நட்சத்திராவை அங்கு பார்த்த விஜய்க்கு அப்பட்டமான அதிர்ச்சி. நெஞ்சில் கை வைத்தவன், “இன்னும் என்னவெல்லாம் அதிர்ச்சி வச்சிருக்கடா.. திங்க்ஸ் இருக்குன்னயே இவ்ளோ பெரிய திங்க்ஸா இருக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை” என்றான்.
சூர்யா வாயை திறந்து பேசும் முன் நட்சத்திரா விஜய்யை பார்த்து, “விஜய் அண்ணா எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க?” என்று துள்ளிக் குதித்தாள்.
சூர்யாவிடம், “மாமா அண்ணனுக்கு குடிக்க டீ காப்பி ஏதாவது குடித்தீர்களா?” என்றாள்.
சூர்யா பதில் சொல்லாமல் முழிக்க நட்சத்திரா, “என்ன மாமா முழிக்கிற?” என்றாள். சூர்யா, “ஏய் குட்டச்சி் நீ இங்கு வந்த விஷயத்தை இன்னும் அவனுக்கு சொல்லலடி” என்றான்.
நட்சத்திராவிற்கு அப்போதுதான் தானும் சொல்ல மறந்தது ஞாபகம் வந்தது. விஜய் இருவரையும் முறைக்க சூர்யாவும் நட்சத்திராவும் ஈஈஈ என இளித்துக் கொண்டு நின்றனர்.
விஜய், “சிரிக்காதீங்க. எனக்கு கோபம் வருது. இன்னும் வேற எண்ணத்தை எல்லாம் மறச்சு வச்சு இருக்கீங்க…”என்றான்.
இருவரும், கோரசாக வேற ஒன்றுமே இல்லை! என்றனர். விஜய், “இல்லையே நீங்க சொல்ற மாடுலேஷன் சரி இல்லையே…”
நட்சு, “விஜய் அண்ணா என்னை நம்ப மாட்டிங்களா?”
விஜய், “நீ பேசாத காலேஜ் படிக்கிறப்ப டெய்லி போன் பண்ணி மாமா என்ன பண்றாரு..? என்ன சாப்பிட்டாரா…. என்று என் உயிரை போட்டு வாங்குவ. இப்போ ஆஸ்திரேலியா வரைக்கும் வந்துட்டு ஒரு வார்த்தை கூட சொல்லல என்றவன், சூர்யாவிடம் ஃபோன் பேசறப்ப எல்லாம் என்னடா சத்தம்னு கேட்டா பூனை உருட்டுது ஆணை உருட்டுதுனு சொல்லுவ. அந்தப் பூனை இது தானா…” என்றான்.
சூர்யா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆமாம் என தலையாட்டினான். விஜய் வாயைத்திறந்து அவனைத் திட்ட வர காலிங் பெல் சத்தம் கேட்டது. விஜய் சூர்யாவிடம், “போய் யாருனு பாரு….” என்றான்.
சூர்யா தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிச்சென்று கதவை திறந்தான். வெளியே ஹரிஷ் நின்றிருந்தான். ஹரிஷை பார்த்த சூர்யா ‘அய்யோ! இவன் வேற வந்து விட்டான். அவன் பங்குக்கு என்ன உளறி வைக்க போறானோ! இன்னைக்கு நாளே சரியில்லை’ என மனதிற்குள் நினைத்தவன் ஹிஹிஹி என இளித்து, “வாடா மச்சான்…” என வரவேற்றான்.
விஜயிடம், “மச்சான் இதுதான் ஹரிஷ். நான் சொன்னேன்ல என்றவன், ஹரிஷிடம் இது என் பிரண்ட் விஜய்” என்று அறிமுகப்படுத்தினான்.
இருவரும் கைகுலுக்கி கொண்டனர். சூர்யா,” நீங்க பேசிட்டு இருங்க நான் போய் காபி எடுத்துட்டு வரேன்” என்றான்…….
நட்சத்திரா, “நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று எஸ்கேப் ஆகி விட்டாள். சூர்யா காபி போட்டுக் கொண்டு வர மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். விஜய் ஹரிஷிடம், “இவங்க லவ்வ சேர்த்து வைக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்குதான் தெரியும். ஆனால் இதுங்க இங்க சேர்ந்து இருக்கிறதை என்கிட்டயே மறைச்சிட்டாங்க” என்றான்.
ஹரிஷ், “எனக்கும் இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும். ஒரு வருஷமா என்கிட்ட சொல்லவே இல்லை. தங்கச்சி வந்தப்புறம் தான் இவங்க காதலிச்சது கல்யாணம் பண்ணது எல்லாம் தெரியும்” என்றான்.
கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டதும் விஜயின் தலையில் அடுத்த இடி இறங்கியது. சரியாக அதே சமயம் குளித்து முடித்து வந்த நட்சத்திரா காதிலும் விழுந்தது. சூர்யா இன்னைக்கு எனக்கு சமாதிதான் போல என நினைத்துக்கொண்டான். விஜய் அதிர்ச்சி விலகாமல் இருவரையும் பார்க்க இருவரும் மீண்டும் திருட்டு முழி முழித்தனர். சிறிது நேரம் பேசிவிட்டு ஹரிஷ் விடைபெற்றான்……..
தப்பு செய்த சின்ன குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு சூர்யாவும் நட்சத்திராவும் நின்றிருந்தனர் . விஜய் ஆசிரியர் கேள்வி கேட்பது போல அவர்களை நிற்க வைத்து கேள்வி கேட்டான். விஜய், “உண்மையை சொல்லுங்க உங்க குழந்தைகளை எங்க ஒளிச்சு வச்சு இருக்கீங்க?” என்றான்.
இதைக் கேட்டதும் நட்சத்திரா,” அண்ணா! என்றாள். விஜய்,” என்ன அண்ணா? இப்ப கூட கேட்டேனே அப்பையாவது முழுசா சொன்னீங்களா?” என்றான்.
நட்சத்திரா, “அண்ணா நான் சொல்லலாம் என்றுதான் நினைச்சேன். உங்க ஃபிரண்டு தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்றாள்.
சூர்யா சொல்றது எல்லாம் சொல்லிட்டு இப்ப என்னை கோர்த்து விட்றாளே என நினைத்தவன், “மச்சான் நான் சொல்லலடா. எல்லாத்துக்கும் இவதான் காரணம்” என்றான்.
நட்சத்திரா, “இல்லை இவர் தான்…” என்றாள். இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டிருக்க, “நிறுத்துங்கள்” என கத்தினான்.
விஜய், “என்ன ரெண்டு பேரும் சண்டை போட்டு என்னை டைவர்ட் பண்றீங்களா?” என்றான்.
நட்சத்திரா, ‘ஐயையோ! கண்டுபிடித்துவிட்டாரே’ என நினைத்தாள். சூர்யா அட இது கூட நல்லா இருக்கே என நினைத்தான்.
விஜய், “ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்றான். சூர்யா நடந்தவற்றை கூறினான். விஜய் இதைக் கேட்டு வாயில் விரல் வைத்து விட்டான். இருவரும் கெஞ்சி கொஞ்சி விஜய்யை சமாதானம் செய்து விட்டனர்.
விஜய், “சரி சரி… ரெண்டு பேரும் ரொம்ப கெஞ்சாதீங்க. உங்களை மன்னித்து விட்டேன் இனிமேல் இது மாதிரி செய்யாதீர்கள்” என்றான்.
நட்சத்திரா அவன் சமாதானமாகி விட்ட சந்தோஷத்தில், “அண்ணா இன்னிக்கு உங்களுக்கு சூப்பரா சமைச்சு போடுவேன்” என்று கிச்சனுக்கு ஓடினாள்.
விஜய், “ஏன்டா மச்சான் உங்களை மன்னித்ததற்கு எனக்கு இதுதான் தண்டனையா..” என்றான். சூர்யா, “ஏன்டா மச்சான்…?”
விஜய், “பின்ன என்னடா… நட்சத்திரா சமையலைப் பற்றி உனக்குத் தெரியாதா” என்றான். சூர்யா, “மச்சான் அவ இப்போ நல்லா சமைக்க ஆரம்பித்து விட்டாள். சாப்பிட்டு நீயே நல்லா இருக்குன்னு சொல்லுவ” என்றான்.
விஜய், ஏதோ பலியாடு போல தலையாட்டினான். நட்சத்திரா சமைத்து இருவருக்கும் பரிமாறினாள். விஜய் சாப்பிடாமல் சாப்பாட்டயே வெறிக்க நட்சத்திரா, “அண்ணா சாப்பிடுங்க, ஏன் சாப்பிடாம இருக்கீங்க?” என்றாள்.
சூர்யா, “நட்சத்திரா அது நீ ஃபர்ஸ்ட் டைம் சமைச்சேல்ல. அந்த டேஸ்டே இன்னும் அவனுக்கு மறக்கலையாம்” என்று கூறி சிரித்தான்.
நட்சத்திரா விஜய்யை முறைக்க விஜய் குனிந்து சாப்பிட ஆரம்பித்தான். விஜய் சாப்பாட்டை வாயில் வைத்தவுடன், “நட்சுமா சூப்பரா சமைத்திருக்கடா” என்றான்.
சூர்யா, “இதைத்தான் நான் அப்பவே சொன்னேன்” என்றான். விஜய் ஹிஹி என சிரித்துக்கொண்டு சாப்பிட்டான். பின் மூவரும் நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
சூர்யாவிற்கு வீட்டிலிருந்து வீடியோ கால் வர எடுத்துப் பேசினான். எல்லோரும் எல்லோரும் விஜயைப் பார்த்து நலம் விசாரித்தனர். ஷீலா விஜய்யிடம், “போடா உன் கூட பேசமாட்டேன். நான் உன் மேல கோபமா இருக்கேன்” என்றார்.
விஜய், “நான் என்னம்மா பண்ணேன்…?”
சூர்யா, “ஏன் மா..?” என்றான்.
ஷிலா, “உன்ன ஏர்போர்ட்ல சென்ட் ஆப் பண்ண அன்னைக்கு வீட்டுக்கு வந்தான் . அவ்வளவு தான் இன்னைக்கு வரைக்கும் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்கலை. அவன் இருந்தா தான் வீட்டுக்கு வருவியா… ஏன் எங்களை எல்லாம் பார்த்தா ஆளா தெரியலையா?” என்றார்.
இந்தக் கேள்விக்கு விஜயிடம் பதில் இல்லை சூர்யா, “ஏன்டா வீட்டுக்கு போகல…” என்றான்.
விஜய், “அம்மா கொஞ்சம் ஒர்க் இருந்துச்சு அதான் வரமுடியலை என்றான். இந்தியாவுக்கு வந்ததும் கண்டிப்பா வரேன்” என்று சமாதானப்படுத்தினான்.
நட்சத்திராவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். ஷீலா நட்சத்திராவைப் பார்த்து விட்டு, “நட்சுமா நீ எப்போ வந்த..?” என்றார்.
நட்த்திரா பதில் கூறுமுன் விஜய் முந்திக்கொண்டு,” எங்க வர்றது… அவ இங்கதான் இருக்கா” என்றான்.
இதைக் கேட்ட மற்றவர்கள் அதிர்ச்சியாக பார்க்க நட்சத்திரா, “அத்தை, விஜய் அண்ணா வந்திருக்காங்கன்னு மாமா சொன்னாங்க. அதான் பார்க்க வந்தேன்.”
அவர், “இல்லையே! அவன் இங்க தான் இருக்கின்ற மாதிரி சொன்னான்” என்றார்.
விஜய் ஏதோ சொல்ல வர அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளிய சூர்யா, “அம்மா அது இவ இங்க ஆஸ்திரேலியாவில் தான இருக்கா. அதை சொன்னான்” என்றான்.
போன் பேசி முடித்தவுடன் விஜய் சூர்யாவிடம், “ஏன்டா என் தொடையில கிள்ளுன?” என்றான்.
சூர்யா, “டேய்! அவ என்கூட தங்கியிருக்கிறது அவங்களுக்கு தெரியாதுடா” என்றான்.
விஜய், “எனக்கு எப்படி தெரியும்? நீங்க இன்னும் என்னென்ன பொய் சொல்லி வச்சிருக்கேன்கன்னு” என்றான்.
இருவரும் அவனை முறைக்க விஜய், “சரி சரி நான் பண்ணதுக்கும் நீங்க பண்ணதுக்கும் சரியாப் போச்சு” என்றான்.
இப்படியே அந்த நாள் கலகலப்பாக சென்றது. மூவரும் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மார்க்கெட் போன்ற பல இடங்களை சுற்றி பார்த்தனர். பின் நட்சத்திராவும் சூர்யாவும் ஏர்போர்ட் சென்று விஜயை வழியனுப்பி வைத்தனர்.