அத்தனை முறை சொல்லியும் தாமரை சமைக்கவில்லை, இரவிற்கு தான் சொன்ன பட்டுடுத்துவாளா? சரியான நேரத்திற்கு அறையினுள் செல்வாளா? என மனம் நிலைகொள்ளவில்லை காமாட்சிக்கு.
தன் சங்கடம் சமாளித்து செல்லலாம் என்றாலும் மதி சங்கடப்படுவான் என்று யோசித்தார்.
இரண்டு நாள் தூங்காமல் இருந்த போதும் மகளை நினைத்து தூக்கம் வரவில்லை காமாட்சிக்கு. ஐந்து மணியாகவே பொறுக்க முடியாமல்.. “ஏங்க, வாங்க ஒரெட்டு போய்ட்டு வந்திடுவோம்.” என்றார் கணவனிடம்.
கதிரேசன் மறுக்கவே, “தானே அலங்கரித்து அறைக்குள் செல்வது கடினம், அங்க அண்ணி இருந்தாலாவது சொல்லுவாங்க, நாம போய்ட்டு கால் மணிநேரத்துல வந்திடலாம்.” என்றார்.
இவ்விசயத்திற்காக செல்ல கதிரேசனுக்கும் தயக்கம் ஆதலால்.. “நாம போனா மஞ்சுவும் வரேன்பா.” என மறுத்தார் தயக்கத்தோடு.
கணவன் தயக்கமறிந்து.. “அப்போ நீங்க இருங்க, டிரைவரோட நான் போய்ட்டு வந்திடறேன்.” என கிளம்பினார் காமாட்சி.
ஐந்தரை மணிபோல் மதி வீட்டிற்கு வந்தார். “ம்மா.” என பழனிப்பனிடம் பேசிக்கொண்டிருந்த தாமரை முகம் மலர, தாமரை அணிந்திருந்த சுடிதார் கண்டு காமாட்சி முகமும் மலர்ந்தது.
“நீங்க எடுத்து வரலன்னா கவலையில்ல, இவங்க வாங்கி வச்சிருந்தாங்க.” என்றாள் பெருமையாக.
ம்.. என பெருமையடைந்து.. “மதி எங்க?” என்றார்.
“தூங்கிட்டிருக்காங்க.”
நல்லதாப் போச்சு என நினைத்தவர்.. தந்தையிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு.. “சரி வா.” என உள்ளே அழைத்துப்போய்.. “நான் கொண்டு வந்த பேக்ல ஸ்கை ப்ளூ கலர்ல பட்டுபுடைவை இருக்கும், அதை எடுத்துட்டு வா.” என்றார்.
அவஸ்த்தையாய் இருந்த போதும் அன்னை சொன்னதை செய்தாள். புடவைவை வாங்கியவர், “போய் குளிச்சிட்டு வா.” என்க, தாமரை போகவும், “உடம்புக்கு மட்டும் குளிச்சிட்டு பத்து நிமிஷத்துல வரனும்.” என்றவர் பக்கத்து அறைக்கு சென்று அனைத்தும் சரியாய் இருக்கிறதா என பார்த்து கிச்சன் சென்றார்.
காலையிலேயே வாங்கி வைத்த பாலை எடுத்து காய்ச்சி, ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்து, இரவுணவிற்கு இட்லி ஊற்றி, சட்னி அரைத்து முடிக்கவே, தாமரை குளித்து வந்தாள்.
“அந்த ரூம்ல சாரி இருக்கு, போய் கட்டு, இதோ வரேன்.” என பாத்திரங்களை சுத்தம் செய்து, தான் வாங்கி வந்த பழம், இனிப்புகளை பெரிய தட்டில் அடுக்கி மகள் கதவை திறக்க காத்திருந்தார்.
பத்து நிமிடத்தில் தாமரை பட்டுடுத்தி வர, மதி எழுவதற்குள் கிளம்பிடலாமென, அவசரமாக தாமரைக்கு பூச்சூடி, உடுத்தியிருந்த பட்டிற்கு ஏற்றார் போல் நகையணிவித்து.. பழம், இனிப்பு நிறைந்த தட்டை அறையில் வைத்து வந்து.. “சரி நான் கிளம்பறேன்.” என்க.. மதி வந்தான்.
ஒன்பது வருசமா பேசாதிருந்து, பதினைந்து நாள்ல கல்யாணம் முடிவாகியிருக்க, இதெல்லாம் தாமரைக்கு கஷ்டமாயிருக்கும்னு யோசிக்காம எதுக்குத்தான் இப்படி அலம்பல் பண்றாங்களோ என மனதில் கடிந்து.. “சரிங்கத்தை.” என முடித்துக்கொண்டான்.
“சரி மதி நான் கிளம்பறேன், டிரைவர் வெய்ட் பண்றான்.” என கிளம்பினார்.
இவன் கிச்சன் சென்று காமாட்சி சமைத்து வைத்திருந்ததை பார்த்தபடி பாலை ஆராய, ஃபிரிட்ஜில் இல்லையென்றதும் ஃப்ளாஸ்கில் உள்ள பாலில் டீ வைத்து எடுத்து வந்தான்.
தாமரைக்கு கொடுத்து தாத்தாவிற்கு கொடுத்து தானும் குடிக்கலானான். வழக்கமாய் மாலை தேநீர் தாத்தாவோடு வெளியில் அமர்ந்துதான் குடிப்பான் ஆதலால், இன்றும் வெளியிலேயே குடித்து உள்ளே வர.. மஞ்சு அழைத்தாள்.
“மஞ்சுக்குட்டி.. தூங்கி எழுந்தாச்சா?”
“நாலு மணிக்குத்தான் மாமா எழுந்தேன். தாமரை இல்லாம போர்.” என்றாள் பாவமாக.
இதற்கு என்ன சொல்வதென மதி சில நொடி அமைதிகாக்க.. “ஆனா மஞ்சு ஹேப்பி மாமா.” என்றாள் உற்சாகத்தோடே.
“அப்படியா?” என இவனும் நிம்மதியாக..
“ஆமாம்.. இனி உங்க வீட்டுலயும் மூனுபேர், இங்கயும் மூனுபேர்.. தாமரை என்னை கேரிங்கா பார்த்துக்கிட்டதைப் போல உங்களையும் பார்த்துப்பா..” என்றாள் பெருமையாக.
“அப்படியா?” என்றான் புன்னகையோடு.
“ம்..” என இவள் உற்சாக குரல் கொடுக்க… “இந்தா உங்கக்காகிட்ட பேசு.” என கொடுத்தான்.
“தாமர.. காலைல சொல்ல மறந்துட்டேன். ஹேப்பி மேரீட் லைஃப்..” என்றாள் சந்தோசத்தோடு.
“ம்..” என தாமரை சொல்ல.. “சரி நான் வைக்கிறேன், அப்பா கூப்பிடறார்.” என இணைப்பை துண்டித்தாள்.
இவன் டீ கொடுத்ததும் குடிக்கனும்போல இருந்தது. ஆனா நாம போட்டு கொடுக்கனுமனு தோணாம போச்சே, அம்மாவும் இந்த நேரம் டீ போடுவாங்கதான? நாளைல இருந்து சமைக்கனும், எல்லா வேலையும் செய்யனும் என நினைத்திருந்தவளுக்கு தற்போது இரவிற்கு சமைக்க வேண்டுமென தோன்றவில்லை.
எதேதோ நினைத்தவாறு சோபாவிலேயே சாய்ந்தமர்ந்து கண்மூடினாள். டீ வைத்த பாத்திரத்தை கழுவி வந்தவன் கண் மூடியிருந்த தாமரையை பார்த்தான்.
“தாமர.. தூக்கம் வந்தா ரூம்ல போய் படு.” என்க.. இத்தனை நேரம் இயல்பாய் இருக்க முடிந்தவளால் இந்த அலங்காரத்திற்கு பிறகு ஏதேதோ உணர்வுகள் ஆர்பரிக்க.. அவன்முன் இருக்க முடியாமல் போக அறைக்குள் போனாள்.
தாமரை முகத்தின் இயல்பற்ற நிலையெண்ணி அவளிடம் பேசலாமென மதியும் அறையினுள் சென்று கட்டிலில் அமர.. இன்னும் இறுக்கி மூடினாள் கண்களை.
ஒன்பது மணிக்கு நல்லநேரம், அந்த ஃப்ளாஸ்க்கில பால் இருக்கு, இந்த சொம்பில ஊத்தி எடுத்துட்டு ரூம்க்கு போய்டனும். என்று அன்னை சொன்னது நினைவு வர..
ஒன்பது மணியாகட்டும்னு வெய்ட் பண்றானோ? தன் மீது பிடித்தம் இருக்குமா? இல்லை திருமணம் முடிந்ததால் வேறு வழியின்றி தன்னை பழகிக்கொள்வானா? கடவுளே அப்படி மட்டும் நடந்திடக்கூடாது என்று மனம் தவித்தது.
இருக்கும் குழப்பம் போதாமல் மதியழகன் வேறு அருகே அமர்ந்திருப்பதால் அசைவற்றும் படுத்திருந்தவள் அரைமணி நேரம் வரை அந்த நிலையிலேயே இருக்க, இரண்டு இரவுகள் சரிவர தூங்காதிருந்ததால் அவளையறியாமல் தூங்கிப்போனாள்.
இரவு பத்து மணிபோல் மதி தாமரையை சாப்பிட எழுப்ப, “வேணாம்மா.” என முனகியவள் விழிப்பதற்கான அறிகுறியே இல்லாமல் போக, சேரியோட படுக்க மதியமே கம்ஃர்டபிளா இல்லன்னா, இப்போ இவ்வளோ நகைவேற போட்டுட்டு எப்படி தூங்கறா என நினைத்தவன் பார்வை தாமரையை தழுவ.. “ஆனாலும் சோதனைடா மதி.” என நொந்தவாறு, விலகிய முந்தானையை சரி செய்து தாமரையையே ஆழ்ந்து பார்த்திருந்தான்.
அதிகாலை தாமரைதான் முதலில் எழுந்தாள். அருகே மதி படுத்திருக்க ஏனோ பெருத்த ஏமாற்றம் மனதினுள். நீதானே முதல்ல தூங்கின என மனம் எடுத்துரைத்தாலும், நேற்று மதியத்திலிருந்து தனிமை கிடைத்தும், சிறு அணைப்பு கூட இல்லையே, என நினைத்தபடி குளிக்கப்போனாள்.
பாத்ரூம் கதவை திறக்கும் சத்தத்திலேயே எழுந்தவன், எழுந்துட்டாளா? என நேரம் பார்க்க, நான்கு மணிதான் ஆனது.
பால் வாங்கலாமென்றால் கடை திறந்திருக்கமாட்டார்கள், இரவும் சாப்பிடாமல் படுத்துவிட்டாள் என, பக்கத்து அறைக்குப் போய் முகம் கழுவி, தாத்தாவிற்கு கொடுக்கும் சத்துமாவை எடுத்து கஞ்சியை காய்ச்சி வர, முகம் திருப்பினாள் தாமரை.
“பசிக்கும். இந்த கஞ்சியை குடி. அஞ்சு மணிக்கு கடை திறக்கவும் பால் வாங்கிக்கலாம்.” என நீட்டினான்.
“வேணாம்.. எனக்கு இதெல்லாம் குடிச்சி பழக்கமில்ல.” என்றாள் வெடுக்கென.
“ப்ச்.. நைட்டும் சாப்பிடாமலே தூங்கிட்ட, நல்லாத்தான் இருக்கும்.. குடி தாமர.” என்றான் சிறு அதட்டலோடு.
“என்னை இப்படி கவனிச்சிக்க வேணாம்.” என்றாள்.
“இப்போ என்ன?” என்றதும், தாமரையின் கண்கள் கலங்கவே, “ஒன்னுமில்ல, எனக்கு தூக்கம் வருது.” என பெட்சீட்டை எடுக்க, அதுக்கெதுக்கு கண்ணு கலங்குது என நினைத்தவன்.. “பெட்சீட்டை எதுக்கு கீழ போடுற? கட்டில்ல படு.” என தாமரையை இழுத்து கட்டிலில் அமர்த்த.. “உங்களுக்கு என்னை..” என ஒரு வேகத்தில் கேட்டவள், சுதாரித்து வெளியேற முயல, கைப்பிடித்து நிறுத்தியவன் அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
தாமரை தடுமாறி தலைகுனிய.. தாமரையின் தவிப்பு புரிய.. “சொல்ல வந்ததை முழுசா சொல்லு.” என தாமரையருகே நெருங்கி நின்றான்.
“ப்ச் ஒன்னுமில்ல, அம்மா காலைல எழுந்து வீட்டை க்ளீன் பண்ண சொன்னாங்க, நகருங்க.” என விலகிப்போக, இழுத்தணைத்தவன்.. “உன்னை எனக்கு பிடிக்குமா பிடிக்காதானு உனக்கு தெரியாதா? நேத்து நைட்டும் இதையே கேக்குற?” என்றான் கோபமாக.
தாமரை திமிற.. “தாமர..” என இதழை நெருங்கியவன், சிறு முத்தத்தோடு விலகத்தான் நினைத்தான். கோபத்தோடு தாமரை திமிறிக்கொண்டிருக்க, இதழால் இன்னும் இறுக்கிப்பிடித்தவன் படிப்படியாக அவளுள் மயங்கி கட்டிலில் கிடத்தி நெருங்கிப் படுக்க.. “நான் கேட்ட பின்ன ஒன்னும் வேணாம், என்னைத் தொடாதிங்க போங்க.” என கத்தினாள் கோபத்தோடு.
“உண்மைதான், நீ கேட்டபின்னதான் இப்படி தோணுச்சு, லைஃப்ல எந்த சூழல்லையும் தாண்டி வர படிப்பு முக்கியம்.. உன் படிப்பு முடியட்டும்னு நினைச்சேன், அதுக்காக உன்னை பிடிக்கலனு ஆகிடுமா?” என்றவனை விலக்க தாமரை போராட, சிரித்தவன்..
“நான்தான உன்னைத் தொடக்கூடாது, நீ என்னைத் தொடலாமில்ல?” என்று தாமரையின் கையை தன் கைக்குள் அடக்கி, தன் கன்னம், உதடு, கழுத்து, நெஞ்சு என கீழறக்கிக்கொண்டே போக, பெரும் அவஸ்த்தைக்குள்ளானவளின் கை மதியின் வயிற்றை நெருங்கியதும் போராடி உருவ முயன்றாள்.
சிரித்தவன்.. “ஒன்னு நீ தொடு, இல்ல நான் தொடுவேன்.” என பேரம் பேச, “இ.. இல்ல, நீங்க சொன்ன மாதிரி படிப்பு முடியட்டும்.” என இவள் திக்கி திணற..
“குட் படிக்கப்போறியா? தொட்டா படிப்புல கான்ஸன்ட்ரேட் பண்ணமாட்டனு நினைச்சி தள்ளியிருந்தேன், ஆனா நான் தொட்டபின்னதான் உனக்கு படிக்கிற எண்ணமே வந்திருக்கு..” என பாராட்டியவன்..
“உன்னை எனக்கு பிடிக்கும்னு நேத்து நைட் சொல்லியும் உன் டவுட் தீரல, பிடிக்காம யாராவது கல்யாணம் செய்துப்பாங்களானு யோசிக்கல, என் பிடித்தத்தை ப்ரூஃப் பண்ணத்தான் கிஸ் பண்ணினேன்.. ஆனா கிஸ்சோட நிறுத்த முடியலடி..” என்றவன் தாமரை கையை மீண்டும் பற்றி தன் நெஞ்சிலிருந்து அழுந்தப்படிந்தவாறு உடலில் கீழாக நகர்த்த, தாமரை தவிக்க.. “சரி நீ என்னை தொடாத, நான் உன்னை..” என்றவனின் கைகள் வலம் சென்றது தாமரை மீது.
இவன் வாங்கி கொடுத்த சுடிதாரணியாமல், ரோசத்தோடு அன்னை கொடுத்தனுப்பிய சாரியை அணிந்திருந்தாள்.
மதிக்கு இன்னும் வசதியாய் போக, திண்டாடிய தாமரையின் பாதியுடை பறிபோயிருக்க.. “உங்ளுக்கு என்னை பிடிச்சிருக்குனு ஒத்துக்கிறேன், விடுங்க.” என்றாள் கெஞ்சலாக.
“உன்மேல காதல் மட்டும் இருக்கும்போது ஈசியா விலகியிருக்க முடிஞ்சது. இப்போ அப்படியில்ல..” என்க.. இவனின் தாபக்குரலில் கண்விழித்தவள் பார்த்தது மதியின் வெற்றுடலை.
பேச்சற்ற நிலையில் தாமரை பெரிய விழிகள் தற்போது இன்னும் பெரிதாக.. “நினைத்த அளவோடு நிறுத்திக்க இது கள்ளில்லை தாமரை..” என்று அவளின் கண்களுக்கு முத்தமிட்டவன், “காதலோடு சேர்ந்த..” காமம் என சொல்ல வந்தவன்.. அவ்வார்த்தையை முழுங்கி..
“வேறு விதமான போதை.. இனி என்னால விலகவும் முடியாது, கொஞ்சம் அனுசரிச்சு போயேன்.. இப்படி போராட்டத்தோட எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு..” என்று கெஞ்சலாய் தன்விருப்பம் தெரிவித்து, தாமரையின் இதழை ஆக்ரமித்தவாறு அடுத்த கட்டத்திற்கு முன்னேற..
சற்று முன் நடந்த இதழ் தீண்டலுக்கும், தற்போதைய தீண்டலுக்கும் ஆயிரம் வித்யாசம் இருக்க, அவனின் செயல்களிலும், பேச்சிலும் தாமரையின் கண்கள் தன்போல் மூட, “அனுசரிச்சிதான் போகனும்னு இல்ல, அனுபவிக்கவும் செய்யலாம்.” என கிசுகிசுத்த மதியழகன் ஆடைப்போரில் வெற்றியடைய,
தாளமுடியாத தாமரை.. “மாமா..” எனப் பிதற்ற, தாமரை குரலில் மதி மயங்க, மதியின் செயலில் தாமரை மயங்க என இருவர் நிலையும் தேவ நிலையடைந்தது.
காதேலோடு சேர்ந்த முதல் கூடல், தேவைகள் தீர்ந்த பின்னும் தணியவில்லை, பெரும்புயலடித்து ஓய்ந்த பின்னும் இலைகள் அசைந்தாடுவதுபோல் உணர்வுகள் அடங்க மறுத்தது மதியழகனிற்கு.
சற்று முன் காய்ச்சிய கஞ்சியை குடிக்க வைத்து மீண்டும் அணைத்தான் தாபத்தோடு. தாமரை தடுமாற.. “ஒன்பது வருசத்துக்கப்புறம் மாமானு கூப்பிட்டிருக்க, செலிபிரேட் பண்ண வேணாமா?” என ஆக்ரமித்தான் உரிமையோடு.
மதியழகனிற்கு தன்னை எத்தனை பிடித்திருக்கிறது என காலையிலிருந்து தன்னை கவனித்துக் கொண்டதிலும், அவனின் தீண்டல்களிலும் தெரிய.. இத்தனை பிடித்திருந்தும் ஏன் திருமணத்திற்கு கேட்கவில்லை? ஒருவேளை நான் பிடித்தம் சொல்லாமலிருந்திருந்தாள் என நினைத்தவளின் கண்கள் கலங்கியது.