அவள் அமர்ந்திருந்த விதமும், திரவியம் இருப்பதும் என ஆதவனுக்கு பாவமாகி போனது.
அண்ணன் வந்தும் கூட இமைகளை மட்டும் உயர்த்தியவளுக்கு இதழ்கள் துடிக்க ஆரம்பிக்க இதோ அழுகை வந்துவிடும் போலிருந்தது.
பல்லை கடித்தபடி அழுகையை அடக்கினாள். அழுதால் அதற்கு வேறு திரவியம் கோபப்படுவான்.
தன் வீட்டிலேயே இவனுக்கு பயந்து இப்படி இருக்க வேண்டி உள்ளதே என பொருமியபடி அமர்ந்திருந்தவள் இந்துவை பார்த்ததுமே கண்ணை காட்டினாள்.
“போச்சு உங்க தங்கச்சி முகமே சரியில்லை. நான் கூட்டிட்டு போறேன்…” என உள்ளே வரும் பொழுதே இந்து கண்டுகொண்டாள்.
“நேரமாச்சா தீரா?…” என ஆதவன் கேட்கவும் திரும்பி பார்த்தவன்,
“வா ஆதி, இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான்….” என எழுந்து நின்றான்.
“அனு இப்ப எப்படி இருக்கா இந்து?…” என்று இந்துவிடமும் கேட்க,
“சாப்பாடு டையஜிஸ்ட் ஆகலை ண்ணா, அதான் முடியலை. இன்ஜெக்ஷன் போட்டிருக்காங்க. சரியாகிடும். நாளைக்கு திரும்ப வர சொல்லியிருக்காங்க…” என இந்து சொல்லவும் ஆராத்தியா முகம் இன்னும் சுருங்கியது.
எப்படியாவது பேசி அடம்பிடித்து ஆதவனை அழைத்துக்கொண்டு மறுநாள் கல்லூரிக்கு அவனுடனே சென்றுவிடலாம் என நினைத்திருக்க அனுவின் உடல்நிலையும் அதற்கு இடமளிக்காமல் போக மொத்தமாய் சோர்ந்து போனாள்.
“ஓஹ் ஓகே…” என்றவன் அனுவின் தலையை வருடினான்.
குழந்தை அனு அசதியில் ஆதவனின் தோளில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது.
உள்ளே சென்று பெண்ணை படுக்க வைக்க ஆதவன் செல்ல அவனின் பின்னே செல்ல போனவளிடம் திரவியம் பார்வையை திருப்ப மீண்டும் அமர்ந்துவிட்டாள் ஆராத்தியா.
“என்ன தியா இங்கயே உட்கார்ந்திருக்க?…” என இந்து கேட்டுக்கொண்டே மூக்கை லேசாய் தேய்த்தாள்.
“என்ன இது? தீஞ்ச ஸ்மெல்?…” என இந்து மூக்கை உறிஞ்ச ஆதவனும் வந்துவிட்டான்.
“ஆமா, எனக்கும் தோணுது…” என சொல்லவும்,
திரவியம் எதுவும் சொல்வான் என பார்க்க அவன் எதையும் கவனிக்காததை போல தான் கொண்டுவந்த லேப்டாப் பேக்கை திறந்துகொண்டிருந்தான் தீவிரமாக.
“என்ன தியா? உன்கிட்ட தான் கேட்கறேன்…” என இந்து கேட்கும் பொழுதே,
“ஆதி, நாளைக்கு ஆடிட்டிங்க்கு எடுத்துட்டு போக வேண்டிய டாக்குமெண்ட்ஸ் சாஃப்ட் காப்பி…” என்று திரவியம் தான் வந்ததை பேச ஆரம்பிக்க,
“தியா…” என்றாள் இந்து.
“அண்ணி நான் தான் இட்லியை எரிச்சிட்டேன்…”
“என்ன?…”
“ப்ச், ச்சே…” என தலையில் தட்டிக்கொண்ட ஆராத்தியா,
“இட்லி ஊத்தி வச்சிட்டு போனாங்க அம்மா. ஆஃப் பண்ண சொன்னதை மறந்துட்டேன். அது பத்திருச்சு…” என்று சொல்ல இந்து திகைத்தாள்.
“என்ன நீ? வா பார்க்கலாம்…” என்று இந்து உள்ளே போக ஆராத்தியா அவள் பின்னோடே ஓடினாள்.
“நான் ஒன்னும் உன் தங்கச்சியை அசையாம உக்காருன்னு சொல்லலைப்பா. பாத்திரம் தீய்ஞ்சு போச்சு. இப்படி கேர்லெஸா இருக்க கூடாதுன்னு உட்காரவச்சு ரெண்டுவார்த்தை சொன்னேன். அவ்வளோ தான்…”
“அதுக்கா அப்படி உக்கார்ந்திருந்தா…”
“நான் பேசிட்டு மேகஸின் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அவ எழுந்து போகலைன்னா நான் என்னடா செய்யட்டும்?…” என்றான் திரவியம் நெற்றியை தேய்த்தபடி.
“சுத்தம், அரண்டு போய் உக்கார்ந்திருந்தா தியா…” ஆதவன் கூற,
“ஆமா, அப்படியே நானும் உன் தங்கச்சி கழுத்தை பிடிச்சிருவேன் பாரு. நான் சாதாரணமா இருந்தா கூட இவ என்னை முறைக்க வச்சிடறா…” என்றவன்,
“வேலையை பார்ப்போமா?…” என கேட்டு லேப்டாப்பை திருப்பினான்.
இந்து அடுக்களை உள்ளே வந்ததுமே இட்லி பாத்திரத்தை திறக்க போக அவளின் கையை பற்றிக்கொண்ட ஆராத்தியா,
“எனக்கே தெரியாதுடா. ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பும் போது தான் உன் அண்ணன் பேசினாங்க. அப்ப தான் தெரியும். சரி அத்தை இருப்பாங்கன்னு நினைச்சேன்…” என்றவள் பாத்திரத்தை திறந்து அதனை கழுவ போட்டாள்.
“போச்சு நல்லா அடி புடிச்சு பாத்திரமே போயிருக்கும்…”
“கவனிக்கலையே. இப்ப என்ன பன்றது?…” ஆராத்தியா கேட்க,
“மேல வேற இட்லி பாத்திரம் இருக்கு. அந்த ஸ்டூலை எடு. எடுத்து இட்லி ஊத்துவோம். பாப்பாக்கும் சாப்பிட குடுக்கனும். வயித்துல ஒண்ணுமில்லை…” என்று சொல்லிவிட்டு இட்லி மாவை வெளியே எடுத்தாள் இந்து.
ஹாஸ்பிட்டலில் நடந்தவற்றை பேசியபடி இருவருமாக இட்லி ஊற்றி குழம்பை சுட வைத்து டேபிளுக்கு எடுத்துக்கொண்டு வந்தனர்.
“மதியமே அத்தை புலம்பிட்டே இருந்தாங்க தீரா அண்ணா வரலையேன்னு. நல்லவேளை இப்பவாச்சும் வந்தாங்களே?…” என்றவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு,
“சாப்பிட கூப்பிடு அவங்களை…” என்றாள் இந்து.
“நான் மாட்டேன். உள்ள பாப்பாவோட இருக்கேன்…” என உள்ளே சென்றுவிட்டாள் ஆராத்தியா.
அவ்வளவு பசி வேறு. எத்தனை ஆசையாக கேட்டிருக்க அதனை திருப்தியாக சாப்பிட கூட முடியாத நிலை.
உள்ளே அமர்ந்திருந்தவள் நாசியும், காதும் அங்கே டேபிளில் தான் இருந்தது. ஆதவனும், திரவியமும் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தனர்.
“தியா வா, அவங்க சாப்பிட்டாச்சு…” என்று பத்து நிமிடத்தில் இந்து அழைக்க வர,