இப்போது ஏன் இவங்க வரவேண்டும் என்ற பரிதவிப்புடன் முல்லை அர்னவ்வை பார்க்க அந்த நொடி அவளின் வெளிறிய முகத்தை பார்த்ததும்,
“உட்கார் முல்லை…” என்று அவளை தன்னருகே அமர்த்திக்கொண்டான் அர்னவ்.
இவை எல்லாம் சௌமியாவும் கவனிக்கவே செய்தாள். புன்னகையுடன் அதனை ஏற்றவள்,
“எப்படி இருக்கீங்க டாக்டர் அர்னவ்?…” என்றதோடு,
“ஏன் முல்லை, என்கிட்ட பேச கூட யோசனையா உனக்கு? எப்பவும் என்னை பார்த்தா அக்கான்னு ஓடி வருவ? இன்னைக்கு என்னவாம்? நான் இன்னும் அதே சௌமி அக்கா தானே?…” என உரிமையுடன் கடிய முல்லைக்கு தொண்டையில் முள் சிக்கிய உணர்வு.
“ஓகே லீவ் இட்…” என்ற சௌமியா,
“ஸாரி. கோவில்ல நடந்ததுக்கு எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்க தான் வந்தேன். நானே நினைக்கலை அவ்வளோ பிரச்சனையாகும்ன்னு…” என்று உள்ளார்ந்து சொல்ல,
“இட்ஸ் ஓகே…” என்றான் அர்னவ்.
அவன் விரல்கள் முல்லையின் விரல்களை பற்றியிருக்க வியர்த்து பிசுபிசுத்தது முல்லைக்கு.
அர்னவ் அவளின் பதட்டத்தை உணர்ந்து கொண்டு விலகாமல் அமர்ந்திருந்தான்.
ஒருவகையில் அவளுக்கு பதட்டம் இருப்பதும் தவறில்லையே என்று தோன்றியது.
இருவரும் சேர்ந்து இந்தநேரம் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தால் கூட இவ்வளவு அச்சப்பட தேவை இருந்திருக்காதோ என அவன் யோசித்தான்.
ஆனால் அவளின் பயமே வேறாக இருந்தது. கூடவே மனதிற்குள் சௌமியாவிற்காக அத்தனை வருந்தினாள் முல்லை.
“என்ன டாக்டரக்கா உங்க டாக்டர் என்ன சொல்றார்?…” என சௌமியாவிடம் திருமணத்தின் முன்பு கேட்டிருக்க,
“என்ன சொல்லுவார்? கல்யாணம் முடிஞ்சு வந்து மேல படின்னு சொல்றார். ஜஸ்ட் டாக்டர் மட்டும் போதுமா? ஸ்பெஷலா இருக்க வேண்டாமான்னு கேட்கறார். பாடம், இல்லன்னா வேலை. வேற என்ன பேசறார்?…” என சலிப்புடன் கூறியது இப்போதும் ஞாபகம் வந்தது.
எத்தனை ஆசைகள், அர்னவ்வின் ஆர்வமான பேச்சுக்கு எவ்வளவு சௌமியா ஏங்கினாள் என அறிந்தவள் தானே முல்லை.
இப்போது என்னபாடு படும் அவள் மனது என அவளுக்காக தவிக்கவும், அர்னவ் மனதில் என்ன என்று யோசித்தும் அமர்ந்திருந்தவள்,
“நீங்க எப்படி இருக்கீங்க சௌமியாக்கா…” என்றாள் முல்லை.
“ஹ்ம்ம், ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட நீ. நான் நல்லா இருக்கேன் முல்லை…” என்ற சௌமியா,
“அப்பறம் அர்னவ், நான் ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணலாம்ன்னு டிஸைட் பண்ணிருக்கேன்…” என்று அவள் எந்த துறையை தேர்வு செய்தாள் என்றும் சொல்ல அர்னவ்வின் முகத்தில் மெச்சுதல்.
“குட், நல்ல டிசிஷன்…” என்றான் அவன்.
அதுவும் அவன் முன்பே அறிவுறுத்தியது தானே? பொது மருத்துவம் மட்டும் படித்திருந்தவளை மேலே படிக்க சொல்லி ஊக்குவித்து எதை எடுத்தால் சரி என்றும் ஆலோசனை வழங்கி இருந்தான்.
இப்போது அதையே சௌமியா தேர்வு செய்திருக்க அர்னவ் முகத்தில் அதற்கான தாக்கம் எதுவுமில்லை.
“படிப்பு சம்பந்தமா எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க சௌமியா…” என அர்னவ் சொல்ல கௌஷிக் வந்துவிட்டான்.
வா என்று கூட அழைக்காமல் அதிர்ச்சியும், சங்கடமுமாக அவன் பார்க்க அர்னவ் எதையும் கவனிக்கவும் இல்லை.
இயல்பாக சௌமியாவுடன் பேசிக்கொண்டிருக்க அனைவரின் பார்வையும் முல்லையை தான் முற்றுகையிட்டது.
அர்னவ் அவளின் கையை விட்டிருந்தால் எழுந்து சென்றிருப்பாளோ என்னவோ? அவன் விடாமல் பிடித்திருந்தான்.
அவ்வப்போது மனைவியின் கையை இழுத்து இயல்பாக தன் மடியில் வைத்துக்கொண்டும் அர்னவ் பேச சௌமியாவின் விழிகள் அதனையும் கவனித்துக்கொண்டது.
“கையை விடுங்க, பாத்ரூம் போகனும்…” என முல்லை அவனிடம் முணுமுணுத்து தன் கையை இழுக்க அவளை திரும்பி பார்த்தான்.
“நீங்க பேசிட்டு இருங்க…” என சொல்லிவிட்டு எழுந்துகொண்டான் அர்னவ்.
முல்லையை அழைத்துக்கொண்டு அவளறைக்கு செல்ல அவன் தன்னுடன் வந்து நிற்பதையும் கவனிக்காமல் வேகமாய் உள்ளே சென்றவள் முகத்தில் நீரை வாரி இரைத்துக்கொண்டாள்.
காரணமின்றி கண்ணீர் வடிந்தாலும் தண்ணீரை மீண்டும் முகத்தில் அள்ளி வீசி அதனுடன் கரைத்தாள்.
வெளியே செல்லவே முடியவில்லை. அங்கேயே சில நிமிடங்கள் நின்றிருந்தவள் வெளியே வர அர்னவ் சுவற்றில் சாய்ந்தபடி அவளுக்காக காத்திருந்தான்.
முகம் கூட துடைக்காமல் கட்டியிருந்த பட்டுப்புடவையில் நீரின் தடங்கள் படிந்திருக்க இன்னும் முகத்தின் நீர் திவலைகள் வேறு சொட்டு சொட்டாய் மின்னியது.
அர்னவ்வை பார்த்ததும் மீண்டும் கண்கள் உடைப்பெடுக்க அவன் முகம் பார்க்க முடியாமல் உள்ளே செல்ல போனவளை இழுத்து அணைத்துக்கொண்டான் அர்னவ்.
“அவங்களுக்கு உங்களை ரொம்ப புடிக்கும்…” தானாகவே விசும்பலுடன் முல்லை கூற,
“ஹ்ம்ம்…” என்றான் அர்னவ்.
“என்னால தான். எல்லாமே? நான் வந்து அங்க நிக்கலைன்னா…”
“ஷ்ஷ் முல்லை. கீப் கொய்ட்…” என்றான் அதட்டல் இல்லாத அழுத்தமான குரலில்.
“என்னால அவங்களை பேஸ் பண்ண முடியலை…”
“சோ? கிளம்பிருவோமா?…” அர்னவ் அவள் முகம் நிமிர்த்தி கேட்க,
“இப்பவா?…” என்றாள் திகைப்புடன்.
“வேற என்ன செய்ய? இப்படி அழுது வடிஞ்சு ஆளுக்கொரு பக்கம் இருக்கவா இங்க வந்தோம்? அதான் பாதி தீபாவளி முடிஞ்சதே. போகலாம்…”
“வேண்டாம், வேண்டாம். நான் அழலை…” என்றவள் புறங்கையால் கண்ணையும், முகத்தையும் துடைக்க,
“பாதி என் ஷர்ட்ல பட்டுடுச்சு. இனி எங்க துடைக்க?…” என சிரித்தான் அர்னவ்.
“ஸாரி…”
“எதுக்காம்?…”
“ஷர்ட் பாழாகிருச்சே? அதான்…”
“ஓகே, வெளில வா. எல்லாரும் இருக்காங்க…” என்றதும் சரி என சொல்ல,