உறக்கம் வராமல் வலைதளத்தை பார்வையிட்டபடி இருக்க அன்றைய லைவ் ட்ரேண்டிங்கில் முதலில் இருந்தது யூட்யூப்பில்.
அத்துடன் எடிட்ஸ் , மீம்ஸ் மேகாவின் முகத்துடன் அதிரன். அதிரன் மேகாவுடன் பேசிய காட்சிகள் மட்டும் தனியே, அஷ்வினுடனான பேச்சு என இப்படி இடம் பிடித்திருந்தது.
ஒரு தலையசைப்புடன் பார்த்தபடி இருந்தான் அவன். அந்த புகைப்படத்தில் மேகாவின் முகம் அவனை இம்சித்தது என்றைக்கும் போல் இப்போதும்.
மேகாவிற்கான அதிரனின் இந்த பிரத்யோக தவிப்புகள் மட்டும் அவனிடத்தில் குறையவே இல்லை.
நாளுக்கு நாள் அவள் மீதான நேசம் கூடிக்கொண்டே தான் சென்றது அதிரனுக்கு.
இப்போதும் அதிரன் கிளம்ப இருமனதாக யோசனையில் இருக்க மேகா பேசி அனுப்பி வைத்தாள் அவனை.
இப்போது அழைக்க நினைத்த மனதை அடக்கி உறங்க முயன்றான் அவன். இன்னும் இரண்டு நாளில் சென்னையை அடைந்துவிடலாம்.
இந்த நேரம் உறங்கி இருப்பாள் என்று அழைக்கவில்லை அதிரனும். மறுநாள் கிரீஸில் இருந்து கிளம்பிய நேரம் மேகாவிற்கு அழைத்து சொல்லிவிட்டு கிளம்பினான்.
தான் வரும் வரை அத்தனை தெய்வங்களையும் வேண்டியபடி தான் இருக்கும் தன் மேகப்பெண் என்பதில் அதிரனுக்கு அத்தனை நிச்சயம்.
வந்துவிட்டான். சென்னைக்கு வந்துவிட்டான் அதிரன். தன்னுடைய வீடு வந்து சேர்ந்தவனை சுபத்ரா ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார்.
மௌனவிரதம் அன்றும் அவர். சாப்பாடு வேண்டுமா என கேட்க வேண்டாம் என்றவன்,
“ம்மா ப்ளாக் டீ மட்டும்…” என்றான்.
தலையசைத்துவிட்டு அவர் செல்லவும் குளித்து உடை மாற்றி வந்தவன் அவர் தந்த டீயை வாங்கி குடிக்க கிளம்பி வந்திருந்தவனை பார்த்து எங்கே என்றார்.
“மேகாவை பார்த்துட்டு வரேன் ம்மா…” என்றதும் தலையசைத்தவர் பார்த்து செல்லுமாறு சொல்லிவிட்டு மகன் கிளம்பவும் உள்ளே சென்றுவிட்டார்.
ஓய்வெடுக்கும் எண்ணம் வரவில்லை. எப்போதடா அவளை பார்ப்போம் என்றிருந்தது.
அவனின் பாதுகாவலர்கள் பின் தொடர ஹர்ஷத் கூட கேட்க நினைத்தான் தூங்கலாமே என.
எதற்கு என்றுவிட்டுவிட மேகாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது அதிரனின் வாகனம்.
இரவு பன்னிரெண்டை தொட்டிருந்தது நேரம். ஆனாலும் அந்த நேரம் ஹாலில் விளக்கெரிவது தெரிந்தது.
“ஸார் யாரும் தூங்கலை போல?…” என்றதும் வேகமாய் என்னவோ என்று பதறி ஓடினான்.
கேட் பூட்டியிருக்க கைப்பிடி சுவற்றை பிடித்து ஒரே தாவல் தான். உள்ளே சென்றவன் கதவை தட்டவும் பல்லவன் தான் வந்து திறந்தது.
“கேட் ஓபன் பண்ணுங்க பல்லவன், தாண்டி வர கஷ்டமா இருக்கு….” என்று சொல்லிவிட்டு அவனை கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைய அந்த நேரம் அதிரனை கண்டதும் மேகாவின் முகம் மலர்ந்துவிட்டது.
“வாங்க மாப்பிள்ளை…” என அமுதன் அழைக்க,
“ஆமா மாமா…” என தலையசைத்தவன்,
“என்னாச்சு மேகா?…” என்றான் வியர்த்து போய் இருந்தவளை பார்த்துவிட்டு.
“எப்போ வந்தீங்கன்னு கேட்க வந்து மாத்திட்டேன்…” என்றார் மலர் உளறி.
“எப்படி வந்தேன்னாலும் தப்பில்லை…” என்ற அதிரன் பல்லவன் உள்ளே வர,
“கேட் திறந்தாச்சா?…” என்றான்.
“ஒரு கால் பண்ணியிருக்கலாமே மாப்பிள்ளை…” என பல்லவன் கேட்கவும்,
“தூங்கியிருப்பீங்கன்னு தான். ஓகே வந்துட்டேன் தானே? இதுவும் நல்லா இருக்கே…” என்று சிரிக்க அதிரனை தவிர மற்றவர்கள் தான் வெட்கப்பட்டு நின்றனர் அவன் செயலில்.
“சரி உள்ள போங்க. இன்னைக்கு தான் வருவேங்க. நாளைக்கு தான் வீட்டுக்கு வருவீங்கன்னு நினைச்சிட்டிருந்தோம்…” என பல்லவன் சொல்ல,
“நினைக்க மட்டும் தான் தெரியும்…” என்று மோனிகா சொல்லி சென்றாள் அவனிடத்தில் கிண்டலாக.
“என்னது? இந்தா மோனி…” என்றான் அவன்.
“சரி உள்ள போங்க…” என சொல்லி அனைவரும் கலைய மேகாவுடன் உள்ளே வந்தான் அதிரன்.
“கால் பண்ணியிருக்கலாமே அதி…” என்றவள் மேலும் பேசும் முன் அவளை அதரங்களை அழுத்தமாய் அணைத்திருந்தான்.
அத்தனை நாளுக்கான ஆழ்ந்த முத்தம். அந்த முத்தங்கள் தான் தவிப்புகளுக்கான தற்காலிக நிவாரணியானது.
அவன் என்னவும் செய்யட்டும் என்று அவள் நிற்க நேரம் செல்ல செல்ல தன்னையே மறந்தாள் மேகா.
“நான் இருக்கேன் டா பொண்ணே. இதோ பேபீஸ் வராங்க பாரு…” என்று சொல்லி சொல்லி அவளை பேச அவன் மனதிற்குள் கலங்குவானே என கண்ணீரை பல்லை கடித்து அடக்கினாள்.
அடுத்தடுத்த வலிகள் அவளை பலமாய் தாக்க பெரும் அலறலுடன் தன் பெண்ணை ஈன்றெடுத்தாள் அதிரனின் மேகம்.
பஞ்சுபொதியென அழகு குழந்தை அழுகையுடன் அந்த பூமியில் தன் தடத்தை பதிக்க அடுத்ததாய் இன்னொரு வலி.
“அதி…”
“பொண்ணுடா. மேகாம்மா நமக்கு முதல்ல பொண்ணு…” என சொல்லிக்கொண்டிருக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் மகன் பிறந்தான்.
இரட்டை குழந்தைகள் என்று குடும்பத்தினர் தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
மேகா மயங்கவும் குழந்தைகளுடன் வெளியே வந்தான் அதிரன். இரண்டு கைகளிலும் பூ துவாலையால் சுற்றப்பட்டு பாந்தமாய் தூக்கியபடி வந்தவனை பல்லவன் தனது மொபைலில் படம் பிடித்துக்கொண்டான்.
பெரியவர்கள் வாங்கும் முன் அஷ்வின் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டான் நான் தான் முதலில் என்று.
“மாமா பாப்பா எனக்கு. எனக்கு…” என்று சொல்லவும் அவன் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தான் அதிரன்.
அஷ்வினுக்கு எப்படி குழந்தைகளை கொஞ்ச வேண்டும் என்று தெரியவில்லை. அதிலும் இரு குழந்தையில் எதனை முதலில் பார்ப்பதென்றும் தெரியாமல் முழித்தான்.