இரவு நேர வேலை முடிந்து காலையில் தனது அறைக்குள் நுழைந்தான் சத்யசாகரன்.அவன் தனது டையைத் தளர்த்தி விட்டு…..மெத்தையில் விழ, அப்போது பார்த்து குளித்து முடித்துச் சேலை உடுத்தி குளியறையிலிருந்து வெளியே வந்தாள் அகல்யா.
மனைவியைப் பார்த்தவுடனே அவன் புன்னகை செய்தவாறே , “குட் நைட் லயா…” என
“குட் நைட்” என்று அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு ,
“சீக்கிரம் எழுந்து சாப்பிட்டுத் திரும்பத் தூங்குங்க…..நான் கோர்ட்டுக்குப் போயிட்டு வந்துடுறேன்…” என்றாள்.
“ப்ச்……ஐ மிஸ் யூ சோ மச்…பேபி…கொஞ்ச நேரம் என்னைத் தூங்க வைச்சிட்டுப் போம்மா……நைட் டியூட்டிப் பார்த்து டயர்டா இருக்கு…” என அவள் முந்தானையைப் பிடித்து இழுக்க,
“என் தலையெழுத்து அந்த ஜான்சனை நைட்ல் பார்க்க வேண்டியிருக்கு……உன்னை எவ்வளவு மிஸ் செஞ்சேன் தெரியுமாம்மா…?”
“சரி…சரி…..இப்போ…என் டிரஸைக் கசக்காதீங்க…….நான் போகனும்….விடுங்க……இப்போ தூங்கினாதான் நைட் ஷிஃப்டுக்குப் போக முடியும்…..”
“நைட் ஷிஃப்ட் இருக்கு…ஆனா கம்பெனில இல்ல…இங்க…” என அவன் கட்டிலைக் காட்ட….
“ஏய்…அப்போ இன்னிக்கு வேலை கிடையாதா…” என அவள் உற்சாகமாய்க் கேட்க
“இல்லயே…ஆமா…என்ன இவ்வள்வு எக்சைட்மெண்ட்”
“பின்ன…நீங்க எங்கூட இருப்பீங்கள….”
“அடிப்பாவி…ஒரு மூனு வார்த்தை ஐ மிஸ் யூன்னு மெசெஜ் அனுப்பியிருந்தா நான் ஓடி வந்திருப்பேன்ல…….இவ்வளவு நேரம் கூட நீ சொல்லவே இல்லைல….”
“சொல்லலன்னா நான் மிஸ் பண்ணலன்னு அர்த்தமா…?”
“இல்ல…….ஆனா நீ சொல்லனதும் நான் எங்க நீ என்னை மிஸ் பண்ணலையோன்னு நினைச்சேன் லயா….உனக்கு எக்ஸ்பிரஸ் பண்ண தெரியல பேபி”
“ஒ….அப்படியா….” என்றவள் அவள் பாணியில் கணவனைக் கொஞ்சினாள்..அதான் கடித்து வைப்பது.
“அம்மா….தாயே….வலிக்குது…நீ எவ்வளவு மிஸ் செஞ்சேன்னு தெரியுது…” என்றவன் அவள் இன்னும் இறுக அணைக்க
கீழிருந்து பார்வதி “அகல்யா…” எனக் குரல் கொடுக்க
அவள் விருட்டென அவன் அணைப்பிலிருந்து விலகி மாமியாரிடம் மாடியிலிருந்து கொண்டு ,”என்ன அத்தை…” என
“வா அகல்…வாசு வந்திருக்கான்…”
“ஹே..அகல்…!!” என வாசு குரல் கொடுக்க
“வரேன்….ஒன் மினிட் “ என்றவளை கணவன் அழைக்க
“என்னவாம்…..”
“வாசு வந்திருக்காங்க….நான் போய் அவனைப் பார்க்கிறேன்”
“இரு இரு…நானும் வாசுவைப் பார்த்து ரொம்ப நாள் ஆகுது….பேசிட்டு அப்படியே சாப்பிட்டு தூங்கிடுறேன்..அப்போதான் நைட் ஷிஃப்ட்டுக்கு ப்ர்ஷா இருக்க முடியும்…” எனக் கண்சிமிட்ட
“கண்டிப்பா…குட் பிளான்…” என்று பதிலுக்குக் கண்ணடித்தவள் கீழிறங்கி செல்ல ,சத்யசாகரன் குளியறைக்குள் புகுந்தான்.
கீழே வந்தவள் வாசுவிடம் பேசத் தொடங்கினாள்.அதற்குள் பார்வதி வாசு டிபன் சாப்பிட மறுத்ததால் அவனுக்குச் சாப்பிட சிற்றுண்டி கொடுத்தார்.
“எங்கூடக் கோர்ட்ல தான இருக்க….அப்படி என்ன எனக்குத் தெரியாத வேலை…?”
“ஆமா நீ கல்யாணத்துக்குப் பின்னாடி வரவே இல்லப்பா…” எனப் பார்வதியும் சொல்ல……
“அப்படி என்ன வாசு வேலை….?” எனச் சுந்தரலிங்கமும் கேட்க
“இருங்க இருங்க….அவரும் வரட்டும்….சேர்த்து சொல்றேன்…..” என்றவன் சத்யா வந்ததைக் கண்டு
“வாங்க ப்ரோ……”
“அப்படி என்னடா வேலை…ஆளையே காணும்..விட்டா…உன் ப்ரெண்ட் ஹேபியஸ் கார்பஸ் கொடுத்து உன்னைத் தேடியிருப்பா……”
“ஹா ஹா….பாருடா…..லவ் சப்ஜெக்ட் சொல்லிக் கொடுக்காம லா சொல்லித் தரியா அம்மு நீ….ப்ரோ.என் ஆளைக் கரெக்ட் செய்யும் வேலையில் அடியேன் பிஸி…அதான்…”
“ஆளா..அது யாருடா..” அகல்யா ஆச்சரியமாய்க் கேட்க
“நீரஜா”
“என்னது….நீரஜாவா..எந்த நீரஜா…?” எனப் பார்வதி கேட்க
“எல்லாம் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச நீரஜா தான்…”
“டேய்….எப்படிடா…?”
“எனக்கு அண்ணா அவங்கள பத்தி சொல்லி ஒரு கிரேஸ்…ஒரு பிடிப்புப் பார்க்காமலே….அப்புறம் உன் யோகா க்ளாஸ்ல பார்த்துதான் மீ ஃப்ளாட்…….”
“நீரஜா நல்ல பொண்ணு…..அவங்களுக்கு உன்னை மாறி ஒருத்தன் கிடைச்சதுல ரொம்ப சந்தோசம்டா….ஆனா அவங்க உன்னை , என்னை விட எல்லாம் பிர்லியண்ட் ஆச்சே…….நிறையா கொஸ்டின் கேட்பாங்களே….”
“என்ன ப்ரோ… நீங்க தான் அன்னிக்கு எல்லாத்தையும் சொன்னிங்களே….நீங்க அவங்க கொஸ்டின் பேப்பர்க்கெல்லாம் அகல்யான்னு பதில் சொன்ன மாறி நான் எல்லாத்துக்கும் நீரஜான்னு சொன்னேன்….மீ செலக்டட்…..”
“வாசு…பீ சிரியஸ்….எப்படிடா….அவங்கள கன்வீன்ஸ் செஞ்ச…” என அகல்யா அதட்ட
“அவங்க முதல்ல….உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்…..? நான் விதவைன்னு சொன்னாங்க,,…அப்போ சிங்கிள் தான… நீங்களூம் இப்போ சிங்கிள் நானும் சிங்கிள்னு சொன்னேன்……சும்மா அப்படியே ஃப்ளாட் ஆகிட்டாங்க…?” எனக் காலரைத் தூக்கி விட
“நம்ப முடியலயே…” என அகலும் சத்யாவும் இழுக்க
“சரி………………சரி…………..அப்புறம்…டெய்லி போய்ப் பேசினேன்…சும்மா நான் பேசல….சீரியசா தான் இருக்கேன்னு சொன்னேன்….அப்படியும் அவங்க யோசிச்சாங்க…..அப்புறம்….அம்மா வைச்சுதுதான் ஓகே செஞ்சேன்…”
“அடப்பாவி அத்தையைப் படுத்தி எடுத்து நீ யோகா களாஸ் கூட்டிட்டுப் போனது இதனால தான……..டேய்..!! நீ உண்மையைச் சொல்லு என்னைப் பிக் அப் பண்ண வரல…அப்போ நீ….நீரஜாவ பாக்கத்தான் வந்த…” என்று அகல்யா சரியாகக் கேட்க
“சூப்பர்டா…..” எனச் சத்யா சொல்ல அனைவரும் அவனுக்கு வாழ்த்து சொல்ல, அனைவரையும் அவன் அவனது நிச்சயத்துக்கு அழைத்தான்.
வாசு நீரஜாவின் திருமணம் அடுத்த மாதத்தில் இனிதே நடைப்பெற்றது.அவர்களது ரிஷப்ஷன் முடிந்து வந்த மறுநாள் , அகல்யா சோர்வாய் இருக்க ,
“என்னாச்சும்மா…” எனச் சத்யா கவலையாகக் கேட்க
“முடியலங்க……ஒரு மாதிரி இருக்கு….” என்றவளுக்கு வாந்தி வர , அவளைக் கைத்தாங்கலாகத் தாங்கியவன் , அவளுக்கு வேண்டியதை செய்து படுக்கையில் கிடத்தினான்.
“ப்ச்…வாசு கல்யாணத்துல சாப்பிட்டது ஒத்துக்கலயோ…….?” எனச் சத்யா கவலையாகக் கேட்க
“இல்ல…நம்ம கல்யாணம்…..”
“ஏய்…நம்ம கல்யாணத்துல சாப்பிட்டதா உனக்கு இன்னமும் ஒத்துக்காம இருக்கு…?லூசு….”
“ம்ஹூம்….என் வாந்திக்குக் காரணம் வாசு கல்யாணமில்ல…நம்ம கல்யாணம்….” என்று சிரித்துக் கொண்டே அகல்யா சொல்ல
“ஹே…!!வாவ்….பேபி நிஜமாவா..லயா…….கன்ஃபார்மா…….?”
“கன்ஃபார்மா தெரியல…பட் அதுவாத்தான் இருக்கும்…..” என்று சொல்ல , அவன் தாய் தந்தை என்று எல்லாரிடமும் சொல்ல, அகல்யா சொன்னது போல் அவள் கர்ப்பமாகத்தான் இருந்தாள்.
பார்வதிக்குச் சந்தோசத்தில் மயக்கமே வந்து விட்டது.மகனது வாழ்வு நந்தவனமென மலர்ந்ததை எண்ணி அவருக்கு அவ்வளவு சந்தோசம்…….அவள் மாசமான பின் சத்யாவின் காதலும், பார்வதியின் பாசமும் இன்னமும் அதிகரித்தது.பார்வதியே மருமகளுக்குப் பிரசவம் பார்க்கிறேன் என்று சொன்னபோதும் மனைவியின் ஆசை அறிந்தவன் , அவளை விட்டுப் பிரிய கடினமாக இருந்தபோதும் அவளது ஆசைப்படி அவளது தாயிடமே விட்டான்.
தாய் , தந்தையோடு கர்ப்பக்காலத்தின் கடைசி மூன்று மாதங்கள் அகல்யா
மிகவும் மகிழ்ச்சியோடு கழித்தாள்.தாய் தந்தை கணவன் என்று அன்பான உறவுகளால் அவளது சிறுவயது ஏக்கங்கள் எல்லாம் அழிந்து போனது.ஒரு நன்னாளில் ஒரு ஆண்மகனை அவள் பெற்றெடுத்தாள்.
ஏழு வருடங்களுக்குப் பிறகு…..
அலுவலகத்திலிருந்து வந்த சத்யசாகரன் நடுஹாலில் கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருந்த தன் மகன் ப்ரணவ் பரத்வாஜையும் மகள் பாரதியையும் முறுவலோடு நோக்க, சுந்தரலிங்கம் அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
அவனுக்குத் தெரியும் தனது மனையாள் தான் இப்படித் தண்டனைத் தந்திருப்பாள் என்று.ஏனெனில் அவன் பிள்ளைகள் செய்யும் சேட்டைகள் அப்படி இருக்கும்.அகல்யாவும் சிறு வயதிலேயே கண்டித்து வளர்க்க வேண்டும் என எண்ணி தவறு செய்தால் எதாவது தண்டனைக் கொடுத்து விடுவாள்.பரத்வாஜுக்கு ஏழு வயது.பாரதிக்கு நாலு வயது.
பாரதி…? ….அகல்யாவுக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்பது அவளது மிகப்பெரிய ஆசைகளுள் ஒன்று…அவள் சத்யாவை பார்க்கும் முன் அவள் வாழ்வே அதுதான் எனத் தீர்மானித்திருந்தாள்.அதை சத்யாவும் அறிவான்.அதனால் அவளின் விருப்பப்படியும் பெற்றோரின் சம்மதத்தோடும் பாரதியைத் தத்தெடுத்தனர்.பரத்வாஜ் தங்கை பாப்பா வேண்டுமெனக் கேட்க , அவனது ஆசைப்படி பெண்மகவையே தத்தெடுத்தனர்.ஆனால் அவனுக்கு அவள் பெற்றோரின் தத்துப்பிள்ளை என்றெல்லாம் அந்த மூன்று வயதில் அறியவில்லை.பாரதியும் பரத்வாஜும் அவ்வளவு பாசமுடன் வளர்ந்தனர்.
தன் மக்கட்செல்வங்களிடம் சென்றவன் , “எவ்வளவு நேரமா நிக்கிறீங்க……என்ன தப்பு செஞ்சீங்க..?” என விசாரிக்க
“வர வர நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பண்றீங்கடா…..அவ என்னடான்னா ஒரு மணி நேரமா சின்னக் குழந்தைகளை நிக்க வைக்கிறா……நீ வந்ததும் கேள்வி கேட்கிற….இன்னும் பதினைஞ்சு நிமிசம் நிக்கனும்…..பாவம் பாரதி சரியா சாப்பிட கூட இல்லை…இவன் ஹொம் வொர்க் வேற செய்யனும்” எனப் பார்வதி குறைபட
“பாரு……ஹொம் வொர்க் இருக்கவன் எதுக்குச் சேட்டை செய்யனும்…இந்த குட்டி வாண்டுக்கு எதுக்கு அண்ணன் பின்னாடியே வால் பிடிக்கனும்….நீ சும்மா செல்லம் கொடுக்காத…..அவங்க பார்த்துப்பாங்க..” எனச் சுந்தரம் சொல்ல
“யூ ஆர் பேட் தாத்தா….ராஜா தாத்தா தான் குட்…..பாட்டி யூ ஆர் ஆல்சோ குட்……” எனப் பரத்வாஜ் சொல்ல
“என்ன தப்பு செஞ்சீங்கன்னு மட்டும் சொல்லிடாதீங்க…..”
“டாடி…அண்ணா பிக் ஹவுஸ் கட்ட புக் எடுத்தான்….அம்மாவோட புக்கை……அழகா அதுக்கி………………இப்படி இப்படி..மேல …மேல..வைச்சு………….அப்பொறம்…ஆல் ஃபால் டவுன்ப்பா….” எனப் பாரதி கையை ஆட்டி பாவனையாகச் சொல்ல
“அம்மா புக்கை எடுத்தா தப்புதான…..புக்ஸ்ல வீடு கட்டலாமா நீங்க……அப்படி செஞ்சாலும் உன் புக்கைதான எடுக்கனும் பரத்…?”
“நோப்பா…..என் புக் ஸ்மால்…ஆமா புக் தான் செங்கல் மாறி குண்டா பெருசா இருந்தது…..”
“சரி சரி…………….இனி இப்படிச் செய்யாதீங்க……இப்போ…….போங்க…….” என்றவன் பாரதி , “ஹைய்யா….எனக் கீழே உட்கார
பரத்வாஜோ அசையாமல் நின்றான்.
“என்னடா…நீ உட்காரு போ..”
“இல்லப்பா…..அம்மா ஒன் அவர் நிக்கச் சொன்னாங்களே…இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு…அம்மாக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க”
“நான் சொல்லிக்கிறேன் ப்ரணவ் ….”
“நோப்பா… நான் செஞ்சது தப்புதானே………அம்மா பாவம்..இப்போ…அவ்வ…ளவு புக்சையும் அம்மா அடுக்கனும்…….சோ நான் நிக்கிறேன்…….”
மனைவியைப் போல் அழுத்தமாக நின்ற மகனைக் கண்டு சத்யசாகரனுக்குப் பெருமையாக உணர்ந்தான்.அவனை இன்னும் பெருமை கொள்ள வைக்கும் விதமாய்ப் பாரதியும் , “டாடி…அண்ணா நின்னா…நானும் நிக்கிறேன்…..” என்று சொல்லி எழ, பார்வதிக்கு பேத்தியின் செயலில் உள்ளம் குளிர்ந்து போனது.
சத்யா நிறைவாக உணர்ந்தான்.பண்பு என்பது பிறப்பில் வராது.வளர்ப்பில் தான் வரும் என்பதைப் போல் பாரதி நடக்க அவன் தந்தையாய்க் கர்வப்பட்டான்.
“நோ….சத்யா…….அவளும் தப்புக்கு உடந்தைதான….அண்ணன் செஞ்சா…..அம்மா கிட்ட வந்து சொல்லணும்…..அதை விட்டுட்டு சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் பண்ணாள…..அதான்…”
“ம்ம்…நீ இப்படிச் சொல்ற……அங்க என்னடான்னா என் பசங்க பாசமலர் படம் ஓட்டுறாங்கடி….” என்றவன் நடந்தவற்றைச் சொல்ல, அகல்யாவுக்கு நெஞ்சம் தாயாய் உவகைக் கொண்ட்து.
“ஒரு அரைமணி நேரம்னா ஓகே லயா……ஆனா இப்படி ரொம்ப நேரம் கொடுக்காத என்ன…?”
“உங்க பசங்க ஒரு மணி நேரமா தான் நிக்கிறாங்க…நான் இதை மூணு மணி நேரம் நின்னு அடிக்கினேன்…அது மட்டுமில்லாம இதையெல்லாம் மரியாதையா பார்க்க வேண்டிய புக்..இப்படி கலைச்சுப் போட்டா நல்லாவாயிருக்கும்…?”
“சிலது கலைஞ்சா நல்லாதான் இருக்கும்..” என்று முணுமுணுத்தவன்
“ஆனாலும் உனக்கு என் மேல லவ் ஜாஸ்தி லயா…நான் கலைச்சா திட்ட மாட்ட…பசங்க கலைச்சா கோவப்படுறே…”
“நீங்க என்ன கலைச்சீங்க….?” எனப் புருவம் சுருக்கி அகல்யா கேட்க
அவன் பேசாமல் இருக்கவும் , “சொல்லுங்க….”
“கேள்வியும் நீயே கேட்டு பதிலும் நீயே சொல்லிட்ட…அப்புறம் என்னம்மா..”
“நானே பதில் சொன்னேனா..” என்றவள் “நான் நீங்க என்ன…….” என்று திரும்பச் சொன்னவளுக்குப் புரிந்து போனது கணவனின் விசமமானப் பேச்சு….அவன் கலைப்பது அவளையல்லவா….?
“உங்களை……..” என்று அவள் அவனின் புஜங்களில் குத்த
அவளை இழுத்து அணைத்தவன் , “லயா……ஒரு முக்கியமான விசயம்…நான் ஆன்சைட் போகனும்……”
“ஓ….அதான் இன்னிக்கு ஓவர் கொஞ்சல்ஸா….”
“ஹே..!! நான் கொஞ்சாத மாறி சொல்ற…..”
“நான் ஓவர்னு தானே சொன்னேன்….எங்க போகனும்…எவ்வளவு நாள்”
“த்ரீ மன்த்ஸ்…..யூ.எஸ்”
அவள் அமைதியாக நிற்கவும் , “சீக்கிரம் டைம் போயிடும்டா…ஆனா நான் உங்களையெல்லாம் ரொம்ப மிஸ் செய்வேன்..எப்போவும் ஒரு டென் டேய்ஸ் தான் போவேன்..பட்..இந்த தடவை…இது முக்கியமான ப்ராஜக்ட்..”
அவள் சொல்லாவிட்டாலும் அவனை மிஸ் செய்வாள் என்று அறிந்தவன்
“என் பசங்கள இப்படி டெய்லி கலைக்கச் சொல்றேன்..நீ அடுக்கி வை…டைம் போயிடும்…” என்றவனை விட்டு விலகியவள்,
“கொழுப்பா உங்களுக்கு..நீங்க பத்திரமா…….போயிட்டு வாங்க….என்ன ப்ரணவ் தான் உங்களை ரொம்ப மிஸ் செய்வான்…….அவனைப் பார்த்து பாரதி அழுவா….பசங்க இவ்வளவு நாள் உங்களை மிஸ் செஞ்சதே இல்லையே…” அவளும் அவனை இப்படிப் பிரிந்திருந்ததில்லை மாசமாக இருந்த போதும் கூட அவன் தினமும் அவளை வந்து பார்த்து விடுவான்.அவள் அவன் வேலைக்காகத்தானே செல்கிறேன்..இவள் வருந்தினால் அவனும் வருந்துவான் எனத் தன் வருத்தம் மறைத்தாள்.