மஞ்சு வரதுக்கு சாயங்காலம் ஆறு மணியாகிடும், ஆறு மணிக்கு மேல பொண்ணை வீட்டை விட்டு அனுப்பமாட்டேன், கிளம்பறதுனா இப்பவே கிளம்புங்க, இல்ல காலைலதான் கிளம்பனும் என காமாட்சி கட்டளையிட, மாலை ஐந்து மணிக்கெல்லாம் மனைவியோடு கிளம்பினான் மதியழகன்.
நாளை காலை விருந்திற்கு வரும்போது மாமாவை கூட்டிட்டு வரேன் என்றார் கதிரேசன். தனக்காக மதி இன்னொரு முறை வந்து அழைத்து செல்ல வேண்டுமேயென பழனியப்பனும் சம்மதிக்கவே, இரவு உணவையும் சமைத்து கொடுத்தனுப்பினார் காமாட்சி.
வீட்டிற்குள் வந்ததும் மதி அணைக்க.. “எங்கப்பாவை கவுத்திட்டிங்க.. ஒரே கொஞ்சல்.” என முனுமுனுத்தவாறு விலக முயற்சிக்க, “மாமா கவுந்து என்ன யூஸ்? நீயும் இன்னும் முரண்டிட்டிருக்கியே..” என்றான் அணைப்பை கூட்டி.
“நான் கேட்டதுக்காக கல்யாணம் செய்தமாதிரி இருந்திருந்தா கூட கஷ்டமா இருந்தாலும் சமாளிச்சிருப்பேன், உங்களுக்கு பிடிச்சிருந்தும் விலகியிருந்திருக்கிங்க, நானா கேட்ட பின்னும் என்னை அவாய்ட் பண்ண கொலை பண்ணியிருக்கேன், தாமரைக்கு நான் வேணாம்னு சொல்லிருக்கிங்க. உண்மையா லவ் பண்ணியிருந்தா எப்படி இப்படி இருக்க முடியும்னு ரொம்ப வேதனையா இருக்கு..
இப்போ கல்யாணம் ஆனபின்ன பார்த்து பார்த்து கவனிக்கிறதை நினைச்சா உங்க லவ் உண்மைதான்னும் தோணுது.. நம்ம கல்யாணம் நடக்கலன்னா என் நிலைமை என்னாகிருக்கும்? ஏன் உங்க விருப்பத்தை சொல்லல? அப்போ நானா கேட்டும் ஏன் மறுத்திங்க? அப்பாகிட்ட என்னை பொக்கிஷம்ன்றிங்க…
எதையாவது கேட்டா சப்பானி மாதிரி சொன்னதையே திரும்ப கேக்குறன்றிங்க. அப்படி என்ன தலைபோற காரணம் இருக்கும்னு மண்டைக்குள்ள இதேதான் குடையுது” என கமறிய குரலோடு தலைகுனிந்தாள்.
கன்னம் தாங்கி தாமரையின் முகத்தை நிமிர்த்த, கண்கள் கலங்கியிருந்தது.
நேரம் வரும்போது காரணம் சொல்றேன்.” என தன்மையாய் சொல்லி தாமரையை தூக்கிக்கொண்டு அறைக்குள் போனான்.
தற்போதும் சரியான காரணம் சொல்லாதது தாமரைக்கு ஏமாற்ற உணர்வை கொடுக்க.. “எதுக்கு தூக்கிட்டு வரிங்க? விடுங்க. எனக்கு வேலையிருக்கு.” என கட்டிலிலிருந்து எழப்பார்த்தாள்.
“இல்ல, அந்த ரூம்ல பூவெல்லாம் காஞ்சு போய் ஒரே குப்பையா இருக்கு. ஆறு மணிக்கு முன்ன வீட்டை க்ளீன் செய்திடனும்னு அம்மா சொல்வாங்க, இப்போ மணி அஞ்சரை ஆகிடுச்சி, நான் போய் பண்ணிட்டு வந்திடறேன்.” என எழ முற்பட்டவளை தடுத்தவன்..
“அந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன், இப்போ கொஞ்ச நேரம் என் பக்கத்துல படுத்திரு.”
இப்படி கெஞ்சினால் என்னதான் செய்வதென தாமரை மதியருகே அமர.. “படு.” என அருகே படுக்க வைத்து.. “உன்னை விரும்பறேனு தெரிஞ்சதுக்கப்புறம் சேர்ந்தாப்புல ஒரு பத்து நிமிஷம் உன் முகத்தை பார்க்க முடியாதானெல்லாம் ஏங்கியிருக்கேன்.” என ஏக்கமாய் தாமரையின் கன்னம் வருடியவன்..
“எங்கப்பாம்மா இறந்ததுக்கப்புறம் மனசு உன்னை ரொம்ப தேடுச்சி.. நீ அவாய்ட் பண்ணவும் அந்த கோபத்தையெல்லாம் படிப்புல காட்டினேன். நல்ல பொஷிஷன்க்கு வந்தப்புறம் அத்தையும் மாமாவும் உன்னை எனக்கு கொடுக்க யோசிப்பாங்களோனு மனசுல ஓடிட்டேயிருக்கும். ஆனா அது நடக்கல.” என ஏமாற்றமாய் சொன்னவன்..
“மாமா உனக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது நான் வேற பிரச்சனையில இருந்தேன். அதான் உன்னை கேக்க தைரியம் வரல. அதோட உனக்கு என்னை பிடிக்கும்ன்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்ல.” என்றான்.
எந்த முக மாற்றமும் இல்லாமல் தாமரை அமர்ந்திருக்க.. “உண்மையை சொன்னாலும் சமாதானமாகாம இருந்தா என்னதான்டி செய்யட்டும்?” என்றான் சலிப்பாக.
“நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான்னாலும் அந்த உண்மை சகிக்கலன்னு அர்த்தம்.. சமாதானமாகுற மாதிரி பதில் சொல்லலனா எப்படி சமாதானமாகுறது.?” என்றாள் தளர்வாக.
மதியழகன்.. “இரண்டு நாளாதான் எல்லா வேதனையும் மறந்து கொஞ்சம் சந்தோசமா இருந்தேன். இனியும் சந்தோசமா இருப்பேனாங்குறது உன் கையிலதான் இருக்கு.” என்றான் எதிர்பார்ப்போடு.
நேற்று திருமணத்திலிருந்து தற்போது வரை மதியின் செயல்கள் நினைவு வர தாமரை முகம் மலர்ந்து, சிவந்து, பின்னே இலகுவானது.
யப்பா.. கொஞ்சம் மலையிறங்கிட்டா என நிம்மதியானவன்.. “காலேஜ்க்கு எத்தனை நாள் லீவ் போட்டிருக்க?” என்றான்.
“ஏய் என்ன சொல்ற? படிக்கப் போறதில்லையா நீ?” என அதிர்வோடு எழுந்தமர்ந்தான்.
“ம்ஹும்.” என்றாள்.
“அதெல்லாம் முடியாது. நீ படிச்சிதான் ஆகனும்.” என்றான் கட்டளையாக.
“மாட்டேன்.”
தாமரையின் சிவந்த முகம் கண்டு.. “ஏய்..” என சேர்த்தணைத்தவன்.. “ப்ளீஸ்.. நீ படிக்கனும். படிச்சே ஆகனும்.” என்றான் கெஞ்சலாக.
“நீங்க என்ன கெஞ்சினாலும் படிக்கமாட்டேன்..”
தாமரையை அறிந்தவனாய்.. “ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாம் பயப்படலாமா?” என மதியழகன் தேற்ற.. “ஒருநாள்னா பரவாயில்ல, தினம் தினம் ஓட்டுவாளுங்க. நான் போகமாட்டேன்.” என்றாள் சிணுங்களாக.
“எங்கப்பாம்மா இறக்கும்போது ஃபர்ஸ்ட் இயர்ல இருந்தேன், என் படிப்பு செலவுக்காகவும், சாப்பாட்டுக்கும் பெயிண்ட்டிங் வேலைக்கு போனேன். படிக்கலன்னாலும் சம்பாதிக்கலாம், ஆனா அதுக்கு கடின உழைப்பும் அதிர்ஷ்டமும் வேணும்.
காலேஜ் போயிட்டிருந்ததால பலநேரம் வேலை கிடைக்கும்போது எனக்கு டைமிருக்காது, எனக்கு டைமிருக்கும்போது வேலை கிடைக்காது.
படிச்சிருக்கவும்தான் டியூஷன் எடுக்க முடிஞ்சது, கம்மி அமௌண்ட்னாலும் நிரந்தர வருமானம் வரவும் சமாளிச்சேன். லைஃப் எந்த நேரம் எப்படி மாறும்னே தெரியாது தாமர..”
“ஏன் இப்படி அபத்தமா பேசுறிங்க?” என்றாள் கலக்கமாக.
“அபத்தம் இல்ல, நிதர்சனத்தை சொல்றேன், நீ படிச்சி வேலைக்கு போகனும்னு இல்ல, பணத்துக்காக படிக்க சொல்லல, நான் இல்லனாலும் மாமா உன்னை பார்த்துப்பார்.” எனும்போது அருகிலிருந்த மொபைலை எடுத்து மதி மீது வீசினாள் ஆத்திரத்தோடு.
முகத்தில் படாமல் மதியின் சோல்டரில் படவே, லேசாய் தேய்த்துவிட்டு, தாமரையை அணைத்துக்கொண்டு.. “லைஃப்ல நிறைய பார்த்துட்டேன்டா, உனக்காக படிக்கவேணாம், எனக்காக படி.. ப்ளீஸ்..” என்றான் மிகுந்த பொறுமையோடு.
“சரி இனி இப்படி பேசமாட்டேன், ஆனா நீ படிக்கனும் சரியா? இது ஒன்னைத் தவிர வேற எதுக்கும் உன்னை வற்புறுத்தமாட்டேன்.” என்றான் பாவமாய் முகத்தை வைத்து.
தாமரை அமைதியாகவே இருக்க, பல விதமாய் கெஞ்சிக்கொண்டிருந்தவனிடம்.. “இப்படிலாம் கூட உங்களுக்கு வழிய தெரியுமா?” என்றாள் உள்ளடக்கிய சிரிப்போடு.
“ஹம்.. ரொம்ப வழியிறேனா?” என பெருமையோடு தாமரையை நெருங்க, விலகியவள்.. “அத்தை மாமா இறந்ததுக்கப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டுருக்கிங்கள்ல?” என்றாள் மிகுந்த வருத்ததோடு.
“ஆமாம்.. அவங்களுக்காகத்தான் உன்னை படிக்க சொல்றேன், எங்கப்பாம்மாக்கு நான் நல்லா படிப்பேன்றதுல அவளோ பெருமை. படிக்கும்போதே என் மகன் வாத்தியாராகிட்டான், படிப்பை முடிச்சதும் பெரிய வாத்தியாராகிடுவானு எங்கப்பா எப்போவும் என் பெருமைதான் பேசுவார். நீயும் படிச்சினா அவங்க ஆத்மா சந்தோசப்படும்.” என்றான் எதிர்பார்ப்போடு.
தாமரை முகம் சுருக்க.. “கொஞ்ச நாளைக்கு கிண்டல் பண்ணுவாங்க, ரொம்ப பண்ணினாங்களா அவங்களை வெறுப்பேத்துற மாதிரி பேசி பேசுறவங்க வாயை அடைச்சிடு.” என்றான்.
“சரி.” என்றாள் வேறு வழியின்றி.
“ஹம்..” என தாமரையை தன்மேல் போட்டுக்கொள்ள.. அவள் வைத்திருந்த மல்லிகை மதியழகன் முகத்தில் பட்டு மதியின் மதியை மயக்க.. “பூ வைக்க எதுக்கு அத்தைகிட்ட இவ்வளோ பூவானு மல்லுகட்டிட்டிருந்த? இனி தினமும் நிறைய வச்சுக்கோ, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என தாபத்தோடு முகர.. விலகிய முந்தானையை சரி செய்தவாறு.. “டிரெஸ் சேன்ஜ் பண்ணனும்.” என திமிறினாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.” என அணைப்பை கூட்டி இதழ்கலக்க.. ஒப்புகொடுத்தவள், மதி விலகியதும்.. “இப்படி செய்தா காலேஜ் போக முடியாது.. கர்பம்தான் ஆக முடியும்.” என்றாள் நாணத்தோடு.
“ஹா..ஹா..” என சத்தமாய் சிரித்தவன்.. “நீ சொல்றதும் சரிதான். அதுக்காக இப்படி பண்ணாம இருக்க முடியாது, ஆனா கேர்ஃபுல்லா இருக்கலாம்.” என அதற்கான வழிமுறைகளை விளக்க.. “அச்சோ போதும் போதும்.” என மதியின் மார்பிலேயே முகம் புதைத்தாள் தாள முடியாத வெக்கத்தோடு.
கடந்த கால செயல்களால் மனதில் பல நெருடல்கள் இருந்த போதும்.. முதல் முறையாய் தானாக தன்மேல் இழைந்திருக்கும் தாமரையின் ஸ்பரிசத்தை மனம் இன்னும் இன்னும் விரும்ப.. அவளோடு பேச்சை வளர்க்க விரும்பி..
“ம்.. சொல்லு, இத்தனை வருசத்தில என்கிட்ட பேசனும்னு ஒரு நாள் கூட தோணினதில்லையா?” என ஒன்பது வருட இடைவெளியில் தன்னைப் பற்றிய நினைப்பை அறிந்து கொள்ளும் ஆவலோடு கேட்டான்.
திருமணத்திற்கு மறுத்த காரணம்தான் ஏற்புடையதாக இல்லையென்றபோதும், முக்கிய காரணமில்லாமல் மறுத்திருக்க மாட்டான் என மனம் எடுத்துரைக்க, சற்றே சமாதானாமானாள்.
தன் மீதான மதியின் பிடித்ததை அவனின் பேச்சிலும், நடத்தையிலும் புரிய.. தாமரைக்கும் மதியோடு பேச்சை வளர்க்க பிடித்ததால்.. “தாத்தா பாட்டி சொன்னப்போ உங்களோட பேசாதிருக்கிறது தப்புன்னே எனக்கு புரியல.
பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்ன்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. அதோட கருவாச்சினு சொன்னிங்களா? அதுல ரொம்ப ஹர்ட் ஆகிட்டேன், இனி இவன்கிட்ட பேசவே கூடாதுனு கோபம் வந்துச்சு.
இரண்டு மூனு வருசம் கழிச்சி ஒரு நாள் திடீர்னு வந்திங்க, திரும்பவும் எங்க வீட்டுக்கு வருவிங்கனு எதிர்பார்க்கவேயில்ல.
நான் ஆச்சர்யமா பார்த்தேன், ஆனா நீங்க என்னைப் பார்க்கவேயில்ல. உங்ககிட்ட பேசாத கோபத்துலதான் என்னை பார்க்கலனு சமாதானம் செய்துகிட்டேன்.
மஞ்சுமேல நீங்க வச்சிருக்கிற உண்மையான பாசத்தையும் யோசிச்சி தாத்தா பாட்டி சொன்னது போல நீங்க தப்பானவர் இல்லனு புரிஞ்சிக்கிட்டேன்.
ஆனாலும் என்னை கருவாச்சினு சொன்னது மட்டும் உறுத்திட்டே இருக்கும். அதனாலயே உங்ககிட்ட பேசனும்னு தோணவேயில்ல.” என்றவள் அமைதியாக..
“ம்.. சொல்லு, முக்கியமான இடத்துல நிறுத்தாத.” என்றான் ஆவலாக.
“அது.. நீங்க டைரியில எழுதியிருந்த கவிதையை பார்க்கவும் யாரையோ லவ் பண்றிங்கனு நினைச்சேன், யாரை விரும்பினா நமக்கென்னனு வீராப்பா நினைச்சாலும் வந்த அழுகையை நிறுத்த முடியல.” என்றாள்.
“ம் அப்புறம்.?” என்றான் கர்வத்தோடு.
“அப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியாதா?” என நாணத்தோடு விலக.. சிரித்தவன்.. “என்மேல லவ் எப்போ வந்தது? காதலை உணர்ந்ததும் எப்படி ஃபீல் பண்ணினேனு சாப்பிட்டு வந்து சொல்லனும்.” என்றான் கண்டிப்போடு.
“அதெல்லாம் சொல்ல முடியாது.”
“சொல்லாம தூங்க முடியாது.” என சவாலிட்டவனுக்கு, சாப்பிட்டதும் சவால் பின்னுக்கு போய் காதல் முன்னுக்கு வர.. காதலின் அகோரப் பசியினிலே கையில் விரும்பி அகப்பட்ட கனித்தோட்டமாய் தெரிந்தாள் தாமரை.
நீண்ட வருடங்களாக தன்னை மனதில் சுமந்திருந்தவன் உணர்விற்கு வஞ்சனையின்றி மனையாள் விருந்தளிக்க, தாமரையினுள் மூழ்கினான் மதியழகன்.