அவன் அவளைக் கண்டு கொள்ளாது சென்று விட ,அவன் பின்னேயே சென்றவள் ,
“மிஸ்டர்….சத்யா……” என அவன் அருகில் போய் அழைக்க ,
அவளது ஸ்கூட்டி அருகில் தான் அவன் வண்டியும் நின்றது.
“எஸ்…” என்று அவன் இவளை நோக்க
“சாரி…” என்றாள் நிமிர்வாக ,
தவறு செய்தால் அதை ஒத்துக்கொள்வது சிறப்பு….அதைத் திருத்திக் கொள்வது மிகச்சிறப்பு.
“எதுக்கு…?”
“இல்ல….உங்களுக்கு எதிரா நான் தான் ஆஜரானேன்…அதான்..கோர்ட்ல உங்கள…கண்டபடி பேசினேன்…க்ராஸ் கொஸ்டின்லாம் கேட்டேன்….பட்…செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை அனுபவிக்க வேண்டியதாப் போச்சு….அதான் சாரி மிஸ்டர்.சத்யா”
“ப்ச்…என்ன நீங்க இதுக்குப் போய்….அப்படி பார்த்தா போலிஸ்எல்லாம் கூடத் தான் என்னை உள்ளே தள்ளி அடிச்சாங்க….ஜட்ஜ் எனக்கெதிரா தீர்ப்பு சொன்னாரு….அவங்களாம நான் நிரபராதின்னு புரூவ் பண்ணதும் மன்னிப்புக் கேட்டாங்க….நீங்க மட்டும் ஏங்க…?”
“..நாய்னா கடிக்கத்தான் செய்யும்….ஆனாலும் சிலர் அதைச் செல்லப்பிராணியா வளர்க்கல……சோ ஒவ்வொருத்தருக்கும் ஒரு இயல்பு….எத்தனை நல்ல பெண்கள் எல்லாம் இருக்காங்க,,,…ஐந்து விரலும் ஒரே மாறியா இருக்கு….அப்போ எல்லாப் பொண்ணுங்களும் வினிதா மாறியா இருப்பாங்க……ஏன்..நீங்களே இருக்கீங்க……உங்களுக்கு எங்கிட்ட மன்னிப்புக் கேட்கனும்னு என்ன அவசியம்….உங்க கேஸ் தோத்துச்சுன்னு கோவம் தான் வரனும்…ஆனாலும் உண்மை ஜெயிடுச்சுன்னு வந்து எங்கிட்ட மன்னிப்புக் கேட்குறீங்க…..உலகத்துல நல்லவங்களும் கெட்டவங்களும் இருக்கத்தான் செய்வாங்க……..” என அமைதியாகச் சொல்ல ,
அவனது பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்தது.அதை விட அவன் சூழ் நிலையைக் கையாண்ட விதம் அவளைக் கவர்ந்தது.
“சரி சத்யா சார்…டைம் ஆகுது…நைஸ் மீட்டீங்க் யூ…பை” என்றவள் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.
தாயிடம் நடந்ததையெல்லாம் சொல்ல , “அந்தப் பையன் அந்தத் தர்மன் மாதிரி போலடா….அம்மு….துரியோதனன் கண்ணுக்குக் கெட்டது மட்டும் தான் தெரிஞ்சது……..ஆனா யுதிர்ஷ்டர் கண்ணுக்கு நல்லது தான் தெரிஞ்சது…அந்த தம்பி அப்படிதான் போல…பரவாயில்ல கடவுள் கிருபையில அவர் நல்லபடியா வெளியே வந்துட்டார்…இந்த மட்டும் கடவுள் காப்பாத்துனாரே…தலைக்கு வந்தது தலைபாகையோடு போச்சு…இல்லனா பாவம் வாழ்க்கை முழுசும் ஜெயில் தான்…..காட் இஸ் கிரேட்……” என் மஞ்சரி சொல்ல
“இல்லடா…ஒரு வேளை இந்தத் தம்பி லைஃப்ல வினிதாவை விடப் பெட்டரா பெஸ்டா ஒருத்தி வருவாளோ என்னவோ…அவ இவர் பட்ட கஷ்டமெல்லாம் தீர்க்க மாறி அவர் பார்த்துக்கலாம்…..நடப்பதெல்லாம் நன்மைக்கே…” என்றவர் வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றார்.
இப்படியே ஓரிரு மாதங்கள் உருண்டோட , ஒரு நாள் ராஜேஸ்வரன் வீட்டிற்குச் சென்றவள் ,
“என்ன அச்சா…இப்ப உங்க ப்ரெண்ட் சுந்தரம் அங்கிள ப்ளாட்ல ஆளையே காணோம்…என்னாச்சு…” எனப் பேச்சு வாக்கில் கேட்க
“அவன் தான் காலி பண்ணிட்டானே டா…”
“என்ன அச்சா சொல்றீங்க..ஏன்…?”
“இல்லடா அம்மு……இங்க இருந்தா……பழைய ஞாபகம்லாம் வருதாம்…..ரொம்பவே இங்க போலிஸ்லாம் வந்து அவமானப்பட்டாங்க..சோ இந்த ப்ளாட்டை வித்துட்டு..ஒரு வாடகை வீட்டில இருங்க்காங்க……சத்யா பேர்ல சொந்தமா ஒரு இடம் இருக்கு..அங்க வீடு கட்டலாம்னு ப்ளான் பண்ணிருக்கான்..இண்டிவிஜுவல் ஹவுஸ் தான் பெஸ்ட்னு சொன்னானாம்…இங்க சும்மா அவன் மேல தப்பு இல்லனாலும் கூட அந்த விசயத்தைப் பேசி பேசி மறக்க நினைக்கறதை ஞாபகப்படுத்துறாங்கலாம்…பார்வதியும் ரொம்ப உடைஞ்சுப் போயிட்டாளாம்.”
“ஹோ……..பாவ்ம்ல அச்சா…….”
“ஆமாடா…பட் அவன் எடுத்த டிஷிஷன் ரைட்தான்…இடம் மாறிப் போறது நல்லதுதான் மோளே….”
“சை..அவர் நிரபராதின்னு கஷ்டப்பட்டுப் புரூவ் பண்ணினார்..ஆனா கூட ஒவ்வொருத்தர் கிட்டையும் போய் அவர் இன்னோசண்ட்னா சொல்ல முடியும்…ஊர் வாயை மூடவே முடியாதுலப்பா…..பாவம்..மனுசனுக்கு நிம்மதியே இல்ல..”
“அதே தான்டா அம்மு… நானும் நினைச்சேன்…..அவனுக்கு வேலையும் போயி…..திரும்ப இப்போ ஜாயின் பண்ணினாலும் அவன் பழைய ஆபிஸ்ல….அவன பத்தின பேச்சுக்கள் குறையல….சோ….அவன்…..இப்போ..அவன் காலேஜ் ப்ரெண்ட் ஒருத்தன் வேலைப் பார்க்கிற கம்பெனில ஜாயின் பண்ணிருக்கான்..அதுக்கே நிறைய ப்ரோசிஜர்டா….அவன் கோர்ட் பேப்பர்ஸ்லாம் காமிச்சு…குருவாயுரப்பா…பாவம்….சத்யா…..நல்ல பையன்…”
“இங்க இருக்கப் பிடிக்கலையாம்…அதனால் யு.எஸ் போக ட்ரை பண்ணிட்டு இருந்தான்…கடைசில நெக்ஸ்ட் வீக் போகப் போறானாம்..சுந்தர் சொன்னான்…பச்ஷே அவனுக்குமே மகன் போறதை நினைச்சுக் கஷ்டம் தான் டா…பட் சத்யாவுக்குக் கொஞ்சம் சேஞ்ச் வேணுமில்லயா….தட்ஸ் வை……புது வீடு வேற கட்டணும்…அதான்….வரதுக்கு எப்படியும் டூ ஆர் த்ரீ இயர்ஸ் ஆகும்” என்றதும் ,
“என்னது..மூணு வருஷமா……..?” என்று கத்தி விட்டாள்.
“என்னடா மோளே..எதுக்கு இவ்வளவு சத்தம்….?”
‘சத்யாவைப் பார்க்காம மூணு வருசம் எப்படி இருக்கது…’ என்ற எண்ணம் மனதில் உதிக்க , எதையும் மறைத்து பழக்கமில்லாதவள்
“இல்லப்பா……சத்யாவ மூணு வருசம் பார்க்காம…எப்படின்னு நி……னை….ச்…” என்றவளுக்குத் தன் எண்ணப்போக்கு அப்போதுதான் புரிபட…. அப்படியே வார்த்தைகள் நின்றுபோக , தந்தையை புரியாமல் ஏறிட ,
ஈஸ்வரனுக்கும் மகளின் எண்ணம் போன திசை சரியாகப் புரிந்து போனது.
“என்னம்மா இது….?”
“எனக்குச் சத்யாவைப் பிடிச்சிருக்கு அச்சா….?”
“லவ் வா டா?”
“தெரியல…..ஆனா பிடிச்சிருக்கு அச்சா….அவர் கூட லைஃப் புல்லா இருக்கனும்னு ஆசையா இருக்கு……மூணு வருசம் அவர பார்க்க முடியாதுன்னு நினைச்சா கஷ்டமா இருக்கே……..” எனப் புலம்ப
“வேண்டாம் டா அச்சா சொன்னா கேளு…அம்மேக்கு இது சுத்தமா பிடிக்காது..ஹி இஸ் ஆல்ரெடி மேரீட் மா….”
“ப்ளீஸ் அச்சா…எனக்கே ஒன்னும் க்ளியரா புரியல..மைட் பீ இது அட்ராக்ஷனா…அவரோட கேரக்டர் பார்த்து எனக்கு வந்த அட்மிரேஷனா இருக்கலாம்…..சோ…விட்டுடுங்க….ஐ ஹேவ் டூ திங்….” என்றவள் அவளது வீட்டிற்குக் கிளம்பி சென்றாள்.
ஆனால் என்னதான் அவள் வெறும் ஈர்ப்பாக இருக்கலாம் என்று கூறினாலும் ராஜேஸ்வரனின் மனதுக்கு அது ஒப்பவில்லை.ஏனெனில் அவள் எந்த ஆணைப் பற்றியும் அதிகம் பேசியதில்லை.வாசுவைப் பற்றிச் சொன்னால் கூடக் குறை தான் சொல்லுவாள்.சத்யாவைப் பற்றிப் பேசும்போது அவள் கண்ணில் வரும் ஒளி.அவனிடம் மன்னிப்புக் கேட்டு வந்த பின் அவனைப் பற்றி அவள் புகழ்ந்து தள்ளியது எல்லாம் சேர்ந்து அவரது மனதைக் குழப்பியது.
அவர் மேலும் குழம்பாத வகையில் அடுத்த நாள் வந்த மகள் நேரடியாக நிமிர்வாக , “அச்சா…எனக்கு சத்யாவைப் பிடிச்சிருக்கு…ஏன் சொல்லுறேனா…..நான் இதுவரைக்கும் எந்த ஒரு ஆணைப் பத்தியும் இவ்வளவு நேரம் யோசிச்சது இல்ல……உங்களுக்கே தெரியும் அது…… நான் ஒரு ஆண் கிட்ட மன்னிப்புக் கேட்டேனா அது சத்யா கிட்ட தான்…நான் வாசுவைக் கூடத் திட்டிருக்கேன்..ஆனா அவன் கிட்ட நான் என் ஈகோவ விட்டுக் கொடுத்து சாரி கேட்டதில்ல…அவனே தான் வந்து பேசுவான்…ஆனா சத்யா கிட்ட பேசும்போது எனக்கு ஃப்ரியா இருக்குப்பா மனசு”
“பொதுவா நீங்க , வாசு , ஹரி மாமா , அபிஷேக் அண்ணா , ரிஷி தவிர நான் யார்க்கிட்டையும் மனசுல எந்த வித உருத்தல் இல்லாம ப்ரீயா பேசியதில்லை….ஆனா சத்யா கிட்ட பேசும்போது தயக்கம் இல்லாம…மனசுக்கு ஒரு இதம் பரவுதுப்பா ..ஐ காண்ட் எக்ஸ்ப்ளைன் இட் டாட்……..”
“அவர் முகத்தில சந்தோசம் இருக்கனும்னு நான் ஆசைப்படுறேன்…அவர் இந்தியாவுல நான் பார்க்கிற தூரத்தில இருக்கனும்னு விரும்புறேன்…அவர் அமெரிக்கா போனா நான் பார்க்க முடியாதேன்னு வருத்தப்படுறேன்……இது காதல் இல்லயா அச்சா….?”
“ஒரு தடவைப் பேசினதுக்கேவா அம்மு இப்படி…?”
“ஒரே முறை பேசினதுக்கே நான் அவர்கிட்டே ப்ளாட்னா…..டெய்லி பேசினா நான் என்னவாவேன் யோசிங்க அச்சா…..அவரோட அந்த அமைதி ,புரிதல் , ஒரு பிரச்சனைன்னு வந்தவுடனே அதைக் கண்டு பயப்படாம….எப்படி கஷ்டப்பட்டு அதை ஃபேஸ் பண்ணினார்…ஐ அம் ரியலி இம்ப்ரஸ்ட்பா…..” என்று சிரித்தாள் அகல்யா.
“இது மட்டும் போதுமா டா….?”
“இல்லச்சா……நான் இது வரைக்கும் கல்யாணம் பத்தில்லாம் யோசிச்சதே இல்ல…ஆனா யோசிச்சா…இப்போ இவர்தான் கண் முன்னாடி வரார்….என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு வரப்போறவர் என் மேல லவ் வைக்கறத விட…என்னை மதிக்கணும்…பொண்ணு தானே பொண்டாட்டி தானேன்னு சீப்பா பார்க்கக் கூடாது…..மரியாதையா நடத்தணும்பா……அந்த மரியாதை அவர்கிட்ட இருக்கு…அவர் லைஃப்ல இவ்வளவு நடந்தும் கூட
அவர் பொண்ணுங்கள மதிக்கிறார்….”
“அவ்வளவு லவ்வாடா…..அம்மு….”
“லவ்….அப்படின்னா எனக்கு அர்த்தம் தெரியாது அச்சா…ஆனா இப்போ…உலகத்துல என் அம்மாக்கு உங்களுக்கு அப்புறம்…எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சது அவரதான்ப்பா…….எப்போவுமே நான் அவர் கூடப் பேசனும்னு ஆசையா இருக்கு…அவர்கிட்ட பேசின அன்னிலேர்ந்து நான் எதையோ மிஸ் பண்ண மாதிரி ஃபீல் பண்ணினேன்..அது அவரோட பேச்சுத்தான்பா….ஐ நீட் இம் டாட்… ” எனத் தெளிவாய் உணர்வுப்பூர்வமாய் உளறல் இன்றி அவள் உரைக்க ,
“அம்மு…ஆனா உனக்கும் அவனுக்கும் செட் ஆகுமா…..நீ ரொம்பக் கோவப்படுவியேடா……..அவன் ஏற்கனவே லைஃப்ல ஒரு முறை தோத்துட்டான்……புரியுதா…….அவனை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போனும்..உன்னால முடியுமா….?” என அவர் நிஜத்தையும் நிதர்சனைத்தையும் உரைக்க
“அச்சா…..நான் என்ன அடமண்ட்டா……?….நானும் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் பா…… நாங்க வேணும்னா மேட் ஃபார் இச் அதரா இல்லாம இருக்கலாம்….பட் வீ கேன் லீவ் ஃபார் இச் அதர் இல்லயா…..?”
அவளது திடத்தைக் கண்டவர் ,“இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னுமில்ல அம்மு…உன் இஷ்டம்டா….” என்று மகளது முடிவை ஆமோதித்தார் ஈஸ்வரன்.
அகல்யா ராஜேஸ்வரனிடம் சத்யாவின் அலைபேசி எண்ணை வாங்கி , “ உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்…
ப்ளீஸ்,..விஜயா மால் வாங்க….” என்று சொல்ல
அவன் முதலில் மறுத்தான்.பின்னர் ராஜேஸ்வரன் “சத்யா ப்ளீஸ் கொஞ்சம் வாயேன் பா…” எனச் சொல்ல
பெரியவரின் பேச்சுக்காக ஏனென்று அறியாவிடினும் சத்யசாகரனும் வந்தான்.
இருவரும் ஒன்றாய் ஒரு உணவகத்தில் அமர ,
“ஹாய் மிஸ்டர்.சத்யா…எப்படி இருக்கீங்க…?”
“என்ன விசயம்….அகல்யா……?ஏன் வர சொன்னீங்க…ஐ ஹேவ் வொர்க்…ப்ளீஸ் சீக்கிரம்…”
“ஓகே…ஓகே..கூல் கூல்…நானே டென்ஷனா வந்தேன்….நீங்க என்னை இன்னும் டென்ஷன் செய்யாதீங்க ப்ளீஸ்…” என்றவள்
மனதினுள் ,’ ஏன் பயப்படுற…தைரியமா சொல்லு…. நீ தப்பா எதுவும் கேட்கப்போறதில்ல…..உன் மனசுல உள்ளதை சொல்லப்போற..பீ கான்ஃபீடிண்ட்……..” என்றவள் ஆழ மூச்செடுத்து,
“சத்யா…எனக்கு எதுவா இருந்தாலும் ஸ்டெராய்ட்டா சொல்லிதான் பழக்கம்..சோ…..இப்பவும் அப்படித்தான்….எனக்கு உங்க கூட வாழனும்னு ஆசை சத்யா… வாழ்க்கை முழுசும்…”
“வாட்………………? எனக்குச் சுத்தமா புரியல……உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க………..?”
“சத்யா……எனக்கு உங்கள பிடிச்சிருக்கு….”
“பரிதாபமா…………..?” என்றான் கசந்த முறுவலோடு.
ஆனால் அவளோ….புன்னகையோடு , “பரிதாபம்…..ஹ்ம்ம்…போங்க சத்யா…அப்படி என்ன பரிதாப்படுற நிலைமைல இருக்கீங்க………?”
“ஏன் அதை என் வாயால சொல்லனுமா……..ஜெயிலுக்குப் போய்…கட்டின பொண்டாட்டியைக் கொன்னவன்னு பேரோட இருக்கேன்….ஊரே என்னை மோசமா பார்க்குது….தப்பே செய்யாம….இவ்வளவு அனுபவிக்கிறேன்…ஏன் உங்களுக்கு என்னைப் பார்த்த பரிதாபமா இல்லயா…?” எனச் சிடுசிடுக்க ,
“இல்லவே இல்லை….பிரமிப்பா இருக்கு மேன்…அது எப்படி…..ஜெயிலுக்குப் போய் அப்படியே லைஃப் முடிஞ்சிப்போச்சுன்னு இருக்காம….ஃப்னீக்ஸ் பறவை மாதிரி….சிலிர்தெழுந்து நான் நிரபராதின்னு புரூவ் செஞ்ச உங்க கான்ஃபிடன்ஸ்……உங்க ஸ்மார்ட்னெஸ்..எல்லாமே எனக்குப் பிரமிப்பா இருக்கு….என்னை வியக்க வைக்குது….”
“உனக்கு என்ன பைத்தியமா….?” என அவன் ஒருமைக்குத் தாவிக் கோபத்தோடு அழைக்க ,
“ஹா ஹா..இதே சினிமாவா இருந்தா ஆமா உங்க மேலன்னு சொல்லிருப்பேன்…ஆனா…எனக்கு அப்படில்லாம் ப்ரோபோஸ் பண்ண தெரியல…சத்யா……எனக்கும் யாரும் சொன்னதில்லை…எப்படி சொல்லனும்னு தெரியல….யாராவது சொல்லியும் கேட்டதில்லை..சோ…நோ ஐடியா……” என அவள் தோளைக் குலுக்க ,
“ப்ச்….லிஸன் அகல்யா…உனக்கு என்னை விட……பெஸ்ட் சாய்ஸ் கிடைப்பான்…..நானெல்லாம் உனக்குச் சூட் ஆக மாட்டேன்……”
“அதை நான் சொல்லனும்…..நீங்க இன்னமும் வினிதாவ நினைச்சிட்டு இருக்கீங்களா….சத்யா…?”
“வாழும்போது அவ என்னைப் பத்தி நினைக்கல….செத்த பின்னாடி நான் அவள நினைக்கல….”
அவள் ஆச்சரியமாக நோக்கி , “பொண்ணுங்க மேல கோவமெல்லாம் இல்லன்னு சொன்னீங்க…?” என வினா எழுப்ப ,
“பொண்ணுங்க மேல இல்லன்னு சொன்னேன்..ஆனா வினிதா மேல இல்லன்னு சொன்னேனா….அவ வாழும்போது எனக்கு உண்மையா வாழ்ந்திருந்தா சாகற வரைக்கும் அவள் நினைச்சிட்டு வாழ்ந்திருப்பேன்..ஆனா அவ ஷி சீட்ட்ட் மீ….அப்படிப்பட்டவள நினைச்சு நான் ஏன் என் லைஃபை ஸ்பாயில் பண்ணிக்கனும்…?…”
“இப்போ இன்னும் உங்கள பிடிக்குது…..” என்றாள் அவன் கண்களைக் காதலோடு நோக்கி.
“ஷட் அப் அகல்யா…..இப்படி சில்லியா பேசிட்டு திரியாத…..”
“ப்ச்…நோ அகல்யா…..அதனால இல்ல…..நீ வக்கீலா உன் கடமையைச் செஞ்ச……அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல…..”
அவன் ஆமாம் அப்படித்தான் என்று சொல்லியிருந்தால் அப்படியே அவனை விட்டுப் போயிருப்பாள்.ஆனால் சத்யசாகரன் சத்யவானாய் உண்மையைச் சொல்ல ,
“அப்ப ஓகே…..இப்ப நீங்க ஒகே சொன்னாலும்….இப்ப கல்யாணம் பண்ண முடியாது….அதனால் டூ இயர்ஸ் நல்லா யோசிச்சு சொல்லுங்க… இப்போவே உங்க கிட்ட இதைப் பத்தில்லாம் பேசினது தப்பு தான்…ஆனா நீங்க யு.எஸ் போயிடுவீங்கன்னு கேள்விப்பட்டேன்..yes you should need a change…அதான் முன்னாடியே சொல்லி வைச்சேன்….பட் இனிமே ஐ வோண்ட் டிஸ்டர்ப் யூ..வரேன் சத்யா….” என்றவள் சென்று விட ,
சத்யா வீட்டிற்குச் சென்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.ராஜேஸ்வரன் தான் சுந்தரலிங்கத்திடம் மகளது காதல் விவகாரம் பற்றிக் கூறினார்.மஞ்சரியிடம் மறைக்காது அகல்யா விசயத்தைக் கூற அவர் தாம் தூம் என்று குதித்தார்.
“ஏற்கனவே இந்தப் பையன் கல்யாணமானவன் அவன் தான கிடைச்சான் உனக்கு…..”
“அம்மா…ப்ளீஸ்…அது அவர் பாஸ்ட்…..”
“பேசாத அகல்யா………வாழ்க்கை நீ நினைக்கிற அளவுக்கு ஈசி இல்ல…இப்போ நீ அவர கல்யாணம் செஞ்சன்னா…உனக்கு
என்ன குறைன்னு தான் ஊர் உலகத்துல பேசுவாங்க…..அப்பா இல்லாம..அம்மா.வளர்த்தா இப்படித்தான்னு சொல்லுவாங்க..நீ லவ் பண்ணதை நான் எதிர்க்கல…ஆனா பண்ணுற ஆளதான் எனக்குப் பிடிக்கல…..”
“வாயை மூடு…….அவர் நல்லவர்தான்…நான் இல்லன்னு சொன்னேனா….?…ஆனா அந்த நல்லவன் உனக்கு வேண்டாம்…”
“அவர் தான் மா எனக்கு வேணும்……அவர தவிர என்னால வேற யாரையும் இமேஜின் பண்ண முடியாது…”
அவளது பிடிவாதம் உணர்ந்தவர் , “சரி உன்னிஷடம்….ஆனா எங்கிட்ட இது பத்தி பேசாத….எனக்குச் சுத்தமா பிடிக்கல…” என்று சொல்லிவிட
“ஒரு வேளை இந்தத் தம்பி லைஃப்ல வினிதாவை விடப் பெட்ட்ரா பெஸ்டா ஒருத்தி வருவாளோ என்னவோ…அவ இவர் பட்ட கஷ்டமெல்லாம் தீர்க்க மாறி அவர் பார்த்துக்கலாம்…..நடப்பதெல்லாம் நன்மைக்கே…” என்று தனியாகப் புலம்பியவளை மஞ்சரி ஒரு மாறியாகப் பார்க்க
“என்ன பார்க்குறீங்க…நீங்க சொன்ன டயலாக் தான்….அந்த பெஸ்ட் சாய்ஸ் ஏன் நானா இருக்கக் கூடாது…..”
“அகல்யா….உன்னிஷ்டம்னு நான் சொல்லிட்டேன்…..எனக்கு இதுல சம்மதம் இல்லை….” என்ற தாயை பிறகு சமாதானப்படுத்தலாம் என்று விட்டு விட்டாள் அகல்யா.
அதன்பின் அவள் சத்யசாகரனை அவன் அமெரிக்கா போகும் முன் , விமான நிலையத்தில் சந்தித்தாள்.
பார்வதிக்கு மகனை ஜெயிலில் தள்ளியவள் என்று சிறு காந்தல் இருந்த போதும் , கணவர் அவரிடம் அகல்யா பற்றிச் சொல்ல மனம் மகிழ்ந்து போனார்.
சத்யாவிடம் சென்றவள் , “ஹேவ் எ ஹாப்பி ஜர்னி சத்யா……டூ இயர்ஸ்ல நான் உங்களுக்கு ஞாபகம் வந்தா கண்டிப்பா எங்கிட்ட சொல்லனும்…எதைப் பத்தி யோசிக்காம சந்தோசமா உங்க கேரீயர்ல கவனமா இருங்க…ஆல் தி பெஸ்ட்…உங்களுக்காக .ஐ அம் வெயிட்டிங் மேன்…….” என்று சொன்னாள்.