‘முழு கை வச்ச மாதிரியும் தைச்சி வச்சிருக்கேன்.. அதை போட்டுக்கட்டுமா..?” என்றாள் ஆர்வமாக.
முறைத்தவன்.. ‘ஏற்கனவே டைம் ஆய்டுச்சி.. இனி டிரெஸ் மாத்தினா ரொம்ப லேட்டாகிடும்.. வா..” என்றான்.
காரில் போகும்போது.. ‘என்கிட்ட யாராவது இங்லீசுல பேசினா நான் என்ன பண்ணட்டும்..?” என பதட்டத்தோடு கேட்க..
‘எனக்கு இங்லீஸ் புரியாது.. தமிழ்ல கேளுங்கன்னு சொல்லு..” என்று தைரியம் கொடுக்க..
‘உங்களை தப்பா நினைக்க மாட்டாங்க..?” என்று கேட்க..
‘நினைக்க மாட்டாங்க.. அப்படியே நினைச்சாலும் அதைப்பத்தி எனக்கு கவலையில்ல.. நீயும் கண்டதையும் நினைச்சிட்டிருக்காம சிரிச்ச முகத்தோட இருக்கனும்.. புரியுதா..?” என அறிவுருத்த.. சரி என்பதாய் தலையசைத்தாள்.
ஹோட்டலை நெருங்கிடவும் காரை நிறுத்தி இறங்கியவன்.. இவளுக்கு திறந்துவிட்டு ‘வா..” என்று சூர்யா கை நீட்ட..
அவனின் கையை பிடிக்காமல் இறங்கியவள்.. பே வென வேடிக்கை பார்த்தபடி நின்றிருக்க.. தானாக மனைவியின் கையைப் பிடிக்க.. இவள் உருவப்பார்க்க..
‘வேடிக்கை பார்த்திட்டே நடந்தா கீழ விழுந்திடுவ.. நான் உன் கையை பிடிச்சிக்கிறேன்.. நீ வேடிக்கை பார்த்திட்டே வா..” என்று அழைத்துப் போனான்..
‘வாங்க சூர்யா.. வாங்க மேடம்..” என்று மற்றவர்கள் வரவேற்க.. அங்கிருந்த பெண்களின் உடையைப் பார்த்து முகம்சுழித்த திலகவதியிடம்.. ‘ஹேய்.. நீ இப்படி முகத்தை வச்சிகிட்டா மத்தவங்க தப்பா நினைப்பாங்க.. கொஞ்சம் சிரிச்சமாதிரி இரு.” என்று அவள் காதில் சூர்யா முனுமுனுக்க..
சூர்யாவின் நெருக்கத்தில் தடுமாறியவள்… ‘இது என்ன..? இத்தனைபேர் முன்னாடி.. இப்படி பக்கத்தில வரிங்க..?” என்று திணறினாள்.
‘வந்தா என்ன..? கொஞ்சம் அங்க பாரு..” என்று ஒரு ஜோடியை சூர்யா காண்பிக்க.. அவர்களை பார்த்த திலகவதி.. ‘ஆஆ…” என்று வாயைப் பிளந்தாள்.
சூர்யாவின் வருகையில் சந்தோசமடைந்து அவளருகில் வந்தவர்கள்.. ‘நாங்களெல்லாம் ஒன்னா படிச்சவங்க..” என்று மதன் கையை நீட்ட.. அவரை விடுத்து.. பக்கத்தில் இருந்த அவனின் மனைவிக்கு கைகுலுக்கினாள் திலகவதி.
‘இவ்ளோ அழகான பொண்ணை கல்யாணம் செய்திருக்க..? ஏண்டா.. நீதான் ஹேண்டிகிரா‡ப்டை கல்யாணம் பண்ண இருந்தவனா..? நல்லா கதைவிட்டுட்டு இருந்திருக்கடா..” என்று ஆங்கிலத்தில் மதன் கூற..
‘டேய்…” என்று கண் ஜாடையில் மதனை அமைதிப்படுத்தியவன்.. ’வந்த வேலையைப் பார்க்கலாம் வா..” என்று உள்ளே போனவன்.. மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்களுக்கு தமிழில் பதிலளித்து.. தன் மனைவியையும் அனைவருக்கும் தமிழில் அறிமுகம் செய்து வைக்க..
சூர்யாவை அதிசயித்து பார்த்த நண்பர்களிடம்.. ‘என் பொண்டாட்டிக்கு இங்கிலீஸ் தெரியாது.. அதனால அவகிட்ட எதாவது கேட்கனும்னா தமிழ்ல கேளுங்க..” என்று சொல்ல..
தப்பித்த பாவனையோடு திலகவதி சூர்யாவை பார்க்க.. ‘இப்போ ஓ.கே. வா..?” என்றான் திலகவதியிடம்.
‘ம்ம்..” என்றாள். அதன்பின் திலகவதியை நலம் விசாரித்த அனைவரும் தமிழிலேயே பேச.. அப்பொழுதும் தலையசைப்பை மட்டுமே திலகவதி பதிலாய் கொடுத்தாள்.
பிறகு ப‡பே முறையில் அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கவும்.. கணவன் மனைவிகள் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்வது.. இதமான நெருக்கம்.. சின்ன சின்ன தொடுகைகள்.. என்று அவரவர் இணையோடு அனைவரும் இயல்பாய் இருக்க.. அதைப்பார்த்த திலகவதி சங்கடமாய் தலைகுனிந்தாள்.
‘இங்க வா..” என்று இருவருக்கும் உணவை எடுத்து வந்து ஒரு டேபிளில் அமர்ந்து. ‘சாப்பிடு.. நான் இப்ப வந்திடறேன்..” என்று சற்று தூரத்தில் போய் நின்று அவளையே பார்த்திருந்தான். திலகவதியின் முகத்தில் கலவையான உணர்வுகள். சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள். சற்று நேரம் கழித்து…
‘ஹேய்.. சூர்யா.. உங்க வெய்‡ப் நீ ஊட்டினாத்தான் சாப்பிடுவாங்க போல.. வா..” என்று பக்கத்து டேபிளில் இருந்தவன் அழைக்க.. இயந்திரம்போல் சாப்பிட ஆரம்பித்தாள் திலகவதி. சாப்பிட்டு முடித்ததும்.. ‘போலாமா..?” என்று அவஸ்த்தையாய் கேட்கவும்..
‘மதன்.. நாங்க கிளம்பறோம்…” என்றான் சூர்யா.
‘இந்த வருசம்தான் வந்திருக்க.. ஒரு சின்ன டான்ஸ்…” என்று சூர்யாவின் கையை பிடித்து இழுத்துபோனான் மதன்.
‘டேய்.. எனக்கு டான்ஸ் வராதுடா..” என்று சொன்னாலும் ‘ஆட வராதுன்னா.. என் டான்சை பாரு.. அதுதான் உனக்கு நான் கொடுக்கிற பனிஷ்மென்ட்..” என்று சூர்யாவை அமரவைத்தவன்.. அவரவர் ஜோடியோடு ஆடவும்.. அனைவரும் தனியுலகில் இருப்பதுபோல் இருந்தார்கள்.
‘அந்த பொம்பள என்ன சேலையை இப்படி கட்டியிருக்கா..? இத்தனை பேர் முன்னாடி அவ புருசனும் இடுப்பை பிடிச்சிட்டு இப்படி ஆடுறான்.. அவ சேலை அவிழ்ந்து கீழ விழறதுக்குள்ள நாம போய்டலாம்..” என்று முகம் சுழித்து சொல்ல..
‘ஏய்.. அவங்க காதுல விழப்போகுது..” என்று மனைவியை சமாளித்தவன்..
‘சரி.. வா..” என்று யாரிடமும் சொல்லாமல் கிளம்பினார்கள். வீட்டிற்க்கு வந்தும்.. திலகவதி இயல்பாகவே இல்லை. முகத்தில் டென்சன்.. பிறகு கவலை.. பிறகு சூர்யாவை பரிதாபமாய் பார்ப்பது போன்ற பல பாவனைகளை காண்பித்தாள்.
‘என்ன ஆச்சி..?” என்று தன்மையாய் கேட்டான்.
‘ஒன்னுமில்லை..” என்று ரூமிற்குள் போய்விட்டாள்.
சூர்யாவும் உள்ளே வந்தான். ஏதோ சொல்ல முயன்றாள்.. ஆனால் முடியாமல் தவித்தாள். அவனின் முகம்பார்ப்பது.. சூர்யா பார்க்கும்போது தலைகுனிவது என்று தடுமாறினாள்.
மீண்டும்.. ‘ஏன் இப்படி டென்சனா இருக்க..? உனக்கு பிடிக்கலைன்னா இனிமே அதுமாதிரி இடத்துக்கு போக வேண்டாம்..” என்றான்.
‘இல்ல.. அதில்ல..” என்று மறுத்தாலும் வேறெதுவும் சொல்லவில்லை திலகவதி.
‘சரி.. தூங்கு..” என்று சொன்னவன்.. உடை மாற்றிவந்து படுத்தான்.
தூங்கும்போதும்.. துப்பட்டாவின் பின்னை கூட கழற்றாதவள்.. இன்று துப்பட்டாவை கழற்றி வைத்து படுத்தாள். முதலில் சூர்யாவிற்கு முதுகுகாட்டி படுத்திருந்தவள்.. சற்று நேரம் கழித்து அவன்புறம் திரும்பிப்படுத்தாள்.
ஆச்சர்யமாய் பார்;த்தவன்.. ‘என்னாச்சி..? தூக்கம் வரலையா..?” என்றான்.
‘ம்கூம் வரல.. உங்களுக்கு தூக்கம் வருதா..?” என்றாள்.
‘தூக்கம் வருதுன்னு இல்ல.. ஆனா கண்மூடிப்படுத்தா கொஞ்ச நேரத்தில தூங்கிடுவேன்.. உனக்கு தூக்கம் வரலைன்னா டி.வி.பாரு..” என்றான்.
‘இல்ல.. நான் டி.வி. பார்க்கலை..” என்றவள் முகத்தில் தடுமாற்றம் இருந்தது.
‘ஏய்.. திலகா.. உனக்கென்ன ஆச்சி…?” என்று அவளின் பக்கத்தில் வந்தான்.
சூர்யா கேட்டதும்.. கண்கலங்கினாள். ‘ப்ச்ச்.. என்னாச்சி..?” என்றான் கோபமாய்.
ஒரு முடிவிற்கு வந்தவளாய்.. ‘நான் இப்ப உங்களை கோபப்படுத்திட்டேன்தான..? எனக்கு தண்டனை கொடுங்க..?”என்று திக்கி.. திணறி முடித்தாள்.
கண்கள் மின்ன.. இன்னும் அவளை நெருங்கி படுத்தவன்.. ‘தப்பு செய்தா தண்டனை கொடுக்கலாம்.. ஆனா.. நீ.. தண்டனைக்காகவே தப்பு செய்ற மாதிரியில்ல இருக்கு..” என்று இழுத்தவன்.. அவளை ஆராய்ச்சி பார்வை பார்க்க..
‘ஆமா.. அப்படித்தான்…‚” என்றவள்.. அதற்குமேல் அவனை காணமுடியாமல் திரும்பி முதுகு காட்டி படுத்தாள். திலகாவின் பேச்சில் சூர்யாவின் கட்டுப்பாடுகளெல்லாம் சோதனைக்குள்ளாக.. ஒரு வேகத்தில் அவளின் இடையைப்பற்றி அவன் புறம் திருப்பினான். இமைகள் மூடியிருந்தாலும் விழிகள் உருண்டு கொண்டிருக்க.. அவளின் முகத்தில் அப்படியொரு பதற்றம்.
‘திலகா.. கண்ணைத்திற..” என்றான் மென்மையாய்.
‘ம்கூம்.. மாட்டேன்..” என்றாள்.
‘அப்ப தண்டனை ரொம்ப கடுமையா இருக்கும்.. பரவாயில்லையா..?”
‘ம்ம்..” என்று சம்மதமாய் தலையாட்டினாள்.
ஆச்சர்யத்தின் எல்லையை தொட்டவனாய்.. ‘நீ உண்மையா புரிஞ்சிதான் பேசுறியா..?” என்றான்.
‘ம்ம்..” என்றாள் மீண்டும்.
‘என்ன திடீர்ன்னு இப்படியொரு மனமாற்றம்..?” என்றவன் கைகள் தன்போல் அவளின் மேனியில் பயணிக்க.. முதலில் நெளிந்தவளின் உடல் பிறகு விறைப்பானது. அதை உணர்ந்தவனின் கைகள்.. தன் பயணத்தை சட்டென நிறுத்தியது. அமைதியாக அவளையே பார்த்திருந்தான். சற்று நேரம் கழித்து மெதுவாய் விழிதிறந்தவள்.. ஏன் என்பது போல் அவனை பார்க்க..
காலையில் தன் அம்மாவிடம் திலகவதி பேசியதை நினைத்தவன்.. ‘என்னை சந்தோசமா வச்சிருக்கனும்னு முடிவு பண்ணியிருக்கியா..?” என்று கனிவாய் கேட்டான்.
ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள். ‘அப்ப இதுக்காகத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைக்கிறியா..? இதுலதான் என் சந்தோசம் அடங்கியிருக்கா..?” என்று சூர்யாவின் அடுத்த கேள்வி அழுத்தமாய் வெளிவர..
சூர்யா கோபமாக இருக்கிறான் என்று திலகவதிக்கு தெரியவில்லை. ‘இல்ல.. ஆனாலும் எல்லாரும் ஆசைப்படுற சந்தோசம் இதுதான..?” என்று வழக்கம்போல் பிணாத்தி வைக்க..
‘ரொம்ப சரியா என்னை புரிஞ்சி வச்சிருக்க.. இனிமே இதைப் பத்தி பேசவேணாம்.. தூங்கு..” என்று அவளிடமிருந்து விலகி படுத்தான்.
‘கடுமையான தண்டனைன்னிங்க..? அவ்ளோதானா…?” என்றாள்.
‘இவளை..” என்று முனுமுனுத்து பல்லைக்கடித்தவன்.. முயன்று தன் கோபத்தையும் தாபத்தையும் உள்ளடக்கி கண்மூடி தூங்கமுயல..
அவனிடம் பதிலில்லாமல் போகவும்.. ‘தூக்கம் வருதுங்களா…?” என்றாள்.
கோபமாக அவள்புறம் திரும்பியவன்.. ‘தூக்கம் வரலை.. நான் உன்னை தொடும்போது அதை தாங்க முடியாம நீ ரொம்ப கஷ்ட்டப்படுற.. நீ என்னை சந்தோசமா வச்சிருக்கனும்னு நினைக்கிறமாதிரி.. நானும் உன்னை சந்தோசமா வச்சிக்கனும்னு நினைக்கிறேன்.. அதுனாலதான் உன்னை கஷ்ட்டப் படுத்தக்கூடாதுன்னு நினைச்சி விலகிட்டேன்.. ” என கடகடவென சொல்லி அவளுக்கு மீண்டும் முதுகு காட்டி படுத்தான்.
‘எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை.. என்னையறியாம நான் மறுத்தாலும் நீங்க அதுபத்தி யோசிக்காதிங்க.. எல்லாம் சீக்கிரம் சரி செய்திடுவேன்..” என்று அவசரமாக சொல்லி அவன் பக்கத்தில் நெருங்கி படுத்தாள்.
அவள் பக்கம் திரும்பியவன்.. ‘என்னை சந்தோசமா வச்சிக்கனும்ங்கிற உன்னோட அக்கறையை நான் பாராட்டுறேன்.. ஆனா எனக்கு அக்கறை மட்டும் போதாது.. உன்னோட காதல்தான் வேணும்.. என்னைக்கு உன் மனசில அக்கறையோடு காதலும் சேர்ந்து வருதோ அன்னைக்கு பார்த்துக்கலாம் தூங்கு..” என்றான் கனிவாகவே.
‘கல்யாணம் பண்ணிக்காதவங்கதான் வீட்டுக்கு தெரியாம காதலிப்பாங்க.. நமக்குதான் கல்யாணம் ஆய்டுச்சே.. அதனால எனக்கும் காதல் வந்திருக்கும்.. உங்களுக்குத்தான் அது புரியலை..” என குற்றம் சுமத்த..
‘ஆமாமா.. உனக்கு காதல் வந்திடுச்சிதான்.. நல்லா வந்திடும் என் வாய்ல.. ஒழுங்கா தூங்குடி..” என்றான் கோபத்தோடு.
எத்தனை முறை திலகவதியை அது செய்வேன்.. இதுசெய்வேனென பயமுறுத்தியிருக்கிறான்தான்.. ஆனால் ஒருநாளும் இப்படி நினைப்போடு அவளை நெருங்கியதில்லை.. இன்று திலகவதியின் பேச்சினில் அவளை அறிந்துகொள்ளும் துடிப்பு வந்திருக்க.. தாபத்தோடு நெருங்கியவனின் தேவை நிறைவேறாமல் போகவே எத்தனை கடிவாளமிட்டும் அடங்க மறுத்தது சூர்யாவின் தாபம்..
‘இந்த சினிமால்ல எல்லாம் வரமாதிரி ஐ லவ் யூன்னு சொன்னா.. எனக்கு காதல் வந்திடுச்சின்ன ஒத்துப்பிங்களா..?” என்று யோசனையோடு கேட்க..
‘வாய மூடிட்டு தூங்கப்போறியா..? இல்ல நான் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பவா..?” என்று கடித்து குதற..
‘வேணாம் வேணாம்.. நான் எதுவும் பேசல.. நீங்க தூங்குங்க..” என்றாள் அவசரமாக.
சூர்யாவை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே ஓங்கி இருக்க.. பத்து நிமிடம்போல் முதுகு காட்டி படுத்திருக்கும் கணவனையே பார்த்திருந்தவள்.. ‘இத்தனை நல்லவனை வச்சிகிட்டு நான் என்னதான் பண்றது..?” என்று முனுமுனுத்தபடியே தானும் கண்மூடினாள்.