“இந்தக் காலத்துல காதல் மணம், கலப்பு மணமெல்லாம் சகஜமாகி போச்சு அதுக்கு காரணம் என்னானு தெரியுமா?” பொதுவாக இளசுகளை பார்த்து வணங்காமுடி கேட்டு வைக்க அனைத்தும் முழியை உருட்டியது.
“பிள்ளைங்க ஆசைக்குப் பெத்தவங்க விட்டு கொடுக்குறாங்க. வாழ போறது நீங்க தானே உங்க சந்தோஷம் தான் அங்க பார்க்க படுது.
இன்னொரு காரணம் பெற்றவர்கள் வாழ்க்கை, ஒருத்தருக்கு திருமணம் வாழ்க்கை வரம்னா, ஒரு சிலருக்கு சாபம்,
அதை கொண்டு கூட நம்ப பிள்ளைங்க முடிவு நல்லா இருக்கட்டும்னு யோசிப்பாங்க, ஆனா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…..” கேள்வி பொதுவாக வைத்து விசுவையும், ஸ்வாமியையும் பார்த்தவர்
“நான் உங்க கல்யாணத்துக்கு மறுப்பு சொன்னதுக்குக் காரணம் காதலோ? சமூகமோ? இல்லை . இது மாதிரி நீங்க என் முன்னாடி வந்து நிற்க கூடாதுனு தான் இப்போ புரியுதுங்கலா”
“…………….”
“பெரியவங்க மறுப்புக்குக் காரணம் உண்டுங்க, எல்லா வகையிலும் வேறுபட்ட இரண்டு குடும்பம் ஒரே கோட்டுல நிக்கும் பொது அவங்க நிலை எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க, இதுல ரொம்பப் பாதிக்கப் படுறது பொண்ணு பிள்ளைங்க தான்,
பேச்சு, உடை, சாப்பாடு, மனுஷாள் எல்லாமே மாறி நிக்கும்.அதுங்க வளர்ந்த விதத்துல நம்பக் கூட ஒட்ட முடியாது.
என் மருமக பொண்ணுகளுக்கு அதே பிரச்சனை தான், அதைச் சரி செய்ய வேண்டிய பொறுப்புள்ள நீங்களும் இத்தினி நாள் விட்டுடீங்க” என்றவர் பார்வை ஸ்வாமிநாதனை தீண்ட அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“பொண்டாட்டி பிறந்த வீட்டை பத்தி தெரியல, அவங்க வேளைக்கு சாப்புடுறாங்களானு தெரியல, அவங்க என்ன யோசிச்சு மருகி நிக்கிறாங்கனு புரியல,
இந்த லட்சணத்துல காதல் திருமணம் நீங்க….. சத்தியமா புரியலைங்க நீங்க என்ன காதல் பண்ணீங்க” கேள்விகளை சாட்டையாக சுழட்டி அடித்தார் மனிதர்.
“நாங்கெல்லாம் பெரியவங்க பார்த்து வச்ச திருமணம் தான்,கல்யாணத்துக்கு பிறகு அதுவும் பல நாட்கள் கடந்து தான் நல்ல அறிமுகமே, ஆனா கண்ணும் கருத்தும் நம்பி வந்த பொண்ணு மேல தான் இருக்கும்”
“உதாரணம் சொல்லுறேன்…. எங்க பெரிய அண்ணி ஒரு நாள் சாப்பிடல அது எங்கண்ணன் கண்டுக்கிட்டாரு. கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் இருக்கும் பிறந்து வீடு போற ஜோருள வேலைய வேகமா முடிச்சு கிளம்பிட்டாங்க அண்ணி,
காலையில சாப்பாடு சாப்பிடல சின்ன அண்ணியும் கவனிக்கலை நாங்களும் வேளைக்குக் கிளம்பியாச்சு வேகாத வெயிலு காலம் வேற…
அன்னைக்கு எங்க அண்ணன் என்ன பண்ணாரு தெரியுமா?பஸ்ல எற போனவங்களைக் கோழியாட்டம் அமுக்கி வீட்டுக்கு கூட்டி வந்து அப்படி ஒரு வசவு,
அது போக அவங்களே சோறு பருக்கி விட்டாக…. அத்தினி வேலையும் செஞ்சுட்டு சாப்பிடாம போவியா நீ? அதுவும் மூணு மணி நேரம் பயணம் திட்டி பிறந்த வீட்டுக்கும் போக விடல,
அவங்கள பார்த்து தான் நான் கத்துக் கிட்டேன். இன்ன வரைக்கும் என் பொஞ்சாதி மேல ஒரு கண்ணு இருந்து கிட்டே இருக்கும்…. இதுல எங்க மகனுங்க நீங்க இதை எங்க போயி சொல்ல”
வானதிக்கும் அன்றைய நாளின் தித்திப்பு நினைவாக வந்து போனது.அண்ணன் தம்பிகள் மூவருமே ஒன்று போல் தான் நம்பி வந்த பெண்களை அவர்களது குணத்திற்கு ஏற்ப தாங்கி நின்றனர்.
“நம்மை நம்பி வந்த பொண்ணு அதுவும் அது குடும்பத்தைப் பகைச்சு கிட்டு, நீங்களே சதம்னு எல்லாத்தையும் கொடுத்து நிக்குது, அந்தப் பொண்ணைப் எப்படி பார்த்துக்கனும்?” என்றதும் விசு எதுவோ சொல்ல வர அவனைத் தடுத்தவர்
“என்ன சொல்ல போறீங்க? நான் நல்ல தான் வச்சு இருக்கேன், கேட்டதெல்லாம் வாங்கித் தரேன், வெளில கூட்டிட்டு போறேன் அதானே சொல்ல வரீங்க”
“ஆம்” என்று தலையை ஆட்டி வைக்க
“இது மட்டுமே போதுமா? பணம் ,வேலை, பொருள் தாண்டி அன்புன்னு ஒன்னு இருக்கு அது இல்லனா ஒரு மண்ணுக்கும் இல்ல” இதனைச் சொல்லும் வேளை வணங்காமுடியின் குரல் சற்று உயர,
என்ன யோசித்ததோ அதுவரை விளையாடி கொண்டு இருந்த அனு தாத்தானை பார்த்து ஓடி வந்து அவரது மடியில் அமர்ந்து தாடையில் சிறு சிறு முத்தம் வைக்கச் சிலிர்த்து அடங்கினார் வணங்காமுடி கோபம் அனைத்தும் பல மைல்கள் தாண்டி சென்று விட்டது.
பார்த்த அனைவருக்கும் ஆச்சிரியம் தொட்டாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குட்டி. அதுவே வணங்காமுடியை கட்டி கொள்ள அந்த நிலையிலும் தனது கணவனை பார்த்து பானுவின் வாய் மெல்ல முணு முணுத்தது ‘ஆள் மயக்கி’
“இது என்னடா? …இது?… முத்தம் இப்படி இனிக்கிது…… சிட்டுக்குப் பயம் போச்சு போலையே தாத்தா மேல …. என்றவர் பேத்தியை இறுக்கி கட்டி கொண்டு கொஞ்ச சிறு தளர்வு அவரிடம்
சிறுது நேரம் சிட்டை கொஞ்சியவர் பேத்தியை மடியில் வைத்துக் கொண்டே மீண்டும் தொடங்கினார்…
“எதுல விட்டேன்” என்றவர் நினைவு வந்தவராக “ஆஹான்!….பெரிய வேலையாவே இருக்கட்டுமே சாப்பிட்டியானு கேட்க எத்தினி நேரம் ஆகும்?” தகப்பன் தொடர் குற்ற சாட்டை தாங்க முடியாமல் விசு.
“அப்பா என்னையே சொல்லாதீங்கப்பா அசந்து வந்து ஒரு காபி கேட்டா என்ன பேசுவா தெரியுமா? கை வலி, கால் வலின்னு கதை, வேலை பிரஷர் வேற, தாங்க முடியாது கடுப்பாகும்” என்றவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“இதெல்லாம் ஒரு குத்தம்மாங்க அந்தப் பொண்ணும் வேலைக்குப் போயிட்டு வாரங்களே அவங்களுக்கும் அலுப்பு இருக்கும் தானே”
“அப்பா!..”
“நிறுத்துங்க….. பேச்சு வளர்ந்து கிட்டே தான் போகும் காதல் பண்ணும் போதுத் தெரியாத ஓட்டை, உடைசல் எல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பம் பண்ணும் போதுத் தான் உங்களுக்குத் தெரியுமோ?” காட்டமாகக் கேட்டவர்
“உங்க இரண்டு பேருக்கும் பொதுவா சொல்லுறேன் இனி இது தான் வாழ்க்கை இதைச் சரி செய்ய என்ன பண்ணுறதுனு யோசிங்க அதை விட்டுட்டு என்ன பேச்சு இது?, முதல நீயா? நானா?ங்குற போட்டிய நிறுத்துங்க”
“இரண்டும் பேருக்கும் ஒரே வயசு அதுவும் கூட உங்க பிரச்சனைக்குக் காரணம்,
உதாரணமா இப்ப ஒரு பொருள் இருக்குனு வைக்க அதுக்கு இரண்டும் பேரும் சண்டை கட்டுறீங்க, எனக்கு எனக்குன்னு ஒரு கட்டத்துல,
போயி தொலை நீயே வச்சுக்கோன்னு இரண்டு பேருமே அந்தப் பொருளை விட்டு கொடுத்து யாருமே எடுக்காம விட்டுறீங்க,
இது தான் நடக்குது…. இதுக்குத் தான் நாங்க அஞ்சு, ஆறு வயசு வித்தியாசத்துல பொண்ணு பார்த்து முடிக்குறது” பேச்சோடு பேச்சு அதில் ஒரு அடி என்பது போல் விளாசினார்.
“யாராவது ஒருத்தர் விட்டு கொடுங்க… அடுத்தக் குழந்தைக்கு என்ன செய்யலாம் யோசிங்க வேலை போனா ஆயிரம் வேலை இருக்கு ஆனா வயசு போனா ?…….,
இப்போ ஊருக்கு கிளம்புங்க ஒரு வாரம் ஆற போடுவோம் பிறகு உங்க முடிவை சொல்லுங்க” என்றவர் விமலாவின் தாயாரிடம் திரும்பி.
“அம்மா நீங்க எதுக்கும் கவலை படாதீங்க உங்க மக எனக்கும் மகள் தான் கடவுள் மேல பாரத்தைப் போட்டு நம்ப முயற்சி பண்ணுவோம்,
அதுக்குப் பிறகு கடவுள் செயல் எதுவா இருந்தாலும் ஏத்துக்கலாம். எங்க காலம் உள்ள வரை பொண்ணு எங்க பொறுப்பு” என்றவர் நீண்ட வாக்கு வாதத்தை முடித்து வைக்க விமலாவின் தாய் எழுந்து நின்று இரு கை குவித்தவர் கதறி விட்டார்.
“நான் பயந்தே போயிட்டேன் சம்பந்தி இந்தக் கல்யாணத்துல உங்களுக்கு விருப்பமே இல்லைனு தெரியும்,
அதை எண்ணி தான் என் பயமே அதுவும் இவ வந்து குழந்தை இல்லை? அவரும் சரியா பேசமாட்டேங்கறான்னு? சொல்லும் போது என்னால யோசிக்கவே முடியலை,
உங்க கிட்ட பேசியே ஆக வேண்டிய சூழ்நிலை நீங்களும் எப்படி எதிர்வினை செய்வீங்கன்னு ஒரு பயம் இருந்துகிட்டே இருந்தது ஆனா இப்போ ………….,
பொதுவா கணவன் மனைவி சண்டை பெத்தவங்க கிட்ட வந்தா? அதுவும் காதல் திருமணமா இருக்குப் பட்சத்தில் பேச்சு தொடக்கமே உன் பொண்ணு மேல தான் தப்பு… உன் பையன் மேல தான் தப்புனு ஆரம்பமாகும்.
அவங்கவங்க பிள்ளையைத் தான் காப்பாத்த பார்ப்பாங்க நானும் அந்த மனநிலையில் தான் இங்க பேச வந்தேன்” கடைசி வார்த்தை சொல்லும் போது குரல் கம்மியது.
“ஆனா நீங்க சரிசமமா வச்சு பேசுவீங்கன்னு யோசிக்கல எனக்கு இதுவே போதுங்க” என்றவர் அழுக
“அழுக்காதீங்கம்மா” என்று அவரைத் தேற்றினார் வானதி
ஒருவழியாக அனைவரும் தெளிய “சரி வணங்கா பிள்ளைகளுக்கு ரயிலுக்கு நேரம் ஆகுது நீ காரை பிடி”
“சரிண்ணே” என்றவர் தாமதம் செய்யாமல் அருணகிரியுடன் வெளியில் செல்ல வீட்டு பெண்கள் அனைவரும் மட மடவென வேலையில் ஈடு பட்டனர்.
“சம்பந்தி வாங்க” என்ற பானு விமலாவின் தாயாரை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்று பல உறுதிகள் கொண்டு நம்பிக்கை அளித்து அவரைத் தேற்றினார்.
பசுபதி, விசு, ஸ்வாமிநாதன் தனியாக ஒதுங்கி கொள்ள.
மீனு தனது அறைக்குச் சென்று விட்டாள் மனம் முழுதும் பயம் பெண்ணுக்கு வணங்காமுடி சொல்வது போல் மீனு குடும்பம் முற்றிலும் வேறு வகை ‘வந்தால் வரவில் வை போனால் செலவில் வை’ என்ற ரகம்
விமலா அம்மாவை போல் தனது தாய் வந்து பேசுவதெல்லாம் சாத்தியமே இல்லை என்று தனக்குள் உழன்றது பெண் இது தனி கதை.
******
கன்னல் மொழி விமலாவிடம் பேச்சு கொடுத்து அவளது மனநிலையை மாற்ற முயன்று கொண்டு இருந்தாள்.
ஒருவழியாக அனைவரையும் சரிக்கட்டி காரை பிடித்து அனுப்பி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த வணங்காமுடி தளர்ந்து விட்டார்.
என்னதான் வெளியில் தைரியமாகப் பேசினாலும் மகனது வாழ்க்கை நெருடலை கொடுத்தது. ஒருவன் சங்கதி தான் சந்திக்கு வந்தது இன்னொருவன் என்னவோ? என்ற பயம் வேறு அவருக்கு.
இன்று நடந்த தொடர் பேச்சில் தலையில் இடியாக வலி இறங்க தனது அறைக்குச் சென்று அமைதியாகக் கண் மூடி படுத்தவர் சிறிது நேரத்தில் உறங்கியும் போனார்.
சாப்பிட அழைக்க வந்த பானு அவரது உறக்கத்தைப் பார்த்து அருகில் சென்று நல்ல உறக்கத்தில் இருந்தவரது தலை கோதி நெற்றில் முத்தமிட.
அத்தனை தூக்கத்திலும் மனைவியின் முத்தத்தை உணர்ந்தவர் அவரை இழுத்து அனைத்துக் கொண்டு “உங்க பேத்தி முத்தத்தை விடத் தித்திப்புங்க” என்க
சிறு வெட்க புன்னகையுடன் கண்ணீரும் சேர்ந்து கொள்ள அவரது கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டார் பானுமதி.
காதல் என்பது யாதெனில் எவ்வகைச் சூழ்நிலை நாம் எதிர் கொண்டாலும் கைகள் கோர்த்து அவற்றைக் கடப்பதே.