள் அடங்கினான் சூர்யா.
மழை என்பதா வெயில் என்பதா
பெண்ணே உன் பேரன்பை நான் புயல் என்பதா
மெய் என்பதா பொய் என்பதா
மெய்யான பொய்தான் இங்கே மெய்யானதா
நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும் இடம் போதுமே