Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
மேகம் வந்து தாலாட்ட – 40 (4)
Post Views:
8,600
அவனின் பின்னோடு செல்ல மனது உந்த எழுந்து அதிரனை தேடி சென்றது அவனின் மேகம்.
மேகாவின் வருகையை உணர்ந்தவன் திரும்பவில்லை. அமைதியாய் நின்று ஒரு கையினால் வீணையை மீட்ட அவனுக்கு ஸ்வரம் வாய்க்கவில்லை.
“ப்ச்…” என்று சொல்லிக்கொண்டவன் மீண்டும் முயன்றான்.
மனது ஒருநிலையில் இல்லாதிருக்க ஒருநிலைப்படுத்தி வாசிக்க முடியவில்லை அதிரனால்.
“அதி…” என பின்னிருந்து அணைத்துக்கொண்டவளை ஒரு கையால் முன்னிழுத்து இறுக்கமாய் கைகளுக்குள் நிறுத்தினான்.
“மேகாடா, என்னடா பண்ண? என்னை என்ன பன்ற நீ?…” என்று அவளின் தோளில் முகம் புதைக்க,
“அதி எனக்கு தெரியலை…” தடுமாற்றமாய் அவள் குரல்.
“தெரிய வேண்டாம். மேகம் கைக்குள்ளையே இருந்தா போதும்டா…” என்று சொல்ல அவனை எப்படி அணுகுவது என்று தவித்து போனாள்.
“அதி…” என முகத்தை நிமிர்த்த என்றைக்கும் போல் அதிரனின் கவர்ந்திழுக்கும் அந்த புன்னகை.
“இப்பவும் சொல்றேன், நாம ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப் தான். ஆனாலும் உன்னை சங்கடப்படுத்தும் எந்த விஷயத்தையும் நான் எதிர்பார்க்க மாட்டேன்…”
“அதி…”
“அதுவும் இப்போ இந்த நிலையில?…” என்றவன் மெல்ல அவளின் வயிற்றிற்கு முகத்தை கொண்டுவந்து அழுத்தமாய் முத்தமிட்டான்.
அந்த நொடி இருவருக்குள்ளும் உயிரை தொட்டு தழுவிய சிலிர்ப்பு இதயத்தை குளிர்வித்தது.
“லவ்யூ அதி…” என்றாள் மேகா.
“மேகா…” என்றவனை அணைத்து மேகா முத்தமிட அவளின் ஆவலில் இணங்கி தன்னை கொடுத்து நின்றான் அதிரன்.
ஆசைகொண்ட மனங்களின் அன்றைய, அதன் பின்னான கூடலில்லா கூடலும் உயிர்வரை தித்திக்கவே செய்தது மேகத்தின் அதிரனுக்கும், அதிமேகத்திற்கும்.
அதிரனுக்கு ஒரு மாதத்தில் கட்டு பிரிக்கப்பட்டு பிஸியோதெரபி ஆரம்பித்திருந்தது.
ஒவ்வொன்றிற்கும் மேகா அவனுடனே தான் இருந்தாள். படிப்பும் தொடர்ந்துகொண்டு குழந்தையும் ஆரோக்கியமாய் வளர அதிரனுக்கு முழுவதும் குணமாகியது.
அதோ இதொவென்று ஏழாம் மாதம் வந்துவிட வளைகாப்பு. திருவிழாவாய் ஏற்பாடு செய்திருக்க அத்தனை பேரையும் அழைத்திருந்தனர்.
அழைக்க வேண்டுமே என்று பரமசிவத்தையும், சந்திராவையும் அழைத்திருக்க பரமசிவம் வரவில்லை.
குடும்பத்தை மட்டும் அனுப்பி இருந்தார். சந்திரா எப்போதும் போல வந்திருக்க அமுதன் பேச்சே வைத்துக்கொள்ளவில்லை.
சந்திராவும் வந்த இடத்தில் மோனிகா, அதிரனுக்கு பயந்து அடக்கி வாசித்து சென்றார்.
அதிரன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் கெட்டப்பில் இருக்க மேகாவுடனான புகைப்படங்கள் வலைதளத்தை அதிர வைத்தது.
ஒரு மீடியாவையும் விட்டுவிடாமல் அதனையும் அழைத்திருந்தார் தேவராஜ். மலர் தான் பதறிக்கொண்டு இருந்தார்.
கண் திருஷ்டி ஆகிவிடுமே என்று. ஏற்கனவே திருமணமும், வரவேற்பும் அப்படி நடந்து அதனை தொடர்ந்து எத்தனை மன கஷ்டங்கள்.
இப்போது இதுவுமே உறுத்துமே என சந்தோஷமும், மகிழ்ச்சியுமாக தான் பொழுது கழிந்தது.
வளைகாப்பு முடிந்து நிறைமாத வயிற்றுடன் மண்டபத்தில் இருந்து மேகா தாய் வீடு கிளம்ப அதிரன் சந்தோஷமாக அனுப்பி வைத்தான்.
“குழந்தை பெத்து வர வரைக்கும் நான் அம்மா வீட்டுல. எவ்வளோ சந்தோஷமா இருக்கீங்க நீங்க?…” என மேகா சொல்ல,
“உன்னை பார்க்கனும்னா அடுத்த நிமிஷம் உன் அப்பா வீட்டுல இருப்பேன். இதுல எனக்கென வருத்தம்? என்னை யார் தடுக்க முடியும்?…” என்றான் கண்ணடித்து.
“ஆனாலும் கொஞ்சம் பீல் பண்ணலாம்…” என்றவளை கட்டிக்கொண்டவன்,
“என்னன்னு, என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னா?…” என உடல் குலுங்க அதிரன் சிரிக்க,
“போங்க போங்க. நான் கிளம்பறேன். நான் இல்லைன்னா தான் தெரியும் தனியா இருக்கும் போது…” என்று குறைபட,
“நான் ஏன்டா பொண்ணே தனியா இருக்க போறேன்?…” என்றான் நமுட்டு சிரிப்புடன்.
“ஹாங்…” மேகா பார்த்துவிட்டு,
“நீங்க என்னோட வர முடியாது தெரியுமா?…” என்ற மேகத்தின் சிணுக்கம் அவளுடனே அவனை செல்ல சொல்லியது.
“ரொம்ப சோதிக்கிற மேகா. போய்ட்டு வா…” என்றான் வேறு ஒன்றும் சொல்லாமல்.
மேகாவை அழைத்துக்கொண்டு செல்ல மோனிகா வந்துவிட அதிரன் அவள் கிளம்புவதை பார்த்தபடி நின்றான்.
வீடு வந்து சேர்ந்த பின்னும் அதிரனின் நினைப்பு தான் மேகாவிற்கு. அவனில்லாமல் கூட மேகா சமாளித்துவிடுவாள். அவளில்லாமல் அவனால் நிச்சயம் இருக்க முடியாதே?
மனது அடித்துக்கொண்டிருந்தது. வீட்டில் இருந்த சொந்தங்களும் ஒவ்வொருவராக இரவே கிளம்பிவிட்டனர்.
செல்வம் குடும்பத்தினர் மட்டும் அங்கே இருக்க பதினோரு மணியாகியும் மேகா உறக்கம் வராமல் நடந்துகொண்டு இருந்தாள்.
மலருக்கு அத்தனை வேலை. மோனிகாவும், செல்வமும் அன்றைய செலவின் கணக்குகளை கவனித்துக்கொண்டு இருந்தனர்.
அமுதன் பல்லவனுடன் பேசிக்கொண்டிருக்க வாசல் வரை நடந்தவள் திடீரென கேட்ட சிரிப்பு சத்தத்தில் வெளியே எட்டி பார்த்தாள்.
அதிரனின் சத்தம் போல தெரிய இந்த நேரத்தில் வந்துவிட்டானோ என்று இன்னும் வெளியே வந்து பார்த்தாள்.
தங்கள் வீட்டின் அடுத்த வீட்டு கேட்டின் முன்னால் நின்று பேசிக்கொண்டு இருந்தான் அதிரன். உடன் ஹர்ஷத்தும்.
“என்னம்மா இங்க என்ன பன்ற?…” செல்வம் கேட்க,
“அங்க பாருங்க பெரியப்பா அவங்க…” என்றதும் செல்வமும் அங்கே பார்க்க,
“வாணி அக்காவோட தான் பேசிட்டு இருக்காங்க…” என்றாள்.
வாணி அவர்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண். திருமணமாகி அங்கு வந்து இரண்டாண்டுகள் தான் ஆகியிருந்தது.
“இந்தக்கா அம்மாவுக்கு க்ளோஸ் பெரியப்பா. வாணியக்கா மாமியாரும் அம்மாவும் திக் ப்ரெண்ட்ஸ்…” என்றவள் யோசனையாக செல்வத்தை பார்க்க மோனிகாவும் வந்துவிட செல்வத்திற்கு புரிந்துவிட்டது.
அதற்குள் கேட் திறக்கும் சத்தத்தில் கவனம் திரும்ப அதிரன் வந்துகொண்டிருந்தான் புன்னகையுடன்.
காலையில் கட்டியிருந்த அதே பட்டு வேஷ்டி சட்டையில் ஒருபக்க வேஷ்டியை கையில் பிடித்தபடி.
திகைத்து போய் தான் மூவரும் வாசலில் நிற்க அவர்களை பார்த்து பெரிதாய் அதிரவெல்லாம் இல்லை அவன்.
“என்ன என்னை ரிஸீவ் பண்ண வாசல்லையே நிக்கறீங்களா?…” என்று கேட்க,
“வாணி அக்கா…” என்றாள் மேகா.
“ஹ்ம்ம், வாணி அக்கா தான். ஹர்ஷத்தோட அக்கா. ஹர்ஷத் பெரியம்மா பொண்ணு…” என்று மேகாவை பார்த்து கண் சிமிட்ட,
“அண்ணா இவங்க தான் அந்த இஸ் ஸ்பைய்யா?…” மோனிகா கிண்டலாக கேட்க,
“இருக்கலாம்…” என சிரித்தான் அதிரன்.
“உள்ள வாங்க மாப்பிள்ளை…” என்று செல்வம் நகர்ந்தார்.
அனைவரும் அதிரன் வரவும் வியப்புடன் வரவேற்க, நின்று பேச அவனால் முடியவில்லை. அத்தனை களைப்பு.
அனைவரிடமும் பொதுவாய் நின்றபடி பேசிவிட்டு மேகாவின் அறைக்கு வந்துவிட்டான்.
மோனிகா, பிரபாவின் கேலி பார்வையில் மேகா தான் முகத்தை எங்கே வைத்துக்கொள்வதென்று தெரியாமல் பார்வையை சுழற்ற,
“நீயாவது சொல்லியிருக்கலாம்ல. மாப்பிள்ளை வருவார்ன்னு…” என்றார் மலர்.
“அத்தை அவளே ஷாக்ல இருக்கா. சும்மா இருங்க…” என்ற மோனி,
“ஆமா வாணி மாமியார் இன்னைக்கு வளைகாப்புக்கு வந்தாங்களா?…”
“அவங்க வராம எப்படி? இந்த தெருவுல நமக்கு ஒரே ஆறுதல், நல்லவிதமா பேசற நட்பும் அவங்க மட்டும் தான்…” என்று சொல்லி சென்றார் மலர்.
மேகாவும், மோனியும் சிரித்தபடி மலரிடம் எதையும் சொல்லிக்கொள்ள வேண்டாம் என்றுவிட்டனர்.
மேகா அறைக்குள் வர அங்கே உடைமாற்றி கட்டிலில் படுத்திருந்த அதிரன் உறங்க ஆரம்பித்திருந்தான்.
புன்னகையுடன் வந்தவள் அவனின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு மறுபக்கம் வந்து படுத்ததும்,
“மேகா…” என கைகளை அணையிட்டு மென்மையாய் தன் மேகத்தை அணைத்துக்கொண்டான் அதிரன் இதழ்களில் உறைந்திருந்த புன்னகையுடன்.
என்னில் நீயடி உன்னில் நானடி
ஓ.. பைங்கிளி
நிதமும் நெஞ்சை தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கையின் பேரும் என்னடி
Advertising
Advertising