அத்தியாயம் — 26
‘அன்னைக்கு மாதிரி எல்லாமும் நீங்களே எல்லாம் செக் செய்துக்கோங்க.. நான் ஹாஸ்பிட்டல்க்கு வரமாட்டேன்..” என்று சொல்ல..
‘ஏய் லூசு.. அன்னைக்கு யூரின் டெஸ்ட் மட்டும்தான் செய்தேன்..” எனும்போதே..
‘என்னென்ன பார்க்கனுமோ எல்லாமும் நீங்களே பாருங்களே..” என்று கெஞ்ச..
‘லூசு.. நான் பிரசவம் பார்க்கிற டாக்டர் இல்ல.. ஆப்ரேசன் பண்றவன்.. இப்போ கிளம்பப்போறியா இல்லையா..?” என்று மிரட்ட..
‘போங்க.. இந்த டாக்டருங்களே ரொம்ப மோசம்.. கண்ட இடத்தில கை வைப்பாங்க.. ஒருமுறை தலைக்குளிச்சப்ப ரொம்ப வலிக்குதுன்னேன்.. அம்மா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனுச்சி.. வயித்து வலின்னா அதுக்கு மாத்திரை குடுக்கவேண்டியதுதான..? அத விட்டுட்டு அந்த பொம்பள எங்கெங்க தொட்டா தெரியுமா..?” என்று முகம் சுழிக்க..
‘தொடாம பார்க்கிறதுக்கு டாக்டருங்க என்ன மந்திரவாதியா..? செக் செய்தாதான என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்க முடியும்..?” என்று அறிவுருத்த..
‘நீங்க செக்செய்து அவங்ககிட்ட சொல்லுங்க.. அவங்க மாத்திர கொடுக்கட்டும்..” என்று இவள் அறிவுருத்த..
‘இதுக்காக ஸ்பெசல்லா படிச்சவங்களுக்கு தெரியற அளவுக்கு எனக்கு தெரியாதுடி.. இது மூனாவது மாசம்.. ஸ்கேன் செய்யனும்.. நிறைய வாமிட் பண்ற.. ரொம்ப வீக்காய்ட்ட.. சொன்னா புரிஞ்சிக்கனும்.. கிளம்புடா..” என்று கெஞ்ச..
‘நான் மாட்டேன்.. மாசமாயிருந்தா வாந்தி வரது சகஜம்தானாம்.. எழெட்டு மாசத்துக்கப்புறம் தானா நின்னுடுமாம்.. நீங்க கவலைப்படாதிங்க..” என்று சொல்ல..
‘நீ சரிபட்டு வரமாட்ட.. இரு.. உங்கம்மாக்கு கால் பண்றேன்…” என்று மொபைலை கையிலெடுக்க.. ‘வேணாம்.. வேணாம்..” என்று திலகவதி பிடுங்க..
‘அப்ப கிளம்பு..” என்று மிரட்ட..
சூர்யாவை முறைத்துக்கொண்டே உடைமாற்றியவள்.. ‘படிக்கும்போதே எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி படிக்கமாட்டிங்களா..? இதுல இவர் பெரிய்ய்ய டாக்டராம்..” என்று நொடித்துக்கொண்டே தலை பின்னிக்கொண்டிருந்தாள்.
சிரித்தவன்.. ‘சரிடிம்மா.. நம்ம புள்ளையை எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி படிக்க வை.. படிப்புல நான் கொஞ்சம் தத்திதான்..” என்று விட்டுக்கொடுக்க..
‘போயே ஆகனுமா..?” என்று கெஞ்ச..
‘கொஞ்சம் சிரிச்சதும் ஆரம்பிச்சிட்டியா..? கிளம்புடி..” என்று இரண்டு மணிநேர போராட்டத்திற்க்குப் பிறகு ஒருவழியாக கிளம்பி மருத்துவமணை வந்து சேர்ந்தான்.
‘சார் வாங்க..” என்று செவிலிப்பெண் உள்ளே அழைக்க..
‘இவ டோக்கன் வரும்போது கூப்பிடுங்க..” என்று தன் இடத்திற்க்கு அழைத்து வந்தான்.
‘இதுதான் உங்க ரூமா..? அழகா இருக்கு..” என்றாள்.
‘ம்ம்.. எத்தனை முறை கூப்பிட்டிருக்கேன்.. நீ வந்தியா..?” என்று கேட்டுக்கொண்டே தன் சீட்டில் அமர்த்தி.. தானும் டேபிள்மேல் அமர்ந்து..
‘தண்ணி குடி.. “ என்று பாட்டிலை நீட்ட..
‘வேணாம்.. எனக்கு தாகமில்ல..” என்று சொல்ல..
‘தாகமில்லன்னாலும் பரவால்ல குடி..” என்று சொல்ல.. இவள் சலிப்பாய் முகம் சுழிக்க.. ‘இப்போ கொஞ்சமாவது குடி.. பத்து நிமிசம் பொறுத்து திரும்ப குடிச்சிக்கலாம்.. அப்போதான் ஸ்கேன் பண்ண முடியும்..” என்று வற்புறுத்தி குடிக்க வைத்தான்.
அங்கிருந்த ஸ்டெட்டத்சை பார்த்து.. ‘ஆமா.. இதுல அப்படி என்னதான் தெரியும்..? காய்ச்சல் தலைவலின்னு எதுக்காக போனாலும் இதையே வச்சி பார்க்கிறாங்க..” என்றாள் ஆச்சர்யமாய்..
ஸ்டெத்தசை அவளின் காதினில் வைத்து.. தன் நெஞ்சில் வைத்து.. ‘என்ன கேக்குது..?” என்றான்.
‘டம் டம்ன்னு கேக்குது..” என்றாள் கண்களை விரித்து.
‘ம்ம்.. இதுதான் இதயம் துடிக்கிற சத்தம்..” என்றவன்.. அவளிடமிருந்து எடுத்து வைத்து.. ‘இதுமாதிரி உன் வயித்துல இருக்க நம்ம குழந்தையோட இதயம் சரியா துடிக்குதா…? எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கான்னு தெரிஞ்சிக்கனும்தான..?” என்று கேட்க..
இவள் ஆமாம் என்று ஆர்வமாய் தலையாட்ட.. ‘அது தெரியனும்னா ஸ்கேன் செய்யனும்.. ஸ்கேன் செய்யும்போது டாக்டர் உன் சுடி பேன்ட்டை இறக்கிவிட சொல்வாங்க.. அப்போ மாட்டேன்னு சொல்லக்கூடாது.. சரியா..?” என்று புரியவைக்க..
‘நான் உங்க சர்ட் மேல வச்சிதான செக்செய்தேன்.. அப்பவும் சத்தம் கேட்டுச்சிதான..? அதேமாதிரி என் டிரெஸ்மேலயே செக் செய்ய சொல்லுங்க..” என்று திலகவதி சொல்ல..
கடுப்பானவன்.. ‘வயித்துக்குள்ள இருக்க குழந்தைக்கு செக் செய்யனும்னா அதுக்கு டிரெஸ்சை கழட்டிட்டுதான் செக்செய்தாகனும்.. மருத்துவம் பார்க்கத்தான் டாக்டர் உடம்பை பார்ப்பாங்க.. மத்தவங்க உடம்பை வக்கிரமா பார்க்கிறதுக்கு இல்ல..” என்றான் கடுப்பாக.
இவள் உர்ரென முகத்தை வைத்திருக்க.. ‘இப்ப என்னையே எடுத்துக்கோ.. ஆப்ரேசன் செய்யும்போது பேசன்ட்டோட டிரெஸ்சை மொத்தமா கழட்ட சொல்லிட்டு நாங்க கொடுக்கிற ஒரு கவுனை மட்டும்தான் போடசொல்வோம்..
ஹார்ட் ஆப்ரேசன் பண்ணும்போது நெஞ்சை மூடிவச்சிட்டு பண்ண முடியுமா..? எத்தனை லேடிஸ்க்கு நான் ஆப்ரேசன் செய்திருக்கேன்.. அப்போ நானும் அவங்க உடம்பை தப்பா பார்த்திருப்பேன்றியா..?” என்று கோபமாக கேட்க..
‘இல்ல.. இல்ல.. நீங்க அப்படி பண்ணமாட்டிங்க.. உங்களை மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா..?” என்று முனுமுனுக்க..
‘இந்த ஹாஸ்பிட்டலைப் பொருத்தவரை எல்லாரும் என்னைவிட நல்லவங்க.. ஸ்கேன் செய்யும்போது எதாவது கலாட்டா செய்த.. கையையும் காலையும் கட்டிவச்சி.. பேன்ட்டை மொத்தமா கழட்டிட்டு செய்ய சொல்வேன்..” என்று மிரட்ட..
‘சார்..” என்று வெளியிலிருந்து அழைப்பு வர.. ‘ஒழுங்கா நான் சொன்னமாதிரி கேக்கனும் புரியுதா..?” என்று மிரட்டி வெளியே அழைத்து வந்தான்.
டாக்டர்.. ‘திலகவதியின் பொறுப்பான கணவரே வாங்க.. வாங்க..” என்று அழகான தமிழில் லேடி டாக்டர் வரவேற்க்க..
சிரித்தவன்.. ‘வந்தோம் வந்தோம்..” என்றவன்.. ‘உக்காரு திலகா..” என்று அருகிலிருந்த சேரை காண்பிக்க.. திலகவதி அமர்ந்ததும்..
‘எப்போ தலைக்குளிச்சிங்க..?” என்பன போன்ற வழக்கமா கேள்விகளை கேட்க.. சொன்னவள்.. ‘எனக்கு பாத்ரூம் போகனும்..” என்று சூர்யாவிடம் முனுமுனுக்க..
‘கொஞ்சம் பொருத்துக்கோ.. ஸ்கேன் செய்ததும் போலாம்..” என்று இவன் சத்தமாக சொல்ல.. கணவன் தொடையில் நறுக்கென கிள்ளி.. ‘எதுக்கு கத்துறிங்க..?” என்று மீண்டும் முனுமுனுக்க..
இவர்களின் சண்டையில் ஸ்கேனுக்கு எழுதிய டாக்டர்.. ‘ஸ்கேன் செய்திட்டு வாங்க..” என்று சிரிப்போடு சொல்ல..
‘வா..” என்று ஸ்கேன் செய்யும் இடத்திற்க்கு அழைத்துப்போக.. அங்கே உள்ளே ஒருவருக்கு ஸ்கேன் செய்துகொண்டிருக்க.. வெளியில் ஆறுபேர் வரை காத்திருக்க.. சூர்யாவைப் பார்த்ததும்..
‘சார் உங்களை வரசொன்னாங்க..” என்று நர்ஸ் சொல்ல.. ‘வாங்க.. வாங்க..” என்று இவள் சூர்யாவின் கையைப் பிடித்து இழுக்க..
‘உனக்கு முன்ன எத்தனை பேர் இருக்காங்க..? அதுல மூனு பேரு நிறைமாத கர்பினியா இருக்காங்க.. அவங்கள்லாம் வெய்ட் பண்றாங்கதான..? உனக்கென்ன அவசரம்..? அமைதியா உக்காரு..” என்று மிரட்ட..
‘அப்போ என்னை பாத்ரூம் கூட்டிட்டு போங்க..” என்று கெஞ்ச..
‘அப்போ திரும்பவும் தண்ணி குடிச்சி அரைமணிநேரம் வெய்ட் பண்ணனும்.. பரவால்லையா..?” என்று கேட்க..
‘அந்த காலத்தில எல்லாரும் இதை செய்தேவா புள்ள பெத்தாங்க..? நல்லா ஏமாத்துறிங்க..” என்று சொல்லி அங்கிருந்த சேரில் பிணக்கோடு அமர..
நர்ஸ் பெண்மணி சிரிக்க.. சூர்யாவும் சிரித்தவன்.. தன் மொபைலை எடுத்து..
‘கேம் விளையாட சொல்லி தரேன்.. இதுல கவனம் இருந்தா பாத்ரூம் போகனும்னு தோணாது..” என்று இவன் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்க.. இவள் மொபைலை பார்க்காமல் முகம் திருப்ப..
‘நியூ மாடல் பிளொஸ் கட்டிங்ஸ் பார்;க்கிறியா…?” என்று கேட்டவாறே யூ டியூபில் அதற்கான வீடியோவை காண்பிக்க..
‘இதெல்லாம் கூட இதுல வருமா..?” என்று ஆச்சர்யாமாய் கேட்டவள் அதில் கவனமாக.. இருபது நிமிடம் கழித்து.. ‘சார்.. பிரெக்னென்ட் லேடிஸ்க்கெல்லாம் முடிச்சாச்சி.. நீங்க வாங்க..” என்று அழைக்க.. பிறகுதான் உள்ளே சென்றான்.
உள்ளேயும் சில பல கலாட்டாக்கள் செய்ய.. ‘நீ சரிபட்டு வரமாட்ட.. சிஸ்டர்.. இவ கையையும் காலையும் கட்டுங்க..” என்று சொல்ல..
‘இல்லயில்ல.. நான் அமைதியா இருக்கேன்..” என்று அவசரமாய் சொல்ல.. ஒருவழியாக ஸ்கேன் செய்து முடிந்ததும்.. உடையை சரி செய்தவள்..
‘எங்க பாப்பா நல்லாயிருக்கா..?” என்று ஸ்கேன் செய்த டாக்டரிடம் ஆவலாய் திலகவதி கேட்க..
‘பாப்பா எப்படியிருக்குன்னு ரேவதி டாக்டர் சொல்வாங்க..” என்று சொல்ல..
‘ஒருத்தரும் உருப்படியா படிக்கமாட்டாங்க போல..” என்று இவள் முனுமுனுத்தது சூர்யாவிற்க்கு கேட்க.. ‘ஸ்..” என்று மிரட்டியவன்.. வெளியே வந்ததும்..
‘அவங்க முன்னாடி அப்படித்தான் பேசுவியா..?” என்று கேட்க..
‘பின்ன என்ன..? இப்படி சுத்தல்ல விடறாங்க..?” என்று கோபமாய் சொல்ல..
சிரித்தவன்.. ‘முதல்ல பாத்ரூம் போலாம் வா..” என்று அழைத்துப்போனான்.
ரேவதி டாக்டர்.. ‘திலகவதியோட குழந்தைக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல.. திலகவதிதான் வீக்கா இருக்கிங்க.. வாமிட் வருதுன்னு சாப்பிடாம இருக்கக்கூடாது திலகவதி..” என்று சொல்லி.. ‘பேன்ட்டை கீழ இறக்குங்க.. இன்ஜக்சன் போடனும்..” என்று சொல்ல..
‘கையில போட்டுக்கிறேன்..” என்று இவள் சொல்ல..
‘இடுப்புல தான் போடனும்..” என்று டாக்டர் சொல்ல..
‘அப்போ நீங்க போட்டு விடுங்க..” என்று இவள் சூர்யாவிடம் சொல்ல.. டாக்டர் சூர்யாவிடம் சிரன்ஜை நீட்ட..
‘அவங்ககிட்டதான் போட்டுக்கனும்.. வா இங்க..” என்று அங்கிருந்த மறைப்பினுள் உள்ளே தள்ள..
‘ஏன் உங்களுக்கு ஊசி போட தெரியாதா..?” என்று இவள் வம்பளக்க..
‘ஆமாம்.. எனக்கு ஊசிபோட தெரியாது..” என்று சொல்லி இவன் வெளியே வர.. டாக்டர் ஊசி போட்டு முடித்ததும் வெளியே வந்தவள்..
‘கிழிக்கிறதுக்கும் தைக்கிறதுக்கும் படிக்கும்போதே ஊசி குத்தவும் படிச்சிருக்க வேண்டியதுதான..?” என்று கணவனை வசைபாட.. சூர்யா முறைக்க..
‘இவங்களுக்கு எப்படி சார் பிரசவம் பார்;க்கிறது..?” என்று லேடி டாக்டர் பொய்யாய் பயப்பட..
சிரித்தவன்.. ‘கோஆப்ரேட் பண்ணலன்னா கையை காலை கட்டிவச்சி பிரசவம் பார்த்திடுங்க..” என்று சிரிப்போடு சொல்ல..
‘ம் கட்டுவிங்க கட்டுவிங்க.. உங்க எல்லாரையும் திருநாவுகரசு டாக்டர்கிட்ட சொல்லி வேலையை விட்டு தூக்கிடுவேன்..” என்று மிரட்டலாய் சொன்னாலும் குரலில் பயம் எட்டிப்பார்த்திருக்க..
‘அச்சோ அப்படியா…?” என்று பயந்தவன்போல் நடித்து.. டாக்டரிடம் விடைபெற்று மனைவியோடு வெளியே வர.. அந்த நேரம் ஒரு பெண்ணை அவசரமாக ஸ்டரக்சரில் வைத்து கொண்டு வர.. ‘சார் அந்தம்மாக்கு தலை ல அடி.. இன்னொருத்ததுக்கு கால் ல அடி.. ஆனா அவரும் மயக்கத்தில இருக்கார்.. “ என்று சூர்யாவிடம் நர்ஸ் சொல்ல..
‘திலகா.. நான் பாலாக்கு கால் செய்றேன்.. அவனோட வீட்டுக்கு போ…” என்றவன் கால் செய்துகொண்டே அங்கிருந்து வேக நடைபோட..
‘இல்லயில்ல.. நான் இங்கை உங்க ரூம் ல வெய்ட் பண்றேன்..” என்று திலகவதி சொன்னதை கேட்க சூர்யா அங்கு இல்லை. அரைமணிநேரத்தில் பாலாஜி வந்தான்.
எத்தனை முறை பாலாஜி அழைத்தும்.. ‘நீ போ பாலா.. நான் அவரோடவே வந்திடறேன்..” என்று திடமாய் மறுத்தவள்.. பாலாவை அனுப்பிவைத்து.. நர்சிடம் கேட்டு சூர்யாவின் அறையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
இரண்டு மணிநேரம் கழித்து வெளியே வந்த சூர்யாவிற்;க்கு அடுத்து ஒ.பி. பார்க்கும் நேரம் வரவே.. வழக்கம்போல் தயிர்சாதம் ஒன்றை சொல்லி திலகவதிக்கு சொல்லிவிடலாம் என மொபைலை எடுக்க.. திலகவதி இங்குதான் இருக்கிறாள் என்று நர்ஸ் சொல்ல.. கோபத்தோடு உள்ளே வந்தான் தன்னறைக்கு.
அங்கு டேபிளில் தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியை பார்த்ததும் கோபம் குறைந்திட.. ‘திலகா..” என்றான் மென்மையாய்.
‘வந்துட்டிங்களா..? என்னாச்சி அவங்களுக்கு..?” என்று கேட்க..
‘உயிருக்கு ஆபத்தில்ல..” என்றவன்.. ‘உன்னை பாலா கூட வீட்டுக்குத்தான போகசொன்னேன்..?” என்று கோபம் காட்ட..
‘நீங்கதான கூட்டிட்டு வந்திங்க.? அப்போ நீங்கதான் கூட்டிட்டு போகனும்..” என்று சலுகையாய் சொல்ல..
‘வேற டாக்டரோட டிரைவர் இருக்கார்.. அவர்கிட்ட சொல்றேன்.. நீ அவரோட கிளம்பு.. நான் வர லேட்டாகும்..” என்று சொல்ல..
‘ம்கூம்.. நான் இங்கதான் இருப்பேன்..” என்று அடம் பிடிக்க..
‘வெளில நிறைய பேர் வெய்ட் பண்றாங்க திலகா.. சின்னபுள்ளையாட்டமா அடம் பண்ணகூடாது.. முதல்ல வீட்டுக்கு போய் சாப்பிடு..” என்று சொல்ல..
அனுமதி கேட்டு உள்ளே வந்த நர்ஸ் சூர்யாவிற்கு தயிர்சாதம் கொடுத்து வெளியே போகவும்.. ‘ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நான் இதுமாதிரி பெரிய ஆஸ்பத்திரிக்கெல்லாம் வந்ததே இல்ல.. கொஞ்ச நேரம் இருக்கேனே..” என்று கெஞ்ச..
‘இரண்டு மணிநேரத்துக்கு மேல ஆகிடும் திலகா.. உன்னால அவ்ளோ நேரம் உக்கார முடியாது..” என்று புரியவைக்க..
‘வீட்டுக்கு போலாம்னு சொல்லவே மாட்டேன்.. அங்க ஓரமா உக்கார்ந்துக்கிறேன்.. ப்ளீஸ் சூர்யா…” என்று முகம் சுருக்கி கெஞ்;ச..
சூர்யா.. ‘ப்ச்..” எனும்போதே.. ‘கருமம் பிடிச்ச பார்ட்டிக்கெல்லாம் கூட்டிட்டு போனிங்க.. இங்க இருக்க கூடாதா.. யாரும் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகவேணாம் போங்க.. நான் நடந்தே போய்க்கிறேன்..” என்று கோபமாய் சொல்லி வெளியேற முயல..
‘சரி.. சரி… வா..” என்று இழுத்து பிடித்து அமர வைத்தவன்.. ‘வெளில எல்லாரும் வெய்ட் பண்றாங்க.. இரண்டு நிமிசத்தில சாப்பிடனும்..” என்று தான் மட்டும் கைகழுவி.. அவளுக்கு ஊட்டி தானும் சாப்பிட்டு.. ஐஸ் போடாமல் இரண்டு ஜூஸ்; வாங்கி கொடுத்து..
‘டையர்டா இருக்கும்போது இதை குடி..” என்று ஓரமாய் அமரவைத்து.. பேசன்ட்டை பார்க்க ஆரம்பித்தான்.