அன்று மதியமே முடியவில்லை என்று வீட்டிற்கு கிளம்ப கேட்கவும் அவளை கொண்டுவந்து விட்டுவிட்டு மீண்டும் ஸ்டோருக்கு வந்துவிட்டான் திரவியம்.
வீட்டிற்கு வந்தவள் மாலை வரை உறங்கி எழுந்துவிட்டு டீயை எடுத்துக்கொண்டு வாசலில் வந்தமர்ந்தாள் ஆராத்தியா.
அன்றைய வெயில் தாக்கம் இன்னும் மட்டுப்படாமலிருந்தது. சுற்றிலும் மரங்களும், தோட்டமும் இருக்க காற்று வீசினாலும் லேசாய் அனலையும் சேர்த்துக்கொண்டு தான் வந்தது.
உள்ளிருக்க முடியாமல் வெளியே வந்து அமர்ந்தவளுக்கு டீயை குடிக்கவும் கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருந்தது.
வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தபடியே பார்வையை கேட்டின் பக்கம் செலுத்த அங்கிருந்து வந்தவளை பார்த்ததும் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள்.
“ம்மா, நான் நாளைக்கு பேசறேன்…” என வைத்துவிட்டு பார்க்க அதற்குள் அவளை நெருங்கிவிட்டவள்,
“ஹாய் தியா, எப்படி இருக்க?…” என்றாள் வந்தனா.
“வந்தனாக்கா…” குரல் ஒருவிதமாய் சுதி குறைந்து போனது ஆராத்தியாவிற்கு.
சட்டென படபடவென வந்துவிட்டது. எங்கே திரவியத்திற்கு தெரிந்தால் குதிப்பானோ என பயந்தவள் அவளை வா என்று கூட சொல்லமுடியாமல் சங்கடத்துடன் பார்த்தாள்.
“என்ன தியா, உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வான்னு கூட கூப்பிடமாட்டியா?…” என்றதும் வாட்ச்மேன் வந்துவிட்டார்.
“உங்களுக்கு தெரிஞ்சவங்களாம்மா?…” என ஆராத்தியாவிடம் கேட்க,
“ஹலோ, நான் தியாவுக்கு மட்டுமில்லை. அவங்க குடும்பத்துக்கும் தெரிஞ்சவ….” என வேகமாய் பேசினாள் வந்தனா.
“நீங்க போங்க. நாங்க பேசிக்கறோம். தியா இங்க இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை…” என்றவள் ஆராத்தியாவை பார்க்க வேறு வழியின்றி,
“நான் பார்த்துக்கறேன் அங்கிள்…” என அவரை அனுப்பி வைத்தாள்.
“வாட்ச்மேனை எல்லாம் அங்கிள்ன்னு சொல்லுவியா நீ?…” என்ற வந்தனா,
“இங்க என்ன பன்ற தியா? எனக்கு உன்னை பார்த்துட்டு ஒரே ஷாக் அன்ட் சர்ப்ரைஸ்…” என வியப்புடன் பேச,
“உள்ள வாங்க வந்தனாக்கா…” என வீட்டினுள் மரியாதை நிமித்தம் அழைத்தாள் ஆராத்தியா.
“ஹ்ம்ம், உன்னை பார்த்து எவ்வளோ நாளாச்சு? ம்ஹூம். வருஷமாச்சுன்னு தான் சொல்லனும்…” என்றவள்,
“ஹேய் உனக்கு கல்யாணம் கூட ஆகிருச்சா? என்னை எல்லாம் இன்வைட் பண்ணலையே நீ…” என்றாள் அவள்.
அத்தனை இலகுவாய் வந்தனா பேச ஆராத்தியாவிற்கே கொஞ்சம் இரக்கமாகி போனது.
வந்தனா பேசிய பழையதை வைத்துக்கொண்டு தான் தான் இப்படி நினைக்கிறோமோ என வந்தனாவை பார்த்தாள்.
“இல்லைக்கா திடீர்ன்னு முடிவாகிருச்சு. யாரையும் இன்வைட் பண்ண முடியலை….” என்று அவளை அமர சொல்லிய ஆராத்தியா,
“என்ன சாப்பிடறீங்கக்கா?…” என்றாள்.
“எதுவா இருந்தாலும் ஓகே, நீ முதல்ல உட்கார்…” என சொல்ல,
“இருங்க குடிக்க டீ எடுத்துட்டு வரேன்…” என்று உள்ளே சென்றவள் சமையலம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தாள்.
“இப்ப சரளா ஆன்ட்டி டீ கொண்டு வந்திருவாங்க…” என வந்தனாவின் அருகே அமர்ந்தாள்.
“யார் கொண்டு வருவாங்க…”
“சமையல் செய்யறவங்க தான். வாட்ச்மேன் அங்கிள் வொய்ப். ரொம்ப வருஷமா இங்க தான் அவங்களும் வேலை பார்க்கறாங்க…”
“சரி இருக்கட்டும். நீ என்ன பன்ற? உன் ஹஸ்பன்ட் இங்க தானா? என்ன பன்றார்?…” என்றவள்,
“உன்னை நான் இங்க எதிர்பார்க்கவே இல்லை தியா…” என மீண்டும் அதிசயிப்பதை போல சிரித்தாள்.
“ஏன் வந்தனாக்கா?…” என்றவள்,
“ஆமா நீங்க எப்படி இருக்கீங்க? இப்ப என்ன பன்றீங்க?…” என கேட்க,
“சும்மா தான் தியா இருக்கேன். இங்க என் ப்ரென்ட் ஒருத்தி சொல்லி இந்த வீட்டுல காய்கறி செடி, பூச்செடி எல்லாம் பதியம் போட்டு தராங்க. ரீசனபிள் ப்ரைஸ் கூடன்னு அட்ரஸ் குடுத்தா…”
“ஓஹ், அதான் வாங்க வந்தீங்களா?…”
“வாங்கனும்னு வரலை தியா. இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன். அதான் சரி அவ சொல்றது நிஜமான்னு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…” என்றாள்.
“ஓஹ், ஓகே…” என்ற ஆராத்தியா டீ வரவும் அவளுக்கு எடுத்து தந்தாள்.
“கண்டிப்பா வந்தனாக்கா. அவங்களை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்…” என்றவள் வார்த்தை அவளறியாமல் அவளிடமிருந்து வெகு இயல்பாய் வர அது ஆராத்தியாவுக்குமே பிடித்தது.
வந்தனா ஒன்றும் சொல்லாமல் ஆராத்தியாவின் முக பாவனைகளை எல்லாம் கவனித்தபடி டீயை குடித்தாள்.
“உங்களை திடீர்ன்னு இங்க பார்த்தேனா? என்ன பேச? அதான் சட்டுன்னு வரலை…” என ஆராத்தியா சொல்ல,
“ஓஹ், ஓகே. பரவாயில்லை. ரொம்ப கேப் விட்டு மீட் பண்ணினா இப்படித்தான் போல?…”
“பூமி எப்படி இருக்கா? குழந்தை எப்படி இருக்கு?…” என்றதும்,
“உங்களுக்கு தெரியுமா? அன்னிக்கு குழந்தை இருக்கறது வரை தெரிஞ்சிருக்கே?…” ஆராத்தியா கேட்டதுமே சுதாரித்த வந்தான,
“ஹாங், ஒரு ப்ரென்ட் மூலமா கேள்விப்பட்டேன். இங்க தானே இருக்கேன். அதை வச்சு தெரியும்…”
“ஓஹ்…”
“அதோட சோஷியல் மீடியா எதுக்கு இருக்கு? அதுல பார்த்தேன்…”
“சோஷியல் மீடியான்னா பூமி போட்டோ போடறதா தான் அர்த்தமா? அதுல தான் ஒரு ப்ரென்ட் சொன்னா. நான் கூட பூமிகாவை கூப்பிட்டு பேசனும்னு நினைச்சேன்…” என்றவள் பேச்சை மாற்றும் பொருட்டு,
“ஆமா என்ன பன்றார் உன் வீட்டுக்காரர்? எங்க வொர்க் பன்றார்?…” என்று கேட்கவும் ஆராத்தியாவிடம் சிறு தடுமாற்றம் எழுந்தது உண்மை தான்.
வந்தனா திரவியத்தை விரும்பியது மட்டுமல்லாது தன்னிடமும் உனக்கு பிடிக்குமா என முன்பு எந்த அர்த்தத்தில் கேட்டாள் என்பதும் ஞாபமிருக்க சட்டென பதில் கூற முடியாது நிதானித்த அந்த நொடி வெளியே அழைப்பு மணி.