மாதங்கவதனாவின் குரல் கேட்ட நொடியில்லாமல், அவன் இதயம் துடித்த வேகத்தில் அதை எடுத்து தரையில் விட்டிருந்தால் கூட ஒலிம்பிக்கில் ஓடி தங்கமே வாங்கியிருக்கும். அப்படி ஒரு வேகம்…!
கை, கால்கள் நடுக்கம் எடுக்க, கையில் இருந்த மொபைல் கீழே விழப்போனது. கடினப்பட்டு இறுக்கிப்பிடித்தவன், ‘செருப்பால அடிப்பேன் கையே! ஆடாம நின்னுத்தொல!’ என்று அதட்டிக்கூட பார்த்துவிட்டான். அதுவோ சொல்பேச்சு கேட்பேனா!? என்றிருந்தது.
அமர்ந்துக்கொண்டு அவனை பார்த்திருந்தவள், இப்போது எழுந்து வர ஆரம்பித்தாள்.
‘அப்டியே திரும்பி ஓடிடலாமா?’ என அவன் நினைக்கும்போதே அவனை நெருங்கி விட்டவள், “ஹாய்! நான் மாதங்கவதனா!” என்றாள் லேசான சிரிப்புடன்.
அவள் அருகே வந்ததுமே ஓங்கி அறைய போகிறாள் என்றுதான் நினைத்திருந்தான்.
கிட்டத்தட்ட அதற்கு தயாராக கூட அவன் வெட்கம்கெட்டு நிற்க, அவளோ, தன்னை இயல்பாய் அறிமுகப்படுத்திக்கொண்டதை, அதிலும் அந்த குட்டி சிரிப்பை… வாயை பிளந்து பார்த்துக்கொண்டு நின்றான்.
பதிலுக்கு தன்னை அறிமுகம் செய்துக்கொள்வான் என்று காத்திருந்தவள், அவன் அப்படியே நிற்கவும்,
“நான் என் பேர் சொன்னேன்?” என்றாள், அவனுக்கு நியாபகப்படுத்த வேண்டி.
அந்த சில நொடி இடைவெளி, அவன் தன்னை மீட்டுக்கொள்ள போதுமானதாய் இருக்க,
“நான் அஜய்!” என்றான்.
சம்பிரதாயமாக, “நைஸ் நேம்!” என்றவள், “என்ன பண்றீங்க நீங்க?” என்றாள் மீண்டும் முதல் கேள்விக்கே வந்து.
ஓட்டத்தை நிறுத்திவிட்டு மூச்சு வாங்க நின்றுக்கொண்டிருந்த இதயம், ‘டேய், மறுபடியும் ஷாக்’ ஆவாதடா! ஓட முடியல!’ என்று கெஞ்ச, தொண்டையை செருமி தன்னை சீர் செய்தவன்,
“அது… சும்மா… அப்படியே கேஷுவலா…”
என்ன சொல்வதென தெரியாமல் இழுத்தான்.
“ஹான்… எனக்கு இந்த தண்டவாளம் எல்லாம் ரொம்ப பிடிக்கும்! செம்ம ‘க்ரஷ்’ அதுமேல! அதான் அப்படியே காத்துவாக்குல சும்மா கேஷுவலா ஒரு செல்பி!”
இப்படி சொன்னவனை மேலும் கீழும் பார்த்தவள், “நான் அதை கேட்கலை! உங்க ப்ரோபெஃஷன் என்னன்னு கேட்டேன்!” என்று சொல்ல, அஜய்க்கு முகத்தை எங்கே கொண்டுப்போய் வைத்துக்கொள்ளவென தெரியவில்லை.
‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு!’ என சொல்லி சொல்லி புலம்பிக்கொண்டிருந்தான் அஜய்.
அஜய் அவளை முறைக்க, “அவளை ஏன்டா முறைக்குற? கண்டிப்பா உன்னை அப்டிதான் நினைச்சுருப்பா! உனக்கு சொல்ல வேற காரணமே கிடைக்கலையா?” என்றாள் சுவாதி.
“சட்டுன்னு ஒண்ணுமே தோணல! கண்ணுமுன்ன தண்டவாளம் தான் இருந்துச்சு!” பாவம் போல சொன்னான்.
குரு, “பார்த்து மச்சி! ‘க்ரஷ்’ஷு தானேன்னு தண்டவாளத்தை கட்டிப்பிடிச்சு படுத்துடாத! அப்பறம் நாளைக்கு தலைப்பு செய்தில தான் அவ உன்னை பார்ப்பா!” எப்போதும் போல அஜய்யை வாற, பதிலுக்கு அவன் பேசவரும்போது,
அஜய் இப்படி சொன்னதும் ‘புஸ்’சென்றானது நால்வருக்கும்!
வேதாளத்தை சிறைப்பிடிக்க, வீறுக்கொண்டு சென்ற விக்கிரமாதித்யன் போல மறுநாள் கம்பீரமாய் கிளம்பி ரயில்நிலையம் சென்றான் அஜய்.
அஜய்யின் கால்கள் ஓரிடத்தில் நிற்கவில்லை. கசங்காத சட்டையை நீவிவிட்டுக்கொண்டே இருந்தான். கலையாத கேசத்தை கலைத்து கலைத்து திருத்தினான். என்ன என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும் என்றெல்லாம் ஒத்திகை பார்த்து வைத்திருந்ததை மனதுள் ஒருமுறை ஓட்டிப்பார்த்துக்கொண்டான்.
உள்ளுக்குள் ஒரு உற்சாகம், படபடப்பு… மொத்தத்தில் தன் வயதை மறந்தான், தொழிலை மறந்தான், பெரியமனித தோரணையை மறந்தான். பதின்வயது பாலகன் தன் காதலியை பார்க்க காத்திருக்கும் துடிப்பு இருந்தது அவனிடத்தில்.
ஒரு சில வினாடிகள் மௌனமாய் இருந்தவள், பின் நியாபகம் வந்தவளாய், “ஆமா… டெய்லி நான் உங்களை பாக்குறேன்… என்னைப்பார்த்தாலே நீங்க ஓடுற மாறி ஒரு ஃபீல்… அதான் அது உண்மையா என்னன்னு கேட்க நினைச்சேன்!” என்றாள்.
‘ம்கும்’ என முனகியவன், “பாக்குறப்போ எல்லாம் அடிவாங்கி குடுத்தா ஓடாம வேற என்ன செய்யுறதாம்?” என்றான்.
அவன் இதை சொன்னவுடன் அவள் பேசிக்கொண்டிருந்த தொனியே மாறிப்போனது. அதுவரை அக்கறையின்றி இருந்தவள், இப்போது அவன் பேச்சில் கவனமாக, “புரியல எனக்கு!” என்றாள்.
“என்னங்க புரியல? பத்து வருஷத்துக்கு முன்ன அடிவாங்குனவனை நியாபகம் இல்லன்னா பரவால்ல… பத்து நாள் முன்னாடி அடி வாங்குனவனை கூட மறந்தா எப்படிங்க? அப்பறம் நான் வாங்குன அடிக்கெல்லாம் என்ன மரியாதை இருக்கு?”
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள் அவன் எதிரே வந்து நின்றாள்.
தொங்கிப்போன முகத்துடன், “ஏங்க, ‘மிஸ்பிஹேவ்’ எல்லாம் பண்ணலங்க! நான் ரொம்ப டீசென்ட்! அன்னைக்கு பேச மட்டும் தான் செஞ்சேன்! ஸ்டாப் வந்ததும் ஒரு குண்டு குந்தாணி என்னை இடிச்சு உங்கக்கிட்ட தள்ளிட்டு போய்ட்டா!” என்றான் பாவமே பாவமாய்.
அவன் சொன்ன விதத்தில் அவளை மீறி சிரிப்பு வந்தது அவளுக்கு. உதடு மடக்கி அடக்கியவள், “சாரி!” என்றாள் சிரித்துக்கொண்டே.
அவள் சிரிப்பை கண்டதுமே பிரகாசமானது அவன் முகம்.
“பரவாலங்க!” என்றான் இளித்துக்கொண்டு.
“அதென்ன, என்னவோ பத்துவருஷக்கதை ஒன்னு சொல்றீங்க?”
“கதையா? ரத்த சரித்திரங்க அது!” என்றவன், “உங்ககிட்ட பேசனும்ன்னு பின்னாலேயே வந்து உங்க அண்ணன்கிட்ட செம்ம அடி வாங்கி, பின்னே பஞ்சாயத்துல நிக்கவச்சு ஊரே என் தோலை உரிச்சுதே!!!” என்று சொல்ல, அவள் சிரிக்கவில்லை.
மாறாக, அவனை வியப்புடன் ஆராய்ச்சியும் சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
தலை முதல் கால் வரை அவன் தோற்றத்தை ஆராய்ந்துக்கொண்டு, தன் நினைவடுக்கில் இருக்கும் கலங்கலான உருவத்தோடு ஒத்துப்போகிறதா என அலசிக்கொண்டிருந்தாள்.
“பத்து வருஷம் ஆச்சு! அப்படியேவா இருப்பேன்?!” என்றான் அவள் பார்வையை உணர்ந்துக்கொண்டு.
இன்னமும் அவளால் நம்பமுடியவில்லை. என்றோ பதின்வயதில் தன் பின்னே வந்தவனை, இத்தனை ஆண்டுகள் சென்று நேரில் பார்ப்பதென்றால்…?
என்ன பேசுவது என்று தெரியவில்லை அவளுக்கு.
“ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் அன்னைக்கு ட்ரைன்ல தான் உங்களை பார்த்தேன்! பேச ட்ரை பண்ணேன்! தர்ம அடி விழுந்துச்சு!”
அவன் என்னவோ விளையாட்டுப்போல சொன்னாலும், இவளுக்கு பெருத்த சங்கடமாய் இருந்தது.
சரியாய் ட்ரைன் வந்து சேர, இம்முறை ‘பை’ சொல்லி பிரியாமல், “வாங்க!” என்று அவனையும் அழைத்தாள்.
இருவரும் ஏற, காலி இருக்கைகள் இல்லை. அதுவும் வசதியாக போக, சற்று உள்ளே தள்ளி எதிரெதிரே நின்றுக்கொண்டனர்.
மாதங்கவதனாவிற்கு சங்கடம் இன்னமும் குறையவில்லை. தன்னால் இருமுறையும் அடி வாங்கியிருக்கான் என்பதே பெருத்த வருத்தம் கொடுக்க, மீண்டும், “சாரி!” என்றாள் உள்ளார்ந்து!
“ம்ச்! அதை விடுங்க!” என்றவன், பேச்சை மாற்றும் பொருட்டு, “நான் ஒரு விளம்பர கம்பெனி வச்சுருக்கேன்! இது என்னோட கார்ட்!” என்று அவனதை எடுத்து நீட்டினான்.
வாங்கிக்கொண்டவள் அதிலிருக்கும் ஒரு எழுத்து விடாது வாசிக்க, விட்டால் ட்ரைன் டெல்லி போகும் வரை அதையே வாசிப்பாள் போல!
அவள் இன்னமும் தன்னிடம் ‘கம்ஃபர்ட்’ ஆகவில்லை என்பதை உணர்ந்துக்கொண்டான் அஜய்.
அவளை மேற்கொண்டு சங்கடப்படுத்த விரும்பாமல், “ஓகே’ங்க! எனக்கு இந்த ஸ்டாப்’ல கொஞ்சம் வேலை இருக்கு… நான் இறங்கிக்குறேன்! பாக்கலாம்!” என பொதுவாய் சொல்லிவிட்டு வந்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ள,
‘சரி!’ என தலையாட்டியவள் அவன் போகும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
மறுநாள் ரயில்நிலையம் வந்தவளின் கண்கள் அவளையறியாமல் அவனைத்தான் தேடியது.
அவளுக்கு முன்னே வந்துவிட்டவன், மறைவாய் நின்று அவளையே பார்க்க, அவள் தன்னை தேடுவது தெரிந்ததும், ‘யாஹூ!’ என குதிக்க வேண்டும் போல இருந்தது.
இவனோ, அவளை ரசித்துக்கொண்டே, “என்னை தேடுறா மச்சி!!!” என்றான்.
குரு தலையில் அடித்துக்கொள்ளும் சத்தம் இங்குவரை கேட்டது. ஆயினும், “என்னைத்தான் எல்லா பக்கமும் தேடுறா!” என்றான் அஜய்.
“டேய், என் புள்ளை ஸ்கூலுக்கே போகுதுடா! நீ என்னனா இப்போதான் பாக்குறா, பாக்கு விக்குறா’ன்னு பேசிக்கிட்டு இருக்க?”
“டேய், நான் வாலிபத்தோட வாசல்ப்படில நிக்குறேன்’டா!”
கடுப்பான குரு, “பாத்து நில்லுடா, கால் தவறி குப்புற விழுந்துட போற!” ‘டொக்’ என கட் செய்திருந்தான்.
‘கடுப்புப்புடிச்சவன்!’ என்று நண்பனை திட்டிய அஜய், இப்போது அப்படியே கேஷுவலாய் வெளியே வந்து தன் மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருக்க, அவனை கண்டுக்கொண்டவள், நேரே அவனிடத்தில் வந்தாள்.
“ஹாய்!!!”
அவளை இப்போது தான் பார்ப்பவன் போல, “ஓ! ஹாய்? உங்களை நான் கவனிக்கவே இல்லை!” என்று கூற, புன்னகைத்தாள்.
இப்போது தெளிவாய், “ரொம்ப சாரி! என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்!” என்று மீண்டும் மன்னிப்பு கேட்க,
“அட, அதைவிடுங்க!” என்றான்.
“நீங்க இவ்ளோ ‘கூலா’ சொல்றதை பார்த்தா அடிக்கடி இப்படி வாங்குவீங்களோ?” அவள் கேட்டவிதமே தன்னை கலாய்க்கிறாள் என்று தெரிந்துப்போக,
அந்த எறும்பு உங்களை கடிச்சு, சக்கரை நோய் வந்து செத்துப்போய்ட்டா?
இந்த பாவமெல்லாம் நமக்கு தேவையா சொல்லுங்க?” என்று அவளிடமே கேட்க,
நியாயமாய் அவனிடத்தில் வேறொருவர் இருந்து இப்படி பேசியிருந்தால், கோபம் தான் வந்திருக்க வேண்டும் அவளுக்கு.
என்னவோ அவன்மீது கோபம் வராதுப்போக, லேசான கூச்சம் தான் வந்து தொலைத்தது அவளுக்கு. அதுக்கொடுத்த குறுஞ்சிரிப்பு உதட்டோடு ஒட்டிக்கொண்டு போகமாட்டேன் என அடம்பிடிக்க, அவனிடம் இருந்து அதை மறைக்க போராடினாள் அவள்.
அவளை நொடிநொடியாய் ரசிப்பவனுக்கா அது தெரியாது போகும்?!