இந்த பொண்ணை கேட்டுபாருங்க, விருப்பம்னா மேல்கொண்டு பேசலாம் என்றான். அனைவரும் பெண்பார்க்க செல்ல, மஹிமாவின் அழகு வான்முகிலனோடு சேர்த்து சுப்புலஷ்மியையும் கட்டிப்போட, வான்முகிலனின் கம்பீரமும், வசீகர முகமும் மஹிமாவிற்கும் பிடித்திட, பரஸ்பரம் இரு குடும்பமும் சம்மதம் தெரிவித்தனர். இப்படியாக வழக்கம்போல்தான் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.
வான்முகிலனிற்கு மஹிமா என முடிவான பின்னே, அவளிடம் பேச மிகுந்த ஆசைகொண்டான் வான்முகிலன். ஆனால் கடந்த ஆறு வருடங்களாக தனது பழக்கவழக்கமெல்லாம் பெரிய ஆள்களோடுதான் என்பதால், குடும்பத்தார் தவிர்த்து வேறு யாரிடமும் தேவையின்றி பேசிவிடமாட்டான்.
ஆனால் இன்று மஹிமாவிடம் பேசம் மனம் உந்த, அழைத்து என்ன பேசுவது? சாப்பிட்டியா? நல்லாயிருக்கியா? என்ற வழக்கமான கேள்விகளும், விசாரிப்புகளும் தனக்கே அபத்தமாய் தோன்றியது.
அதற்கு மேல் வேறு பேசினாலும் வருங்கால மனைவி என்ற உரிமையில்தான் வார்த்தைகள் வரும், வளரும்.. என பலவாறு யோசித்து, தன்னின் சரிபாதியாய் இணையப்போகிறவள் என்ற உரிமை இருந்தபோதும், இன்னும் கொஞ்ச நாள்தானே? என மனதின் ஆசையை கட்டுப்படுத்தி மஹிமாவிற்கு அழைக்கவில்லை.
ஆனால் மஹிமாவிற்கு வான்முகிலனிடம் பேசும் ஆசையிருக்கவே அவனிற்கு அழைத்தாள். சந்தோசமாய் அழைப்பை ஏற்றான்.
“திருமணத்திற்கு பின்னே வேலைக்கு போகனுமா.” என்றாள். “உன் விருப்பம்” என்றான்.
“நான் ஐ.டி கம்பெனியில் வேலை செய்பவள், மாடர்ன் உடை அணிந்து பழக்கம், உங்களுக்கு பிடிக்குமா?” என்றாள்.
“எந்த டிரஸ் போடறோம்ன்றது விசயமில்ல, எந்த டிரஸ்ஸா இருந்தாலும் பார்ப்பவர் கண்கள் உறுத்துமாறு போட்டால் எனக்கு பிடிக்காது” என்றான்.
“அது பார்ப்பவர்கள் பார்வை பொறுத்தது” என்றாள்.
“என் உடல், என் உடை, என் விருப்பம்னு போனா.. ஆம்பளைங்களை விடு.. பொம்பளைங்களே கூட ஒரு மாதிரிதான் பார்ப்பாங்க. எனக்கு உரிமையானவளை தவறான பார்வையோட பசங்க மட்டுமில்ல, பெண்களும் கூட பார்க்கக்கூடாது. அது எனக்கு பிடிக்காது” என்றான் கண்டிப்போடு.
“ஏன் நினைக்கமாட்ட? என்மேல உரிமையிருந்தா கண்டிப்பா நினைக்கனும். நம்ம கல்யாணம் முடிஞ்சபின்ன நான் தவறான தொழில் செய்யலனும், என் வருமானம் எவ்வளவு? எப்படின்ற உண்மையையும் சொல்லி புரியவைப்பேன்.” என்றான்.
“அதை இப்போவே சொல்லுங்களே.”
“முடியாது, ஆனா எனக்கு பொண்டாட்டி ஆனபின்ன கண்டிப்பா சொல்வேன்.”
மஹிமா அமைதியாக.. ஏனோ அவளோடான பேச்சை தொடர பிடிக்காமல் போகவும், “அவ்வளோதானா? நான் வைக்கவா?” என்றான்.
“ம்.” என இணைப்பை துண்டித்த மஹிமா, அதன்பின் இரண்டுமாதம் கழித்து நிச்சயம் முடிந்த அன்றுதான் அழைத்தாள்.
என்ன உணவு பிடிக்கும்? வான்முகிலனின் அன்றாட நிகழ்வு பற்றி கேட்டறிந்து.. தான் என்ன படித்திருக்கிறேன் என்றும் சொல்லி.. “எனக்கு நீங்க என்ன படிச்சிருக்கிங்கனு தெரியனும். உங்களைப்பத்தி, உங்க கேரக்டர் பத்தி அப்பா நிறைய சொன்னார். ஆனா படிப்பைபத்தி மட்டும் சொல்லல.” என்றாள்.
வான்முகிலன் தன் படிப்பை சொல்ல, அதிர்வில் பேச்சு நின்றது மஹிமாவிற்கு. அன்று பேசியதோடு சரி. அதன்பிறகு திருமணம் வேண்டாம் என்ற செய்திதான் வந்தது.
அனைத்தும் நினைத்திருந்தவனுக்கு நள்ளிரவாகியும் உறக்கம் வரவில்லை.
மஹிமா தன்னை மறுக்கும்வரை அவள் அழகை மனதாற ரசித்து ஆராதித்தவனுக்கு அவள் மறுத்தபின்னே அவள் இல்லாமல் எப்படி வாழ்வேன் என்ற துயரம் ஏனோ அனுகவேயில்லை.
மாறாக, நீ எவ்வளவு அழகியாக இருந்தாலும் சரி, என் பிடித்தம் பிடித்தமின்மை கேட்டறிந்த பின்னே என்னை பிடித்திருந்தும், வலுவான காரணமில்லாமல் என்னை நிராகரித்த உன்னை வற்புறுத்தியோ, கெஞ்சியோ, உன்னோடு வாழும் அளவிற்கு தன் தரம் தாழ்ந்துவிடவில்லை என்ற நினைப்பே திடமாக, மஹிமா என்பவள் வான்முகிலன் மனதிலிருந்து தன்போல் அகன்றாள்.
வான்முகிலனின் தற்போதைய கவலையெல்லாம் தேன்நிலா அழுதாள் என தங்கை சொன்னாளே? அவள் அழும்படி ரேவாக்கா என்ன சொல்லியிருக்கும்? என் தம்பியைத்தான் கல்யாணம் செய்தாகனும்னு கம்ப்பல் பண்ணியிருக்குமோ? அப்படியேன்னாலும் எதுக்கு அழனும்? என்னால முடியாதுனு சொல்லவேண்டியதுதானே? இதுக்கெல்லாம் சின்ன பிள்ளையாட்டம் அழுவாளா? என கோபம்தான் வந்தது.
கோபமிருந்தபோதும், இதுவரை தன்னால் யாரும் கஷ்டப்பட்டதில்லை, நான் சம்மதப் படவில்லையென்றாலும் தனக்காகத்தானே அன்னை கேட்டிருப்பார்கள்.?
தாய் தந்தையர் ஆதரவின்றி பக்கத்து வீட்டில் தாம்தான் பாதுகாப்பு என்ற நினைப்போடு இருக்கும் பெண் தன்னால் அழுவதா? என்ற எண்ணம் வருத்தியது.
அம்மாவும் ரேவாவும் உன்னை கஷ்டப்படுத்தினதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன். அவங்க பேசியதை மறந்து நீ எப்பவும்போல இரு, இனி அவங்க உன்னை எப்பவும் தொல்லை பண்ணமாட்டாங்க என தானே நேரில் சந்தித்து சொல்லவேண்டும் என முடிவெடுத்த பின்னேதான் மனம் சற்று சமன்பட கண்கள் உறக்கத்தை தழுவியது.
*** *** ***
இரவு வெகுநேரம் விழித்திருந்ததால் கண்கள் எரிச்சலை கொடுத்தபோதும் முயன்று ஐந்து மணிக்கே எழுந்திருந்தாள் தேன்நிலா.
திருமணம் நின்ற கோபத்திலும், நானும் அவரை திருமணம் செய்ய மறுத்த கோபத்திலும் நேற்றிரவே எங்கேனும் கிளம்பியிருப்பாங்களா?
வீட்டில் இருந்தானென்றால் வழக்கமாய் காலை ஐந்து மணிக்கெல்லாம் நடைப்பயிற்சிக்கு செல்வான் வான்முகிலன்.
ஆனால் தற்போதிருக்கும் மனநிலையில் வீட்டில் இருந்தாலும் வாக்கிங் செல்ல வெளிவருவாங்களா? அப்படியே வந்தாலும் தன்னிடம் பேசுவாங்களா? தன் பக்க ஆதங்கத்தை எப்படி விளக்குவது என்ற பலமான யோசனையோடே தன்னை சுத்தமாக்கிக் கொண்டு வெளியே வந்தவள் வான்முகிலன் வீட்டை பார்த்தவாறு நின்றிருந்தாள்.
*** *** *** ***
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் உறக்கத்தை இந்துபிருந்தாவின் குரலோடு கதவை தட்டும் சத்தமும், கலைக்க, முயன்று கண்விழித்தான். சுப்புலஷ்மியின் புலம்பலோடு கூடிய அழுகை வான்முகிலனின் தூக்கத்தை முழுதாய் விரட்டியடித்தது.
“வரேன்.. வரேன் பிருந்தாம்மா.” என எழுந்தவன் நேரத்தை பார்க்க ஒன்பதரை என்றது. “ப்ச்.. இவ்வளோ நேரமாகிடுச்சா? வேலைக்கு கிளம்பியிருப்பாளே.” என தன்னையே கடிந்தவாறு கதவைத் திறந்தவன்.. “பிரஸ் பண்ணிட்டு வரேன்.” என்று மீண்டும் உள்ளே போனான்.
“இங்க எத்தனை பிரச்சனை இருக்கு? இவனுக்கு பல்லு விளக்குறதுதான் முக்கியமா? கல்யாணம் நின்னுடுச்சேனு கொஞ்சமாவது கவலையிருக்கா?” என்ற அன்னையின் புலம்பலை சகிக்க முடியாமல் பத்து நிமிடத்தில் தன் காலை வேலைகளை முடித்து வெளியே வந்தான்.
“என்னம்மா உன் பிரச்சனை?” என்றான் கடுப்பாக.
“ஆர்டர் பண்ணின மாங்கல்யம் தயாராகிடுச்சினு நகை கடையிலயிருந்து போன் பண்ணுனாங்க, ரேவதி போய் வாங்கி வந்தா.” என்றார் வேதனையாக.
“ஆர்டர் செய்தா வரத்தான செய்யும்? அந்த மாங்கல்யம் இப்போதைக்கு பூஜையறையில இருந்தாலும் கூடிய சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணு கழுத்தை அலங்கரிக்கும்.
மஹிமாவை விட அழகான பொண்ணு கிடைப்பாளா தெரியாது.. ஆனா அவளை விட ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுதான் உனக்கு மருமகளா வருவா. அவளுக்காக இந்த மாங்கல்யம் காத்திட்டிருக்குனு நினைச்சிக்கோ.” என்றான் இலகுவாக.
“ஓ..” என உடனே மஹிமாவின் தந்தைக்கு அழைத்தவன்.. “உங்க பொண்ணு யூஸ் பண்ணினது எதுவும் இங்க வரக்கூடாது. நகை, பட்டுசாரியை நீங்களே வச்சிக்கிட்டு அதுக்கான பணத்தை எனக்கு அனுப்புங்க.” என்று அதற்கான தொகையையும் கட்டளையாய் சொல்லி இணைப்பை துண்டித்தான்.
ஒரு வார்த்தை சொன்னா அவளை தூக்கிட்டு வந்து உன் முன்னால நிறுத்த ஆட்களும், அவமேல உரிமையும் இருக்கும்போது மனசுக்கு பிடிச்சவளை எதுக்கு விடனும்?” என்றாள் கோபத்தோடு.
“இனி அவ பேச்சு கூடாதுனு நேத்தே சொல்லிட்டேன்.” என கோபத்தோடு கண்டிக்க.. “அவகிட்ட ஏண்டா கத்துற? நாளைக்கு எல்லாரும் கல்யாணத்துக்கு வருவாங்களே.. அதுக்கு என்ன பண்றது?” என்றார் வேதனையாக.
சுப்புலஷ்மி அதிர்ந்து பார்க்க.. “மண்டபத்துக்கு கொடுத்த பணம்கூட என் அக்கௌண்ட்க்கு வந்துடுச்சி.” என்றான்.
“உனக்கு கஷ்டமா இல்லையா முகிலா?”
அன்னையின் வேதனை அறிந்து.. “இப்படி வாம்மா.” என சோபாவில் அமர வைத்தவன்.. “இதுல அசிங்கப்பட என்னம்மா இருக்கு? அந்த பொண்ணை காதலிச்சிட்டா ஏமாத்திட்டேன்? உன் மகனை ஒருத்தி வேணாம்ன்றா, அவகிட்ட கெஞ்ச சொல்றிங்களா? அதுதான்மா எனக்கும் நம்ம குடும்பத்துக்கும் அசிங்கம்.
அவகிட்ட என்னை ப்ரூஃப் பண்ணி, கெஞ்சி கல்யாணம் செய்தாலும் என்னால சந்தோசமா இருக்க முடியாதும்மா, கல்யாணம் நின்னுபோன வருத்தம் என் கல்யாணம் முடியும் வரை மட்டும்தான் இருக்கும்.” என தேற்றி..
“உன் மகனுக்கு பொண்ணா தேடுற வழியை பார்ப்பியா? என்னவோ உலகத்துல அவ மட்டும்தான் பொண்ணுன்ற மாதிரியும், அவ வேணாம்னதும் எனக்கு இனி கல்யாணமே நடக்காதுன்ற மாதிரியும் சும்மா கண்ணீர் விட்டுக்கிட்டு..” என அதட்டினான் பொய் கோபத்தோடு.
மனம் நிறைய வேதனையிருந்தபோதும், மகன் அவளை நினைத்து வருந்தவில்லை என்பது பெருத்த நிம்மதியைத் தர.. “அவ கல்யாணம் நடக்கும் முன்ன உன் கல்யாணம் நடந்தாகனும், ஒரே மாசத்துல பொண்ணு பார்க்கப் போறேன், நீ மறுக்கக்கூடாது.” என்றார் சலுகையாக.
தற்போது திருமணம் செய்துகொள்ளும் மனப்பான்மை இல்லையென்றபோதும்.. “ம்.. பாரு பாரு, எனக்கு பிடிச்சிருந்தா உடனே கல்யாணம்தான்.” என்றான்.
சுப்புலஷ்மி மிகுந்த சந்தோசமடைய.. தேன்நிலாவை பார்ப்பதற்கு முன், அவள் வீட்டில் நேற்றிரவு நடந்தது என்ன என விளக்கமாக அன்னையிடம் கேட்டறியவேண்டும் என யோசித்திருந்த நேரம்.. “அண்ணா இந்தா.” என டீயை நீட்டினாள் இந்துபிருந்தா.