சென்னை சென்று வந்த பின் ஒரு வாரமும் வீட்டில் மதுராவின் வேலைகள் கொஞ்சம் கொஞ்சம் எளிதாகிக்கொண்டே இருந்தது.
பொழுதும் ஓரளவு நகர சந்தோஷத்துடனே தான் இருந்தாள். ஆனால் வேலை எதுவும் பார்க்காமல் நாட்களை ஓட்டத்தான் சிரமமாக இருந்தது.
பகலில் என்னதான் பேசிக்கொண்டு, சிரிப்பும், கும்மாளமுமாக இருந்தாலும் துர்காவும், ஜகாவும் இருக்கும் வரை இருக்கும் கலகலப்பு கொஞ்சம் குறைவதை போல தான் இருந்தது.
வடிவிற்கு, காந்திமதிக்கும் அங்கே இருக்கும் வேலைகள் சரியாக இருக்க அவர்களுடன் சேர்ந்து பார்த்தாலும் அவர்கள் உனக்கு பழக்கமில்லை என தடுத்துவிடுவார்கள்.
லேப்டாப்பை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் தலையை ஒற்றை கையில் பிடித்து சாய்ந்திருந்தாள்.
“என்ன மதினி, தல நோவா?…” ஜகா அப்போது தான் உள்ளே நுழைந்தான்.
அவன் கேட்டதும் சாய்ந்தமர்ந்தவள் காலை இறக்கி நேராக அமர்ந்துகொண்டாள் புன்னகையுடன்.
“அதெல்லாம் இல்லை ஜகா. சும்மா தான்…” சமாளிக்க,
“என்ன சும்மா? என்னன்னு சொல்லுங்க…” என கேட்டுக்கொண்டிருக்க,
“சகா இப்பத்தேன் வந்தியா?…” என பின்னால் இருந்து உள்ளே முறத்துடன் வந்தார்.
“இல்ல இப்ப நானும் வரலாமேன்னு…” என காந்திமதியையும் பார்த்துவிட்டு,
“லஞ்ச் எடுத்திட்டு போறேன். அங்க வச்சு நாங்க சாப்பிட்டுக்கறோமே?…” என கேட்டாள்.
காந்திமதிக்கும் மதுரா சொல்லியது சரி என்று தோன்ற சிரிப்போடு உணவை எடுத்து வைத்தவர்,
“இத்த மொதவே சொல்லத்தானத்தா? மென்னுக்கிட்டே இருந்தியாக்கும்? அங்கன போயி நல்லா சந்தோசமா இருந்துட்டு மெல்ல வா. போதும்…” என சொல்லி வடிவிடமும் சொல்லிவிட்டு கிளம்ப செய்தார்.
“சகா வண்டிய பாத்து ஓட்டுடா…” என கூடுதல் அறிவுரை வேறு.
“ஒருநா ஒன்னிய வண்டிக்கு குறுக்கா தள்ளி ஒரே ஏத்து அந்த கழுத்தோட சேத்து. அன்னிக்குத்தேன் எனக்கு நிம்மதி…” என்று பைக்கை கிளப்ப மதுரா பின்னால் அமர்ந்துகொண்டாள்.
“நான் வேணும்னா அந்த பேக்கை கையில வச்சிக்கறேனே ஜகா?…” என கேட்க,
“மன்னிச்சிக்கிடு பெரியாத்தா. வெவரங்கெட்டத்தனமா நடந்துபோட்டா. இப்ப மருவுதா…” என அழகர் சொல்ல சோமு உர்ரென்று நின்றிருந்தார்.
“என்னத்த மருவி என்ன செய்ய? அன்னிக்கு எம்புட்டு பேச்சு பேசி போட்டா?…” நினைக்கையில் அத்தனை நடுக்கமாக இருந்தது.
“நானா ஒன்னுத்துக்கும் பேசலத்தே. ஒங்க பின்னுக்கு பேசினத ஒங்க காதுல போட்டேம். அம்புட்டுத்தேன்…” என்றார் அப்போதும் தவறு தன் மீதில்லை என்பதை போல.
“செரி விடு…” என அந்த பேச்சை நிறுத்தினார் வடிவு.
அதற்கு மேல் அதை தொடர விருப்பமில்லை. பேச பேச வேதனை தானே என தடுத்துவிட்டார்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர் அவர்களுக்கு குடிக்க ஏதேனும் எடுத்து வரலாம் என உள்ளே செல்ல,
“வடிவு வாரப்ப தூக்குப்போனில பத்து பயத்தவுருண்டைய போட்டு கொண்டா. அழகரு மவளுக்கு ரொம்ப புடிக்குமில்ல. குடுத்தனுப்பு…” என அப்போதும் கரிசனையுடன் பேசினார் காந்திமதி.
அழகருக்கு நெகிழ்ந்தது. இது தானே இவர்களுடன் பிணைத்திருக்கிறது. எத்தனை இருந்தாலும் விட்டுவிடமாட்டார்கள் என.
கண்கள் மகிழ அவர் பார்த்தபடி அமர்ந்திருக்க அழகரின் முகம் பார்த்து அவரின் தோளில் அடித்தார் காந்திமதி.
“அட என்னத்துக்குய்யா வெசனப்படுத? அவ ஒரு கூறுகெட்டவ. அம்புட்டுத்தேன். அத்த பெருசா நெனைக்காத…” என அவரை சமாதானம் செய்தார் காந்திமதி.
“இல்லாத்தா, அன்னிக்கு தம்பிக ரெண்டுபேரும் ஒறவே வேணாங்குத மாரி பேசி போட்டாக…” என கலங்கி போய் சொல்ல,
“யார்ரா இவேன்? ஒம்புள்ள பேசினா ஏத்துக்கமாட்டியா?..” அழகரின் தலையில் தட்டிய காந்திமதி,
“இரு அவளுக போயி எம்புட்டு நேரமாவுது. ஒனக்கும் ரெண்டு உருண்ட கொண்டாரேன்…” என எழுந்து உள்ளே சென்றவருக்கு கோபமான கோபம் சோமு பேசுவதை கேட்டு.
“பாத்ததும் பக்குன்னு இருந்துச்சுக்கா. ஒம்மருமவட்ட சொல்லவேண்டியதானே? நம்ம வர மொற பத்தி. கொழுந்தேங்கூட வண்டில போவுறதுமில்லாம, என்ன உடுப்பு? வயசு பொண்ணா அது? கல்யாணமானா பதவிசா சேலைய கட்டாம? ஊரு என்ன பேசும்?…”
“அடி ஏ வெளக்குமாத்து கொண்ட? என்னத்தையோ குளுப்பாட்டி எங்கினையோ வச்சாட்டுல இருக்கு…” என கத்திய கத்தலில் அழகரும் பயந்து போய் உள்ளே வர சோமுவுக்கு வெடவெடத்துவிட்டது.
“எவ்வீட்டு சமையக்கட்டுல நின்னு எங்கூட்டு புள்ளையவே பேசுதியே? என்ன நெஞ்சழுத்தம்டி? அன்னிக்கே ஒ சிண்டுமுடிய அத்துவிட்டிருந்தா தெரிஞ்சிருக்கும். எந்தப்புத்தேம்….” என சோமுவை பிடித்து இழுத்துக்கொண்டு நடு வீட்டிற்குள் நின்றார்.
“எத்தே விடுங்க…” வடிவு சொல்ல,
“அவ பேசுதான்னு நீயும் பாத்துக்கிட்டு இருந்தியோ? ஒன்னிய என்னதேம் செய்யுதது?…” என மருமகளுக்கும் அத்தனை பேச்சு காந்திமதி.