அன்றோடு யோகேஷுடனான நட்பிற்கு பெரும் முற்றுப்புள்ளியை வைத்துவிட்டான் விஷ்வா.
மற்ற நண்பர்களிடமும் பாராமுகம் காட்ட அவர்களுக்கு அவனை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியவில்லை.
“டேய் உன்கிட்ட சொல்லனும்னா யோகேஷ் விடமாட்டேன்றான். உனக்கு தெரிஞ்சா இப்படி எதாச்சும் நடக்கும்ன்னு தான் சொல்லாம இருந்தோம். அவனும் நம்ம ப்ரென்ட் தானேடா?…” பிரகாஷ் சொல்ல,
“உங்க ப்ரென்ட்…” என்று கத்தரிப்பதை போல பேசிய விஷ்வா,
“கேட்ட தானே அந்த பொண்ணு சொன்னதை. உங்க ப்ரென்ட் மாதிரி தான நீங்களும் யோசிப்பீங்கன்னு. இவன் நமக்கு வாங்கி தந்த பேர். ரொம்ப நல்லா இருக்குல. ஆனா எனக்கு அது வேண்டாம்…”
விஷ்வா மொத்தமாய் விலகிக்கொள்ள பயந்து அவனிடம் வருத்தம் தெரிவித்து சமாதானம் செய்தார்கள் மற்ற நண்பர்கள்.
“நீங்க அவன் கூட பேசுங்க பேசாம இருங்க. டோன்ட் கேர். ஆனா என்கிட்டே அவனை பேசவும் வேண்டாம். செஞ்சதை நியாயப்படுத்தவும் வேண்டாம். இருக்கற வரை ஒழுக்கமா இருந்துட்டு போகனும் நான்…” என்று கடுமையாக எச்சரித்துவிட அவன் போக்கில் தான் செல்லவேண்டியதானது.
அதன்பின்னர் யோகேஷ் என்ற ஒருவனை விஷ்வா மறந்தே போயிருந்தான். யோகேஷே பேச முயன்றாலும் விஷ்வா இடமளிக்கவில்லை.
விஷயம் கல்லூரி முழுவதும் ஏதோ பிரச்சனை இருவருக்குள்ளும், விஷ்வா பேசுவதில்லை என்பதை போல மட்டுமே தெரிந்திருக்க வர்ஷினிக்கும் தெரியவந்தது.
‘அவ்வளோ பெரிய ரோஷக்காரனா நீ?’ என வெகு சாதாரணமாக தான் அப்போது அதனை நினைத்தாள்.
பிருந்தாவும் ஒருமுறை வர்ஷினியை பார்க்கையில் பேச இதை பற்றி கூறினாள் அவளிடம்.
“அந்த இன்சிடன்ட்க்கு அப்பறம் யோகேஷ் கூட விஷ்வா பேசறதே இல்ல…” என கூற,
“ஆனாலும் சீனியருக்கு ரொம்ப கோவம் தான். இத்தனை வருஷம் பழகி அவங்களை பத்தி தெரியலைன்னா நல்ல ப்ரெண்ட்ஸ்…” என வர்ஷினி நக்கலாக சொல்ல,
“ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி. அவனையே நீ எதிர்த்து அவ்வளோ பேசற?…” பிருந்தாவிற்கு அத்தனை சிரிப்பு.
குட்டியாய், ஒல்லியாய் இன்னும் பள்ளி களை தாண்டாத ஒரு முகம் வர்ஷினியிடம் இருக்க பிருந்தாவிற்கு அத்தனை பிடித்தது.
இளங்கன்று பயமறியாது என்பதற்கு வர்ஷினி அப்படி ஒரு சான்றாக அத்தனை துடுக்குத்தனம்.
“எனக்கென்ன பயம்? பயந்தா வேலைக்காகுமா? இல்லைன்னா அந்த யோகேஷ் மாதிரி ஆளுங்க தான வாழ்வானுங்க…” என்று அலட்சியமாக சொல்ல,
“அக்கா நீங்களும் பார்த்து இருங்க. அவங்களுக்கு பயங்கரமா கோவம் வருது…” என வர்ஷினி எச்சரிக்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. விஷ்வா காரணமில்லாம கோவப்பட மாட்டான்…” என்று பிருந்தா சொல்லி சென்றவள் அதன் பின் கடைசியாய் கல்லூரியில் அவர்கள் பேர்வல் பார்ட்டியின் போது தான் பார்த்தது.
“இவங்க ஏன் பார்த்து முறைக்கறாங்க? இதுக்கு கவனிக்காம போயிருக்கலாம்ல. கோவமா இருக்காங்களாம்…” என பிருந்தாவிடமே நக்கல் செய்திருக்க அதை கேட்டு கொதித்து போனான் விஷ்வா.
“எவ்வளோ பேசற நீ? உன்னை எல்லாம்…” என்று பல்லை கடித்தவன்,
“உன்னை மாதிரி ஒருத்தியை நான் என் லைஃப்ல பார்த்ததே இல்லை. இனி பார்க்கவே கூடாது. எப்பவும் என் கண்ணுல பட்டுடாத…” என்று அத்தனை கோபத்துடன் அவன் சொல்ல,
“சொல்லுங்க பிருந்தாக்கா எனக்கு அதுக்கு அவசியமில்லைன்னு. இவரை நான் ஏன் தேடி பார்க்க போறேன்? என்னை சீண்டற வேலை வச்சுக்க வேண்டாம். போக சொல்லுங்க…” என்று கடைசி சந்திப்பும் முட்டலில் தான் முடிந்தது.
அதன் பின்னர் இருவரும் சந்தித்ததென்னவோ அவர்களின் திருமணத்தில் தான். எதிர்பாராத சந்திப்பும், பெரியோர்களால் பிணைக்கப்பட்ட உறவும்.
இப்போது நினைத்தாலும் விஷ்வாவிற்கு ஆச்சர்யமாக இருக்கும். எத்தனை கோபத்தில் இருந்து இப்போது இந்தளவு இவளிடம் மயங்கி இருக்கிறோமா என்று.
அவனின் நாட்கள் எல்லாம் அங்கேயே அப்படியே தான் கழிந்தது. அவர்களின் ஆரம்பகால பயணங்களில் இருந்து தற்போதைய நிகழ்கால வாழ்க்கை என்று சுழன்றான்.
வர்ஷினிக்கு இது ஐந்தாம் மாதம் ஆரம்பம். அருணாவும் வந்து ஒருமாதம் இருந்து பார்த்துக்கொண்டு தான் கிளம்பினார்.
வர்ஷினி என்னதான் தெளிவாக இருந்தாலும் முகத்தில் ஒரு களையும் இல்லை. பெயருக்கு சிரித்து வளைய வந்தாள்.
அவளை வேலைக்கு அனுப்பவே துர்காவுக்கு விருப்பமில்லை. மகன் பேசும் பொழுது சொல்லியும்விட்டார்.
“வீட்டுல இருந்து பார்க்கிற மாதிரி கேளு விஷ்வா…”
“ம்மீ, அவ ஆபீஸ் போறதால தான் கொஞ்சமாச்சும் தெளிவா இருக்கா. வீட்டுலையே இருந்தா சுத்தம். அவளை யாராலும் மேனேஜ் பண்ணிக்கவே முடியாது….” என மறுத்துவிட்டான்.
தன்னை நினைத்து இத்தனை தூரம் அவள் தவிக்க அதுவே பெருந்தவிப்பாய் அவனுக்குள் இறங்கியது.
உண்மையில் இத்தனைநாள் அவன் நினைத்திருந்ததோ வேறு. இப்போது தானிருக்கும் நிலை வார்த்தைகளால் அவளிடம் சொல்ல முடியாதளவிற்கு தான் இருந்தான்.
‘என்னோடது மெண்டலி அன்ட் ப்ராக்டிக்கல் பாண்டிங். அதுக்கும் மேல என் வொய்ப் அப்டின்ற அட்டாச்மென்ட்.’ என நினைத்தவன் வர்ஷினியையும் யோசிக்காமல் இல்லை.
‘அவளோடது முழுக்க முழுக்க எமோஷனல் பாண்டிங். அப்படித்தான் யோசிப்பா’ என அவனாகவே உருவகம் கொடுத்திருந்தான் ஆரம்பத்தில் இருவரின் ஊடலில்.
இப்போது யோசிக்கையில் கிட்டத்தட்ட அந்த நிலைக்கு தானுமே வந்துவிட்டதாக தான் உணர்ந்தான்.
கிஷோரின் திருமணத்திற்கு செல்ல முடியாததில் இருந்து மனைவியின் கோப முகம் அவனை சில நேரம் எரிச்சலூட்டவும், சில நேரம் கவலை கொள்ளவும் செய்யும்.
இப்போது ஐந்தாம் மாதம். முகத்தை தவிர அவளை முழுதாய் பார்க்க முடியவில்லை விஷ்வாவால்.
“எழுந்து தள்ளி நில்லு வர்ஷி, உன்னை முழுசா பார்க்கனும்…” என எத்தனையோ முறை கெஞ்சிவிட்டான்.
எதற்கும் அசைந்துகொடுத்தாள் இல்லை அவள். கோபம், கோபம் அத்தனை கோபம்.
“உங்களுக்கு என்னை தேடவே இல்லை…” என அவன் கோபப்படும் நேரமெல்லாம் விசும்ப ஆரம்பிக்க அதற்குமே விஷ்வாவிற்கு வழியில்லாது போனது.
அதோ இதொவென்று நாட்கள் உருள அன்று கிளம்பிவிட்டான். யாரிடமும் சொல்லவில்லை.
புவனிடமும் வர்ஷினியிடம் எதையும் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தவன் கிளம்பிவிட்டான்.
நேரில் பார்க்கையில் தன்னிடம் எப்படி வருவாள்? சண்டையா? அடிப்பாளோ? அழுவாளோ? அணைப்பாளோ? என்று அவனே விதவிதமாய் மனதிற்கு நினைத்து பார்க்க நினைவுகள் அவனுக்கு இனிமை சேர்த்த அளவிற்கு அவஸ்தையையும் தந்தது.
அதிகாலை நேரம் வீடு அவனது சேர்ந்தவன் காலிங் பெல்லை அழுத்த துர்கா தான யார் என கேட்டுவிட்டு கதவை திறந்தார்.
“என்ன விஷ்வா திடீர்ன்னு சொல்லாம வந்து நிக்கிற?…” அதிர்ச்சியில், சந்தோஷத்தில் இப்படித்தான் கேட்க வந்தது அவருக்கு.
“அப்ப சொல்லிட்டு நாலு நாள் கழிச்சு வரட்டுமான்னு கேட்டுட்டு வரவா?…” என்றான் நக்கலாக.
கேட்கும் பொழுதே வர்ஷினியை அவன் தேட அவள் எழுந்து வருவதை போல தெரியவில்லை.
நேராக பெட்டிகளுடன் அறைக்குள் நுழைய அங்கே அவர்கள் படுக்கை வெறுமையாக இருந்தது.
“வர்ஷி எங்க ம்மீ? உங்க ரூம்லையா?…” என கேட்க வைஷூவும் எழுந்து வந்துவிட்டாள்.
“ஹாய் ண்ணா, சர்ப்ரைஸ்…” என்று சந்தோஷமாய் பார்த்தவளுக்கு அவன் கையசைத்து புன்னகைத்தான்.
“ஹாய் டா. நீ போய் தூங்கு…” என்று கையை காண்பிக்க அதில் மோதிரம் மின்னியது.
“ண்ணா, எப்போ ரிங் போட்டீங்க? சொல்லவே இல்லை?…” என்று வைஷூ உறக்கம் முற்றிலும் கலைந்து வந்து அவனின் கையை பார்த்து கேட்க,
“ஏற்கனவே ஏதோ ஆனா மாதிரி தான் பேசறீங்க? எங்கனாலும் போன்ல பேசறதுக்கு எங்க இருந்தா என்ன?…” என்றாள் கடுப்புடன்.
“வர்ஷி…” என்றவன்,
“கிளம்பி வான்றேன்ல…” என்றவனின் பேச்சை அவள் கவனிக்கவே இல்லை.
“நேரம் பாருங்க அஞ்சரை தான் ஆகுது. இந்த நேரத்துல வரமுடியாது…”
“என்ன சொன்ன?…”
“வர முடியாதுன்னு சொன்னேன்? என்ன? அப்படியே அங்க நான் வரவும் நீங்க பறந்து வர மாதிரி தான். ஏன் இப்படி காலாங்காத்தால கலாட்டா பன்றீங்க?…” என்றாள் எரிச்சலாக.
பாதி நேரம் இவள் அவனை படுத்தினால், மீதி நேரம் அவன் இவளை ஒருவழி செய்துவிடுவான்.
இப்படியே நாட்கள் சென்றிருக்க இன்றும் அப்படி அவன் பேசிவைக்க தன்னை தேடுகிறான் என்பதை அதிலேயே கண்டுகொள்வாள்.
‘நல்லா தேடட்டும். அப்பத்தான் கொஞ்சமாவது புத்தி வரும். சொன்னா கேட்டா தானே?’ என அவன் தேடலில் மகிழ்ந்து பின் தவிப்பில் கடைசியாய் இவளுமே கரைவாள்.
“அப்ப அங்கயே இருந்துக்கோ போடி….” என்றவன் அழைப்பை துண்டித்துவிட மீண்டும் வீடியோவில் அழைத்தவள்,
“அதை நீங்க சொல்ல கூடாது. சும்மா வம்பு பண்ணிட்டு. எல்லாம் பேசிட்டு உங்க இஷ்டமா?…” என்று இவள் கத்த அவனிடம் பேச்சில்லை.
அமைதியாக விஷ்வா பார்த்தபடியே இருக்கவும் தான் மட்டும் பேசிக்கொண்டிருக்க சற்றே நிதானமானாள்.
அவனின் பார்வையும் அமைதியும் முதலில் கவனத்தில் பதிய அதன் பின்னர் தான் அவன் இருக்கும் இடம் அவளுக்கு மூளையில் உரைத்தது.
“விஷ்வா…” என்று கண்ணீருடன் அழைக்க,
“வா வர்ஷி. பார்க்கனும்டி…” என்றான் தன் நெஞ்சை நீவியபடி ஆற்றாமையுடன்.
கண்ணை துடைத்தவள் அப்போது சித்தியை எப்படி விட்டு செல்வதென்று யோசித்து பார்க்க சுத்தமாய் எதுவும் தோன்றவில்லை.
அவை எல்லாம் கோபமாய் மாற கடுப்போடு அவனை முறைத்தவளின் முகம் எரிச்சலில் சிவந்தது.
“உன்னை கட்டிக்கிட்டு நான் என்னலாம் படறேன் பாரு. சொல்லிட்டு வரமாட்டியா நீ? என்ன மனுஷன்? எப்பவும் ஏட்டிக்கு போட்டியாத்தான் எதையாச்சும் செய்யறது? இப்ப நான் எப்படி வருவேன்? வர முடியாது போ போ…” என்று கத்திவிட்டு போனை வைத்துவிட்டாள்.
அத்தனை கோபம். இதையும் தன்னிடம் சொல்லவில்லை. சொல்லாமல் வந்து நின்று வா வா என்றால்?
செல்லும் நிலையில் அவளும் இல்லையே? உறங்காமல் போனை வைத்தபடி அமர்ந்திருந்தாள்.
விஷ்வாவிற்கும் இப்போது அங்கே சென்று அவளை அழைத்துவர தோன்றவில்லை. வரட்டும் என்று இருந்துவிட்டான்.