நிலா – 27
மறுநாள் அப்பாயின்மென்ட் வாங்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினார்கள். மோகனாவும் வருவதாக சொல்ல,
“ம்மா, நானும் அவரும் போய்ட்டு மாமா வீட்டுக்கு வரோம். எனக்கு சமைச்சு வை. இவரும் அங்க வந்த மாதிரி இருக்கும். அதனால நீ வர வேண்டாம்…” என சொல்லிவிட்டாள் தாயிடம்.
அடுத்ததாக அர்ச்சனா கேட்க அவரிடமும் என்ன பதில் சொல்லி மறுப்பது என தெரியாமல்,
“அவர் உங்கட்ட பேசனும்னு சொல்றாங்க அத்தை…”என சொல்ல அவளின் அத்தையில் மெய்மறந்தவர்,
“குடும்மா…” என்று சொல்லி சந்தோஷத்துடன் இருந்தார்.
“ம்மா, சொல்லுங்க….” என்று போனை வாங்கியதுமே சூர்யா கேட்க,
“நீ தான் சொல்லனும். எப்ப வரட்டும்? நேரா வந்திடவா?…” என்று அர்ச்சனா கேட்க,
“எங்க வரனும்? எதுக்கு?…”
“என்ன சூர்யா? ஹாஸ்பிட்டலுக்கு தான்…” என்று அர்ச்சனா சொல்லவும் தான் என்னவென்றே அவனுக்கு புரிந்தது.
என்ன எதென்றே சொல்லாமல் பாலா உடை மாற்றிக்கொண்டிருந்தவனிடம் வந்து மொபைலை குடுத்துவிட்டு சென்றிருந்தாள்.
“ஓஹ், அங்கையா?…” என கேட்டு என்ன பதில் சொல்ல என்று யோசித்தவன் பாலா என்ன சொல்லிவைத்தாளோ என தெரியாமல் அவளை தேடி சென்றான்.
“ம்மா, ஒரு நிமிஷம். செகென்ட் லைன்ல ஆபீஸ்ல இருந்து கால் வருது. வெய்ட்…” என்று ஹோல்ட் போட்டவன்,
“என்ன சொன்ன பாலா அம்மாக்கிட்ட?…” என கேட்க,
“நான் எதுவும் சொல்லலை. ஹாஸ்பிட்டல் வரேன்னு சொன்னாங்க. அதான் நீங்க பேசறதா குடுத்தேன்…”
“அதை தெளிவா சொல்லமாட்டியா நீ?…” என அவன் முறைத்து,
“என்ன சொல்ல?…” என கேட்க,
“அம்மா கால் பண்ணினாங்க. நான் வரவேண்டாம்னு சொன்னேன். ஹாஸ்பிட்டல் போய்ட்டு வெற்றி மாமா வீட்டுக்கு வரேன். சமைச்சு வைங்கன்னு சொன்னேன்…”
“இதை ஏன் என்கிட்டே சொல்லலை நீ? நான் அவன் வீட்டுக்கு வரலை…”
“அம்மா பேசி வச்சது அத்தை கூப்பிட்டாங்க. அதான் குடுத்துட்டேன்…”
“என்னால எல்லாம் அங்க வர முடியாது. நான் பேக்டரி போய் ரொம்ப நாள் ஆச்சு. நீ கிளம்பினதுல இருந்தே நான் போகலை. அங்க நிலவரம் எப்படி இருக்கோ?…” என்றபடி நிற்க உடனே ஹோல்டில் இருந்ததை எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.
அர்ச்சனா இன்னும் லைனிலேயே இருக்க திடீரென இப்படி செய்யவும் பல்லை கடித்தவன்,
“சொல்லுங்கம்மா…”
“நீ தான் சொல்லனும் சூர்யா. ஆமா எப்ப இருந்து பாலா நம்பருக்கு ஆபீஸ் கால் வருது?…” என்று கேட்டதும் தான் மாட்டிக்கொண்டவன் நாக்கை கடித்துக்கொள்ள,
“மேனேஜர்க்கு முன்னாடி குடுத்து வச்சிருந்தேன். என்னை ரீச் பண்ண முடியலைன்னா பாலா நம்பருக்கு கூப்பிட சொல்லி. ப்ச், இப்ப இது ரொம்ப முக்கியமா?…”
“சரி, நான் கிளம்பறேன் அப்போ…” என அர்ச்சனா போனை வைக்க போக,
“இல்லை, இல்லை. வேண்டாம். ம்மா, நாங்க போய்ட்டு வந்து வீட்டுக்கு வந்து சொல்றோம்…” என வார்த்தையை விட,
“சூர்யா நிஜமாவா? வீட்டுக்கு வரியாப்பா?…” என உடைந்த குரலில் அர்ச்சனா கேட்டதும் தான் தான் உளறியது புரிந்தது.
ஆனாலும் மறுக்காமல் அமைதியானவன் தாயையும் அமைதிப்படுத்தும் விதமாக தன்மையாக பேசினான்.
“ஹ்ம்ம், வரோம்மா. ஒரு ரெண்டு மூணு நாள்ல வரோம். வரோம்ன்னா வந்துட்டு உங்களை பார்த்துட்டு இங்க வந்திருவோம்…” என சொல்ல,
“நீ வரேன்னு சொன்னதே போதும். அதுவே போதும். அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவார்…” என்று குதூகலமாக சொல்லியவர் போனை வைத்துவிட பாலாவை தேடி சென்றான்.
“போலாமா? நான் ரெடி…” என அவள் அதற்குள் உடை மாற்றி போனிடெய்ல் போட்டு தயாராகி இருந்தாள்.
“உன்னை என்னதான் பன்றது பாலா? இப்ப எத்தனை இழுத்து வச்சிருக்க?…” என்று அவளை முறைக்க,
“கார்ல போகும் போது பேசிக்கலாம். இப்பவே லேட் ஆகிடுச்சு…” என அவனின் கோபத்தை கண்டுகொள்ளாமல் செல்ல,
“ரொம்ப கூடிப்போச்சு கொழுப்பு…” என்றபடி கார் சாவியை எடுத்துக்கொண்டு அவளுடன் கிளம்பினான்.
ஹாஸ்பிட்டல் சென்றதும் வழக்கமான பரிசோதனைகள் முடிந்து குழந்தையும், பாலாவும் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லவும் சூர்யாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
வேறு உபாதை தரும் எந்த சங்கடங்களும் அவளுக்கு இல்லாமல் நார்மலாக இருக்க கூடுதல் நிம்மதியாகி போனது. தேவையான மருந்து மாத்திரைகள் எல்லாம் எழுதி தந்து வழக்கமான அறிவுரைகள் சொல்லி முடிக்க அவரிடம் நன்றி சொல்லி சூர்யா பாலாவை பார்த்து,
“ஓகே, கிளம்புவோம்…” என்றதும்,
“இன்னும் டவுட்ஸ் க்ளியர் பண்ணலையே…” என்றதும் அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.
“ஒன்னும் வேண்டாம், எழுந்து வா…” என்று அவளினம் மெல்லிய குரலில் முனுமுனுத்தவன் டாக்டரை பார்த்து லேசாய் சிரித்துவிட்டு எழுந்துகொள்ள,
“ம்ஹூம் ஜெய் கேட்க சொல்லிருக்காங்க. நேத்தே சொன்னாங்க…” என சொல்ல,
“என்னவும் பண்ணு. நான் வெளில இருக்கேன்…” என்று பிள்ளை கடித்துக்கொண்டு சொல்லியவன் டாக்டரிடம் விடைபெறுமாறு புன்னகைத்து வெளியேற பாலாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு.
“என்ன விஷயம் பாலா?…” என்று கேட்டதும் தான் மெதுவாய் தன்னுடைய சந்தேகங்களை கேட்டவளுக்கு புன்னகையுடன் அவரும் விளக்கம் அளிக்க நன்றி சொல்லி கிளம்பி வந்தாள்.
வெளியே வந்தவளை முறைத்தவன் என்னை வச்சுட்டு அப்படித்தான் கேட்கனுமா?…” என்று ஆரம்பிக்க இரு காதையும் கைகள் கொண்டு அவள் அடைக்க அதன் பின் வாயே திறக்கவில்லை.
கார் வெற்றி வீட்டிற்கு செல்லாமல் வேறு திக்கில் திரும்ப அதை கவனித்த பாலா சூர்யாவிடம்,
“எனக்கு மாமா வீட்டுக்கு போகனும். அம்மா வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க…”
“நானும் தான் கிளம்புன்னு சொன்னேன். கேட்டியா நீ?…” என அவளிடம் முறைக்க,
“நான் பேசினதை உங்ககிட்ட சொன்னேனா? இல்லைல. நான் பேசினது என்னோட தான். அதான் வெளில வந்துட்டீங்க தானே? இப்ப மாமா வீட்டுக்கு போகனும். நான் கன்பார்மா வரேன்னு வேற சொல்லிட்டேன்…” என சிணுங்க அவளை திரும்பி பார்த்தவன்,
“ஒரு பைவ் மினிட்ஸ் பொறுமையா இரேன்…” என்று சொல்ல பாலாவும் மௌனமானாள்.
கார் மாலின் உள்ளே நுழைய அதை கண்டவள் அங்கே எதற்கு என்பதை போல பார்க்க,
“வா…” என அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த கே.எஃப்.ஸி உணவகத்திற்குள் நுழைந்தான்.
“நான் கேட்கவே இல்லையே…” என பாலா சொல்ல,
“உன்னோட அம்மா உனக்கு சமைச்சிருக்க மாட்டாங்க. எனக்கு தான் செஞ்சிருப்பாங்க. அதனால அதுக்கு முன்னாடி ஒரு ஸ்டாட்டர். வா வா…” என அவளை அழைத்துக்கொண்டு சென்று அமர வைத்துவிட்டு அவளுக்கும் தனக்கும் போய் ஆடர் செய்து வாங்கி வந்தான்.
“இதான் உன்ன எனக்கு இன்னும் இன்னும் பிடிக்குது மெக்…” என்று பாலா யாருமறியாமல் அவனின் கன்னத்தை கிள்ள,
“எது? இப்படி வாங்கி குடுக்கறதாலையா?…” என சிரிக்க,
“ம்ஹூம், எனக்கு எப்ப என்ன வேணும்னு நானே யோசிக்கும் முன்னால என்னோட தேவையை ஃபுல்ஃபில் பன்றதுல நிஜமாவே மெக் கெத்துதான். அக்ஸப்டட்…” என்று சிரித்தவளின் தலையில் லேசாய் தட்டினான்.
“சூடு ஆறுமுன்ன சாப்பிடு முதல்ல. க்ரிஸ்பி சிக்கன் விங்க்ஸ் மட்டும் வாங்கிருக்கேன்…” என்றவன் தனக்கு வாங்கிய வெஜ் பர்கரை எடுத்துக்கொண்டான்.
பேசியபடி இருவரும் உண்டு முடித்து அங்கிருந்து கிளம்பி நேராக வெற்றி வீட்டிற்கு வர வெற்றி சூர்யாவை தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே இறக்கினான். உள்ளே நுழையும் முன்னர் அவர்களை அங்கேயே நிறுத்தி வைக்க வீட்டினுள் இருந்து ஹரிணியும் அஸ்வினியும் வந்துவிட்டனர் ஆராத்தி தட்டுடன்.
“இவங்கலாம் எங்கடா இங்க?…” என சூர்யா கேட்க,
“வெற்றி உங்களை மாதிரியா? நீங்க பத்திவிட்டதுக்கு அப்பறம் அவர் தான் எங்களுக்கு அடைக்கலம் குடுத்தாரு. இதுக்கு பேர் தான் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டறது…”என வருண் கிண்டல் பேச,
“அடங்குடா. வந்தவன் வாசலோட போயிராம…” என்ற வெற்றி பாலாவை பார்த்து பார்த்து சிரிக்க,
“என்ன மாமா? என்னை பார்த்தா எப்படி இருக்குது?…” என முறைத்தாள்.
“ஒன்னுமில்லடா, உன்னை கைல தூக்கின மாதிரி இருந்துச்சு. இப்ப உனக்கே குழந்தை. அதான்…” என்றவனின் பேச்சில் வெட்கத்துடன் சூர்யாவின் சட்டையை பிடித்து நின்றவள்,
“இங்கயே வச்சு அனுப்பிடறதா?…” என்றதும் தான் அனைவருமாக உள்ளே செல்ல அங்கே மோகனா, அர்ச்சனா, உமா மூவருமே இருந்தனர்.
“உன் ஏற்பாடா?…” என்று சூர்யா வெற்றியிடம் கேட்க,
“ஹரிணிக்கு விருந்து போடனும்னு அக்கா சொல்லிட்டே இருந்தா. அதுக்கு நேரமே அமையலை. அதான் இன்னைக்கு பாலா வரேன்னு சொல்லவும் வருணுக்கும் ஹரிணிக்கும் கால் பண்ணேன். அவங்களும் கிளம்பி வந்துட்டாங்க…”
“அப்படியே ஹரிக்கா எனக்கு கால் பண்ணா. நான் அம்மாட்ட சொல்லி அம்மா உமா அத்தைட்ட சொல்லி நாங்களும் கிளம்பி வந்துட்டோம்…” என அஸ்வினி சொல்ல,
“ஹ்ம்ம், சரிதான்…” என்றவன்,
“எங்க மாமாவை காணும்?…” என சந்திரனை கேட்க,
“ரெண்டு மாமாவும் உள்ள தூங்கறாங்க. இவ்வளோ நேரம் கார்ட்ஸ் விளையாடிட்டு இருந்தாங்க…” என்று சொல்லவும் அந்த அறையில் எட்டி பார்க்க உத்தமனும், சந்திரனும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.
மோகனா, உமா, அர்ச்சனா மூவரும் பாலாவை பிடித்துக்கொள்ள ஹாஸ்பிட்டலில் என்ன சொன்னார்கள் என்று கேட்டுக்கொண்டு இருந்தனர்.
“ம்மா, சொன்னதையே திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க. எனக்கு என்ன சமைச்சு வச்ச?…” என பார்த்தவள் வாசம் பிடிக்க அசைவம் சமைத்ததற்கான அறிகுறியே அங்கே இல்லை.
அவள் திரும்பி சூர்யாவை பார்க்க ‘சொன்னேன்ல’ என்பதை போல கண்சிமிட்டி சிரித்தானவன்.
“கோச்சுக்காதடா. ஹரிணிக்கு விருந்து. எல்லாரும் வந்திருக்காங்க. அதான் சைவமா செஞ்சுட்டேன். நாளைக்கு உனக்கு பிடிச்சமாதிரி பண்ணிடுவோம்…” என மோகனா சொல்ல,
“இல்லனாலும். போம்மா. உன் மருமகனுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதான் வரும் போதே சிக்கன் வாங்கி குடுத்து தான் கூட்டிட்டு வந்தாங்க…” என பெருமையாய் சொல்ல,
“என்னது கடையில சிக்கன் சாப்ட்டியா? உனக்கு ஏதாவது இருக்கா? இந்த நேரம் போய் வெளில சாப்பிடுவாங்களா?…” என மோகனா ஆரம்பித்துவிட மேலும் அதிகமாய் திட்டிவிடுவாரோ என,
“பாலா, இங்க வா…” என அழைத்துவிட்டான் சூர்யா.
“இந்த பொண்ணு ரொம்ப பன்றா…” என ஜெயஸ்ரீயிடம் புலம்பியபடி இருந்தார்.
அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் பாலாவும் இல்லை. சூர்யாவும் இல்லை. தன்னருகே அவளை அமர்த்திக்கொண்டான்.
“என்னமோ காப்பாத்தற மாதிரி, அவங்களும் திட்டுவாங்க. நீங்களும் திட்டுவீங்க. ரெண்டும் ஒண்ணுதான்…”
“அதுக்கு வாயை குறைக்கனும். உன்னை யாரு சொல்ல சொன்னா சிக்கன் சாப்ட்டேன்னு?…” என்றவன்,
“என்ன சொல்லு நான் திட்டறது வேற அவங்க திட்டறது வேற…”
“திட்டரதுல என்ன வேற வேற?…” என அவனை பார்க்க சிரிப்போடு அவனின் முகத்தில் பொங்கிய பாவனையில்,
“ஐயோ மெக். போதும் இந்த லுக். ஸ்டாப் மேன்…” என்றவளின் சிணுங்களில் சத்தமின்றி சிரித்தான் சூர்யா.
அன்றைய பொழுது அங்கேயே கழிய மறுநாளில் இருந்து தொழிலை பார்க்க கிளம்பியவன் பாதி நாள் ஜெய் வீட்டில் விட்டுவிட்டும், சில நாள் தங்கள் வீட்டில் விட்டுவிட்டுமே செல்வான்.
முடிந்தளவு பாலாவை தனியே இருப்பதை அவன் அனுமதித்ததில்லை. என்னதான் எந்த பிரச்சனையும் இல்லை என்று கோபாலசுவாமி அடித்து சொன்னலும் அவரின் மௌனத்தின் பின்னால் இன்னும் எதுவோ ஒளிந்திருந்ததை போலவே இருந்தது சூர்யாவிற்கு.
கேட்கவும் பயமாக இருந்தது. எது எப்படியோ அவளை பத்திரமாக பார்த்துக்கொள்வதொன்றே முக்கியம் என்பதில் பிசகவில்லை அவன்.
அவனின் பயம் சில நேரம் அப்பட்டமாய் பாலாவின் கண்களுக்குள் அகப்பட்டுவிடும். அன்றைய நாள் மிகவும் மோசமான நாள் தான் சூர்யாவிற்கு. போட்டு தாளித்துவிடுவாள்.
“அப்படி என்ன உனக்கு பயம்? அப்பா உன் மனசுக்குள்ளயே இன்னும் அந்த எண்ணம் இருக்குதோ? பயந்து பயந்து. எனக்கு புடிக்கவே இல்லை…” என அவனை ஒரு ஆட்டு ஆட்டி பின் அவனிடமே அடைக்கலாமாகி போவாள்.
நாட்கள் செல்ல செல்ல அவனின் சில செயல்களை கண்டுகொண்டாலும் அதன் பின் தானும் அதை பற்றி பேசுவதை தவிர்த்தாள். நடப்பது நடக்கட்டும். சொல்லி மறைய போவதில்லை இந்த உணர்வு என்பது பாலாவிடம் வந்துவிட்டது.
சூர்யாவிடம் மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவரும் கூடி இருந்தாலும் அனைவரின் கவனமும் பாலாவிடம் தான் இருக்கும். அவளின் சின்ன சின்ன அசைவையும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
“எங்கையாவது கூட்டிட்டு போய்டுங்களேன். இப்படி பார்த்து பார்த்தே எனக்கு ப்ரியாவே இருக்க முடியலை…” என்று அவனை போட்டு உலுக்கத்தான் செய்வாள்.
பாலா அதிகமாய் பயந்தது ஜெயஸ்ரீ பிரசவத்தில் தான். வளைகாப்பு போட்டு முடித்து கிளம்பும் தருவாயில் ஜெயஸ்ரீக்கு பிரசவ வலி உண்டாக அனைவரும் அவளை பார்க்க அந்த சத்தமும், ஜெய்யின் கதறலும் பாலாவை நிலைகுலைய செய்தது.
குழந்தை பிறப்பு என்பது இயற்கையான ஓன்று. அதை சந்தோஷமாகவே எதிர்கொள்ள தான் இருந்தாள். அன்று அப்படி ஒரு நிகழ்வை நெருக்கத்தில் முதன் முதலில் பார்க்க பயந்து அரண்டுதான் போனாள்.
“எனக்கும் ரொம்ப வலிக்குமா?…” என நடுக்கத்துடன் சூர்யாவிடம் கேட்டதும் தான் உமாவும் அவளை கவனித்தார்.
“சூர்யா, நீ பாலாவை வீட்டுக்கு கூட்டிட்டு போ. குழந்தை பிறந்த பின்னால ஹாஸ்பிட்டல் வந்தா போதும்…” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
வீட்டிற்கு வந்ததில் இருந்து அவனை விட்டு எங்கேயும் நகரவில்லை பாலா. அவனின் அணைப்பிற்குள்ளேயே இருந்தவளின் நடுக்கம் மறுநாள் குழந்தையை பார்த்த பின்பு தான் குறைந்தது.
“பையன் வெற்றி மாமா மாதிரியே இருக்கான். குட்டி காலு. இந்த கண்ணை பாருங்களேன். அச்சோ சின்ன நாக்கு. அதை வச்சு துருத்தி காமிக்குது. சோ க்யூட்ல…” என சூர்யாவிடம் காண்பித்து குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தவள் அதன் பின்னர் ஆரம்பித்தது வேறு.
‘இன்னும் எத்தனை நாள் இருக்கிறது? என கேட்டு கேட்டு அவனை படுத்தினாள். அதிலும் ஒன்பதாம் மாதம் ஆரம்பிக்கவுமே லேசாக வலி வருவதை போல இருந்தாள் கூட மொத்த குடும்பத்தையும் அலர்ட் செய்து கூட்டிவிடுவாள்.
அனைவருக்குமே அவள் விஷயத்தில் இன்னும் அந்த பயம் இருக்க சூர்யாவின் மனது மட்டும் நாள் செல்ல செல்ல ஏன் இத்தனை விரைவில் நகர்கிறது என்னும் எண்ணம்.
இதோ பாலா பிரவத்திற்கென ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள். இத்தனை நாள் காட்டாத அந்த பயம் அப்பட்டமாய்.
“ம்மா, நீ கூட இரு. அப்பா இருங்க. மாமா எங்கயும் போகாத. ஜெய் பையனை கொண்டாங்க. கொஞ்சம் நேரம் வச்சிருக்கேன்…” என்று அந்த வலியிலும் குழந்தையை வாங்கி கொஞ்சியவள் தன் கண்பார்வையில் இருந்து கணவனை மட்டும் நகரவிடவில்லை.
அவனிடம் அவளும் பேசவில்லை. அவனும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. எந்தவித தைரிய வார்த்தைகளோ, ஒன்று இல்லை என்பதை போன்ற ஆறுதல்களோ எதுவுமே இல்லை.
நடு சாமத்தில் வலி கண்டுவிட கொண்டுவந்து சேர்த்ததில் இருந்து அந்த அறையில் தன இருந்தாள் பாலா. இதோ காலை கடந்து மதியவேளை நெருங்கிக்கொண்டு இருந்தது.
இன்னும் நன்றாக வலி வரவேண்டும் என்று மருத்துவர் சொல்லி சென்றிருக்க வலி விட்டு விட்டு வந்துகொண்டே தான் இருந்தது. உதட்டை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“சூர்யா ஏதாவது பேசேன் அவக்கிட்ட. ஏன் இப்படி நிக்கற?…” என வெற்றி கூட சொல்லி பார்த்துவிட யாராலும் அவனை ஒரு வார்த்தை வாயிலிருந்து வரவைக்க முடியவில்லை.
பாலாவும் அவனை தான் பார்த்தபடியே இருந்தாள். முதல்நாள் வரை அத்தனை பேசியவள் அன்று பேசவே இல்லை. இருவரின் மனதிற்கு மட்டுமே புரிந்தது அவர்களின் பரிதவிப்பு.
உட்சபட்ச வலி உண்டாகிவிட ‘சூர்யா’ என்ற அலறலுடன் துடிக்க ஆரம்பித்தவளை நொடியில் நெருங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
“பாலா…” என்ற வார்த்தை மட்டுமே அவனின் உயிரை உருவிக்கொண்டு வந்து அவளிடம் அடைந்தது.