சட்டென கண்ணை மூடி தன் கன்னத்தில் கையை வைத்து தலையை சாய்த்துக்கொண்டாள் ஆராத்தியா.
“சொல்லமாட்டேன், சொல்லமாட்டேன்…” என தலையை குனிந்தபடி சொல்ல பொங்கிவிட்ட சிரிப்பை அடக்கியபடி பார்த்தான் அவளை.
“நடிக்காதடி. கையை எடு….” என்று அவளின் கன்னத்தில் வைத்திருந்த கைகளை பிரித்துவிட்டவன்,
“எவ்வளோ பேசிருக்க அவகிட்ட நீ?…”
“நானா?…”
“ஆமா, என்னை பத்தி, நான் யாருக்கும் செட்டகமாட்டேன்னும் பேசியிருக்க. என்கிட்டையே வந்து சொல்றா தியாவுக்கு உங்களை புடிக்காது. ஏன் பண்ணிக்கறீங்கன்னு கேட்கறா. அன்னைக்கு மட்டும் நீ என் கண்ணுமுன்னாடி இருந்திருக்கனும்…”
அவன் சொல்ல சொல்ல ஆராத்தியா வாயை கைகொண்டு மூடியபடி இறைஞ்சும் பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.
“எனக்கு செம்ம கடுப்பு. பேசவே பிடிக்கலைன்னு சொல்லியும் திரும்ப திரும்ப இந்த ஒருவருஷமா எவ்வளோ டார்ச்சர். சும்மா சும்மா வந்து இம்சை…” என தலையிலடித்துக்கொண்டான்.
“இங்க வந்து உன்கிட்ட ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசிருக்கா. நீயும் உபசரிச்சு கொஞ்சிட்டு இருக்க?…”
“எனக்கு இதெல்லாம் தெரியாதுத்தான்…” மீண்டும் அவள் சொல்ல,
“தெரிஞ்சா மட்டும். ஏற்கனவே உன்னையும், பூமியையும் வார்ன் பண்ணினே தானே?…”
“அது வேற…”
“இதுவும் அதே தான். எட்டி வைங்க சொல்லியிருந்தா நீ நடுவீட்டுல உட்கார வச்சிருக்க…” என்றான்.
“தெரியாம பண்ணிட்டேன். விடுங்களேன். என்கிட்டே நீங்க சொல்லவே இல்ல. எனக்கு தெரியாதே…”
“சொல்லனுமா? அவ என்ன இன்டென்ஷன்ல இருக்கான்றது தெரியாதா? தெரியாத பொண்ணுங்களை ரெஸ்பெக்ட்டோட பேசற என் மென்டாலிட்டியையே மாத்திட்டா…” என்றான்.
“நீங்க மத்த பொண்ணுங்கட்ட எல்லாம் பேசுவீங்களா?…” ஆராத்தியா துடுக்குத்தனமாய் கேட்டுவிட முறைப்பான முறைப்பு தான்.
“உன்னை என்னதான் பன்றது தியா?…” என்றவன்,
“இனிமே தனியா மீட் பண்ணாத. எனக்கு சரியாப்படலை. வாட்ச்மேன்கிட்ட சொல்லியே தான் வச்சிருந்தேன். வந்தா கேட்டை திறக்காதீங்கன்னு. அவ முகத்தை மறந்துட்டார் போல?…” என சொல்ல தலையசைத்து,