கல்கியின் பேச்சு சிரஞ்சீவியைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றது. இதுவரை ஒருவர் கூட அவனிடம் இப்படி பேசியதே இல்லை, ஆண் பெண் என்ற பேதமெல்லாம் இல்லை. இது போலான பேச்சுகள் அவன் கேட்டதில்லை, கேட்கும் நிலையும் வந்ததில்லை.
சிரஞ்சீவி தந்தை வழி உறவுகளிடம் கூட ஒரு மரியாதையான இடைவெளியுடன் இருப்பான். அவனின் பெரியப்பா மக்கள் எல்லாம் அவனை விட பெரியவர்கள், அந்த பக்கம் அத்தை மாமா மக்கள் என்று நெருங்கிய சொந்தத்தில் யாருமில்லை. எல்லாம் ஒன்றுவிட்ட உறவுகளே. நண்பர்களும் ஒன்றிரண்டு பேர், அவர்களிடம் மட்டுமே உரிமை, கிண்டல், கலாய் எல்லாம்.
அதனால் கல்கியின் பேச்சை விளையாட்டாய் கடக்க முடியவில்லை. கோபத்துடன் உள்ளே சென்றான்.
“ப்ரசாத்!” என்று அவனை அடக்கியவர் கதவை சாற்றிவிட்டு
“அமைதியா பேசு, என்னாச்சு?” என்று கேட்டார்.
“அந்த கல்கி என்னை சிங்காரம்னு சொல்றா” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே, முகம் சிவந்து போய் அவனின் கோபத்தைக் காட்டியது.
“சிங்காரமா?” என்ற யமுனாவிற்கு சிரிப்பு வந்துவிட மகனின் கோபம் பார்த்து சிரிப்பை அடக்கினார்.
“ஆமா, அப்பா சிரு பங்காரத்தை அழைச்சிட்டு வான்னு சொன்னா இவ என்னை சிரு பங்காரம் சிங்காரம்னு சொல்றா, ஹௌவ் டேர் ஷி இஸ்? காலேஜ் கூட இன்னும் போகல, ஜஸ்ட் அ ஸ்கூல் கிட், என்னை கிண்டல் பண்றாம்மா” என்றான் கோபம் தீராதவனாக.
“அதான் கிண்டல்னு நீயே சொல்லிட்டியே ப்ரசாத்”
“அதுக்கு? என்னைக் கிண்டல் செய்ய அவ யாரு? ஒரு எஸ்பின்ற ரெஸ்பெக்ட் வேண்டாமா?”
“அவ என்னை அக்யூஸ்ட்டா, இல்லை உன் ஆபிஸ்ல இருக்கவங்களா? எஸ்பின்னு ரெஸ்பெக்ட் செய்ய, அவளுக்கு நீ அத்தை பையன். அப்படிதான் உன்னைப் பார்ப்பா, ஊர்ல எல்லாம் அத்தை பசங்க மாமா பசங்கன்னா கிண்டல் செய்றது சகஜம், இதைப் போய் இவ்வளவு பெருசா பேசுற” யமுனா சாதாரணமாய் முடித்துவிட்டார்.
“அத்தை பையன்னா என்ன வேணும்னாலும் பேசுவாளா? அவ வயசு என்ன? அவளை விட பெரியவன் நான். அந்த மரியாதைக் கூட தெரியாத பொண்ணா இருக்கா? எப்படி இவளை வீட்ல வைச்சிருக்கறது?” படபடவென பொரிந்த மகனைப் பார்த்த யமுனா
“ப்ரசாத், இவ்வளவு டென்ஷன் ஆகாத. அவ கிண்டல் செஞ்சா திருப்பி நீ கிண்டல் செஞ்சிடுடா”
“எனக்கு வேற வேலை இல்லையா?” அவன் கோபத்தில் கத்த
“ப்பா, எவ்வளவு கோவம் உனக்கு? இப்போ என்ன செய்யனும் சொல்லு” யமுனா இறங்கி வந்து பேசினார்.
“அந்த பொண்ணை அவ லிமிட்ல இருக்க சொல்லிடுங்க ம்மா” என்றவன் மெத்தையில் சாய்ந்தான்.
வெளியே வந்து யமுனா பார்க்க சூர்யா டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்தார், இன்னொரு அறையில் கல்கியும் தையல் நாயகியும் இருந்தனர். தையல் நாயகிக்கு மெத்தையில் படுக்க பிடிக்காது, அதனால் அங்கிருந்த பாயை விரித்து அதில் படுத்திருந்தார்.
கல்கி ஊருக்குப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசி முடிக்கும்வரை யமுனா அறைவாசலில் நின்று பார்த்திருந்தார்.
பேசி முடித்து கல்கி பார்க்க, “அந்த ரூம் ப்ரசாத் யூஸ் பண்றான். இனிமே இந்த ரூம் உன்னோடது கல்கி. மத்த பொருள் ஒன்னும் இருக்காது, உன்னோடதை எல்லாம் வைச்சிக்கோ, உனக்கு வேற திங்க்ஸ் வேணும்னாலும் சொல்லு, வாங்கிடலாம்” என்றார்.
“ஓகே அத்த” என்றவள் வெளியே எழுந்து வர,
“ஏன் வர, போய்த் தூங்கு கல்கி. பத்து மணிக்குப் போனா போதுமே காலேஜுக்கு. இப்போ அஞ்சரைதானே, தூங்கி ஒரு எட்டு மணிக்கு எழுந்திரிச்சா கூட போயிடலாம், ஜஸ்ட் ஹால்ஃப் அன் ஹவர் ஆகும்” என்றார் யமுனா.
“இல்லைத்த, தூங்கிட்டு திரும்பி எந்திரிச்சா தலை வலிக்கும், நான் குளிச்சிட்டு வரவா?” என்று கேட்க
“குளிக்கறதுக்கு எல்லாம் பெர்மிஷன் கேட்பியா?” என்றவர் பாத்ரூமைப் பார்க்க பக்கெட் கப் பேஸ்ட் எல்லாம் இருந்தது
“சோப் இல்லையே?” என்று அவர் சுற்றிப்பார்க்க,
“சோப், ப்ரஷ் பேஸ்ட் எல்லாம் இருக்குத்த” என்றதும்
“சரி, நீ ரெடி ஆகும்மா” என்று யமுனா போய்விட்டார். சூர்யா மகனுடன் தூங்க போய்விட கல்கிக்குத் துணையாய் இருக்க வேண்டுமே என்று யமுனா உறங்காமல் விழித்திருந்தார்.
“என்னத்த தூங்கல” என்ற கல்கியின் குரலில் அவர் தலையைத் தூக்கிப் பார்த்து புன்னகைத்தார்.
“நீ தனியா இருப்ப இல்லை, எல்லாரும் தூங்கிட்டாங்க”
“எப்பவும் பால் போட்டுடுவாங்க, இப்போ ஊருக்கு வரவும் ப்ரசாத் வேண்டாம் சொல்லிட்டான். நான் போய் பால் வாங்கிட்டு வரேன் காஃபி குடிப்போம்” என்று அவர் எழ
“நானே போய் வாங்கிட்டு வரேன்” என்றாள் கல்கி.
“தெரியாத ஊர்ல நீ எப்படி போவ?” என்று மறுத்தார் யமுனா.
“தெரியாததை தானே தெரிஞ்சிக்க முடியும் அத்த, நாங்க பாக்கெட் பால் வாங்கினது இல்லை, நீங்க என்ன பால் வாங்கனும் சொல்லுங்க” என்றதும் என்ன வாங்க வேண்டும் என்று அவர் சொல்ல, கல்கி பத்தே நிமிடத்தில் அவர் சொன்னதெல்லாம் வாங்கி வந்தவள் சில்லரையும் சரியாக கொடுத்துவிட ஆச்சர்யமாய்ப் பார்த்தார் யமுனா.
“பரவாயில்லையே, கடையைக் கண்டுபிடிச்சு சீக்கிரம் வாங்கிட்டு வந்துட்ட” என்று அவர் பாராட்ட
“எனக்குக் கடைக்குத் தனியா போய் பொருள் வாங்கனும்னு ரொம்ப நாள் ஆசை அத்த” என்றதும் அவர் அவளைப் பார்க்க அவர் பார்வையின் பொருள் உணர்ந்தவள்
“கடைக்கெல்லாம் அனுப்ப மாட்டாங்க வீட்ல, அதுவும் பெரிய பொண்ணு ஆன பின்னாடி வீட்டு வாசல் தாண்டினா தாத்தாவும் அப்பத்தாவும் கத்த ஆரம்பிச்சிடுவாங்க. நீங்க காலேஜ் போக ஆரம்பிச்ச கதையில தொடங்கி கல்யாணம் முடிஞ்ச கதை வேறு சொல்லி ரத்தம் வர வைப்பாங்க, அப்பாவுக்கும் சேர்த்து திட்டு விழும்” என்றபோது யமுனாவிற்கு வருத்தமாய் இருந்தது.
“இனிமே உன்னோட இஷ்டம் போல இருக்கலாம் கல்கி” என்று அவளின் கன்னம் தட்டியவர்
“சுதந்திரத்தோட விலை பொறுப்புணர்வு, அதை மறக்கக் கூடாது கல்கி. எவ்வளவு சுதந்திரம் கிடைக்குதோ அந்தளவு பொறுப்பா இருக்கனும்” என்று அறிவுறுத்தவும் மறக்கவில்லை.
“ஓஹ், சிங்காரம் அதுக்குள்ள உங்க கிட்ட கம்ப்ளையண்ட் பண்ணிட்டாரா” என்று அவள் இன்னும் சிரித்தாள். யமுனா புன்னகையுடன் இயல்பாய்ப் பேசவும் அவளும் கோபத்தை இழுத்துப் பிடிக்கவெல்லாம் இல்லை, இயல்பாய் அவருடன் கலகலக்க முடிந்தது. ஆனால் அவர் அடுத்து சொன்னதில் கல்கியின் அந்த துள்ளல் வடிந்து போனது.
“அட, கிறுக்குப் பசங்களா, எச்சித் துப்பினா ஐநூறு ரூபாவா?” என்று திட்டியவரை கல்கி உள்ளே அழைத்துப் போய் பல் துலக்க வைத்து அழைத்து வர, டீயைக் குடித்துக்கொண்டே தையல் நாயகி மகளிடம்
“யமுனா, எம்ஜிஆர் சமாதி காலையில கூட்டமா இருக்குமா இல்லை அந்திக்குக் கூட்டமா இருக்குமா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அவர் அப்படி கேட்டுவிட கல்கி
“என்னைக் காலேஜ் சேர்க்க வந்தியா இல்லை சமாதி பார்க்க வந்தியா கிழவி நீ? இப்படியே பேசிட்டு இருந்த, எம்ஜிஆர் பக்கத்துல உனக்கு சமாதி கட்டிடுவேன் பார்த்துக்கோ” என்றாள் கோபத்துடன்.
“விடு கல்கி, அவங்க தெரியாம பேசுறாங்க” யமுனா சமாதானமாய் சொல்ல தையல் நாயகியோ
“உன்னை யாருடி என்னை அழைச்சிட்டுப் போவ சொன்னது? என் பேரன் ஜில்லாவுக்கே போலீஸு டி, அவன் என்னை அழைச்சிட்டுப் போவான். இருந்து இருந்து எம்ஜிஆரைத் தான் நேர்ல பார்க்க முடியல, அவர் சமாதியைப் பார்க்கலாம்னா இந்த சின்னச் சிறுக்கி விடுறாளா பாரேன் டி யமுனா? நான் என்னத்த பார்த்தேன் இத்தன வயசுல” என்று புலம்ப
“ம்மா, இன்னிக்கு அவ காலேஜ்ல அட்மிஷன் போடனும். அதை முடிச்சிட்டு உன்னை எம்ஜிஆர் சமாதி பார்க்க அழைச்சிட்டுப் போறேன் நான், அழாம இரு” என்று அம்மாவை சமாதானம் செய்தார்.
“ஓகேம்மா” என்று சோர்வுடன் அம்மாவைப் பார்க்க, அவரின் பின்னால் நின்றிருந்தாள் கல்கி.
“நானாவும் உங்க கூட வராரா?” என்றான்.
“ம்ம், ஆமாடா” என்றதும்
“போகும்போது கார்ல டேங்க் ஃபுல் பண்ணிக்கோங்க, பார்த்து போய்ட்டு வாங்க” என்றவன் டிஷர்ட் ட்ராக்ஸுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.
“அம்மாவுக்கு டீவி போட்டு விட்டிருக்கேன் ப்ரசாத், காது கொஞ்சம் அம்மமாவுக்குக் கேட்காது, எதாவது பேசினாலும் கண்டுக்காத, பத்திரமா பார்த்துக்கோ கண்ணா” என்று யமுனா அம்மாவைப் பற்றி அறிந்தவராகச் சொல்ல
“ம்மா, அம்மம்மா இஸ் ஸ்வீட். இதெல்லாம் ஒரு கஷ்டமா நான் பார்த்துக்கிறேன்” என்று வழியனுப்பி வைத்தான்.
அங்கு கல்லூரிக்கு இவர்கள் போகும் முன்பே ஜெகதீஷ் வந்து காத்திருந்தான். அவனுக்குக் கல்கியைக் காணப்போகும் உற்சாகத்தில் இரவெல்லாம் உறக்கமில்லை. இனி நினைத்த நேரம் அவளைக் காணலாம் என்று காதல் மனம் காற்றில் ஆடியது.
“அத்த, ஜெகதீஷ் மாமா” என்று சொல்லி கல்கி அவனிடம் போக
“மாமா பையா, என்னடா எனக்கு முன்னாடியே வந்துட்ட” உற்சாகமாய்க் கேட்டாள். அவளைப் பார்த்த ஜெகதீஷ்
“பின்ன உன்னை விட உன் மேல எனக்குத்தான் அக்கறை, அதான் வந்தேன். உன்னை நான் பார்த்துக்க மாட்டேனா? நீ ஏன் இவங்களை அழைச்சிட்டு வந்த?” என்று கல்கியிடம் சண்டையிட்டான். அவளுடன் தனியாக ஒரு நாளைக் கழிக்கலாம் என்று நினைத்து வந்தால் பெரியவர்களுடன் வந்து நிற்பவளைப் பார்த்துக் கோபம்தான் வந்தது ஜெகதீஷுக்கு.
“ஷ், கத்தாத! அத்தை மாமா சொல்லித்தான் எங்கப்பா என்னை அனுப்பி வைச்சிருக்கார், பாவம் அவங்களே நைட்டெல்லாம் சரியாய் தூங்காம எனக்காக வந்திருக்காங்க, அவங்களைப் பேசுவியா நீ?” என்று அவனிடம் இவள் சண்டையிடுவது போல் பேச
“ஓஹ், அவங்களுக்காக என்னைப் பேசுவியா? அவங்க செஞ்சதை எல்லாம் மறந்துட்டீங்க, உனக்காக ஃப்ர்ஸ்ட் பேசினது நான், அதை மறக்காத கல்கி” என்றான் காட்டமாக.
“சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத, அத்தை எனக்காக சாப்பிடாம எல்லாம் இருந்தாங்க, நான் சொன்னேன் தானே? இப்போ நல்லது செஞ்சா பாராட்டனும். முதல் நாளே என்னோட சண்டை போடுவியா அந்த சிங்காரம் அப்படின்னா நீயும் மாறிட்ட டா” என்று ஜெகதீஷிடம் கல்கி காய சிரஞ்சீவியைப் பற்றிய பேச்சு என்றதும்
“என்னாச்சு?” என்றான் ஆர்வத்தை மறைக்கும் குரலில். இவள் நடந்தவற்றை சுருக்கமாய் சொல்ல
“ஓஹ், அவருக்கு அப்படிச் சொன்னா பிடிக்கலையா இருக்கும்” என்றான்.
“பிடிக்கலைன்னா எங்கிட்ட சொல்லனும், என்னைக் கிண்டல் செய்யனும். குழந்தை மாதிரி அத்தை கிட்ட போய் சொல்றார். உன்னையெல்லாம் எப்படி கலாய்ப்பேன் நான்? அந்தாள் எஸ்பின்னா எனக்கென்ன? சிடுமூஞ்சி, சிடுமூஞ்சி. அவன்ட்ட பேச்சே வைச்சக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ நீயும் அவரை மாதிரி செய்ற” என்ற கல்கியின் பேச்சைக் கேட்டவனுக்கு உள்ளுக்குள் குளிர்மழை.
கல்கி கல்லூரியில் எல்லா வேலையும் முடிந்து வர, ஜெகதீஷ் அதன்பின் வேலை இருக்கிறது என்று கிளம்ப, சூர்யாவும் யமுனாவும் அவனை வீட்டிற்கு அழைத்தனர். இன்னொரு நாள் வருவதாக சொல்லி அவன் கிளம்பிவிட எல்லாருக்கும் ஹோட்டலில் உணவினை வாங்கிக் கொண்டார்கள்.
கல்கிக்கு வாழ்க்கையில் அன்று மிக மிக முக்கியமானதொரு நாள். கிடைக்குமா கிடைக்காத கிடைத்திட வேண்டுமே என்று பலவாறான எண்ணங்களுக்கு இடையே வண்ணமாய் மாறிய நாள்.
“ரொம்ப ரொம்ப ஹாப்பி, தேங்க்ஸ் மாமா” என்றாள் உளமாற. கல்கிக்கு சூர்யாவின் மீது எப்போதும் வருத்தங்கள் இருந்தது கிடையாது, அவரும் தன்னிடம் தன்மையாய்ப் பேச இவளும் தன்மையாகவே நடந்தாள்.
“எனக்கெதுக்கு தேங்க்ஸ்?” என்று அவர் கேட்க
“இல்லை, அத்தை எனக்காக வந்தாங்க. நீங்க உங்க வேலையை எல்லாம் விட்டுட்டு எனக்காக காலேஜ் வந்தீங்க இல்லையா, அதான்” என்று கல்கி விளக்க
“யமுனாவுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என்று சூர்யா சொல்ல யமுனா அவரைப் பார்த்து புன்னகை செய்ய கல்கிக்கு அவர்களிடையே நிலவிய அன்பு புரிந்தது.
வீட்டிற்கு வந்து மதிய உணவு எல்லாரும் சேர்ந்து உண்டு முடித்தனர். உணவின் போதே சூர்யாவுக்குப் போன், பேசி முடித்து
“யமுனா, நான் விஜயவாடா போகனும். அர்ஜெண்ட்” என்றவர் மகனிடம்
“ஃப்ளைட் புக் செய் சிரூ” என்றார்.
“கல்கி நீ இங்க சமாளிப்பியா?” என்று யமுனா கல்கியிடம் கேட்பதைப் பார்த்த சூர்யா,
“யமுனா, நீ இருந்துட்டு வா. நான் கிளம்புறேன்” என்றார்.
“இல்லை, எனக்கும் காலேஜ் இருக்கு சூர்யா. கல்கி அத்தை கிளம்பவா? சமையலுக்கு ஆள் இருக்காங்க, உனக்கு என்ன வேணுமோ செஞ்சுக் கொடுப்பாங்க, அத்தை இந்த வீக்கெண்ட் வரேன்”
“ஓகே அத்த” கல்கி அவர்கள் நிலையுணர்ந்து உடனே சரியென்றாள்.
“என்ன யமுனா நீ? பாப்பா பாவம் எப்படி சமாளிக்கும்? காலேஜ்ல லீவ் சொல்லிக்கலாம்” என்றார். கல்கி சின்னப்பெண், பெற்றோரும் உடனில்லை, புது ஊர் என்று சூர்யா கல்கிக்காக யோசிக்க,
“இல்லைங்க, ஏற்கனவே நிறைய லீவ் எடுத்தாச்சு, காலேஜ் ஓபன் பண்ணிட்டாங்களே அங்க” என்று யோசனையுடன் கல்கியின் முகம் பார்த்தார் யமுனா.
இதையெல்லாம் பார்த்திருந்த சிரஞ்சீவி “ம்மா, நீங்க கிளம்புங்க. உங்களுக்கும் டிக்கெட் புக் பண்ணிட்டேன். நான் பார்த்துக்கிறேன் இந்த பாப்பாவை” என்றான் அழுத்தமாக.
‘இவனுக்கு நான் பாப்பாவா?’ என்று கல்கி அவனை முறைக்க, அவன் பார்வை அவளிடம் இல்லை.
சூர்யாவும் யமுனா மகனிடம் கல்கியையும் தையல் நாயகியையும் பார்த்துக்கொள்ள பல முறை சொல்லி, அவனின் பிபியை ஏற்றியபின் கிளம்பினார்கள்.
அவர்களை கேப் புக் செய்து ஏர்ப்போர்ட்டிற்கு அனுப்பியவன் கல்கியிடம்
“உன் போன் நம்பர் கொடு கல்கி” என்று சொல்லி அவளுடையதைக் கேட்டவன் இவனின் எண்ணிலிருந்து அழைப்பு விடுத்து
“என் நம்பர் சேவ் பண்ணிக்கோ, இப்போ எனக்கு டியுட்டி இருக்கு. நான் கிளம்பனும். நைட்டுக்கு என்ன சாப்பிட வேணும் சொல்லு, நான் ஆர்டர் செய்றேன். ஒரு கால் பண்ணி சொல்லிடு” என்று சொல்லியவன் யுனிஃபார்மிற்கு மாறி வந்தான்.
அவனை முதன்முறையாய் யுனிஃபார்மில் பார்த்தவளுக்கு அவனின் அந்த தோற்றம் பிடித்துப் போனது. அவனிடம் சொல்லலாம் என்று எண்ணம் தோன்ற, அதை அப்படியே தடுத்துவிட்டாள்.
இவன் கிண்டலுக்கே அத்தையிடம் சொன்னவன் என்பதால் அடக்கிவாசித்தாள். இவனிடம் கொஞ்சமும் உரிமை எடுக்கக் கூடாது என்று மனதிற்கு சொல்லிவைத்தவளுக்கு அப்போது தெரியாது அவனிடம் உரிமையென்ன அவனின் உயிரையும் சேர்த்து எடுக்கப் போகிறோம் என்று.
தையலுக்கு இருந்த தயக்கம் தையல் நாயகிக்கு இல்லை. பேரனைக் காவல் சீருடையில் பார்த்தவர்
“அப்படியே காக்கி சட்டையில தங்கப்பதக்கம் சிவாசி மாதிரி இருக்கய்யா” என்று சொல்லிவிட கல்கிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவனுக்குமே அவரின் உவமைக் கண்டு சிரிப்பு வர முயன்று அடக்கியவன் சிரித்த கல்கியைக் கண்களால் மிரட்டினான். அவள் கண்டுகொள்ளாமல் சிரிக்க
“போய்ட்டு வரேன் அம்மம்மா, பார்த்து இருங்க. கல்கி தேவையில்லாம டோர் ஓபன் செய்யாத. ஹோல் வழியா பார்த்துட்டு ஓபன் பண்ணு” என்று சொல்லிவிட்டு போனான். அவன் சொன்னது போலவே ஏழு மணி போல் அழைத்து இட்லியும் தோசையும் வேண்டும் என்று சொல்ல, ஸ்வீக்கியில் எட்டு மணிக்கு உணவு வரவும் கதவைத் திறந்தாள்.
சிரஞ்சீவியும் ஒன்பது மணிக்கு எல்லாம் வந்துவிட அவன் வரும்போது பேத்தியும் பாட்டியும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த சத்தம் கதவு தாண்டியும் கேட்க, இவர்களை என்று பல்லைக் கடித்தபடி காலிங் பெல்லை அழுத்தினான்.