“மை காட், ம்மா, என்ன விளையாடறீங்களா? அவ்வளோ நாள் அவங்களால எப்படி அங்க இருக்க முடியும்? நோ சான்ஸ்…”
“மது, மாப்பிள்ளை வரலை. நீ மட்டும் தான்…” என்றவர்,
“அதுக்கு தான் ஆடி மாசம்…” என்று சொல்ல,
“க்ளியரா சொல்லுங்கம்மா…” என்றாள்.
“இப்பவும் இந்த சம்பிரதாயம் ஃபாலோ பன்றாங்கன்னு இப்ப தான் எனக்கே தெரியும் மது. பாட்டி போன் பண்ணி சொன்னாங்க சீரை குடுத்துட்டு கூட்டிட்டு போன்னு…”
“என்கிட்ட கேட்காம நீங்களா டிஸைட் பண்ணுவீங்களா?…”
“இன்னும் எந்த டிஷிஷனும் எடுக்கலை. இப்ப உன்கிட்ட சொல்றேன் அவ்வளோ தான்…” என்றவர்,
“ஆடி மாசம் சேர்ந்திருந்து குழந்தை உருவானா சித்திரை மாசம் அந்த வெயில்ல பிறக்கும். குழந்தைக்கும், தாய்க்கும் கஷ்டம்ன்னு இந்த ரூல்ஸ் ஃபாலோ பண்ணினாங்க. இப்பவும் அதுதான் ரீசன். ஓகே நீ என்ன சொல்ற?…” என கேட்க,
“சீர் கொண்டு வரீங்கல்ல, தாராளமா வாங்க. நான் இதை என் வீட்டுக்காரக்கிட்ட பேசிட்டு சொல்றேன்…” என சொல்லும் பொழுதே மகேஷ்வரிக்கு புரிந்துபோனது.
“எனக்கு புரிஞ்சிருச்சு. குட்நைட் மது…” என்று வைத்துவிட்டார் மகேஷ்வரி.
போனை வைத்துவிட்டு வெளியே வர காந்திமதி தான் இவள் வரவும் பரபரப்பானார்.
“என்னத்தா ஒங்கம்மாட்ட பேசிட்டியா?…” என கேட்க,
“இப்பதான் பேசினேன் பாட்டி…” என்ற மதுரா,
“இன்னும் வரலையா உங்க பேரன்?…” என வாசலை எட்டி பார்த்தார்.
“அவேன் வரட்டும். நீயி என்ன சொல்லுத? என்ன சொல்லுச்சு மகேசு?…”
“சரி இப்ப நான் மட்டும் ஊருக்கு போகனுமா? அம்மாப்பா வரும் போது…” என காந்திமதியிடம் மதுரா கேட்க,
“ஆமா…” என்றார் அவர்.
பாண்டியனும் சரியாக அந்த நேரம் வாசலில் வந்து நிற்க ஒருவரின் கவனமும் அங்கில்லை.
“அதுக்கு தான் என்னை போ போன்னு சொல்றீங்களா?…”
“இந்த ஒருமாசந்தேம். பொறவு கொண்டுவந்து விடுவாக…” காந்திமதி அவள் எப்படி புரிந்துகொள்வாளோ என்றெல்லாம் நினைக்கவில்லை.
அப்படி நடந்து தாயும், பிள்ளையும் சிரமப்படுவார்களே என்று தான் யோசித்தார். ஒரே வழி மதுராவை கிளப்புவது.
“என்னால ஊருக்கு போக முடியாது. அதுவும் என் வீட்டுக்காரர்கிட்ட கேட்காம சரின்னு சொன்னேன்னு தெரிஞ்சது அவ்வளோ தான்…” என அவள் ஏற்றிய பில்டப்பில் வெளியில் நின்ற பாண்டியன் திகைத்தான்.