முல்லை எதுவும் சொல்லவில்லை அவர்களிடம். அவளுக்குமே இது பணி சம்பந்தமான அவசரம் என நினைக்க மனது இப்போது லேசானது.
“இங்க வா முல்லை…” என்று உள்ளே அழைத்த உஷா அவள் வரவும்,
“வந்ததுமே கேட்கனும்னு நினைச்சேன். அங்க எல்லாம் சரியா நடந்துச்சா?…” என்று வினவ முல்லை பாவமாய் பார்த்தாள்.
“இல்லையா?…” என்றதற்கு முல்லை ஆமோதிக்க,
“அவாய்ட் பண்ணினது நீ தானா?…” என்றும் உஷா கேட்க,
“இல்லைண்ணி…” என்றாள் வேகமாய்.
“ஹ்ம்ம், ஓகே. அது உங்களுக்குள்ள. உடனே இதை நாங்களும் எதிர்பார்க்க முடியாது. இந்தளவுக்கு அவர் நடந்துக்கறது பெருசு. அதுக்காக நம்மளும் இதுல பாதிக்கப்பட்டவங்க தான். உன்கிட்ட பேச்சளவுல எல்லாம் நல்லா தானே?…” என கேட்க,
“நீங்க பார்க்கறீங்க தானே ண்ணி?…” என்றாள் முல்லையும்.
“எங்க முன்னாடி நல்லவிதமா இருந்துட்டு உள்ள பேசாம இருந்தா? தெரிஞ்சுக்க தான் கேட்டேன் முல்லை…”
“எப்பவும் போல தான் ண்ணி பேசறாங்க. இங்க ஒன்னு, அங்க ஒன்னு எல்லாம் இல்லை…”
“அந்தமட்டும் சந்தோஷம் முல்லை. சரி பார்த்துக்கோ…” என்று பேசிக்கொண்டிருக்க ஞானம் வந்துவிட்டார்.
“நீயும் கிளம்பறியா முல்லை?…” மகளிடம் கேட்க,
“ஆமாம்மா, போறப்போ என்னை ஹாஸ்டல்ல விடறேன்னு சொன்னாங்க…”
“நீ லீவ் போட்டிருக்க தானே? இருந்து போயேன்…” என்றதும் முல்லை திகைக்க,
“ப்ச், எதுக்கு? அவ மட்டும் இருந்து என்ன செய்ய போறா? நாளைக்கு உங்க மகன் வேலைக்கு கிளம்பிருவார். நாம மட்டும் தான். புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து வந்தவங்க சேர்ந்து போவத்தான? சும்மாருங்க த்தை…”
ஞானத்தை அதட்டினாள் உஷா. அர்னவ் கிளம்புவதாய் சொல்லவுமே முல்லையின் முகம் சுண்டிவிட்டது.
“இல்ல உஷா…” என்றவரை கையமர்த்தி தடுத்தவள்,
“நீ போய் பாப்பாவோட விளையாடு முல்லை. நான் எல்லாம் எடுத்து வைக்கறேன்…” என அனுப்பியவள் முல்லை நகர்ந்ததும்,
உஷா சொல்லவும் தான் ஞானமும் தன் தவறை உணர்ந்தார் அவ்விடத்தில். தலையை வேகமாய் ஆட்ட,
“முதல்ல அவங்கள கொஞ்சம் தனிச்சு விடுங்க. போவட்டும். அடுத்து வாரப்ப மகளை சீராட்டலாம்…” என்று சொல்லிவிட்டு தீபாவளிக்கு சுட்ட பலகாரங்களை எல்லாம் எடுத்து வைத்தாள்.
“மருமகனுக்கும் தனியா அடுக்கிரு உஷா…” ஞானம் சொல்ல,
“அதெல்லாம் தனி தனியா தான் எடுத்து வைக்கிறேன்…” என்றவள்,