பின்னர் கீழே இறங்கி வந்தவள் , படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு , “வாங்க…டைம் ஓவர்……” என்று சொல்ல ப்ர்ணவும் பாரதியும் ஓடி வந்து சாரி சொல்ல
இருவரையும் மடி மேல் அமர வைக்க அவள் முயல, “ப்ர்ணவ் பிக் பாய் ஆகிட்ட…அம்மா மடி பத்தல….” என்று சொல்ல
அவள் பின்னால் சத்யா ஒரு படியில் அமர , ப்ரணவ் தந்தையின் மடியில் உட்கார , கணவன் மடியிலிருந்த மகனுக்கும் தன் மடியில் இருந்த மகளுக்கும் முத்தம் கொடுத்தவள் , “இனிமே இப்படிச் செய்யக்கூடாது…….” என்று சொல்ல, “செய்ய மாட்டோம்..” என்று சொன்னவர்கள் அவளது ஒரு கன்னத்தில் பாரதி முத்தமிட, தந்தையிடமிருந்த ப்ர்ணவ் ஒரு கன்னத்தில் முத்தமிட, ப்ரணவின் கன்னத்தில் சத்யா முத்தமிட என்று அவர்கள் அனைவரும் வரிசையாகப் படியில் இருப்பதைப் பார்த்த பார்வதிக்கும் சுந்தரத்துக்கும் மனம் நிறைந்து போனது.அவர்கள் மகன் இப்படிக் குடும்பமாய் வாழ வேண்டும் என்றுதானே ஆசைக்கொண்டனர்.அந்த ஆசை ஈடேறியதில் அவர்கள் நிம்மதியாக உணர்ந்தனர்.
“இன்னும் ஒரு தோசை மஞ்சும்மா….” என்று சமையலறையில் தன்னோடு நின்று தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவியைக் கெஞ்சினார் ராஜேஸ்வரன்.
“போதும்பா…….நீங்க சாப்பிடுங்க..நான் ஊத்துறேன்…” என்று மஞ்சரி சொல்ல
“தேங்க்ஸ்……….” என்று ஈஸ்வர் புன்னகை செய்ய, மஞ்சரி அவரை முறைக்க
“சாரி….” என்றவரை மீண்டும் அவர் முறைக்க
“அய்யோ…மஞ்சு,…யான் நின்ன சாரியை சொன்னேன்….நாட் சாரிம்மா..” என்று சமாளிக்க, கணவனின் வாயிலில் தோசையைப் பிட்டு வைத்தார்.
ஐம்பது வயது கடந்த போதும்,கருங்கூந்தல் நரைத்த போதும் காதல் மட்டும் கூடுயதே தவிரக் குறையவில்லை ஈஸ்வருக்கு.மஞ்சரிக்கு அவர் சொர்க்கத்தைக் காட்டினார்.ஒரு கட்டத்தில் மஞ்சரிக்கு ஈஸ்வர் இன்றியமையாதவராகிப் போனார்.தனிமை என்ற துயர் தீர்ந்து இருவரும் காலம் கடந்த பின்னும் நல்ல நண்பர்களாக , காதலர்களாக வாழ்ந்தனர்.
‘காலம் கரைந்த பின்பும்
கூந்தல் நரைத்த பின்பும்
அன்பில் மாற்றம் இல்லையே ‘
அப்போது பார்த்து , “பாட்டி எனக்கு…” என்றபடி வந்து நின்ற பாரதியைத் தூக்கிக் கொண்ட ஈஸ்வர் , “ஊட்டும்மா…” என, மஞ்சரி பாரதிக்கு தோசையை ஊட்டினார்.
“தாத்தா…எனக்கும் பசிக்குது…எனக்கு……பலூன் தோசை வேணும்” என ப்ரணவ் கேட்க
“முதல்ல….சாதா தோசை…அப்புறமா தான் பலூன் தோசை….” என்ற மஞ்சரி , கணவனை விலகச் சொல்லிவிட்டுப் பேரப்பிள்ளைகளுக்குத் தோசை ஊற்றினார்.
“பாட்டி….எனக்கு….மிக்கி தோசை…” எனப் பாரதி கூவ
“பிச்சு சாப்பிட போற தோசைல என்ன மிக்கி….பலூன்…..நீங்க எல்லாரும் ரொம்பச் செல்லம் கொடுக்கிறீங்க..இவங்களுக்குப்பா…. “ என்று அகல்யா சொல்ல
“வேண்டாம்மா…நான் ஊத்தித் தரேன்…நீங்க ரெஸ்ட் எடுங்க…..அப்பா யூ டூ கோ….”
“அச்சோ…..ஏன் டா உனக்கு இந்தக் கொலவெறி எங்க மேல……..நீ செய்யுற சாப்பாட்டைச் சாப்பிட தான் நான் லீகலா உனக்கு ஒரு அடிமையைப் பிடிச்சிக்கொடுத்திருக்கிறேனே ….நீ அம்மா அளவுக்குச் சமைக்கலடா அம்மு…” என ஈஸ்வர் சொல்ல ,மஞ்சரி சிரிக்க
“உங்க மஞ்சு சமையல நீங்க தான் மெச்சிக்கனும்….இருங்க இருங்க….என் வீட்டுக்காரர் இன்னும் ஒரு மாசத்துல வந்துடுவார்….அப்போ இருக்கு எல்லாருக்கும்….” என்று அகல்யா சிணுங்கினாள்.
ஈஸ்வரை திருமணம் செய்த பின் மஞ்சரியைப் பார்த்த அகல்யாவுக்கு மட்டுமில்லை அனைவருக்கும் அவரது வயது குறைந்தாற்போல் தோன்றியது.மனதின் சந்தோசம் முகத்தில் மின்னியது.தாயின் மகிழ்ச்சி கண்டு அகல்யாவுக்கு அத்துனை திருப்தியாக இருந்தது.
முதலில் சமூகம் அவரைச் சாட அதனைக் கண்டு துவண்டவர் , கொஞ்ச நாளில் மீண்டு விட்டார்.சம்சாரம் என்பது வீணை.அதனை வெகு அழகாய் மீட்டினார் ஈஸ்வர்.மஞ்சரி பெயருக்கு ஏற்றார்போல் மணம் வீசும் பூங்கொத்தாய் வாழ்ந்தார்.வாழ வைத்தார் ஈஸ்வர்.ஈஸ்வருக்கே மனைவியின் மாற்றம் கண்டு ஆச்சரியம் தான்…மஞ்சுவின் அன்பை இத்தனை வருடம் பெறாமல் போன வருத்தம் கொஞ்சம் இருந்தாலும் இப்போது அதை எல்லாம் மறக்கும் வகையில் அன்பால் அவரை அடிமை செய்தார் மஞ்சரி.
சத்யா அமெரிக்காவுக்குப் போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன.சனி ஞாயிறு விடுமுறை என்பதால் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருந்தாள். மாலையில் குடும்பத்தினரோடு சேர்ந்து பார்வதி சுந்தரலிங்கம் அனைவரும் வாசுதேவனின் வீட்டிற்குச் சென்றனர்.வாசுவின் மகன் ஹரிப்ரசாத்தின் ஆறாவது பிறந்த நாள் இன்று.
வாசுவின் வீட்டிற்கு அனைவரும் செல்ல , அங்கே வான்மதியும் ஹரியும் பேரனை சமாதானம் செய்ய,வாசு மனைவியை ஓரக்கண்ணால் பார்க்க , அவளோ அவனை நன்றாய் முறைத்தாள்.
“அம்மா மேல உட்காரனும்…..அது என் மம்மி தானே….ஏன் நான் உட்காரக்கூடாது….?” என ப்ரசாத் அடம்பிடிக்க
“நீ பொய் சொல்ற பாட்டி……அப்பா மட்டும் அம்மா மடில உட்கார்ந்தாரு……….அப்பா பிக் மேன்…அவர் மடியில படுத்தா பாப்பாவுக்கு ஒன்னுமாகாதா….?” என அவன் புத்திசாலித்தனமாய்க் கேட்க
அவனைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள் வான்மதியும் ஹரியும் “எப்படிடா….உனக்கு இப்படி ஒரு புத்திசாலி புள்ள பொறந்தான்…” என வான்மதி கேட்க
“ஹரின்னு பெயரு வைச்சான்ல…அதான் என்னை மாறி என் பேரனும் புத்திசாலியா இருக்கான்..”
“..இவன் உங்க புள்ளையாண்டா தான…..அவன் நீரஜா மாறி…” எனச் சொன்னார் வான்மதி.
அப்போது அகல்யாவின் குடும்பத்தார் வர, நீரஜா அவர்களை இன்முகமாய் வரவேற்றாள்.அவர்களைத் தொடர்ந்து நந்தினி அவளது குழந்தை சக்தியோடு வந்தாள்.
“என்ன நந்து..அபி வரல?” என அகல்யா கேட்க
“அவருக்கு வொர்க் டி அதான்.ஆமா ஏன் ஹரி அழறான்?” என கேட்க,அகல்யாவும் வான்மதியிடம்
“என்னாச்சு அத்தை….என்ன பஞ்சாயத்து..?”
அதன் காரணத்தை முறைத்துக் கொண்டே நீரஜா கிசுகிசுக்க,அகல்யா வாசுவைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.காரணம் யாதெனில் மனைவியின் மடியில் வாசு சுகமாய்ப் படுத்து கதைப் பேசியிருக்கிறான். நீரஜா சொல்லியும் கேட்கவில்லை.அப்போது பார்த்து அவன் மகன் வர அவனும் தாயின் மடிக்குப் போட்டி போட்டான்.
ஹரிப்ரசாத் கொஞ்சம் புசுபுசுவெனப் பொம்மை போல் இருப்பான்.அது மட்டுமில்லாமல் அவன் கொஞ்சம் வேகமாய் ஏற்கனவே நீரஜாவின் மடியில் உட்கார்ந்து அவளுக்கு லேசாய் வலித்தது.வாசுவாக இருந்தால் அவன் வாகாகப் படுப்பான்.சின்ன குழந்தைக்குத் தெரியாதல்லவா..?
உடனே வாசு , “நீ படுக்கக் கூடாது ப்ரசாத்…பாப்பா இருக்குடா…” எனச் சமாளித்தான். நீரஜாவோ மகன் மீதுள்ள பாசத்தில் தூக்கி வைத்துக் கொள்வாள் என்று அவனுக்குத் தெரியும்.ஆனால் அவன் மகனோ அழுது..பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டான்.
ஆனால் அகல்யாவின் பிள்ளைகளைப் பார்த்ததும் அவர்களோடு சண்டையை மறந்து விளையாட சென்று விட்டான்.
அகல்யா வான்மதி இருவரும் சேர்ந்து கேக் வெட்ட ஏற்பாடெல்லாம் செய்ய , நீரஜாவை தாஜா செய்ய முயன்றான் வாசுதேவன்.
“நீருக்குட்டி சாரிம்மா……நான் என்ன செய்ய…ஏன் என்னை முறைக்கிற…?”
“குழந்தை முன்னாடி எப்படி நடக்கனும்னு தெரியாதா உங்களுக்கு…நான் வேண்டாம்னு சொல்லி கூட…”
“என் மகனும் படுத்துட்டுப் போறானு விட வேண்டியதுதானே….பாவம் குட்டி…”
“வேண்டாம்டி…..அவன் உட்கார்ந்தா எதாவது ஆச்சுனா…அந்த பயம் தான்….கதவை நான் தாழ்ப்பாள் போடல..அதான் என் தப்பு..அவன் கீழ அம்மா கூடத் தானே இருந்தான்..அதான்..ஐ அம்..சாரி..”
நீரஜா இன்னும் முகத்தைத் திருப்பிக் கொள்ள , அவள் கன்னத்தில் பச்சென்று முத்தம் வைக்க , அவள் ,”போடா” என
அவன் “போடி…”என….சொல்ல
“போயிடுவிங்களா……என்ன…?” எனக் கேள்வியாய்ப் நோக்க
“எப்படிக் குட்டி உன்னை விட்டு போவேன்………” என அவளை அணைக்க
“ப்ரசாத் பார்த்துட்டான்…” என நீரஜா சொல்ல துள்ளி விலகினான் வாசு.
“ஹா ஹா…சும்மா…வ.வ்வ…..வெவ்வே…” எனக் காட்டி விட்டு அவள் செல்ல… ,”உன்னை” என்று பல்லைக் கடித்தான் வாசுதேவன்.பின்னர் நினைவு வந்தவனாய் அகல்யாவிடம் , “ஹே..!அகல்…மேல……..ரைட் சைட் ரூம்ல… பாப்பர்ஸ் இருக்கும்…எடுத்துட்டு வாயேன்…” என்று சொல்ல அவளும் மேலேறி சென்றாள்.
அறையைத் திறந்து உள்ளே பார்த்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.அங்கே சத்யசாகரன் அவளைப் புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.அவனை இந்த இரண்டு மாதமாகப் பார்க்காமல் இருந்தவளுக்கு ஏற்பட்ட ஆனந்த களிப்பில் கண்ணில் நீர்த்துளிர்க்க
அவளை நெருங்கியவன் அவன் விழிகளை முத்தமிட்டு அவள் விழி நீரை அவன் விழுங்கினான்.
“மிசஸ்.சத்யசாகரன் எப்போவுமே அழக்கூடாது…” என்றவன் அவளை அணைத்தபடியே கதவை அடைத்தான்.ஏனெனில் அவனைத் திருமணம் செய்தபின் ஒரு நாள் கூட அவளை அவன் அழ விட்டதில்லை.
“நான் எப்போ அழுதேன்…?கண்ணு வேர்த்துச்சு…” என்று அகல்யா மழுப்ப
“ஆஹான்…….சரி..சரி..” என்றவனை அவள் இறுக்கமாய் அணைத்து அவனுள் புதைந்தாள்.
“உங்கள விட்டு இருக்க முடியில….அதான் சீக்கிரமே டே அண்ட் நைட் வொர்க் செஞ்சு…….இரண்டே மாசத்துல கம்ப்ளீட் பண்ணிட்டேன்…..”
“உனக்குச் சர்ப்பரைஸ் கொடுக்கனும்னு தான் நான் சொல்லல….வாசு கிட்ட சொல்லி முன்னாடியே நம்ம வீட்லேர்ந்து இங்க வந்துட்டேன்..அம்மா அப்பா மாமா அத்தை எல்லாருக்கும் தெரியும்….”
அவளோ அவனை எவ்வளவு மிஸ் செய்தாள் எனச் செயலில் காட்டினாள்.அவனை அப்படி இறுக்கமாக அணைத்திருந்தாள்.பேசவே இல்லை.சத்யாவும் மோன நிலையைக் கலைக்க விரும்பாதவனாய் அவள் தோளில் முகம் புதைத்து தன் தேடலுக்கு அச்சாரமிட்டான்.
அப்போது பார்த்து அபஸ்வரமாய்ப் பார்வதி , “அகல்யா..அகல்யா….” எனச் சத்தமிட ,சத்யாவால் அவளை விட்டு விலக முடியவில்லை. அகல்யா தான் அவனை விட்டு விலகி, “அய்யோ கூப்பிடுறாங்க…”எனப் பதற
அவளின் கையைப் பிடித்து , “நான் உன்கூட இருக்கனும்னு ஆசைப்பட்டிருப்பேல…அது நிறைவேறிடுச்சா…கண்டிப்பா இல்லன்னு சொல்லாத….எல்லாரும் இருக்கும்போது நீ என்னை மிஸ் பண்ணுவன்னு எனக்குத் தெரியும் லயா…” என
“நிறைவேறல….” என்றவளை அவன் ஆச்சரியமாய்ப் பார்க்க
அவள் அவனின் தோள் சாய்ந்து எம்பி அவனின் கன்னத்தைக் கடித்து வைக்க , “இப்போதான் நிறைவேறிச்சு..” என்று கண்ணடித்தாள்.
“உன்னை..” என்று அவளை அவன் கடிக்க வர, அவள்
கீழே ஓடி வந்துவிட்டாள்.பின்னாடியே சத்யாவும் வந்தான்.
அகல்யாவின் முகம் வந்தபோதை விட இப்போது பிரகாசமாய் இருப்பதை அனைவரும் கண்டனர்.குழந்தைகள் இருவரும் தந்தையைக் கண்டதும் அவனின் கால்களைக் கட்டிக் கொண்டு கொஞ்சத் தொடங்கினர்.
“ப்ச்…பாவம் அகல்…எப்படிதான் அவரை விட்டு இரண்டு மாசம் இருந்தாளோ…என்னால இரண்டு நாள் கூட இருக்க முடியல உங்கள விட்டு…இப்போதான் அவ ஃபேஸ் ப்ரைட்டா இருக்கு” என நீரஜா சொல்ல
“ஆமா….ஆமா…..” என வாசு ஆமோதித்தான்.
மகன் மருமகளின் சிவந்து மலர்ந்த முகத்தைக் கண்ட சுந்தரலிங்கம் ,”தப்புப் பண்ணிட்டே பார்வதி தப்பு பண்ணிட்டே.” என எம்.எஸ்.வி போல் சொல்ல
“என்ன தப்புங்க.”
“பாரு…அகல்யா முகம் இரண்டு மாசம் எப்படி இருந்தது..இப்போ….எப்படி இருக்குன்னு……கொஞ்சம் லேட்டா கூப்பிடுருக்கனும் அவங்கள…நீ…அந்த அறிவு இருந்திருந்தா ஏன் சத்யாவுக்குத் தம்பி தங்கச்சி இல்லாம போயிருக்கப் போகுது..மக்கு..” என மனைவியை வைய ,
பார்வதியோ ,” நம்ம வீட்டுலன்னா பரவாயில்ல…இங்க எப்படி….சும்மா என்ன திட்டாதீங்க…மக்காம் மக்கு……கிழவனுக்கு ஆசையைப் பாரு.” என முனுமுனுக்க
“ஆசைக்கும் வயசுக்கும் சம்மந்தம் இல்ல பார்வதி..ஐம்பதிலும் ஆசை வரும்….” எனப் பார்வதி தலையில் அடித்துக்கொண்டார்.
இப்படி ஆளாளுக்கு அவரவர் இணையுடன் பேசிக்கொண்டே இருக்க, கடுப்பான ஹரிப்ரசாத் , “இப்போ கேக் வெட்ட விடுவீங்களா மாட்டீங்களா…..இல்ல…நான் அப்படியே சாப்பிடவா…” என்று கத்த பெரியவர்களின் முகம் புன்னகையைப் பூச அனைவரும் சின்னவனின் ஆசையை நிறைவேற்றி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினர் தங்களது அழகான அன்பான குடும்பத்தோடு.அன்பாலே அழகான வீடு அது…!!